28.7.10

புதிய அடையாளம்


நமது நாட்டிற்கு ஒரு புதிய அடையாளம். நமது பொருளாதார வீழ்ச்சியை இனி வெறும் அடையாளம் கொண்டே குறிப்பிடலாம்.
மிக விரைவாக பாகிஸ்தானும், இலங்கையும் தங்கள் பணத்தின் குறியீட்டை வெளியிடும் – கேரளம் தங்கள் பெயர் மாற்றியது போல.
இந்த அடையாளத்தை ஒரு தமிழன் வரைந்தான் என்பது ஒரு விதத்தில் பெருமைதான்.
ஆங்கிலமா, கிரேக்கமா அல்லது இந்தி – யா என்கிற குழப்பம் நம் பண மதிப்பு மற்றும் பொருளாதாரம் பற்றிய குழப்பம் போல வெகு நாளைக்கு நீடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அடையாளம் தேவைதான் அதே சமயம் – அதில் இந்தியாவும் இந்தியனும் வெற்றி பெரும் அளவுக்கான பொருளாதாரக் கொள்கையும் தேவை.

23.7.10

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்


உலகின் மிகப்பெரிய இரயில்வேத்துறையில் தொடர்ந்து விபத்துகள் - 

லாலுவிற்குப் பிறகு வந்த ரயில்வே அமைச்சரின் கவனக் குறைவா அல்லது லாலுவின் காலத்தில் எல்லா இடங்களிலும் பணியில் நிரப்பப் பட்ட  பீகார் நண்பர்களின் கவனக் குறைவா – அல்லது இவர்களின் எப்போதையக் கவனக் குறைவையும் மீறி இரயில்கள் விபத்தில்லாமல் தப்பிக்கின்றனவா - நமக்குத் தெரியாது.

ஆனால் நம் அரசுக்கும் ஓட்டுனர்களுக்கும் உயிரின் மதிப்பைப் பற்றி கவலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் – திடீர் சோதனை – கூட்டங்கள் – விபத்து நடந்தவுடன் சில ஆயிரங்கள் இறந்தவர் குடும்பத்துக்கு – பிறகு யார் குற்றவாளியோ அவர் சஸ்பென்ட் – அப்புறம் ஒரு விசாரணைக் குழு – அதன் முடிவு வருவதற்குள் அடுத்த விபத்து – சில அவசர சட்டம் – சில நாட்களுக்கு கெடுபிடி – பிறகு வேறு ஏதாவது பிரச்சனை – அதற்கான விசாரணைக் குழு – கொடுமை சார் ...

மனித உயிர் அவ்வளவு கேவலமானதா? நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா  - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது? – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா? நாம் எல்லாவற்றையும் “take it for granted” – என எடுத்துக் கொள்கிறோம். என்னை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை ஓட்டுனர், நிலைய இயக்குனர், ... ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பு பற்றி உணர வேண்டாமா? 

தங்கள் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை. எல்லாம் ஒழுங்காக நடக்கும் – எல்லோரும் கடமை உணர்வோடு பணியாற்றுகிறார்கள் – எல்லோரும் கவனமாகக் கடமை உணர்வோடு இருப்பார்கள் – எல்லாம் சரிதான் ஆனால் ஓட்டுனர்கள் மட்டும் எப்போதும் தன்னைத் தவிர வேறு யாரும் கடமை உணர்வோடு பணியாற்றுவது இல்லை என்று தான் எண்ண வேண்டும் – இதைத் திமிர் என்றாலும் பரவாயில்லை – தான்மட்டும்தான் கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும் வேறு யாரும் கவனத்தோடு வண்டி ஓட்டுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டும் – இதைக் கொழுப்பு என்றாலும் பரவாயில்லை – கடமை உணர்வும் பொறுப்புணர்வும் நிமிடம் அதிகரிக்காத வரை சாலைகளாகட்டும். தண்டவாளங்களாகட்டும் விபத்துக்கள் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் –

தெரியாமல் நடப்பதுதான் விபத்துகள் – தெரிந்தே நடந்தால் ...

தொடர்புடைய கட்டுரைக்கு கீழே சொடுக்கவும்.

சாலை மரணம் நவீனக் கொடை


"ஒரு வார" நோய் 

16.7.10

அன்புக்கு எல்லை இல்லை

மனிதர்கள் அன்பு இல்லை எனலாம்.

விலங்குகள் மிகுந்த அன்போடு இருக்கின்றன...

சிங்கம்...
எம் ஜி ஆர் சிங்கம் புலிகளோடு சண்டை போடும் போதெல்லாம், நாம் அவைகள் எவ்வளவு ஆக்ரோஷம் நிறைந்தவை என்று நினைத்திருப்போம்.

தேவர் படங்கள் வந்தபோதுதான் அவைகளை நிறைய பார்த்தோம்.

இராம நாராயணன் படங்களை பார்த்தபோது எப்புடி -- கப்சா --- என்று யோசித்திருக்கலாம்.

இதைப் பாருங்கள்:




8.7.10

முட்டாள்கள் உலகம் முழுவதும்

உலகம் முழுவதும் கால் பந்து திருவிழாவில் அக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாவிட்டாலும் - ஆக்டோபஸ் ஜெர்மனி விளையாடும் விளையாட்டின் முடிவுகளை முன்கூட்டியே தெரிவிப்பதகாவும் 6 க்கு 6 முறை சரியான முடிவுகளை சொன்னதாக தெரிவிக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Paul_the_Octopus