ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.9.11

ஜே - க்களுக்கு ஜே [ஜெயலலிதா மற்றும் ஜெயமோகன்]


ஜெவுக்கு ஜே
தமிழக முதல்வர் கூடங்குளப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது. மத்திய அரசின் மெத்தனப் போக்கை அவர் கண்டித்திருப்பது மிகவும் சரியானது. அவர்களை மிக விரைவாக செயல்பட வைப்பது மாநில அரசின் கையில் இருக்கிறது. இதில் எனக்கு மிகவும் பிடித்தது - "மக்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை எனது அரசு செய்யாது" !. ?
--
ஜெயமோகனுக்கு ஜே
நேற்று திரு. ஜெயமோகன் அவர்கள் போராட்ட களத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் செல்வதாகப் படித்தேன். அவரது கட்டுரை - மிகச் செறிவானது. கடனைக் கழிக்க ரஷ்ய அரசு தள்ளிவிட்ட இந்த அணு உலை பற்றிய குறிப்பு. .கூடங்குளம்  படிக்க இங்கே சுட்டவும்.

அடுத்த கட்டுரை சில விளக்கங்களைக் கொண்டது. எப்படி நாம் மின்சாரப் பற்றாக்குறைக்கு அணு உலை மட்டுமே தீர்வு என்கிற மாயைக்குள் வந்திருக்கிறோம் என்பது பற்றியது.  அணுமின்சாரமின்றி வேறு வழியில்லையா?

இலக்கிய ஆர்வலர்கள் மக்கள் பிரச்சனையில் ஆர்வம் காட்டுவதும் நேரடியாகப் பங்கேற்பதும் மிகச் சிறப்பானது. ஜெயமோகன் எப்போதும் போல மக்கள் பிரச்சனையில் ஆர்வம் கொண்டிருப்பதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். பாராட்டுக்கள்.
--

பாலாவுக்கு ஜே
கூடல் பாலா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதாகப் படித்தேன். தினமும் அப்போராட்டம் பற்றிய செய்திகளையும் போராட்டத்தில் இருந்தபடியே தந்து கொண்டிருக்கிறார். அவரது மன உறுதி இன்னும் அதிகப் படியாக இருக்க வாழ்த்துகிறோம். போராட்டத்தில் கலந்து கொள்கிற மற்ற வலைப் பூ நண்பர்கள் இருந்தால் வாழ்த்துக்கள்.
--

கடனைக் கழிக்க
கழிவுகளை நம்மிடம் தள்ளிய ரஷ்யா சிறந்த ராஜ தந்திரியா?
கழிவாவது வந்தால் போதும் என்று
இதை ஏற்றுக்கொண்ட இந்தியா ராஜா தந்திரியா?

28.2.11

ஜெயமோகனின் சிறுகதைகள்

தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியவாதி ஜெயமோகன் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்காது. 
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து [இணையத்தில்] விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சிறுகதைகள் வற்றாத ஜீவா நதி போல, கிளர்த்தெழும் ஊற்று போல, ஓடிக்கொண்டே இருக்கிறது.

 ஒரு சிறுகதையைப் படித்து அதை உள்வாங்கி மீண்டும் படிக்கத் தோன்றி அப்பக்கத்திற்கு விஜயம் செய்தால் - புதிய கதை. அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அதற்குப் பின்னூட்டம் எழுதக் கூட  நமக்கு அவகாசம் தராமலேயே அடுத்த படைப்பு. அவரது வேகத்திற்கு பின்னூட்டம் எழுதக் கூட நமக்கு வேகம் இல்லாத காரணத்தால் எந்தப் படைப்பிற்குப் பின்னூட்டம் போடுவது என்ற தவிப்பே மிஞ்சி நிற்கிறது.


படைப்பில் இது தொடங்கியது - அதற்கு முன்பாகவே ஒரு த்ரில்லர். நான் இன்னும் படிக்கவில்லை. அது எதைப் பற்றியது என்று சொல்வது நல்லதல்ல. ஆனால் அதைப் படித்த பின்பு நீங்கள் நிச்சயமாய் மீண்டும் படிப்பீர்கள் எம்பது மட்டும் நிச்சயம்.


அதைத் தொடர்ந்து - மத்துறு தயிர் - இரண்டு பாகங்கள்.


அதன் பிறகு வணங்கான், .... இப்போது ஓலைச்சிலுவை.....

அவருக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.