14.3.10

பெரியார் தாசனின் மத மாற்றம்

பெரியார் தாசன்.
நான் நேசிக்கும் பல மனிதர்களில் இவரும் ஒருவர்.
காரணங்கள் பல.
அது இங்கே தேவையற்றது.

இப்போது அவர் மீண்டும் வேறொரு மதம் தழுவியதாக செய்திகள்.
ரியாத் சென்று இஸ்லாமிய மதத்தை தழுவியதாக செய்தி.

செய்தி கீழே : அராப் செய்தியிலிருந்து.

இங்கே சொடுக்கவும் : Arab நியூஸ்

RIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday.

Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday

that Islam is the only religion in the world that follows a book directly revealed from God.

He said that as a student of comparative religions he believes books of other faiths

have not been directly revealed to mankind from God.

He said the Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (pbuh) from Almighty Allah.

Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles.

He also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India.

The production received national award from the Indian government.

“I was well known in India for my atheist theology and later I became to realize

that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter,” he said.

Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah.


ஒன்றிலிருந்து இல்லைஎன்று சொல்லி,
பெரியார் தாசனாகி -
[பெரியார் தாசனாக அவர் ஆற்றிய உரைகளையும்,
அது கொண்டுவந்த விழிப்புனர்வையும் நாம் எப்போதுமே கடமைப் பட்டவர்கள்.]
புத்த மதத்தின் பக்கம் சாய்ந்து,
மனோததுவத்தின் பால் சென்று -
இப்போது இஸ்லாமிய மதத்தின் பக்கம்.
[வழக்கம் போல ஆராய்ந்து பார்த்ததிலே என்றுதான் அவர் சொல்கிறார்.]

நம்பிக்கை என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆராய்ச்சிக்கெல்லாம் அங்கே இடமில்லை.
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம்.
மறு உலக வாழ்க்கைக்கான அந்த நம்பிக்கையும் முக்கியம் தான்.

அதில் எது உண்மையான மதம்? எது உயர்ந்த மதம் என்பதல்லாம் தேவையல்லாத விவாதங்கள்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை; கட்டிக்கொண்டேன் என்பதுதான் சரி என்று படுகிறது.

எனவே இஸ்லாம் மதத்திற்கு தன்னை இணைத்துக் கொண்ட
Dr . அப்துல்லாஹ் அவர்களை வாழ்த்துகிறோம்.

தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மேல் எதிர்மறையான விமர்சனைங்கள்
தொடர்ச்சியாக மீடியாவும் உலக நாடுகளும் கட்டமைத்துக் கொண்டிருக்கிற வேளையில்,
இஸ்லாமியர்கள் தொடர்ந்து வில்லன்களாகவே பார்க்கப் படும் சூழலில் இவர் எடுத்திருக்கிற முடிவை
நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நம் எதிர்பார்ப்பதெல்லாம், பெரியார் தாசனாக அவர் சுட்டிக் காட்டிய உண்மைகளையும்,
சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கிற அக்கறையையும் தொடர்ந்து வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான்.
அதற்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற மதம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்