6.3.10

அசுத்தப்படுத்துவது யாரு?

தமிழகத்தில் மக்கள் சிரிப்பதற்கு இருக்கிற ஒரே நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி மட்டுமே. யார் எதை மறந்தாலும் சனிக்கிழமை இரவு 10.00 மணியை யாரும் மறப்பதில்லை என்று (அவர்களே)எல்லாரும் சொல்கிறார்கள்.

யார் மனதையும் புண்படுத்தாத ஒரே நிகழ்ச்சி இதுதான் என்றும் சொல்கிறார்கள். எனக்கென்னமோ அப்படி எல்லாம் ஏதும் தோன்றவில்லை.

பெரியவர்கள் நன்றாகத்தான் சிரிக்கவைக்கிறார்கள்.

ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள். பிஞ்சில் பழுத்த பழங்கள். 10 அல்லது 15 வயது கூட இருக்காது. ஆனால், அவன் மனைவியை இவன் இழுத்துக்கொண்டு போனான், இவன் மனைவியை அவன் இழுத்துக்கொண்டு போனான் என்கிற விதத்தில் சிறுவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது - இந்த நாட்டில் யாருமே சரியில்லையா. எல்லாரும் இப்படிதான் இருக்கிறார்களா என்கிற கேள்வி மனதில் உதிக்க வில்லையா?

எல்லாரும் இப்படிதான் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்றால்
நித்தியானந்தம் மேல்மட்டும் என்ன அக்கறை.

முதலில் 10 வயது சிறுவர்கள் ஓடிப்போவதைப்பற்றி பேசுவதை நிறுத்தட்டும். நான் வச்சிக்கலாம்னு வந்தேன் இப்படி ஓடுனா என்ன அர்த்தம் என்று சிட்டி பாபு பேசுவதையும், அதைத்தொடர்ந்து அனைவரும் கை தட்டுவதையும் நிறுத்தட்டும்.


நல்ல செய்தியை சொல்கிறேன் என்று அதற்கு முன்பு நாத்தம் புடிச்ச செய்தியா சொல்வதை நிறுத்தட்டும்.

நாம் அசிங்கப்படுத்தினால் அது அசத்தல் - மற்றவன் செய்தால் அசிங்கம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்