8.3.10

மார்ச் 8 உலக மகளிர் தினம்

இந்தியத்தாய் என்கிறோம்.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த குழந்தை என்கிறோம்.
என் தாய் நாட்டை இழிவு படுத்துபவனை எனைப் பெற்ற தாய் தடுத்தாலும் விட மாட்டேன் என்கிறோம்.

ஆனால் இங்கேதான் பெண்களுக் கெதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றன.
33 % இட ஒதுக்கீடு கூட இன்னும் சாத்தியப் படவில்லை.

பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா தலைவரின் மைக் பிடுங்கப்பட்டிருக்கின்றது - அதற்கு மேலும் நடந்திருக்கலாம். 33 % - த்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் இது நிகழ்ந்திருக்கின்றது.
அவர் சொல்கிறார் -

"I think this is how protest is done in a democracy. We were opposed to the Bill so we tore it; we raised slogans. I can tell you this much we will cross all limits of protest over this issue,"
said Sabir Ali, the MP who attacked the Rajya Sabha Chairman.


இன்னும் ஒரு முறை அனைத்துக் கட்சி கூட்டமாம்.


அகில உலக மகளிர் தினத்தன்று மேகாலயா துணை முதல்வர் சில (எல்லாரையும் மனதில் நினைத்து ) பெண்களை விரியன் பாம்புகள் என்று சொல்லியிருக்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை என்று மீண்டும் சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் மேகாலாயாவில் வம்சாவழியை தாய் வழியாகத்தான் அறிந்து கொள்கிறார்களாம்.

ஜார்கந்த் மாநிலத்தில் இன்று 40 வயதுள்ள ஒரு பெண்ணை 3 - 4 பெண்கள் சேர்ந்து அடித்துக் கொன்றதாக தகவல்.

http://www.ndtv.com/news/india/jharkhand-shocker-woman-beaten-to-death-by-villagers-17402.php?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+ndtv%2FLsgd+%28NDTV+News+-+India%29

இப்படி இருந்தால்"பெண்கள் தினம்" - தினம் தினம் கொண்டாட வேண்டும் போலிருக்கிறதே.

வாழ்க பாரதத் தாய். வாழ்க நம் நாட்டு அரசியல் வாதிகள்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்