இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

19.1.16

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை (தமிழகம் தவிர)

இந்தியா இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது. 
அதற்கெல்லாம் முன்னோடியாக சிக்கிம் இருக்கிறது நாட்டின் பிரதமர் சொல்லுவதாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்லுகின்றன.

தமிழகம் என்பது விவசாய பூமி. 
இங்கே வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தலாம். 
அனல் மின் நிலையங்கள் ... 
அணு மின் நிலையங்கள் – 
ஸ்டெர்லைட் நிறுவனம் ... 
மீத்தேனை உருவ ஒரு பகுதி – 
சோத்துக்கே வழியில்லைஎன்றாலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கேன சில பகுதி - நிலக்கரி தோண்ட ஒரு பகுதி – 
தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் முன்னே தடுக்க அனைத்துப் புறங்களிலும் அணைகள் – 
நீர்நிலைகள் அருகிலேயே நீரை உறிஞ்சி எடுக்கும் கார் கம்பெனிகள் - உழவுக்கு உதவும் காளைகள் இல்லாமல் செய்யும் யுத்தி ... 
நாட்டுக் காளைகள் இல்லையென்றால் நாட்டுப் பசுக்கள் இல்லை – 
நாட்டுப் பசுக்கள் இல்லையென்றால் 
சாணம் இல்லை – இயற்கை உரம் இல்லை – 
தமிழ் நாட்டில் வேளாண்மையும் இல்லை – இயற்கை வேளாண்மையும் இல்லை – 
இனி சிக்கிம் மட்டும் தான் இயற்கை வேளாண்மையில் இருக்கும்!

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை வளர வாழ்த்துகிறேன்

2.7.13

இயற்கை, முன்அறிவிப்பு, அனுதாபங்கள்

நான் எழுத வந்து ரொம்ப நாளாச்சு. மூச்சு விட நேரமில்லை முடிவெட்ட நேரமில்லை. எல்லாம் இன்றோடு முடிந்து இன்னும் மூன்று நாட்கள் கொஞ்சம் வேலைப்பளு இல்லாமல் இருக்கலாம். நிறைய நடந்து விட்டது. இப்போதைக்கு ஒன்று மட்டும்.

இயற்கையின் சீரழிவிற்கு எல்லைகள் கிடையாது என்பதை உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளம் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது.  இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் வெறும் அனுதாபங்களோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்விகளை கேட்டாக வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியிருக்கும் இந்தக் காட்டாற்று வெள்ளம் வரும் என்று முன்பே தெரியுமா தெரியாதா? அடிக்கத் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ராக்கெட் பறக்கிறது. வானிலை முன்னறிவிப்பை நமக்குத் தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் நமக்கு இல்லை... அப்படியே இருந்தாலும் வரும் முன் என்ன செய்ய வேண்டும் என்கிற தயார் மன நிலை, மக்களைக் காப்பாற்ற துரித நடவடிக்கை....ரொம்பக் குறைவு.

[உடனே, காப்பாற்றச் சென்று இறந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்காதீர்கள்... அவர்கள் இறந்த ஹெலிகாப்டர்களை ஊழலில் தரம் குறைந்தவைகளாக வாங்கியதால் வந்தது.... வெறும் தொழில் நுட்பக் கோளாறால் மட்டுமல்ல.... அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த இராணுவ வீரர்கள் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை].

மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக  மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே... 

எனவே வெளி நாட்டு கட்டளைகளை  ஏற்று பொருளாதார சீர் திருத்தம் என்ற பேரில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், தொழில் நுட்பம் என்ற பேரில் நாட்டை அழிவுப் பாதிக்கும் கொண்டு செல்லும் இந்த மன நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தாலே போதும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். 

 சரி ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை தரக் கூடிய வானிலையின் மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே இந்திய மக்கள் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்களே ... சொல்லாமலே வரும் விபத்துகளை... [அணு உலை] அது கொண்டு வரும் விபரீதங்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை என்பது வேதனைதான்... அதனால் முன்பே 
நாம் தமிழக மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

அனுதாபங்களை இறந்தவர்களுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - இறக்க இருக்கிறவர்களுக்கும் சொல்லலாம். நான் செய்தது தவறென்றால்....

குஜராத் மாநில காங்கிரஸ், உடல்நலக் குறைவோடு இருக்கிற நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது. 
நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் அஹிம்சாவுக்கும் நிறையத் தொடரபு இருக்கிறது என்பதை உலகம் அறியும். அந்த நெருக்கத்தில்தானோ என்னவோ வேறு யாரும் அனுதாபம் தெரிவுக்கும் முன்பே குஜராத் மாநில காங்கிரஸ் ரொம்ப வேகமாகவே அவர் இறப்பதற்கு முன்பே அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது. அதனால் அனுதாபம் தெரிவிப்பதில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.






10.11.11

நிலவும் ஜூபிடரும் அருகருகே பிரகாசமாய்

ஒரு மாறுதலுக்காக - அறிவியல்

நிலா, சந்திரன், பௌர்ணமி, பூரண நிலவு என்று முழு நிலவு பல பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள முழு நிலவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இன்று இரவு ஒன்பதாம் தேதி [அநேகமாக அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இன்னும் இரவு வரவில்லை] முழு நிலவும் ஜுபிடரும் [வியாழன்] அருகருகே இருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே நான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது அறையில் இருக்கும் மிகப் பெரிய சன்னல் வழியாக அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே எழுதுகிறேன்.

சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு என்பதை நாம் படித்திருந்தாலும், இப்போது எட்டு கிரகங்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் [நமது பள்ளிக் கூடங்களில் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?]. புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இருக்கிற எட்டு கிரகங்களில் மிகப் பெரிய கிரகமான ஜுபிடர் நிலவுக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

நவம்பர் மாத முழு நிலவை Hunter 's மூன் என்று அழைக்கிறார்கள். பல பெயர்கள் அமெரிந்தியர்கள் இட்ட பெயர்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்திற்கான முழு நிலவுக்கும் பெயர் உண்டு. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் அதற்கான பெயர்கள் உண்டு என்றே நினைக்கிறேன்.

எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.





இதைப் பற்றிய ஆராய்ச்சி நிறையச் செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

1. http://earthsky.org/tonight
2. http://en.wikipedia.org/wiki/Full_moon


2.5.11

இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்


எல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.

அப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.

அப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...

இதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.

கணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.

உலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.

5.9.10

உலகத்தின் நோக்கம் 7

நான் ஏதோ எழுத நினைத்து எங்கெங்கேயோ சுற்றித் திரிந்து விட்டேன்.

அது என் தவறே!

உலகத்திற்கு நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது பெரிய விவாதங்களை உள்ளடக்கியது.

இக்கட்டுரையின்
மூலம் ஏதாவது ஒன்றை நாம் நிருபித்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லைஅதில் ஒரு முடிவுக்கும் வர இயலாது.

எந்த ஒரு நிலைப்பாடும் ஏதாவது ஒரு பார்வையிலிருந்து பல்வேறு சிக்கல்களையும், பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.


எல்லாமே interpretations என்கிற விதத்தில்
பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
தங்களின் interpretationsபடி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.

அதை சரி என்றோ தவறு என்றோ
திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.

நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ
அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.


நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில்
நாமும் வேதிப் பொருள்களையும்,
மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materialsஐயும் கொண்டிருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில்
நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.


இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம்

அவர்கள் materialistsஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரிutilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள்யாராக இருந்தாலும் சரி

மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.

அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.

எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.


ஆனால் அந்த மேலான குணம் என்பதுதாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால்ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.


அதில் முதன்மையானதுமரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போலநாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.


இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது
அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.


அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.


நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும்அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.


பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.
Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது
அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.



ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.

மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவதுமக்கள் பரந்து விரிந்து வாழ்வது
விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது
ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது
இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை
அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.

நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்
நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)
இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.

இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.
மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.

நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும்
நாம்தான் மாய்ந்து போவோம்.
எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்
நல்லதை செய்து மாயலாமேமாயமாகலாமே!


ஏன் என்று கேட்பவர்கள் - முதல் கட்டுரையைப் படிக்கவும்.

4.9.10

உலகத்தின் நோக்கம் - 6

உலகத்திற்கு நோக்கம் உண்டா நோக்கம் இல்லையா என்கிற விவாதம் நேற்று இன்று பிறந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒரு விவாதம்.

நமது கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. எல்லாம் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவைகள்தான்.

நம் நாக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பேசும். ஏனெனில், அதை எப்படியும் பயன்படுத்த நமக்குள்ள அறிவு பலம் கொடுக்கிறது.
அதுதான் அறிவின் பலவீனமும்.

அறிவின் வழி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.
ஏதாவது ஒரு இடத்தில் அறிவால் நிரப்பப் பட முடியாத வெற்றிடம் எப்போதும் இருக்கும்.

அதனை வெறும் வெற்றிடம் என்று சொல்பவர்கள் நோக்கம் இல்லை என்கிறார்கள்.
அதனை மிஸ்டரி என்று புரிந்து கொள்கிறவர்கள் ஒரு நோக்கத்தினால் ஒருவனால் படைக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.

அந்த நோக்கம் இதுதான் என்று சொல்வதும்
அதை நிறைவேற்றாமல் இருப்பது பாவம் என்று சொல்கிற போதும்,
நோக்கம் கற்பிக்கிறவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக -
தனது ஆளுமையை அனைவர் மீதும் திணிக்கப் பார்க்கிறான்.

இது மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் - அறிவால் தானே தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் மனிதனை கட்டுப் படுத்தி சிறுவனாகவே பாவிக்கும் மனநிலை தவறு என்கிற நிலையில் - இது ஒரு கருத்தை மற்றவர் மீது திணிக்கும் மேலாதிக்கம் என்பதனாலும், நோக்கத்தையே மறுக்கும் நிலைக்கு நாம் கொணரப்படுகிறோம்.

இந்த அடிமை நிலையிலிருந்து நான் விடுபட -
நோக்கம் இல்லை என்றும் எல்லாவற்றையும் நமது அறிவால் அறிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஆனாலும் எல்லாவற்றையும் அறிவால் விளக்க முடிய வில்லை.

நமது உடலைப் பற்றிய புரிதலும்,
இந்த உலகில் எந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகமும்,
பரந்து விரிந்த கடலும்,
விண்ணைத் தொடும் இமய மலையும்,
அங்கிருந்து பார்க்கிறபோது அது கொடுக்கிற பயம் கலந்த வியப்பும்,
நம் உடலோடு உறவாடும் தென்றல் வருடும் சுகமும் -

மெல்லிசை கொடுக்கிற திளைப்பும்,
கவிதை கொடுக்கிற மகிழ்ச்சியும்,
நட்பு கொடுக்கிற ஆனந்தமும்,
அன்பு கொடுக்கிற திருப்தியும்
-------- ........................................................

அறிவால் புரிந்து கொள்ள முடியுமா என்பதுதான் புரியவில்லை.

இயற்கை கொடுக்கிற இன்பத்துக்காகவே நாம் சுற்றுலா செல்கிறோம்.
வெறும் கட்டிடங்களைப் பார்ப்பது மிகவும் குறைவு...
மலையகங்களுக்குச் செல்வதும்,
நீர் வீழ்சிகளுக்குச் செல்வதும்,
கடற்கரைகளுக்குச் செல்வதும்,
இயற்கையின் இன்ப வனத்தில் நாம் நம்மை மறப்பதற்காகவும் - அது கொடுக்கும் கிளர்ச்சிக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் - பார்க்கலாம் - அனுபவிக்கலாம்....
அறிவால் இதில் பயனில்லை.


எழுத்தில் திளைப்பவனுக்கும் - கவிஞனுக்கும் அறிவு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் வெறும் அறிவு மட்டுமே ஒருவனை கவிஞனாக்கி விடும் என்பதை எந்த கவிஞனும் சொல்ல மாட்டான்.
கவிஞன் அறிவு கடந்தவன் -
அறிவால் அவ்வளவு பயனில்லை.

ஆனால் அறிவு இல்லையெனில்,
தெரிந்தவன் ஆள்பவனாகவும் தெரியாதவன் அடிமையாகவுக் இருக்க நேரிடும் என்பதை வரலாறு சொல்வதனால் அறிவின் செயல்பாட்டை அடியோடு மறுப்பதற்கும் இல்லை.
ஆனாலும் அறிவால் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியாது -
வெற்றிடம் இல்லாமல் பேசவும் முடியாது.
மேலும்...

3.9.10

உலகத்தின் நோக்கம் 5

சரி தவறு என்றால் அது அறம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகிறது.
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.

ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.

எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.

பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.

ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.
மேலும்... 

2.9.10

உலகத்தின் நோக்கம் 4

நமக்கு நாமே சிலவற்றைக் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.


சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்கக்கூடாது.
கடந்தால் தவறு என்போம்.

அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி
அதைக் குற்றம் என்போம்.
குற்றத்தைக் கண்காணிக்க காவலர்களை நியமிப்போம்.


நமக்கு நாமே இவைகளை எல்லாம் கற்பித்துக் கொள்வதனால்
நமக்கு முன்னிரிமை தர வேண்டும்:
எனவே நமக்கு உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தி,
நாம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.

உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.

பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
எல்லாரும் சமமாக மதிக்கப் படவும் வேண்டி அரசுகளை ஏற்படுத்துவோம் அல்லது அரசுகளின் வழி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் ஏற்படுத்துவோம்..


நாம் தனி மனிதர்கள் தான் ஆனாலும் நாம் விலங்குகளிலிருந்து மாறுபட்டு வாழ நாம் இந்த சமுதாய வாழ்க்கை முறைக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

நான் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்காக இவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அதை நான் படைத்துக் கொள்கிறேன்.

சிக்கல்கள் -

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் - எது சரி தவறு என்பதை யார் நிர்ணயம் செய்வது?
எதனடிப் படையில் நிர்ணயம் செய்வது?


சரி தவறு என்பதை நமக்குள்ளேயே தேடுவோம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற வரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்வோம்.

மகிழ்ச்சி நமது வாழ்க்கைக்குத் தேவை - எனவே அதன் அடிப்படையில் சரி தவறை நிர்ணயம் செய்வோம்.


இதிலும் சிக்கல் என்னவென்றால் -
குறிப்பிட்ட ஒன்றுதான் எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக மகிச்சியைக் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு எது இன்பம் தருமோ அது உங்களுக்கு இன்பம் தராது.
அப்ப எப்படி எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக இது சரி தவறு என்று சொல்வது?


பெரும்பான்மையான மக்களுக்கு எது இன்பம் தருமோ அதை சரி என்போம்.

மற்றதை தவறு என்போம்.


ஆனால் நாம் தனி மனித உரிமையையும் வலியுறுத்துகிறோம்.


எனவே எனக்கு ஒரு பெண்ணோடு வாழ்வது இன்பம் தரவில்லை பல பெண்களோடு வாழ வேண்டும் என்றால் அதைத் தவறு என்றோ மனித நோக்கத்திற்கு எதிரானது என்றோ சொல்லிவிட முடியாது - ஏனெனில் நோக்கத்தை நாம்தான் படைத்தோம் ஆனால் - உரிமையை நிலை நிறுத்தவும் வேண்டும்.


அல்லது தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவன் முடிவு செய்தால் - அதுதான் இன்பம் என்றால் என்ன செய்வது -


ஒரு ஆண் இன்னொரு ஆணோடு வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எந்த நோக்கத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியும்?
முடியாது.

அப்ப அதையும் சரி என்போம்.



ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?

கவன ஈர்ப்புக்காகவும் எங்களது கோரிக்கைகளை சரி என்று என்றுக் கொள்ளவும் இப்படித்தான் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால் அதுவும் சரிதானே?


அப்ப இப்படி மாற்றி வைத்துக் கொள்வோம் -



மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.



மனித குலத்தை அழிப்பதா?


திருமணம் என்பது ஒரு நிறுவனம் - நாம் ஏற்படுத்தியது.
ஓரினத்திருமணம் சரி - அதுவும் நாம் ஏற்படுத்தியது -

abortin செய்வதும் சரி.
ஏனெனில் அது தனி மனித உரிமை.



மரங்களை அழிப்பதும் சரி - ஏனெனில் அதுவும் நாம் இன்பமாக வாழ செய்கிறோம்.

கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
என்றாவது இப்படித்தான் ஆகும் அதனால் அது தவறில்லை என்கிறோம்.


இது தொடர்ந்து நடந்தால் உலகமே இருக்காதே அப்புறம் எப்படி மனித குலம் இருக்கும்.


இதெல்லாம் நமக்குச் சரியெனப் படுகிறதா

மேலும்..