31.10.10

தமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்

எப்போதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது 
சூப்பர் சிங்கர் பார்ப்பது வழக்கம் - பார்த்தேன். இதற்கு முன்பு சிறுவர்களின் குரல்களும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன - சிறுவர்களின் போட்டிகள் பற்றிய கருத்தை தெரிவிக்க இது தருணம் இல்லை.

இப்போது நடக்கும் போட்டியில் நடுவர்களின் மற்றும் வர்ணனையாளரின் தமிழ் பேச்சுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.
செம்மொழி நடத்தி முடிந்து விட்டது. இம்மொழியை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லையே சாமி. இதில் நித்ய ஸ்ரீயின் தமிழ் நன்றாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

[சவும்யா, ஷைலஜா மற்றும் மால்குடி சுபா]  நீங்க நன்னாப் பாடிநேள் - ஷேந்து வரும் - தெரியிறதா உங்களுக்கு - மேல போறச்சே - இவாளோட பாட்டைக் கேட்டுட்டு - ஷுபமாக இருக்கட்டும் -  நல்லா முன்னுக்கு வந்திருக்கேள் - நன்னா இருக்கு உங்க வாய்ஸ் - பாடுறச்சே - கவுந்து விழுந்துர்க்கேள் -

பாட வருபவர்கள் பலரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த இப்படி அப்படியும் பேசுவதும் பேஷா இருந்தது. - நான் பாத்துண்டே இருப்பேன் -

எனக்குப் பிடித்தது கவ்ஷிக் என்பவரிடம் திவ்யாவின் கமெண்ட்... [இரு வாரங்களுக்கு முன்பு] -  "அய்யரா இருந்துகிட்டு அய்யங்கார் பாட்டு பாடி கலக்கீட்டீங்க." நடுவர்களுக்கு எந்த அளவுக்கு ஒருவனின் சாதீயை வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள் -

- நல்லாக் குடுக்குறாங்கயா details ?