18.11.16

ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. சுட்டது

இதை வாட்ஸ் ஆப்பில் படித்தேன். ரசித்தேன். எனவே அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன் - அப்பு 

ஏ டி எம் இலக்கிய க்ளாசிக் வரிசை.
( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)
-@-

குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.
வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போகிறேன்.
“எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும்.” இதுதான் அவரின் கட்டளை.

அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச் சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.

தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.

ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர் 12-ஆம் வகுப்பு மாணவர்கள்.

இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும்  குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது.

ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.

ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது.

என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.
அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.

குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான, தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,

If you don't know anything, create a problem and don't solve it..
என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.
குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?
சுபம்.


17.11.16

பணம் படுத்தும் பாடு - சுடாதது [இரண்டு]

கேவலம்


கறுப்புப் பணம் வைத்திருப்போரின்
கரங்கள்
கரைபடியாத போது

வெள்ளைப் பணத்தை மாற்ற வந்த 
உழைத்துக்
காய்த்துப் போன
கரங்களில்

கறுப்பு மை பூசுவது

காத்திருந்து களைத்துப் போன
அந்த முகங்களில்
சாயம் பூசுவதற்குச் சமம்.


ஹோலி என்று போலியாக

விளக்கம் சொல்லாமல் இருந்தால் சரி!

அப்பு 
https://unmayapoyya.blogspot.in/

14.11.16

பணம் படுத்தும் பாடு – சுடாதது - கவிதை?

மாறுதல்

டாஸ்மாக் முன்புறமே
கூட்டம் பார்த்து விட்டு
வங்கிகளுக்கு முன்பு
கூட்டம் பார்ப்பது
சற்றே ஆறுதல்

கண்ணுக்கு மாறுதல்

---

வீரம்

ஜப்பானிடம்
கேள்வி கேட்கத் திராணியின்று
ஏ டி எம் – ம்மில்
‘பணம் இல்லை’ சார் என்று சொன்ன
அந்தப் பல்லுப் போன கிழவனிடம்
மல்லுக் கட்டி நிற்பதுதான் வீரம்
---

மாற்றம் – மான் கி பாத்

முன்னாள் பிரதமர்
நாட்டில் இருந்தார்
பேசுவது இல்லை.
இந்நாள் பிரதமர்
நாட்டில் இருப்பதில்லை
பேச்சை நிறுத்துவது இல்லை.
ஆருடம்
அடுத்த தேர்தலில்
பா.ச.க மீண்டும்  
ஆட்சி அமைக்கும்
அடுத்த தேர்தலில்
அவர்களிடம் மட்டும்
வாக்காளர்களிடம் கொடுக்க
செல்லும் பணம் இருக்கும்.
---


முரண்

·       உயர் நோட்டுக்களால்தான் கறுப்புப்பணம் புழங்குகிறது.
எனவே உயர் நோட்டுக்கள் தடை.
·       புதிய உயர் நோட்டாக இரண்டாயிரம் ரூப்பியா வெளியிடப்படுகிறது.
·       ஐநூறு ரூப்பியாவும் வெளியிடப்படுகிறது
·       மீண்டும் புதிய ஆயிரம் ரூப்பியா நோட்டுக்கள் வெளியிடப்படும்.
·       [மீண்டும் கறுப்புப் பணம் புழங்கும்]

---

‘நானே’ சிம்

இதுபற்றி யாருக்கும் தெரியாது.
பத்து மாதமாக நானே யோசித்தேன்.
யாருக்கும் சொல்லவில்லை.
கவர்னருக்கே தெரியாது என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன்.

---

ஆதார் கார்டு 1

ஜியோ சிம்மிற்கு
ஆதார் எண் கட்டாயம்
என்ற போதே
கொஞ்சம் விழிப்பாய்
இருந்திருக்க வேண்டும்.
இப்போது
எத்தனை கோடி
ஆதார் கார்டுகளில்
மீதி இருக்கும்
எத்தனை கோடிகள்
மாற்றப் படுகின்றனவோ?
[ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் கோடிகள்
முதலீடு / செலவு செய்து ஜியோ அறிமுகம்
எல்லா நோட்டுகளும் ஏற்கனவே அவுட் அதனால்தான் ‘மீதி’]

---

ஆதார் கார்டு 2

இதோடு எல்லாம் இணைக்கப் படும்.
நீங்கள் டெபாசிட் செய்யும் பணம்.
நீங்கள் வாங்கும் தங்கம்.
உங்கள் கார்.
உங்கள் நிலமும் வீடும்.
அதோடு உங்கள் உள்ளாடைகளும்.
எதையும் மறைக்க முடியாது?
-
விக்கி லீக்சுக்கு வேலையே இல்லை!
-
கறுப்புப் பணம் ஒழிந்தது
என் டோனர் தீர்ந்தது.

9.11.16

ஊழல் ஒழிந்தது

 
ஏற்கனவே வாக்களித்தது போல மத்திய அரசு சுவிஸ் வங்கியிலிருந்து அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்தது நமக்குத் தெரியும். அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த அத்துனை நபர்களின் பெயரை எல்லாம் வெளியிட்டு மிகப் பெரிய புரட்சி செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கே மிகப் பெரிய பாராட்டு விழா வைக்கலாம் என்று அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதுபோல ஒரு அறிவிப்பு வந்தவுடன் நேற்று எல்லா பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் முன்பு எந்திரத்தனமாய் மக்கள். எப்படியாவது பணத்தை நூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றி விட முடியாதா என்கிற ஏக்கம் தெரிந்தது.

அறைகளில் ஆயிரம் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாரும் பீதியில் வயிறு கலங்கி ஒரே நாளில் பத்து கிலோ குறைந்து பார்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்கள்.

இந்த அதிரடி முயற்சிக்காக நமது சர்க்காரை பாராட்டியே ஆக வேண்டும். இனிமேல் யாரும் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்க முடியாது. ஒன்று பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது கோவிந்தா என்று திருப்பதியில் போட வேண்டும். நல்ல வருமானம் நமது சமஸ்தானத்திற்குத்தான்.

சரி – அதை விடுவோம் – இந்திய நாட்டில் எத்தனை சதவீதம் பேர் கறுப்புப் பணம் வைத்திருப்பான் – இரண்டு மூன்று சதவீதம் இருக்குமா? அட பத்து சதவீதம் வைத்துக் கொள்ளுங்கள். அவங்களை நமது சர்க்காரால் கண்டு பிடிக்க முடியாதா? அது எதுக்கு இந்த அதிரடி நடவடிக்கை. குப்பனும் சுப்பனுமா சுவிஸ் வங்கியில கணக்கு வைத்திருந்தான். அந்த பெயர்களை வெளியிட நமக்குத் துணிச்சல் இல்லை இதுல இது வேற?

இன்னும் ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே பாக்காத மக்கள்தான் இன்னும் எங்கள் அருகில் இருக்கிறார்கள். இனிமேல் அதை ஒன்று சாலை ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் பார்க்கலாம். அதற்கடுத்து மொத்த வருமானமே ஐந்நூறு ஆயிரம் என்று உள்ள நபர்கள்தான் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு கஷ்டப் படனும். பாவம். அதுதான் நமது பிரதமர் மன்னிப்பு கேட்டு விட்டாரே. அப்புறம் என்ன?

வெளிநாட்டில் பங்களா வைத்திருப்பவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இல்லையா? அவர்கள் இன்னமும் ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? அல்லது பவுண்ட்ஸ் / யூரோ வைத்திருப்பவர்களா?
வச்சிருக்கவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான்.

இனிமே யாரு என்ன பண்ண முடியும்? இந்த நோட்டுக்களை கொஞ்சம் சாதாரண மக்கள் மத்தியில் காண்பிக்க அரசே எக்ஸ்ஷிபிஷனுக்கு ஏற்பாடு செய்யலாம். சாதாரண மக்கள்தான் பாவம். நூறு ரூபாயை வைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம். காய்கறிகளை விற்கும் மக்கள் வியாபாரம் செய்ய முடியாது. தள்ளு வண்டி வியாபாரி வியாபாரம் செய்ய முடியாது. கெட்டுப் போகாத பொருள் வைத்திருப்பவர்கள் பரவாயில்லை. அழுகும் பொருட்களை வைத்திருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

இப்ப ஐந்நூறு ரூபா குடுத்தாக் கூட  ஒரு ஐம்பது ரூபா கிடைக்க மாட்டேங்குது. சின்னப் பிள்ளைகளைப் போல நோட்டுக்கு ஆசைப் படாம சில்லரைகளுக்கு ஆசைப்பட பழகிக்க வேண்டியதுதான். ஏன்னா பெருசுதான் பதுக்க வழி வகுக்குமாம்?

சரி என் சந்தேகம்
·         பெரிய நோட்டுதான் பதுக்களுக்கு வழிவகுக்கும்னா அப்புறம் எதுக்கு திரும்பவும் ஐந்நூறு ரூபா நோட்டு – புதுசா இரண்டாயிரம் ரூபாய் நோட்டு? ஈசியா பதுக்கவா? இரண்டாயிரம் ரூபாயையும் ஐந்நூறு ரூபாயையும் நாளை வெளியிடுவதாகச் செய்தி வருகிறதே அவைகளைப் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் வெளியிடப் பட்டிருக்கின்றவே. ஏற்கனவே அடித்து வைத்ததால் வெளியிடுகிறீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவ இந்த ஏற்பாடா?

·         இன்று எல்லா நாளிதழ்களிலும் இந்தப் புரட்சி ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவி செய்யும் என்று அரசு விளம்பரம் செய்திருக்கிறது. அது எப்படி உதவும் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.



·         ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு பொருளியல் நிபுணரிடம் ஆயிரம் கோடிக்கு ஆயரம் ரூபாய் நோட்டு இருக்கிறது அதை மாற்றிக் கொடுத்தால் இருபத்தி ஐந்து சதவீதம் வரை கமிஷன் என்று ஒரு தொழிலதிபர் கேட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. அவருக்கு மட்டும் தெரிந்ததா அல்லது எல்லா தொழிலதிபர்களுக்கும் தெரிந்ததா?

 

8.11.16

மாசுவுக்கு மாஸ்க்தான் தீர்வா?


நேற்று செய்தித் தாள்கள் டெல்லியில்  மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின.
பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரும் வெளியில் வரக்கூடாதாம்.
உடல் நிலை பாதிக்கப் படுமாம்.

ஏன்  மாசு உருவாகிறது என்பதை விவாதித்து அதைக் குறைப்பதற்கான வேலையை விட்டுவிட்டு, மாஸ்க்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவாய் பட்டாசு வெடிக்கலாம். இஷ்டத்துக்கு இண்டஸ்ட்ரிகளை வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு வேண்டுமானால் மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்.

பிரச்சைனையின் ஆணி வேரைப்  பார்க்காமல் நாம் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று மட்டுமே யோசிக்கும்  ஜென்மங்கள் இருக்கும் வரை
இந்த நாட்டின் எதிர்கால சந்ததி மட்டுமல்ல இக்கால சந்ததியும் இங்கே வாழத் தகுதியற்ற நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம்.




3.11.16

வலி

வெறி பிடித்து 
செத்த பிணத்தை 
சுட்டுத் தள்ளும் சூரர்கள் போல,
புஸ்வானத்தைக் கூட 
அணுகுண்டை வைப்பது போல 
பார்வையிலேயே பிரளயம் செய்யும் 
அவன் நண்பர்களை 
ஒரு வாரமாய் பார்த்து
அழுது அழுது 
வீங்கிப் போன முகத்தோடு 
அவன் இருந்தான்.

பட்டாசு வாங்கினால் 
சோறு தின்ன முடியாதே என  
அவன் அம்மா 
அரிசியையே வாங்கினாள்.

வேறு வழியே இல்லை 
பிரளயத்தை வேடிக்கையாவது பார்ப்போமே 
என்று வெடிக்கும் இடம் போனான் 
அவன் கன்னத்தில்
வினையாய் வந்தது ஒரு வெடி.

அவசரமாய் அவனை 
ஆஸ்பத்தரி தூக்கிப் போக 
அனாதையாய் 
கிடந்தது 
அரிசி...

1.11.16

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால்  வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?

அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?

கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.

தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களே எழுதுவார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  இந்தத் தேதியன்று, தமிழ் நாட்டின் தலைநகரில் கொடியேற்றி  கூட்டங்கள் நடைபெற்றன. அவர்களெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே போய் விட்டனர்.

நம்மைப் பற்றி என்ன சொல்வது?
வாழ்க கர்நாடகம் ... வாழ்க கேரளம்.