தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.11.16

மாசுவுக்கு மாஸ்க்தான் தீர்வா?


நேற்று செய்தித் தாள்கள் டெல்லியில்  மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின.
பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரும் வெளியில் வரக்கூடாதாம்.
உடல் நிலை பாதிக்கப் படுமாம்.

ஏன்  மாசு உருவாகிறது என்பதை விவாதித்து அதைக் குறைப்பதற்கான வேலையை விட்டுவிட்டு, மாஸ்க்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவாய் பட்டாசு வெடிக்கலாம். இஷ்டத்துக்கு இண்டஸ்ட்ரிகளை வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு வேண்டுமானால் மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்.

பிரச்சைனையின் ஆணி வேரைப்  பார்க்காமல் நாம் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று மட்டுமே யோசிக்கும்  ஜென்மங்கள் இருக்கும் வரை
இந்த நாட்டின் எதிர்கால சந்ததி மட்டுமல்ல இக்கால சந்ததியும் இங்கே வாழத் தகுதியற்ற நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம்.




27.10.12

சூப்பர் சிங்கர் ஜூனியர் த்ரி - ஆஜித் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயமாய் சூப்பர் சிங்கர். இந்த முறை ஜூனியர் என்பதனால் இன்னும் அதிகமான நெருக்கம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் ... 
அற்புதமான குழந்தைகளின் குரல்களில் ஏற்கனவே கேட்ட பாடல்கள் கூட இன்னும் இனிதாகவே இருந்தது.

பைனலில் திரு. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத் வெற்றி பெற்றது நிச்சயமாய் அவனுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். உண்மையில் வெற்றி பெறுவதற்கான நபர் அவர்தான் என்றே நான் கருதியிருந்தேன். அப்படி இல்லையென்றாலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.

என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம் அல்லது ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.   இது போல எத்தனை பேர் பெருமைப் பட்டிருக்கிறிர்களோ, யாருக்குத் தெரியும்? 
வைல்ட் கார்டில் இருந்து பைனலுக்கு வரும் நபர்களுக்கு வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது நேரடியாக பைனலுக்கு நுழையும் நபர்களுக்கு இல்லை.  காரணம் நிறைய இருக்கின்றது. 

இந்த முறை நிச்சயமாய் சுகன்யாவும் கவுதமும் ஒழுங்காக பாட வில்லை. இருவரின்  வாய்சும்    ஒத்துழைக்க வில்லை என்பது மட்டுமலாமல் பல இடங்களில் சுருதி சேர வில்லை என்பதும் உண்மை. உண்மையிலேயே சுருதி சேரவில்லையா சேர விட வில்லையா என்பது தெரிய வில்லை. மிகவும் கடினமான பாடல்களையே தேர்ந்தெடுக்கும் சுகன்யா இந்த முறை கொஞ்சம் இலகுவான பாடலையே தேர்ந்தெடுத்தது போலவே இருந்தது. சரி ...அப்படியே அவர்கள் மிக நன்றாகப் பாடி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தோன்றியது...  இது எப்போதும் நடப்பது தானே. அடுத்த முறையில் இருந்து முதலில் நேரடியாக பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் நபர் நிச்சயமாய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே யோசிப்பார் இப்போது சுகன்யா யோசித்துக் கொண்டிருப்பதைப் போல.

வழக்கம் போல திரு மனோ அவர்கள் ஏதாவது சொல்லி அவர்கள் எதையும் கணக்கு பண்ணுவதில்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெளியேற்றப் படும் போது புள்ளி ஐந்து மதிப்பெண்களில் தான் வெளியேறி இருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்று யாரும் உள்ளேயும் இல்லை வெளியேவும் போகவில்லை.  அப்படித் தான் திரு மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த ரவுண்டில் இந்த இடத்தில் சுருதி சேரலை .. உங்கள் இரண்டு பேரில் நீ இதில் சரியில்லை... அதில் சரியில்லை என்று யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் புள்ளி. ஐந்துதான் வித்தியாசம் இருக்கும்.
அது எப்போதுமே பொய் என்பதை அவராக மைக்கைப் புடுங்கி பைனல் மேடையில் பேசி மீண்டும் நிருபித்து விட்டார். அதாவது - அஜூத் மற்றும் பிரகதி இருவரும் அனைத்து நடுவர்களிடமிருந்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றதாகவும், எஸ். எம். எஸ் களில் மட்டும் புள்ளி ஐந்து மதிப்பெண் கூடப் பெற்று ஆஜித் வெற்றி பெற்றதாகவும் திரு. மனோ சொன்னது தாங்கள் ஏற்கனவே இது போல ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சொன்னது உண்மையில்லை என்பதை நிருபித்து இருக்கிறார்.

அந்த புள்ளி பாதி எஸ். எம். எஸ் அனுப்புன அந்தப் புண்ணியாவான் யார்ன்னு தெரிந்தா அந்த மாதிரி பாதி எஸ். எம். எஸ். எப்படி அனுப்பு றதுன்னு சொன்னா நல்லா இருக்கும். ஒருவேளை அவரே புள்ளி. ஐந்து எஸ். எம். எஸ். அனுப்புனாரோ என்னவோ.

என்னதான் உள்ளே அரசியல் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தைப் பார்க்க மாட்டேன் என்கிற உறுதியை மட்டும் என்னால் வழங்க முடியாது. இசைக்கு மயங்காதவர்கள் யாரவது உண்டா... என்ன?

****************************************************

ஆனால் இந்த முறை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஊமைப் படம் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவிக்கே சேரும். இதை தெரியாமல் நடந்த பிழையாகக் கருத முடிய வில்லை. 

7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    2.12.11

    சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு


    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
    முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
    ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?

    ஒரே ஒரு கேள்வி...
    ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.


    நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.
    Posted by Picasa

    18.5.11

    ... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்

    பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.

    பழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.

    கடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.

    ஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும். 

    ஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது  கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம். 
    ஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும்.  அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.
    யாரும் கோபப்பட்டு - அவர்கள் போட்ட பாலங்களில் போக மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து  தப்பிப்பார்கள்.

    அம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

    எனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - "உன் கூடக் கா!" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது. 

    நண்பர்களே:
    இப்போதுதான் திருவிளையாடல் ஆரம்பம். 
    இனிமேல்.......


    2.4.11

    கிரிக்கெட்டும் GLADIATOR -ம்

    கிரிக்கெட் -
    • இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல்  தொழில் - சினிமா]  உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது. 
    • மொஹாலி - போர் 
    • இந்தியப் பாகிஸ்தான்  கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.
    • இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.
    • அன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
    •  அரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு  செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள். 
    • அப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்?
    • முதலாவது இது ஒரு போர். 
      • இரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து கொள்வார்கள். 
      • இந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.
    • இரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான். 
      • நடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார். 
      • அதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள். 
    • மூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம். 
      • discovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம். 
      • இருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீரனின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது. 
      • போர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன?   
      • நமது பழி வாங்கும் எண்ணம்,  violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.
      • நான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]
    • போரின் அடுத்த நிலை -
      • பணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.
      • பாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், "No body would mind even if somebody does not turn to office today - it is such an important match." அறிவிக்கப்படாத விடுமுறை. 
      • அனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.?
    • ஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்
      • கிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசிகன் எப்போதும் சாதாரண ரசிகன்தான். 
      • சிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.
      • "There are only two religions in India: Cricket and Cinema" ஒரு ரசிகை போர்டு ஒன்று பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, "There is only one language - that is business."

    • இதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE
    • இதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள் 
      • வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம். 
    • இதனால் சொல்லப்படும் செய்தி 
      • இறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா?
    • இன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -]  யார் வெற்றி பெறுவார்?
      • இதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.

    12.3.11

    நவீனம் - தொழில் நுட்பம்

    தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் வெளியூருக்குச் செல்வது என்பதே நினைத்துப் பார்க்க முடியாது - அப்படியே இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை - அதுவும் இருபது அல்லது முப்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. 
    அப்போதெல்லாம் தஞ்சாவூர் செல்வதே மிக எதிர்பார்ப்புக்குள்ளானதாய்  இருக்கும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்வதற்குள், இரண்டு மணி நேரம் என்பது சர்வ நிச்சயம்.

    இப்போது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வழுக்கி செல்லும் சாலைகள், அதன்மேல் வோல்வோ பேருந்துகள், இரயில்கள், விமானங்கள் என்பதெல்லாம் மிகச் சாதரணமாகி விட்டன. எல்லாரும் விமானத்தை பயன்படுத்தா விட்டாலும் அது மிகவும் அத்தியாவசியமான பிரயாணமாகி விட்டது. ஒருமுறை அதில் செல்ல வேண்டும் என்பதற்காக திருச்சியிலிருந்து சென்னை வரைக்குமாவது செல்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  


    இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் 'மலேயாக் கார' வீடு ஒன்றில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டி இருந்தது. பிறகு டாக்டர் ஒருவர் வீட்டில் வந்ததது. அப்போது அவர்களின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து தொலைக் காட்சி பார்க்க வேண்டும். சில பேருக்கு அனுமதி கிடைக்கும்: பல சமயம் வருத்தமாய்த் திரும்பி வருவோம். இப்போதெல்லாம் அப்படியா. தொலைக் காட்சி, குளிர் சாதனப்பெட்டி, இவைகளெல்லாம் சாதாரன பொருட்களாகி விட்டன. முன்பு சிறிய டிரான்சிஸ்டர்கள் வந்தது போல இன்று தொலைக்காட்சிப் பெட்டிகள். தொலைக்காட்சி பெட்டி உள்ள வீட்டிற்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் படையெடுக்க வேண்டிய  அசியமில்லை. எவ்வளவு தூரத்திற்கு அவைகள் அத்தியாவசியப் பொருட்களாகி விட்டன என்றால் அவைகள் பற்றி வரும் விளம்பரங்கள் கூட குறைந்த விட்டன.

    அப்போது மிதி வண்டிக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் - அதுவோ அல்லது டைனமொவோ இல்லையென்றால் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள். ஒருமுறை டைனமோ இல்லாமல் வண்டி ஓட்டி காவலர் ஒருவரிடம் மாட்டியது உண்டு. பல சமயங்களில் அவர்களைப் பார்த்தால் இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது அப்படியா - எவ்வளவு வண்டிகள். 

    வேலைகள் சுலபமாகி விட்டன [?], பெண்களின் வேலைபளு வெகுவாய் குறைந்திருக்கிறது.  அடுப்பூதும் பெண்களுக்கு என்றெல்லாம் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது. மிக்சி, கிரைண்டர் - குளிர்சாதனப் பேட்டிகள்.... துணி துவைக்க மெஷின் என்று எல்லா இடங்களிலும் சாதனங்கள். [இன்னமும் பெண்களுக்கு அடுக்களை வேலைகள் தானா?]

    கண்டக்டர்கள் பேனா எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதுபோல எவ்வளவு நன்மைகள் நாம் அடைந்திருக்கிறோம் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கதை வைத்திருக்கலாம்.

    ஆனால்,  எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தில் அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிருக்கிறது. தொழில் நுட்பம் என்பது மட்டுமல்ல. அதோடு முதலாளித்துவமும் இணைந்து சமூகத்தில் மனித 'மான்பிற்கு' ஒரு பங்கை ஆற்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.

    ஆனால் மனிதன் மலம் அல்லும் தொழிலும், சாக்கடை சுத்தம் செய்வதிலும் இன்னும் அந்தப் பயன்பாடு அதிகம் வந்தது போலத் தெரியவில்லை..

    வளர்ச்சி பற்றி நிறைய எழுதலாம் -
    அதைப் பற்றி இல்லாமல் - தொழில் நுட்ப வளர்ச்சியினால் நாம் என்ன இழந்திருக்கிறோம் எனபதைப் பற்றி எழுதுவோம். அதற்கான முன்னோட்டம் இது. அதாவது தொழில் நுட்பத்தால் நாம் ஒன்றுமே பெறவில்லை என்பதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது  என்பதற்காகத்தான் இப்பதிவு.

    அதற்காக - இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியுமா?

    15.2.11

    அன்பர்கள் தினம்

    பிப்ரவரி பதினான்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பல எதிர்ப்புகளை வெளிக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
    காதலர் தினம் தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், இதற்கான எதிர்ப்பின் வடிவங்கள் கேலிக்குரியதாய் இருக்கின்றது. என்ன மாயமோ தெரியலை சிவசேனா அமைதி காத்திருக்கிறது - இந்த வருடம்!

    காதலர் தினக் கொண்ட்டாட்டத்தை எதிர்த்து வாழ்த்து அட்டைகளை எரித்து இருக்கிறார்கள். கலாச்சாரம் சீரழிகிறது என்றால் - தமிழ் புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும், கிறிஸ்துமசுக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து அட்டைகளை எரிக்க வேண்டும். அதென்ன பிப்ரவரி பதினான்கு மட்டும்?

    வாழ்த்து அட்டைகள் விற்பது ஒரு பிசினஸ். நாளைக்கு திருவண்ணாமலை தீபம் மிக விமரிசையான நாளென்றால் அன்றைக்கும் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும்தான். அதற்காகாக அப்போதும் அட்டைகளை எரிக்க வேண்டும்.
    பிசினஸ் நடை பெற முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்வார்கள். விளமபரம் மூலமாக அதி லாபம் சம்பாதிக்க தொலைக்காட்சிகளும் அதிகமாக விளம்பரம் செய்யும். சிறப்பு காட்சிகள் -?

    ஒருவேளை இந்த முதலாளித்துவப் போக்கு பிடிக்காமல், அதனால்தான் அவர்கள் எரிக்கிறார்களா? அப்படியே எரித்தாலும் - இவர்களை முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கிற பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் என்று நாம் கருத முடியுமா என்பதுதான் என் கேள்வி? கலாச்சாரப் பற்று என்பது இதையும் உள்ளடக்க வேண்டுமல்லவா?
    ஆனால் இவர்கள் கலாச்சாரம் என்பது என்ன என்றுதான் புரியவில்லை!

    காதலர் தினத்தன்று டிஸ்கோத்தே அல்லது கடற்கரைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் ஆபாசம் அதிகமாகி விட்டது என்றும் சொல்கிராரர்கள். அதை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இல்லைஎன்பதற்கில்லை. அதோடு நாம் சரி செய்ய வேண்டிய ஆபாசம் நிறைய இருக்கிறது - குத்தாட்ட திரைப்பாடல்கள் - ஆலயச் சிற்பங்கள் -எனக்கு கலைக் கண்கள் இல்லையோ?

    எது ஆபாசம் - எது கலாச்சாரத்தை கட்டிக் காப்பது?
    மீண்டும் ஆண்கள் மேல்சட்டை போடாமலும் பெண்கள் மாராப்பு அணியாமலும் இருக்கின்ற கலாச்சாரத்தைத் தான் கட்டிக் காக்க விரும்புகிறார்களா இந்த எதிர்ப்பாளர்கள்?

    இராமேஸ்வரத்தில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். நாய்க்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதன் பொருள் என்ன? காதலர்கள் எல்லாம் நாய்களா? அவர்கள் திருமணமானவர்கள் என்றால் அவர்களும் அவர்களது மனைவிகளும் நாய்களா? அட என்னங்கடா சாமி? நாய்களை ஊர்வலமாக வேறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தங்கள் துணைவியோடு அவர்கள் வெளியே போவதே இல்லையா - இப்படித்தான் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? நாய்களோடு நமக்கென்ன பேச்சு? கழுதைகளோடு நமக்கு என்ன உறவு?

    அரசியல் தளத்தில் போராட்டம் நடத்துவதற்கும், தங்களின் இருப்பைக் காண்பிப்பதற்கும் இதுதான் சமயமா? விலைவாசி உயர்வு எனக்குப் பெரிதில்லை - குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு பெரிதில்லை - ஊழல் பெரிதில்லை - கோவில் கட்டலாம் - பூமி யாத்திரையும் அதோடு சேர்த்து இப்போது நாய்/ கழுதைகள் ஊர்வலம் போகலாம் .

    தனி மனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் இச்சமூகம் நவீனத்துவத்தின் தொடர்ச்சி. இதில் தவறொன்றுமில்லை - ஆனால் அதே சமயத்தில் மனிதன் என்பவன் தனி மனிதன் இல்லை அதையும் தாண்டி ஒரு சமூகத் தொடர்பும், உறவாடலும் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலேயான போராட்டம்தான் இது என்றும் பார்க்க முடியும்.

    அதற்காக சமூக உறவை புதுப்பிப்பது என்பது தனி மனித உரிமைக்கு எதிராக இருக்கமுடியாது. அதையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் போது கலாச்சாரக் காவலர்களின் இயலாமையும், காழ்ப்புணர்ச்சியும், தன்னையே கேவலப் படுத்திகொள்கிற மன நிலையும், மீண்டும்  எதையோ கட்டுக்குள் கொண்டுவர முயல்கிற அதிகாரப் போக்கும்தான் அடியில் ஆழமாய் இருப்பதாகப் படுகிறது.




    22.5.10

    காலாவதி - நம் தலை விதி

    இந்தியாவும் தமிழகமும் ஒரு போதும் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
    இது அவ நம்பிக்கையின் குரல் அல்ல.
    நடக்கிற
    நிகழ்வுகளிலிருந்து கூட கற்றுக் கொள்ள மனமில்லாத நமது நிலையினைப் பார்த்து வெளிவரும் வேதனையின் குரல்.
    நமது உலகம் பணத்தை முன்னிறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் பணம்.
    பணமிருந்தால் மார்க்கமுண்டு.

    என்ன செய்வான்? எல்லாரும் பணம் பெற முயல்பவனாகவே இருப்பான்.
    சிறு வியாபாரி, பெரும் வியாபாரி, இந்திய முதலாளிகள், எல்லாருக்கும் இதுதான் ஒரே வழி என்று ஆகி விட்டது.
    வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கு வருவது உண்மையாய்
    இந்தியாவை முன்னேற்ற இல்லை என்பது நமக்குத் தெரியும்.
    அவர்கள் அளவுக்கு அவர்கள் பணம் பெற முயல்கிறார்கள்.

    இதில் லாபம் அதிகரிக்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் உத்தி -
    தரமான பொருட்களை வழங்குதல், உலகத்தரத்திற்கு பொருட்களை வழங்குதல்,
    ஐ.எஸ். ஐ முத்திரை பெற்றது, நேர்மையான மனிதர்,
    நூறாண்டுகள் பழமையான நிறுவனம் -
    என்பதைப் பயன் படுத்துவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

    உண்மை என்னவென்றால் மேற்சொன்னதெல்லாமே - வெறும் ஏமாற்றுதல் தான்.
    உண்மையான உத்தி ஏமாற்றுதல் ஏமாற்றுதல் ஏமாற்றுதல்தான்.

    இது தவறு என்று தெரிந்தாலும், இதைத் தவிர வேறு வழியில்லாமல் பணம் பெற முடியாது
    என்கிற நிலைக்கு எல்லாரும் தள்ளப் பட்டிருப்பதால்,
    இதை மிகவும் நேர்த்தியாக பயன் படுத்த அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
    சிறு வியாபாரி சிறு அளவில் செயல் பட்டால்
    பெரும் வியாபாரி பெருமளவிலும்,
    உலக நிறுவனங்கள் உலக அளவிலும்
    தங்கள் ஏமாற்றுதலை செவ்வனே செய்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,
    ஆற்றில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, போக்குவரத்து வசதியின்மை, பண வீழ்ச்சி -
    இன்னும் எனாவேல்லாம் காரணமோ அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
    வேறு வழி - எல்லாரும் இந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

    இதில் இலாபம் இல்லாமல் யாரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாது
    என்பது அனைவருக்கும் தெரியும்.
    ஆனால் எந்த அளவு என்பது ரொம்ப முக்கியம்.
    இதற்குள் சென்றால் அதை வேறு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
    அதனால் அதை தற்காலிகமாய் தள்ளி வைப்போம்.

    எனவே வேறு வழியில்லாமல் ஏமாற்றுவதன் வழியாய் பணம் பண்ண எல்லாரும் முயல்கிறார்கள்.

    தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்றால் - பாக்கெட் தண்ணீர் - அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது.
    அனால் தண்ணீர் சுத்திகரிக்கப் பட்டது என்பதற்கு எந்த சரி பார்த்தாலும் இல்லை என்பது நமக்குத் தெரிகிறது.
    எப்படி அவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடுகிறார்கள்
    - அதைத் தடுக்க பி.ஐ.எஸ் என்ன சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது
    என்பது நமக்கு இதுவரை தெரியாது.
    எல்லாருக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்த அனுமதி கொடுக்கிறார்களே ஒழிய
    அதற்குப் பிறகு என்றாவது அது தரம் மிக்கது என்று உறுதி செய்திருக்கிறார்களா நமக்குத் தெரியாது.
    அப்படியே வந்தாலும் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.
    சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய நடை மேடைகளின் ஓரத்திலேயே அமர்ந்து காலி பாட்டில்களில்
    தண்ணீர் நிரப்பி பெவிகுய்க்ஸ் வைத்து மூடிகளை ஒட்டி வியாபாரம் ஜோராக நடக்கிறது.
    அவன் அளவுக்கு அந்த ஏமாற்றல்.

    சரி - கோகோ கால வாங்கலாம் என்றால் அவன் அளவுக்கு அவன்.
    இனிமேல் நாமே வீட்டிலிருந்து தண்ணீரும் அல்லது கூடவே ஸ்டவும் எடுத்துச் செல்ல வேண்டும் -
    ஆனால் ரயில்வே நிர்வாகம் அதையும் அனுமதிப்பதில்லை.

    சரி - சாப்பிடப் போகலாம் என்றால் - அங்கே பழைய பொருட்கள் - பிரிட்ஜ் இல்லை
    ஆனால் நேற்று செய்தது அதற்கு முன்பு செய்தது என்று ஒரு வார உணவுகள் -
    அதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் நாமெல்லாம் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கிறோம்
    என்பதே நமது உடல் இந்த அளவிற்கு இவைகளுக்குப் பழகி விட்டது என்பதைக் காட்டும்.
    இறந்த கோழி, செத்த மாடு, காக்காய், எல்லாம் -

    சரி நாமே வீட்டில் சமைக்கலாம் என்றால் அதில், அரிசியில் கல், பருப்பில் மண், சர்க்கரையில் சுண்ணாம்பு, எல்லாம் -

    உடம்பு சரியில்லை என்று மருத்துவ மனை சென்றால் போலி மருந்து - காலாவதியான மருந்துகள் -

    ஒரே பஸ் பல்வேறு கட்டணங்கள் - ஆட்டோ ஓட்டுனர்களின் கறார் பயமுறுத்தும் கட்டணங்கள்,
    பெட்ரோல் கலப்படம் , அளவு குறைப்பு -

    கடுப்பாகி டாஸ்மாக் போனால் - சாமி அங்கே இல்லாத கலப்படமா!

    அப்படி ஏதாவது வந்தால் காவல்துறைக்குப் பணம் - அந்தப் பணத்தை எடுக்க இன்னும் பெரிய ஏமாற்று வேலை.
    இதுதான் சமயம் என்று காவல் துறை - எல்லா இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் - இன்னும் பணம் சம்பாரிக்க.
    வெள்ளையன் போன்றோர் - காலவதிப் பொருட்களை சோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவர் -
    காவல் துறை பணம் சம்பாரிக்கவே இப்படி செய்தால் அது தவறுதான் - ஆனால் அதற்காக சோதனை செய்யக் கூடாது என்றால் என்ன செய்ய முடியும்?
    ஆமா? இதற்குப் பிறகாவது எந்த பெரிய நிறுவனங்களிடமாவது காவல் துறை சோதனை மேற்கொண்டிருக்கிரார்களா? முடியாது.

    படிக்கப் பணம் - எனவே படித்த பிறகு அதை எடுக்க நோயாளிகளை ஏமாற்றுதல்.
    தேர்தலில் நிற்கப் பணம் - எனவே அதை எடுக்க ஊழல்.

    தங்கள் நாட்டில் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது என்று இங்கே வந்தவர்களும், தங்கள் நாட்டில் சோதனை அதிகமாக இருக்கிறது என்று இங்கே வந்தவர்களும் தரமற்ற பொருட்களுக்கு - மேலை நாடுகளுக்கு இணையாக பணம் வசூலிக்கிறார்கள். நமது நாட்டில் பொருட்கள் வாங்கி அதற்கு டாலருக்கு இணையாக நாம் பணம் கொடுக்கிறோம். அவனளவில் அவன் திருடன். வேப்ப இலையே தனக்குச் சொந்தம் என்றவன் எப்படி இருப்பான்?

    ஏன் இவைகளெல்லாம் நடக்கின்றன - அரசிற்கு இவைகளல்லாம் தெரியாது.
    தெரிந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் முதல்வர் என்ன செய்வார் - திரைப் படத்திற்கு வசனம் எழுதவும்
    அண்ணன் தம்பி சண்டைகளை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
    வேறு முதவர் வந்தால் - அதுவும் அப்படித்தான் - அவர்களுக்கு இது எப்படித் தெரியும் -

    அவர்களுக்கே வலி வந்தால்தான் தெரியும்.

    திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாதுன்னார் பட்டுக் கோட்டை.
    அது ரொம்பக் கஷ்டம்.
    ஏன்னா - எல்லாருமே ஒரு விதத்தில் திருடனாகவும் ஏமாற்றுபவனுமாகவே இருக்கிறோம்.







    ரிலையன்ஸ் - அவ நம்பிக்கை

    ஒரே நாளில் இரு செய்திகள்:

    1. ஏறக்குறைய அறுபது கிலோமீட்டர் அளவுள்ள சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை. இதன்பின் 24 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.
    அப்போதைய அரசியல் வாதிகளிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால் இன்னும் 24 ஆண்டுகள் என்ன - எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.

    2. காலாவதியான உணவுப் பொருட்களை விற்றதற்காக கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி - ரிலையன்ஸ் பிரெஷ் - லிருந்து பொருட்களை வாங்கியதாகக் கூறுகிறார்.

    இந்தியப் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் - இன்னும் சில நண்பர்கள் சொல்லுவது போல அம்பானி மற்றும் டாடா போன்றவர்கள் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தொழில் செய்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் கோஷம். எந்த முதலாளியும் ஏமாற்றுவதைத் தான் மூலதனமாக வைக்கிறானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.


    மக்கள்தான் மாற வேண்டும்.