இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.5.17

தங்கப்பதக்கம் vs ஒண்டிக்கட்ட

மானஸ்தன் படத்தில் வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடி பார்த்திருப்பீர்கள்… தங்கப்பதக்கம் படத்தைசரத், தங்கப்ப–தக்கம்என்றுவாசிப்பார். 
வடிவேலு அதை மீண்டும் மீண்டும் அது தங்கப்ப~ தக்கம் என்று பிரித்து சொல்லக்கூடாது, மாறாக, தங்கப்பதக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்.




OR

starts at 2: 28



+++++++++++++++++++++++++++++++++++++++++


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புதிதாய் எங்கோ போஸ்டர் பார்த்து விட்டு, one ticket ட்ட, அதாவது, ஒன்– டிக்கட்ட பாக்கணும்னு சொன்னார். எந்த டிக்கட்ட இவன் சொல்றான்னே புரியலை. எந்த டிக்கட்டு அதுன்னு கேட்டேன்.
புதுப் படம் போல... போஸ்டர் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பாக்கனும்னு சொன்னான்.
அது என்னா படம்னு நானும் தேடித் தேடித் பாத்ததுல
ஒன்னும் சிக்கவே இல்லை.
கடைசியில இந்த போட்டோதான் கிடைச்சது. 



= = = 

அட மவனே  
அது ஒன் – டிக்கட்ட இல்லை ஒண்டிக்கட்ட அப்படின்னு அவனுக்குப் எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை. ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...

மக்களே,
அழகா எழுதுனாலே நமக்குத் தமிழ் படிக்க வராது.
இதுல கோணயா எழுதுனா நாங்க கேனத்தனமாத் தான் படிப்போம்.
நம்ம தமிழ் அப்படி ரொம்ப ஸ்ட்ராங்.
இந்தி கட்டாயம் படிக்கணும்னு எஸ், வி. எஸ். சொன்னார் தானே.
அதுனால தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறான்.
என்ன செய்யுறது?

16.5.17

குப்பை லாரியும் ஆட்டோவும்


ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி. 
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிமித்தம் காரணமாக ரயில் நிலையமும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் பிதுங்கி விழுந்து கொண்டிருந்தன. எனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் எனக்கு முன் அந்தக் குப்பை லாரி ...

குடிதண்ணீர் லாரிகள் தண்ணீரை வீணாக்காமல் சென்றதாகவோ, விபத்தில்லாமல் சென்றதாகவோ வரலாறு இல்லை. குப்பை லாரிகளும் அதை போலவே தன்பங்குக்கு சில தனித்த பெருமைகளை பதிவு செய்திருக்கின்றன. புகை மூட்டத்தால் அது செல்கிற இடங்களை மாசு படுத்தாமல்சென்றதாக இல்லை. தண்ணீரை வீணடித்து தண்ணீர் கொண்டுவருவதை போல, மாசுபடுத்தித்தான் குப்பைகளை அள்ள  வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட லாரி ஒன்றுதான் புகையை வாரி இறைத்து எல்லாரும் இருமித் தும்மும் படி செய்தது. வேகமாகச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு முன்னே உள்ள வாகனங்கள் ஒதுங்கி வண்டியை நிறுத்து விட வேண்டும். அதே போல அம்புலன்சுக்கு பின்னால் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி கிடைத்த பிறகுதான் நிறுத்தப் பட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊரில் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே செல்லும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம்புலன்சுக்கு எங்கே வழி இருக்கிறதோ அங்கே செல்லும். எப்போது பிரேக் விழும் என்று தெரியாது. அப்படிப் போடும் போது பின்னால் வரும் வண்டிகள் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டு, இன்னொரு ஆம்புலன்ஸை அழைக்கக் கூடாது என்பதற்காகவே பின்னால் இடைவெளி. ஆனால் அது நம்ம ஊர் ரோட்டில் சாத்தியமே இல்லை. ஆம்புலன்சுக்கு ஒதுங்கி நாம் நிற்கும் வேளையில் நாம் மீண்டும் வண்டியை எடுப்பதற்குள் சர் சர் - என்று நூறு வண்டியாவது போய் விடும். ஆம்புலன்சுக்கு வழி விட்ட நம்ம முட்டாப் பசங்க. அவங்க ரொம்ப அறிவாளிங்க. நிற்க ...

இந்த குப்பை லாரிக்கு பின்னால் நூறு மீட்டருக்கு நாங்கள் யாரும் போக வில்லை. அந்தப் புகை யாரையும் நெருங்கி வரவிடவில்லை. இனிமேல் ஆம்புலன்சுக்குப் பின்புறமும் இப்படி கறுப்புப் புகை வரும் மெக்கானிசம் இருந்தால் பல விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மெக்கானிசம் வேண்டுமெனில் குப்பைலாரியைத் தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? அதற்கு நான் மீண்டும் காலை சந்தித்த குப்பை லாரிக்குத் தான் செல்ல வேண்டும்.

நூறு மீட்டர் இடைவெளியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு படத்தில் வடிவேலு காலை எழுந்து சாமி கும்பிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் போல ஒருவர் எனக்கு வலப்புறம் ஓவர்டேக் செய்ய முயல்கிறார். வளசரவாக்கம் ரோட்டில் இடது புறம் வாகனங்கள் நிற்கும் என்பதால் வழிவிட முடியாமல் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, வேறு வழியின்றி சற்றே ஒதுங்கி போய்யா போ என்று வழி விட, புகைவிடும் குப்பை லாரிக்குப் பின்னால் இருக்கும் அந்த நூறு மீட்டர் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேகமாகச் சென்று அந்த லாரியை நெருங்கும் வேளையில் பிரேக் லைட் இல்லாத அந்தக் குப்பை லாரி பிரேக் போட, சுதாரித்து பிரேக் போட்டு  வலது புறம் திருப்ப, அப்படியே மிகப் பெரும் சத்தத்தோடு, கவிழ்ந்து விழுந்தது அந்த ஆட்டோ. நாங்கள் ஒவ்வொருவரும் பிரேக் போட வேறு எந்த விபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த விபத்து. 

எங்கிருந்தோ ஓடி வந்த அத்துனை பெரும் ஆட்டோவைத் தூக்கி அந்த ஓட்டுனரையும், அதில் பயணம் செய்த இருவரையும் உடனே வெளியில் தூக்கினார்கள். யாருக்கும் எந்த சிராய்ப்பும் இல்லாமல். 

நிமிர்த்து பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் காரணமான அந்த குப்பை லாரி புகையை மட்டும் விட்டுவிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் சென்று விட்டது. 

ஆட்டோ சரிந்து செல்வதை திரைப்படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு என் கண் முன் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்னால் வந்த நாங்கள் அனைவரும் பிரேக் போட்டது எங்களுக்குள்ளே விழிப்பாய் இருந்த அந்த ஓட்டுனர்தானே தவிர நாங்கள் இல்லை. எல்லா நேரமும் அந்த ஓட்டுநர் விழிப்பாய் இருப்பானா தெரியாது.

ஆம்புலன்சுக்குப் பின்னால் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குப்பை லாரியைத்தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் என்று சொன்னேன்.  சிக்கல் என்னவென்றால் அதில் பிரேக் லைட்பிக்ஸ் பண்ண வசதி இருக்காது. மேலும் பின்னால் எத்தனை பேர் அடிபட்டுக் கிடந்தாலும் அந்த ஓட்டுனருக்கு எதுவும் தெரியாது.

இதுவே இப்படி இருக்க இதுபோல ஆட்டோ ஓட்டுனர்களை வைத்து அரசுப்பேருந்துகளை இயக்குகிறார்களாம். ஏன் குப்பை லாரி ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டால் இன்னும் சுகமாக இருக்கும்.....


15.2.17

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது



·       டிகுன்னாவை திட்டித் தீர்த்த அதே கூட்டம், அதே தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகளைக் கொண்டாடுகின்றது.
o    நீதிபதிகள் மாறலாம் நீதி மாறுமா???

·         அன்றையத் தீர்ப்பு வந்த போது அழுதுகொண்டே முதல்வர் பதவி ஏற்ற ஓபிஎஸ், இன்று இந்தத்தீர்ப்பு வந்ததே தான் முதல்வராகப் பதவி ஏற்கத்தான் என்று நினைக்கிறார்.
o    காலம் மாறும், மனநிலை மாறும்.

·         இந்தத் தீர்ப்பின் படி நியாயம் நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று முதல் குற்றவாளி கல்லறையில் இருந்து நியாயம் பேசுகிறார்கள்.
o    உடல் மண்ணாய் மாறினாலும் குற்றம் மாறுமா?

·         முதல் குற்றவாளி ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தீர்ப்பு வந்திருக்குமா?
o    “பார்த்து” செய்திருக்க மாட்டார்களா?

·         ஊரே பன்னீரைத் தேடிச் செல்லும் போது, பன்னீர் தீபாவைத் தேடிச் செல்லுகிறார். அரசியல் தெரியாத பச்சிளங்குழந்தை – இரு கரங்களாகச் செயல்படுவோம் என்று சொல்கிறது. அதைத் தூக்கி தலையில் வைக்கும் தமிழனின் தன்மானம் கண்டு மகிழ்ச்சி.
o    ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம்மையெல்லாம் திருத்தவே முடியாது.”


ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, இனிமேலாவது இந்த நாடகம் முடிவுக்கு வரட்டும். வரம் பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொண்டு, தண்டனை பெற இருக்கும் சசிகலாவை அழைக்காமல் விட்ட ஆளுனரைப் பாராட்டுவோம். 
இப்படித்தான் வரும் என்று முன்கூட்டியே தெரிந்து ஆழ்நிலைத் தியானம் செய்து, அம்மாவின் ஆசியோடு ‘நாளை பாருங்கள் என்று சொன்ன ஒபிஎஸ் அவர்களைப் பாராட்டுவோம். 
இதை அவருக்கு முன்கூட்டியே சொல்லிக் கொடுத்த அம்மாவின் ஆசீரைப் பாராட்டுவோம். 
வேறு வேலையே இல்லாமல் இதை இருபத்தி நான்கு மணி நேரமும் நேரலை செய்த தொலைக்காட்சிகளைப் பாராட்டுவோம். 
இதற்கும் பா.ஜ,கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும், இதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும் பாராட்டுவோம்.

விசு அவர்கள் ஆளுநர் – ஓபிஎஸ் – சுக்கு பஞ்சபூதங்களும் சேர்ந்துவரும் ஐந்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததாகவும், சசிகலாவிற்கு ஏழரைக்கு [ஏழரை என்றால் சனியன் என்று உங்களுக்கு தெரியும்] என்று சொல்கிறார். இப்போது தெரிகிறதா? இது இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால், அவரை இயக்குவது யார் என்று தெரிகிறதா மக்களே. ஒன்று நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று முன்கூட்டியே ஆளுநரிடம் சொல்லியிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு சொல்லியிருக்க வேண்டும். இதுவரை ஜெயலலிதாவை சந்திக்கவே விடவில்லை என்பதை எத்தனை வருடம் கழித்துச் சொல்லுகிறார் என்று பாருங்கள் வீரமான விசு. இப்போது தெரிகிறது, தீபாவிற்குப் பின் யார் இருக்கிறார்கள், அவரை யார் இயக்குகிறார்கள். ஒபிஎஸ் என் அம்மாவின் கல்லறை சென்றார் என்று.


இத்தனை நாள் களோபரத்தில், கடலில் கொட்டிய எண்ணெய் என்ன ஆனது என்றே தெரியவில்ல. தடுப்பூசி வேண்டாம் என்று சொன்ன போது அதையும் மீறி அரசு கேட்காமல் தடுப்பூசிகளைப் போட்டதில் எத்தனை குழந்தைகள் உடல்நிலை சரியில்லை, அல்லது மரணம் என்பது தெரியவில்லை. எத்தனை இடங்களில் பன்றிக்காய்ச்சல்கள், உயிரிழப்பு, என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எதுவும், எதுவும் இல்லை. நாமெல்லாம் மனுஷங்களா? இந்த லட்சணத்தில் மீண்டும் நேரலையாம். ஆளுநரின் அடுத்த ஆட்டமாம். எடப்பாடியா ஓபிஎஸ்- ஆ? அவர்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது. 

போங்கையா போங்க. போய் பிள்ளை குட்டிய படிக்க வைங்க.

*   *   *   *   *   *   *


26.1.17

'குடி' அரசும் 'தடி' அரசும்

'குடியரசு' என்பது மக்கள் ஆட்சி என்பது பொருள்:
தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது.

மெரினாவில் அது ஜனவரி 24 ஆம் தேதி 
கருக்கலில் கலைந்து போனது.
அதைக் காலையில் இருந்து குலைத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
'தடி'தாங்கிய குடிகள் 

'அடி'த்துக் கலைத்தார்கள் 
இப்போது இருப்பது 'தடியரசு' 
அடியரசும் கூட ...

-
குடியரசு 
தடியரசு 
அடியரசு 
தின வாழ்த்துகள் 


16.12.16

கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி


கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி 
இந்தக் கார்டூனிஸ்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும் - இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு வரை. அதற்காகவெல்லாம் அமைதியாக இருக்க முடியாது. 

கடந்த மூன்று வருடக் கார்ட்டூன்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒரே பிரதி எடுத்துப் போட்டது போல, பெயர் மாறியிருக்கும் ஆனால் மேட்டர் ஒன்றுதான். 2 ஜி வேறென்ன? மன்மோகன்சிங், ராசா, கருணாநிதி, ஸ்டாலின், காங்கிரஸ், ராகுல், சோனியா, இவர்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் ஆளும்போது அவர்களை இடித்துரைத்தாய். சரி. வாழ்த்துக்கள். 

கார்டூனிஸ்ட் என்கிறவன் இடித்துரைக்கும் பணியைச் செய்பவன். ஆள்பவர்களின் அல்லக்கை அல்ல. நன் அறிந்த வரையில் நமது நாட்டை மோடிஜிதான் ஆள்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ அவரது ஆட்சியில் இடித்துரைக்க எதுவுமே இல்லாதது போலவும் – ஆடம்பர ஆடைகள், வெளி நாட்டு உலாக்கள், போடோஷாப் செய்யும் திறன், விளம்பரத்திற்கு மட்டும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவிட்டது, இன்ன பிற இவைகள் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. 

தினமணியின் முதல் பக்கத்தில் பணத்திற்குத் தட்டுப்பாடு என்று செய்தி வருகிறது – அதில் வரும் கார்டூனைப் பாருங்கள். அதில் ப. சிதம்பரத்தைப் பற்றிய கிண்டல். அவர் ஒன்றும் மிகச் சரியான நிதி அமைச்சர் என்பதற்காக எல்லாம்  நாம் அவருக்கு வால் பிடிக்கவில்லை. இப்போது என்ன பிரச்சினை? இப்போது ஏன் அவர் ப. சி. யை கிண்டலடிக்கிறார் என்பதில்தான்  ___ ___ __ மதியின் அரசியல் இருக்கிறது. ஆனால் இது மதியின் ஒருதலைப்பட்சத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதுவே எந்த அளவுக்கு மதி, மதி _____ _____ இருக்கிறார் என்பது புரியும் [கோடிட்ட இடத்தை நிரப்பவும்]. 

ஆள்பவர்களை இடித்துரைக்கும் பணிக்கு மாறாக, எதிர்க்கட்சியை மட்டும் அவர்களோடு சேர்ந்து தூற்றுவது, ஆளும்கட்சிக்குத் துதி பாடுவது போலத்தான். அப்படி செய்கிற ஒரு கார்டூனிஸ்ட், வடிவேலு படத்தில் வரும் இரண்டு கவிஞர்கள் போல. அவர் _______________________ கார்டூனிஸ்ட் [கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்]. அப்படிச் செய்கிற செய்தித்தாளை பா.ஜ.க. மணி என்றே அழைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் என்ன நிமிர்ந்த நடை ....  ..... ஏன் இரட்டை வேடம்.? 

இந்தக் கார்டூனிஸ்ட்தான் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் என்கிற எந்த மரியாதையும் இன்றி, முன்யோசனையையும் இன்றி அவரைப் பற்றிய ஒரு கார்ட்டூனை வரைந்து கோடிட்டு நம்மையே நிரப்பச் சொன்னவர். எந்த அளவுக்கு ஒருவன் தரம் தாழ்ந்து போவான் என்பதற்கு இதை விட மிகப் பெரிய உதாரணம் எதுவும் தேவையே இல்லை. ஆர். எஸ். எஸ்- சின் ஊதுகுழல், பாஜகவின் ________ என்று ஒப்பனாகவே சொல்லிவிடலாம். 

இந்த மூன்று வருடத்தில் திடீரென அவருக்கு மதி வந்து, ஒரு தடவை காலில் விழும் கலாச்சாரம் பற்றிக் கிண்டலடித்திருக்கிறார். ஆஹா! என்னே வீரம் அவருக்கு.

ஜெயலிலதா இருந்த போது அமைச்சர்கள் யாருமே காலிலேயே விழாதது போலவும், இப்போதுதான் புதியாய் அமைச்சர்கள் ஒருவரின் காலில் விழுவது போலவும் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, குற்றம் சாடியிருக்கிறார். 
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைக்கும் வராத வீரம் திடீரென முளைத்து வந்திருக்கிறது. 

சரி, இந்தக் கார்டூனுக்கு வருவோம். இத்துணை ஊழல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மேல் வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே? நீதிமன்றம் பார்த்துக் கொள்ளாதா? அல்லது அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 
சரி, ஒரு பிரதமர் பேசாமல் இருப்பதற்கு இவ்வளவு வாரி இறைக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தைத் தவிர எல்லா இடங்களிலும் பேசும் தற்போதைய பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். இங்கே இல்லாமல் உலகம் சுற்றும் பிரதமரையும் விமர்சிக்க வேண்டும். 
ஒவ்வொரு முறையும் 1,72, 000 கோடி ஊழல் என்று சொல்கிறீர்களே, அதற்குப் பிறகுதான் 3 ஜி, 4 ஜி எல்லாம் ஏலம் போனது. அப்படியெனில் முறையே அவைகளும் 2, 72, 000 கோடியும், 3, 72, 000 கோடிகளும் அல்லவா ஏலம் போயிருக்க வேண்டும். இரண்டு ஜி அளவோடு ஒப்புமைப் படுத்தும் போது மிகக் குறைந்த அளவே போயிருக்கிறது. அப்படியெனில், 6, 44, 000 கோடி ஊழல் இந்த அரசாங்கத்தில் நடந்திருக்கிறது என்று கார்ட்டூன் போடுங்கள் சாரே. 

இப்படி ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் எத்தனை வருடங்களுக்குத் தான் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ? முன்னாள் பிரதமர் வாய் திறந்தது அவ்வளவு பெரிய குற்றமா? இத்தனை வருடமாய் காலில் விழும் கலாச்சாரம் பற்றி மௌனம் காத்துவிட்டு திடீரெனப் பேசியிருக்கும் உங்களை நாங்கள் எப்படியெல்லாம் சொல்ல வேண்டும்? 

இப்படி இருக்கிற இந்தக் கார்டூனிஸ்டை ______________________________ கார்டூனிஸ்ட் என்று சொல்வதில் தவறில்லை [கோடிட்ட இடத்தை வாசகர்களே நிரப்பிக் கொள்ளவும்].

2.12.16

அப்பா சமுத்திரமே

அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன். 

உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை  இருப்பதில்தான் வருத்தம்.

மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம். 

பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிப்போய் விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.

தகுந்த தயாரிப்பு இல்லாமல் எல்லாரையும் இழி நிலைக்கு மாற்றி விட்ட நிலையை எதிர்க்கிறோம். 

இருப்பவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். கூட இருப்பவர்களை விட்டு விட்டு, தொடர்பே இல்லாத சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, அலைய விடும் இந்த மன நிலையை எதிர்க்கிறோம்.

.வரும் பணத்தை எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மார்க்கெட்டுகளுக்கு வழங்கத் துடிக்கும் அந்தக் கார்ப்பரேட் ஐடியாவை வெறுக்கிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

வரிக்கு மேல் வரி விதித்து, வருமான வரி, ஜி எஸ் டி வரி, சாலை வரி, சுங்க வரி, விற்பனை வரி, இவைகளெல்லாம் கொடுத்தாலும், இதற்கு மேல் வங்கிகளில் பணம் வந்தாலும், அதை மக்களுக்காய் பயன்படுத்தாமல், எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் அந்த முதலாளித்துவப் போக்கை எதிர்க்கிறோம்.

இவ்வளவுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற, வரி பாக்கி வைத்திருக்கிற முதலாளிகளை எல்லாம் விட்டு விட்டு எங்கள் கழுத்தை நெரிக்கிற இந்தப் போக்கை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல புரியாதது போல - 

மோடி செய்துவிட்டதனால் மட்டுமே இது சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் எதிர்க்கிறோம்

நீங்கள் மோடி செய்து விட்டதனாலேயே அதில் குறைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்கும் போது, மற்றவன் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான இடம் தர வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

அப்பா சமுத்திரக்கனி,
உங்கள் பிள்ளையைக் கூட அடித்து விடக் கூடாது என்கிற காரணத்திலும், தன் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறையிலும் காவல் காக்கிற உங்கள் போல அவர் இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.

எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்களே. அது உங்கள் பிள்ளைகள் என்றால் .... 

சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

காத்திருப்போம்.


குறிப்பு:

என்னிடம் கறுப்புப் பணம் இல்லை.
நான் திமுக காரன் இல்லை.
நான் பாகிஸ்தான்காரன் இல்லை.
இந்தியாவின் எதிரியும் இல்லை 
துரோகியும் இல்லை.







17.11.16

பணம் படுத்தும் பாடு - சுடாதது [இரண்டு]

கேவலம்


கறுப்புப் பணம் வைத்திருப்போரின்
கரங்கள்
கரைபடியாத போது

வெள்ளைப் பணத்தை மாற்ற வந்த 
உழைத்துக்
காய்த்துப் போன
கரங்களில்

கறுப்பு மை பூசுவது

காத்திருந்து களைத்துப் போன
அந்த முகங்களில்
சாயம் பூசுவதற்குச் சமம்.


ஹோலி என்று போலியாக

விளக்கம் சொல்லாமல் இருந்தால் சரி!

அப்பு 
https://unmayapoyya.blogspot.in/

9.11.16

ஊழல் ஒழிந்தது

 
ஏற்கனவே வாக்களித்தது போல மத்திய அரசு சுவிஸ் வங்கியிலிருந்து அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்தது நமக்குத் தெரியும். அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த அத்துனை நபர்களின் பெயரை எல்லாம் வெளியிட்டு மிகப் பெரிய புரட்சி செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கே மிகப் பெரிய பாராட்டு விழா வைக்கலாம் என்று அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதுபோல ஒரு அறிவிப்பு வந்தவுடன் நேற்று எல்லா பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் முன்பு எந்திரத்தனமாய் மக்கள். எப்படியாவது பணத்தை நூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றி விட முடியாதா என்கிற ஏக்கம் தெரிந்தது.

அறைகளில் ஆயிரம் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாரும் பீதியில் வயிறு கலங்கி ஒரே நாளில் பத்து கிலோ குறைந்து பார்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்கள்.

இந்த அதிரடி முயற்சிக்காக நமது சர்க்காரை பாராட்டியே ஆக வேண்டும். இனிமேல் யாரும் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்க முடியாது. ஒன்று பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது கோவிந்தா என்று திருப்பதியில் போட வேண்டும். நல்ல வருமானம் நமது சமஸ்தானத்திற்குத்தான்.

சரி – அதை விடுவோம் – இந்திய நாட்டில் எத்தனை சதவீதம் பேர் கறுப்புப் பணம் வைத்திருப்பான் – இரண்டு மூன்று சதவீதம் இருக்குமா? அட பத்து சதவீதம் வைத்துக் கொள்ளுங்கள். அவங்களை நமது சர்க்காரால் கண்டு பிடிக்க முடியாதா? அது எதுக்கு இந்த அதிரடி நடவடிக்கை. குப்பனும் சுப்பனுமா சுவிஸ் வங்கியில கணக்கு வைத்திருந்தான். அந்த பெயர்களை வெளியிட நமக்குத் துணிச்சல் இல்லை இதுல இது வேற?

இன்னும் ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே பாக்காத மக்கள்தான் இன்னும் எங்கள் அருகில் இருக்கிறார்கள். இனிமேல் அதை ஒன்று சாலை ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் பார்க்கலாம். அதற்கடுத்து மொத்த வருமானமே ஐந்நூறு ஆயிரம் என்று உள்ள நபர்கள்தான் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு கஷ்டப் படனும். பாவம். அதுதான் நமது பிரதமர் மன்னிப்பு கேட்டு விட்டாரே. அப்புறம் என்ன?

வெளிநாட்டில் பங்களா வைத்திருப்பவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இல்லையா? அவர்கள் இன்னமும் ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? அல்லது பவுண்ட்ஸ் / யூரோ வைத்திருப்பவர்களா?
வச்சிருக்கவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான்.

இனிமே யாரு என்ன பண்ண முடியும்? இந்த நோட்டுக்களை கொஞ்சம் சாதாரண மக்கள் மத்தியில் காண்பிக்க அரசே எக்ஸ்ஷிபிஷனுக்கு ஏற்பாடு செய்யலாம். சாதாரண மக்கள்தான் பாவம். நூறு ரூபாயை வைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம். காய்கறிகளை விற்கும் மக்கள் வியாபாரம் செய்ய முடியாது. தள்ளு வண்டி வியாபாரி வியாபாரம் செய்ய முடியாது. கெட்டுப் போகாத பொருள் வைத்திருப்பவர்கள் பரவாயில்லை. அழுகும் பொருட்களை வைத்திருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

இப்ப ஐந்நூறு ரூபா குடுத்தாக் கூட  ஒரு ஐம்பது ரூபா கிடைக்க மாட்டேங்குது. சின்னப் பிள்ளைகளைப் போல நோட்டுக்கு ஆசைப் படாம சில்லரைகளுக்கு ஆசைப்பட பழகிக்க வேண்டியதுதான். ஏன்னா பெருசுதான் பதுக்க வழி வகுக்குமாம்?

சரி என் சந்தேகம்
·         பெரிய நோட்டுதான் பதுக்களுக்கு வழிவகுக்கும்னா அப்புறம் எதுக்கு திரும்பவும் ஐந்நூறு ரூபா நோட்டு – புதுசா இரண்டாயிரம் ரூபாய் நோட்டு? ஈசியா பதுக்கவா? இரண்டாயிரம் ரூபாயையும் ஐந்நூறு ரூபாயையும் நாளை வெளியிடுவதாகச் செய்தி வருகிறதே அவைகளைப் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் வெளியிடப் பட்டிருக்கின்றவே. ஏற்கனவே அடித்து வைத்ததால் வெளியிடுகிறீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவ இந்த ஏற்பாடா?

·         இன்று எல்லா நாளிதழ்களிலும் இந்தப் புரட்சி ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவி செய்யும் என்று அரசு விளம்பரம் செய்திருக்கிறது. அது எப்படி உதவும் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.



·         ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு பொருளியல் நிபுணரிடம் ஆயிரம் கோடிக்கு ஆயரம் ரூபாய் நோட்டு இருக்கிறது அதை மாற்றிக் கொடுத்தால் இருபத்தி ஐந்து சதவீதம் வரை கமிஷன் என்று ஒரு தொழிலதிபர் கேட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. அவருக்கு மட்டும் தெரிந்ததா அல்லது எல்லா தொழிலதிபர்களுக்கும் தெரிந்ததா?

 

3.10.16

இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாநில அரசு ...

வாரியம் அமைக்க முடியாது என்கிற மத்திய அரசு ...

நீரைப் பகிர்ந்து கொள்ள முடியாத மாநில அரசு ....

பேச்சு வார்த்தை கூட நடத்த இயலா மாநில அரசு...

போரை வைத்தே அரசியல் நடத்தும் அரசுகள்

என்ன ஆச்சு என்றே தெரியாத மாநில மக்கள்???

இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல்
சிவனே என்று இருக்கும் ஊடகங்கள் ...


இத்தனைக்கு நடுவிலும் அடிபட்டு ஊனமாய்க் கிடந்தாலும்
தொலைக்காட்சியில்
ஜனகன போடும்போது
நான் எழுந்து நின்று சல்யூட் அடிப்பேன்  - பாரத் மாதாக்கி ஜே

ஏனெனில் ஒரே இந்தியா
ஒரே அரசு

வாழ்க பாரதம்



20.9.16

தேசப் பற்று - சில கேள்விகள்

இந்தியா என் நாடு என்பதிலும் 
அதில் நான் உறுப்பினன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல்தான் இருந்தேன் - இருக்கிறேன் - 

ஆனால் எப்போதும் மீண்டும் மீண்டும் தேசப்பற்றை உறுதி செய்யும் குரல்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

ராம்குமார் சிறையில் கொல்லப் பட்டதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டு தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

"குற்றவாளி ராம்குமார் சிறையில் இறந்ததற்கு கொதித்துப் போயிருக்கிறீர்களே எத்தனை பேருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இறந்தது நமக்குத் தெரியும்? - நீங்கள் எல்லாம் மனிதர்களா? இந்தியர்களா?
ஜெய் ஹிந்த்" - என்று ஒரு செய்தி வாட்ஸ் ஆப் - பில் வந்தது.
= = = = 

இறந்த இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்களும் 
அவர்களை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

= = = = 

ஐயா தேசப் பற்றாளரே 
இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்?

ஆற்றை அதன் போக்கில் விடாமல் தடுத்த கர்நாடக நண்பர்களை பார்த்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்...

இந்தியாவில் அங்கம் வகிக்கும் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளை, சரக்கு லாரிகளை, கார்களை எரித்த அவர்களிடம் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்...

தமிழ் பேசுகிறான் என்பதற்காக அவர்களை, துகில் உரித்து, அறைந்து, காவிரி கன்னடர்களுக்கே என்று கன்னடத்தில் சொல்ல வைத்த அந்த காட்டுமிராண்டிகளைப் பார்த்து சொல்லுங்கள் ஜெய் ஹிந்த் ....

அங்கே அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் இல்லையா?
இழந்த சொத்துக்கள் இந்தியாவைச் சார்ந்தது இல்லையா? 

அப்போதெல்லாம் ஆவேசப் படாத நீங்கள் திடீரென பாய்ந்து வருவது ஏன்?

எல்லைபாதுகாப்பு எப்போதும் ஆபத்து நிறைந்ததுதான். அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டியது அவசியம் தான்... அதற்காக,

இந்தத் தருணத்தில் நடக்கும் காட்டு மிராண்டித்தனங்களை பற்றி நாம் பேசக் கூடாதா?

இந்தத் தருணத்தில் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி பேசிக் கூடாதா?

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத் துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீதிமன்றங்களும் முக்கியம். நீதிமன்றங்களை அவமதிக்கும் போதும் இந்த ஆவேசம் வேண்டும்.

சட்டத் துறையைப் போல காவலும் அவசியம்தான். காவல் தூதர்கள் மனித உரிமைகளையும் மீற முடியாது. குற்றம் உறுதி செய்யப் படும் வரை அவன் குற்றவாளி அல்ல. நாளை உங்களைக் கூட கைது செய்யலாம். சிறையில் வைக்கலாம். அதனால் நீங்கள் குற்றவாளி ஆகிவிட மாட்டீர்கள். உங்களுக்கும் மர்மமான சாவு வரலாம். அப்போதும் நாங்கள் மர்ம இறப்புகளுக்கு விளக்கம் கேட்டுக் குரல் எழுப்புவோம்.

ஏனெனில் மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.





15.8.16

அகண்ட பாரதம்

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர  தின நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்றே பத்திரிக்கைகள் எங்கே எங்கே யார் யார் கொடி  ஏற்றுவார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. இன்றைய செய்தித்தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றுகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றன. நாளைய செய்தித் தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றினார்கள் என்ற செய்தியை வெளியிடும். அந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடுவதிலிருந்தே சுதந்திர இந்தியாவை எவ்வளவு மதிக்கிறோம் என்பது நமக்குப் புரியும். வாழ்க பாரதம்.

# # #

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்வோம். பல மொழிகள், சமயங்கள், கட்சிகள், கொள்கைகள். இவைகளைத் தாண்டி ஒன்றாய் இருக்கத் துடிக்கும் மக்களைப் பெரும்பான்மை மக்களில் நானும் ஒரு அங்கமாய் இருக்கின்றேன் என்பதில் எனக்குப் பெருமையே. ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

ஆனால் சில நாட்களாக இந்த நம்பிக்கையை சிதைக்கும் செயல்கள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய செயல்களை சில நிறுவனங்கள் செய்கின்றன. காவல் துறை செய்ய வேண்டிய வேலையை சில குழுக்கள் செய்கின்றன. அவைகளும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. வன்முறைகள் அவிழ்த்து விடப் படுகின்றன. தலித் மக்கள் தாக்கப் படுகின்றனர். பன்மைத் தன்மையை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடை பெறுகின்றன.
அகில இந்தியா வானொலியில் தமிழ் மொழிச் செய்திகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கல்வி வரைவில் சமஸ்கிருதம் திணிக்கப் படுகிறது. என் மொழியை நான் மதிப்பது என்பது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைப்பதாய் பார்க்கப் படுகிறது.
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

இன்னும் ஒரு தியாகி பென்சன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பதாய் இன்றைய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. தியாகள் மதிக்கப் படாத ஊரில், தியாகத்திற்கு என்ன மரியாதை இருக்கும்.

# # #

தென்கோடியில் இருக்கும் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. மின்சாரம் தடை பட்டு பதிவேற்றம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர நாட்டின் ஓர் அங்கம்தான் இவைகள் எல்லாம். குறைகள் இருப்பதனால் ஒரு நாட்டைக் குறை சொல்ல முடியாது. நாமும் முயன்றால் குறைகளைக் குறைக்க முடியும். முயல்வேன்.

# # #

சுதந்திர தேசம் – அது பன்முக தேசம் – அனைவரையும் மதிக்கும் தேசம் - வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும். இந்தியா அதைப் பேணும்.
வாழ்க இந்தியா! 

19.1.16

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை (தமிழகம் தவிர)

இந்தியா இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது. 
அதற்கெல்லாம் முன்னோடியாக சிக்கிம் இருக்கிறது நாட்டின் பிரதமர் சொல்லுவதாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்லுகின்றன.

தமிழகம் என்பது விவசாய பூமி. 
இங்கே வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தலாம். 
அனல் மின் நிலையங்கள் ... 
அணு மின் நிலையங்கள் – 
ஸ்டெர்லைட் நிறுவனம் ... 
மீத்தேனை உருவ ஒரு பகுதி – 
சோத்துக்கே வழியில்லைஎன்றாலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கேன சில பகுதி - நிலக்கரி தோண்ட ஒரு பகுதி – 
தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் முன்னே தடுக்க அனைத்துப் புறங்களிலும் அணைகள் – 
நீர்நிலைகள் அருகிலேயே நீரை உறிஞ்சி எடுக்கும் கார் கம்பெனிகள் - உழவுக்கு உதவும் காளைகள் இல்லாமல் செய்யும் யுத்தி ... 
நாட்டுக் காளைகள் இல்லையென்றால் நாட்டுப் பசுக்கள் இல்லை – 
நாட்டுப் பசுக்கள் இல்லையென்றால் 
சாணம் இல்லை – இயற்கை உரம் இல்லை – 
தமிழ் நாட்டில் வேளாண்மையும் இல்லை – இயற்கை வேளாண்மையும் இல்லை – 
இனி சிக்கிம் மட்டும் தான் இயற்கை வேளாண்மையில் இருக்கும்!

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை வளர வாழ்த்துகிறேன்

16.11.15

மழையில் மாடு மூழ்கியது

மாட்டு அரசியல் என்பதை என்னோடு பணிபுரிந்தவர் பி. பி (Beef Politics - B.P) என்று சுருக்கமாய்ச் சொன்னார். பி.பி எகிர்றது நல்லது இல்லை. அது உடம்புக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும்தான்.

தொடர்ந்து வந்த விவாத மேடைகளில் அந்த மாடுகள் மூழ்கியதாவே தெரிகிறது. வெள்ளம் வடிந்தவுடன் மாடுகள் மீண்டும் வெளிவரலாம்.

மார்ச் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். ஒரு குழுக்கள் கட்டைகளோடும் கத்திகளோடும் சுற்றுகிறது. காவலர்கள் அவர்களுக்குத் துணி நிற்கிறார்கள். மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் கட்டிப் போட்ட உதைக்கப் படுகிறார். லாரி தீ வைக்கப் படுகிறது. அவைகளைச் செய்த நபர்கள் தங்கள் முகம் தெரியும் படி அந்த வீடியோவைப் பதவு செய்து சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

வீடியோவிற்கு இங்கே சொடுக்கவும்

கடந்த மாதம் ஒரு ஒட்டுனரைக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

வீடியோ
அரசாங்கம் அமைத்யாய் இருக்கிறது. உலகம் முழுவதும் போய் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் நமது பிரதமர். 
கோமாதாவின் காவலர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பச்சோந்திக் குரல் எழுப்புகிறது. போலிஸ் எதற்கு? சட்டங்கள் எதற்கு? 
சட்டங்களை ஒரு குழு ஆயுதங்களோடு நிலைநாட்ட வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கிறது என்றால் அரசின் வேலை என்ன? 

இந்தத் தருணத்தில்தான் நம் பிரதமர் (இன்றைய செய்தித்தாளின் செய்திப் படி) தீவரவாதத்தை உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனது நாட்டில் இப்படி நடக்கும் தீவிர வாதத்தை தன்னால் ஒடுக்க முடியவில்லை என்பதனால்தான் உலக நாடுகள் அதை எதிர்க்க வேண்டும் / ஒடுக்க வேண்டும் என்று பெசியதாகவே எண்ணத்த தோன்றுகிறது.


3.4.15

விவசாயிகளின் பெரிய வெள்ளி

நிலம் கையகப் படுத்தும் சட்டம்- இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு பா.ச.க அரசு இருப்பது, தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர வேறொன்றம் இல்லை.

இந்த சட்டத்தினால் விவசாயிகளின் தற்கொலை குறையும் என்பது மட்டுமல்ல விவசாயிகளின் நலன் பெருகும் - கிராமப்புரங்கள் மேம்படும் என்று உயர்திரு கட்கரிசொல்லியிருக்கிறார். அது எப்படி என்று யாராவது விளக்கம் சொன்னாள் எனக்கு நன்றாக இருக்கும்.

இந்திய நாடு விவசாய நாடு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆசை காட்டி, ஐந்து மடங்கு விலை தருகிறோம் என்று தனியார் நலன் கருதி நிலங்கள் கையகப் படுத்தப்படுவது நம்மை நாமே கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு சமம்.

நமது அடுத்த தலைமுறை சொத்திற்கும் சோத்திற்கும் வழியில்லாமல் பிச்சை எடுக்க நாம் எடுக்கும் முதல் வழியே இந்தக் கையகப் படுத்தும் சட்டம்.

12.11.14

நான் ஒரு பிராமணன்

நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.

எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை  கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.

நான் என்ன நினைக்கிறேன்னா?


  1. எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
  2. சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
  3. இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுட்டவும் - மோடி பிராமணர் 

நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை. 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.

இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.

பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.

 அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை





17.10.14

சுத்தம்

இந்த வார  இதழின் தலைப்பை என் நண்பர் ஒருவர் சு....த்தம் என்று படித்தார். சுத்தம் என்பதற்கும், சு...த்தம் என்பதற்கும் பல  வித்தியாசங்கள் உண்டு. அதை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது.

இந்தியாவை சுத்தப் படுத்துவது எளிது.
ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தை கையில் எடுத்து அந்தக் கட்சியைப் பார்க்கும் போதெல்லாம், மாண்புமிகு மோடியின் நினைவு வரும் படி செய்து விட்டது அவரது பலம்.

இந்தியாவைச் சுத்தப் படுத்துதல் நல்லது என்பது உண்மைதான். அது தேவையும் தான். 
சுத்தமான இந்தியா இருந்தால் மருத்துவமனையற்ற இந்தியா என்று வரும் வாய்ப்பும் உண்டு.

ஆனால் முதலில் சுத்தப்படுத்த வேண்டியது ரோட்டையல்ல, நாட்டை. ஊழல் என்பது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில், முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறதா இந்த அரசு​?

சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய இதே கட்சி அத்தகைய சுத்தப் படுத்துதலை முன்னெடுக்குமா​?

அத விடுங்க....
இன்றைக்கும் ரோட்டை, மலத்தைச் சுத்தப்படுத்தும்  தொழிலார்களின் நிலையையோ,  அள்ளும் மக்களின் அவலம் பற்றியோ பேசிவிடாமல், அதெப்படி சுத்தம் பற்றி பேச முடியும் என்பது தெரியவில்லை.
இந்த வியாபார உலகத்தில், நாட்டைச் சுத்தப்படுத்தல் வெறும் விளம்பரமாக மாறி விடாமல் இருந்தால் சரி. 

ஆனால் நமக்கு இந்த விளம்பரம் தான் பிடிக்கிறது. நாட்டைச் சுத்தம் செய்ய பணித்துவிட்டு, நோயாளிகளின் அத்தியாவசிய மருந்துகளுக்கான அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்தி விட்ட பெருமகனாரைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பது நல்லாதா? 

புற்று நோய், மற்றும் ஹச் ஐ விக்கான மருந்துகள் இப்போது பதினான்கு மடங்குகள் உயர்ந்து விட்டதாக சொல்லுகிறார்கள். எட்டாயிரத்திற்கு விற்ற மருந்து இப்போது இந்த அரசுக கட்டுப்பாட்டைத் தளர்த்திய பிறகு) ஓர் லட்சத்தி ஆறாயிரம் என்று சொல்லுகிறார்கள். 

பன்னாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

பாரத நாடு வளம் பெற்று விடும். சுத்தமாயிரும்.

இப்படியே போனால் சு...த்தம்.





30.5.14

உள்ளே போ! ... காந்தி உள்ளே போ

எவ்வளவோ முறை மெதுவா... ..அன்பா..  நீங்க செய்யுறது தப்பு - இது சரியில்லைன்னு எத்தனயோ முறை சொல்லிப் பாத்தாச்சு - கதர் யாரும் கேக்கலை.... அதுதான் உள்ளே போ... உள்ளே போன்னு ரொம்ப சத்தமா கத்தி அனுப்பி வச்சுட்டாங்க. ரஜினி தன்  தம்பியைப் பார்த்து சொல்றமாதிரி...



இந்த மக்கள் குடுத்த அடியைப் பாக்கிறப்ப இது சாதாரன அடி மாதிரி தெரியலை..."நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாத்துலயும் 'வெறுப்பு' வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இந்த மாதிரி அடிக்கமுடியும்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் சொல்லிக்கினு இருக்காங்க. ஆனா இப்படி அடிக்க முடியுமான்னு கதர்கள் எல்லாம்  உள்ள உக்காந்து யோசிச்சுக்குகிட்டு இருக்காங்க.... அதோடு சேர்ந்து கதறிக்கிட்டும் இருக்காங்க. சில பேரு ராகுல்தான் காரணமென்றும், சில பேர் சோனியான்னும், சில பேர் மன்மோகன் என்றும், இன்னும் சிலர் ஊழல் என்றும் மாற்றி மாற்றி குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாம் இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு நல்ல ஆட்சியைத் தரவில்லையே என்று வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில்தான் இருக்கின்றனர். இதுதான் இன்னும் பத்தாண்டுகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வரவே தகுதியில்லாதவர்கள் என்பதை காட்டுகிறது.
...

இந்தச் சூழலில்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி அவர்களின் இந்த புர்ஜ் காலீபா வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸ் என்று நம்மைப் போன்ற சிலரால் கணிக்க முடிகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எல்லாரும் - மிகச் சரியாகவே  இருந்திருக்கிறார்கள்.   ஆக மூன்று முக்கியக் காரணங்கள் தேடினால் அதில் எல்லாம் காங்கிரஸ்காரர்களே காரணம் என்பது எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான  வெற்றி பெற காரணம் காங்கிரஸ் என்றாலும் அவருக்குண்டான பங்கை அவ்வளவு குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்தியத் தேர்தல்களின் தேதி  முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதை அவரும், மீடியாக்களும் முன்னெடுத்து விட்டனர்.குஜராத் முன்னோடி மாநிலம் என்று எல்லாரும் போட்டி போட்டு எழுத ஆரம்பித்த போதே இந்த முடிவுகள் முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் மேலோங்கிய மாநிலங்கள் இருந்தன என்றாலும், அவைகளை விட  மிகச்சிறந்த மாநிலமாக, ஒரு மாடலாக காண்பிக்கப்பட்டது.  உண்மையிலேயே அதுதான் மாடலா என்றால் அதற்கான பதில் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இந்தத் தருணத்தில் ஜான் ஸ்வின்டன் பத்திரிகை சுதந்திரம் பற்றி 1880 ; ல் சொன்ன சிறு விஷயத்தை பதிவு செய்வது அவசியம். -

"The business of the journalists is to destroy the truth, to lie outright, to pervert, to vilify, to fawn at the feet of mammon, and to sell his country and his race for his daily bread. You know it and I know it, and what folly is this toasting an independent press?
பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் கணிப்புகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களும் இதை நோக்குவார்களாக.... அப்படி வெளிவந்த செய்தியை நீர்த்துப் போகச் செய்த நண்பர்களும்  கவனிப்பார்களாக.

இந்தச் சூழலில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வங்கிகள் தங்களது ஓட்டுக்களை விரயம் செய்துவிட விருப்பம் இல்லாமல் வெற்றி பெரும் கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெரும் தகுதியும், திறமையும், தனக்கு இருக்கிறது என்று தனது அசராத பிரச்சாரத்தால்  மோடி மக்களது நம்பிக்கையைப் பெற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மோடி  இந்த வெற்றியை உறுதி செய்து கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்று பலர் எதிர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.

....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு...  இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...

இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.

தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.

ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!



        --------------------------------------------------------------------------------------------