8.3.10

என்ன கொடுமை சார்?

என்ன கொடுமை சார்?


* மக்கள் ஏன் சில சமயம் ஆவேசப்பட்டு குற்றம் செய்தவர்களை உதைக்கமுடியாட்டியும் அவங்க படத்தையும், இருந்த இடத்தையும் ஏன் உடைக்கிறாங்கன்னு இப்பதான் புரியுது.

* இது நம்மல நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டானே என்கிற கோபம் பெரிதாக இருப்பதைக்காட்டிலும், இனிமேல் மற்றவர்கள் ஏமாறக் கூடாது என்கிற நல்ல என்னத்தைக் காட்டிலும், நாம் ஏமாந்து போய்ட்டோமே என்கிற ஆதங்கத்தில்தான் மக்கள் இப்படி செயல் படுகிறார்களோ? உண்மையா?

* இல்லாட்டி இப்படி இருக்குமோ - ஒரு வேளை, நீதித்துறை எப்ப தீர்ப்பு குடுத்து - அப்படின்னும் யோசிக்கிறாங்களோ என்னவோ யாரு கண்டா? ஏன்னா -
எனக்கு என்னமோ அப்படிதான் தோனுது.

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். இந்த நிலைமை இருந்தா என்ன நடக்கும். யாருக்கு நீதி கிடைக்கும்?

(நம்ம செத்த பிறகு நம்ம ஆவிக்காவது நீதி கிடைச்சா சரிதான்.)

என்ன கொடுமை சார்?


இதுக்கு இடையில நித்தியானந்தம் உண்மைகளை சேகரிக்கிறிராம். நம்ம நீதிபதியின் செய்தியை அவரும் படிச்சிருப்பாரோ என்னவோ.

நித்தியானந்தா ஒரு வீடியோவில் பின்வரும் செய்தியை கூறியிருப்பதாக ஒரு நாளிதழ் சொல்கிறது.
We are in the process of collecting evidence on the persons behind the false video footage. Very soon the truth will be unearthed and I will come before the media with necessary evidence,” he said in his 4-minute video statement.


http://www.thehindu.com/2010/03/08/stories/2010030863841200.htm


இதுக்கு நடுவுல இவுங்க வேற:

சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.



என்ன கொடுமை சார்?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்