பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.7.11

ராதிகா, ஜெயலலிதா, மம்தா

கடந்த மே மாதம் தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட மன்றத் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக இருந்த போது கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றது.  அதில் இந்தியா-இலங்கையைத் தவிர ஒரு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற முதல் பெண் – முதல் தமிழர் – அவர் ராதிகா சிற்சபையேசன். அவர் Sacarborough-Rouge River தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
மே மாதம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் இங்கேயும் பெண்கள் முக்கியத் துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் – செல்வி ஜெயலலிதா மற்றும் மம்தா பாநேர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியைக் காட்டிலும் மம்தாவின் வெற்றி மிகவும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய முற்பத்து  நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த இடது சாரிகளை பதவியிறக்கம் செய்திருக்கிறார்.

இவர்களின் வெற்றி வெளியில் தெரிவதற்கு முன்பே ராதிகாவின் வெற்றி வெளிவந்து விட்டது. இருபத்தி மூன்று ஆண்டுகளாக லிபரல் கட்சியிடமிருந்த இடத்தை NDP பிரதிநிதியாக ராதிகா பெற்றிருக்கிறார். அவரின் கன்னிப் பேச்சு மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கனடாவின் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெண்.

மக்களுடைய விருப்பத்தின் பேரில் முப்பது வயதுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் ராதிகாவைப் பின்பற்றி இன்னும் நிறைய பெண்கள் – அரசியலுக்கு வர வேண்டும். “மாற்றம்’ வேண்டும் என்கிற அதே முழக்கத்தை முன்வைத்தே NDP நிறைய இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது [எதிர்க் கட்சியாக].

  • நமது ஊரிலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் பருவத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அதற்குப் பிறகு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார்கள். அதைப் பொறுத்த வரை ஆண்களும் அப்படித்தான். 
  • ராதிகாவின் தொகுதியில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, 'டெரெக் லி' இடமிருந்து பதவியைக் கைப் பற்றியிருக்கிறார். நீண்ட நாட்களாக தான் இருந்து விட்டதாகவும் மாற்றம் தேவை என்று தான் போட்டியிடாமலும் இருந்தார் டெரக். இங்கே கலைஞரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. அவரும் அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் - ஆனால் ஒரு போதும் நடப்பதாய்த் தெரியவில்லை. 
  •   எனவே ஆண்கள் பெண்கள், தங்கள் தொகுதியில் சமுதாய நோக்கில் வலம் வரும் இளைஞர்கள் மக்களால் கவனிக்கப் படுவார்கள் - நிச்சயமாய் -  
  • அரசியல் நாகரிகம் என்பது தமிழகத்தைத் தவிர பல இடங்களில் இருக்கிறது. ராதிகா, தனது முதல் உரையில் சபாநாயகரை வாழ்த்துகிறார். அந்தத் தொகுதிக்கு உழைத்த எதிர்க் கட்சி உறுப்பினரை நினைவு கூர்கிறார். மம்தாவின் பதவி ஏற்பு விழாவிற்கு ஜோதி பாசு நேரில் வருகிறார்.  இங்கே தான் நாகரிகம் என்பதே இல்லை -
  • அரசியல் என்பது சாக்கடைதான். ஆனால் உண்மையான நோக்கமும், தனது வாழ்வின் சிறு வயதிலிருந்தே உடைய சமூக நோக்கை தொடர்ந்து வெளிக் காட்டும் யாரையும், எந்த மக்களாக இருந்தாலும், யாரும் கை விட்டு விட மாட்டார்கள் என்பதே ராதிகாவின் வெற்றி காட்டுகிறது. மாற்றம் விரும்பும் பெண்கள் மாற்றம் கொண்டு வருவதற்குத் தங்களைத் தயார் படுத்துவதும் அவசியம். 

கடந்த வாரம் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்தார் அரசு முறைப் பயணமாக வந்தார். ராதிகா அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இயலாது. தமிழக அரசு அவரை அழைத்து தமிழரை பெருமைப் படுத்த வேண்டும். ஈழத் தமிழர் சாகும் போதுதான் குரல் கொடுக்க வில்லை. நமக்கு புகழ் ஈட்டும் பொது கொண்டாடவாவது வேண்டாமா?

7.4.10

சானியாவும் திருமணமும்


சானியா இந்தியக் குடிமகள் - அவருக்கும் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருடன் நடக்க இருந்த திருமணம் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கிருக்கிறது.

எத்தனை நபர்களோ இது போல நாடு விட்டு திருமணமும், மதம் கடந்து திருமணமும் செய்திருக்கும் போது - இவருக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதங்கள்.
புகழ் பெறுகிறவர்கள் கொடுக்கும் விலை இது.

அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஒரு பாக்கிச்தானியரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஏற்கனவே திருமணம் ஆனவரைத் திருமணம் செய்கிறார் என்பது பிரச்சனையா?


திருமணம் அவரவர் விருப்பம். பாகிஸ்தானியர் எல்லாரும் தீவிரவாதிகள் என்று நினைத்தால் அரசுதான் கவனமாக இருக்க வேண்டும் - எல்லைகளில் கோட்டை விடாமல்...

இரண்டாவது திருமணம் செய்வது தவறென்றால் நமது தலைவர்களை நாம் பார்த்துக் கொள்வது நல்லது. இஸ்லாமிய முறைப்படி 4 பேர் வரை திருமணம் செய்துகொள்ள வழி உண்டாம். (அதாவது விவாகரத்து செய்யாமலே)

கலாச்சாரக் காவலர்கள் எல்லா இடங்களிலும் தமிழகம் உட்பட இதற்கு எதிர்ப்பு. இத்தனைக்கும் அவர் தமிழகத்தில் வசித்தாலும் பரவாயில்லை. நம்ம ஊருல கரண்ட் கட் ஆகுது, தண்ணீர் வரலை, போராடுறதுக்கு யாரையும் காணோம் - இதுல இவர் திருமணம் செய்து கொள்வதற்கு சென்னை, மதுரை என்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம். போரட்டங்களுக்குன்று மக்கள் வெளி வருவது நல்லதே. அது வெறும் இருப்பைக் காட்டுவதற்காகவும், கட்சியை வளர்ப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சித் தலைவி நமது முன்னால் பிரதமரைத் திருமணம் செய்த போது இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்ததா என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.

8.3.10

மார்ச் 8 உலக மகளிர் தினம்

இந்தியத்தாய் என்கிறோம்.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த குழந்தை என்கிறோம்.
என் தாய் நாட்டை இழிவு படுத்துபவனை எனைப் பெற்ற தாய் தடுத்தாலும் விட மாட்டேன் என்கிறோம்.

ஆனால் இங்கேதான் பெண்களுக் கெதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றன.
33 % இட ஒதுக்கீடு கூட இன்னும் சாத்தியப் படவில்லை.

பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா தலைவரின் மைக் பிடுங்கப்பட்டிருக்கின்றது - அதற்கு மேலும் நடந்திருக்கலாம். 33 % - த்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் இது நிகழ்ந்திருக்கின்றது.
அவர் சொல்கிறார் -

"I think this is how protest is done in a democracy. We were opposed to the Bill so we tore it; we raised slogans. I can tell you this much we will cross all limits of protest over this issue,"
said Sabir Ali, the MP who attacked the Rajya Sabha Chairman.


இன்னும் ஒரு முறை அனைத்துக் கட்சி கூட்டமாம்.


அகில உலக மகளிர் தினத்தன்று மேகாலயா துணை முதல்வர் சில (எல்லாரையும் மனதில் நினைத்து ) பெண்களை விரியன் பாம்புகள் என்று சொல்லியிருக்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை என்று மீண்டும் சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் மேகாலாயாவில் வம்சாவழியை தாய் வழியாகத்தான் அறிந்து கொள்கிறார்களாம்.

ஜார்கந்த் மாநிலத்தில் இன்று 40 வயதுள்ள ஒரு பெண்ணை 3 - 4 பெண்கள் சேர்ந்து அடித்துக் கொன்றதாக தகவல்.

http://www.ndtv.com/news/india/jharkhand-shocker-woman-beaten-to-death-by-villagers-17402.php?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+ndtv%2FLsgd+%28NDTV+News+-+India%29

இப்படி இருந்தால்"பெண்கள் தினம்" - தினம் தினம் கொண்டாட வேண்டும் போலிருக்கிறதே.

வாழ்க பாரதத் தாய். வாழ்க நம் நாட்டு அரசியல் வாதிகள்.