3.4.15

விவசாயிகளின் பெரிய வெள்ளி

நிலம் கையகப் படுத்தும் சட்டம்- இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு பா.ச.க அரசு இருப்பது, தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர வேறொன்றம் இல்லை.

இந்த சட்டத்தினால் விவசாயிகளின் தற்கொலை குறையும் என்பது மட்டுமல்ல விவசாயிகளின் நலன் பெருகும் - கிராமப்புரங்கள் மேம்படும் என்று உயர்திரு கட்கரிசொல்லியிருக்கிறார். அது எப்படி என்று யாராவது விளக்கம் சொன்னாள் எனக்கு நன்றாக இருக்கும்.

இந்திய நாடு விவசாய நாடு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆசை காட்டி, ஐந்து மடங்கு விலை தருகிறோம் என்று தனியார் நலன் கருதி நிலங்கள் கையகப் படுத்தப்படுவது நம்மை நாமே கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு சமம்.

நமது அடுத்த தலைமுறை சொத்திற்கும் சோத்திற்கும் வழியில்லாமல் பிச்சை எடுக்க நாம் எடுக்கும் முதல் வழியே இந்தக் கையகப் படுத்தும் சட்டம்.