மாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.1.16

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை (தமிழகம் தவிர)

இந்தியா இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது. 
அதற்கெல்லாம் முன்னோடியாக சிக்கிம் இருக்கிறது நாட்டின் பிரதமர் சொல்லுவதாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்லுகின்றன.

தமிழகம் என்பது விவசாய பூமி. 
இங்கே வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தலாம். 
அனல் மின் நிலையங்கள் ... 
அணு மின் நிலையங்கள் – 
ஸ்டெர்லைட் நிறுவனம் ... 
மீத்தேனை உருவ ஒரு பகுதி – 
சோத்துக்கே வழியில்லைஎன்றாலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கேன சில பகுதி - நிலக்கரி தோண்ட ஒரு பகுதி – 
தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் முன்னே தடுக்க அனைத்துப் புறங்களிலும் அணைகள் – 
நீர்நிலைகள் அருகிலேயே நீரை உறிஞ்சி எடுக்கும் கார் கம்பெனிகள் - உழவுக்கு உதவும் காளைகள் இல்லாமல் செய்யும் யுத்தி ... 
நாட்டுக் காளைகள் இல்லையென்றால் நாட்டுப் பசுக்கள் இல்லை – 
நாட்டுப் பசுக்கள் இல்லையென்றால் 
சாணம் இல்லை – இயற்கை உரம் இல்லை – 
தமிழ் நாட்டில் வேளாண்மையும் இல்லை – இயற்கை வேளாண்மையும் இல்லை – 
இனி சிக்கிம் மட்டும் தான் இயற்கை வேளாண்மையில் இருக்கும்!

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை வளர வாழ்த்துகிறேன்

16.11.15

மழையில் மாடு மூழ்கியது

மாட்டு அரசியல் என்பதை என்னோடு பணிபுரிந்தவர் பி. பி (Beef Politics - B.P) என்று சுருக்கமாய்ச் சொன்னார். பி.பி எகிர்றது நல்லது இல்லை. அது உடம்புக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும்தான்.

தொடர்ந்து வந்த விவாத மேடைகளில் அந்த மாடுகள் மூழ்கியதாவே தெரிகிறது. வெள்ளம் வடிந்தவுடன் மாடுகள் மீண்டும் வெளிவரலாம்.

மார்ச் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். ஒரு குழுக்கள் கட்டைகளோடும் கத்திகளோடும் சுற்றுகிறது. காவலர்கள் அவர்களுக்குத் துணி நிற்கிறார்கள். மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் கட்டிப் போட்ட உதைக்கப் படுகிறார். லாரி தீ வைக்கப் படுகிறது. அவைகளைச் செய்த நபர்கள் தங்கள் முகம் தெரியும் படி அந்த வீடியோவைப் பதவு செய்து சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

வீடியோவிற்கு இங்கே சொடுக்கவும்

கடந்த மாதம் ஒரு ஒட்டுனரைக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

வீடியோ
அரசாங்கம் அமைத்யாய் இருக்கிறது. உலகம் முழுவதும் போய் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் நமது பிரதமர். 
கோமாதாவின் காவலர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பச்சோந்திக் குரல் எழுப்புகிறது. போலிஸ் எதற்கு? சட்டங்கள் எதற்கு? 
சட்டங்களை ஒரு குழு ஆயுதங்களோடு நிலைநாட்ட வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கிறது என்றால் அரசின் வேலை என்ன? 

இந்தத் தருணத்தில்தான் நம் பிரதமர் (இன்றைய செய்தித்தாளின் செய்திப் படி) தீவரவாதத்தை உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனது நாட்டில் இப்படி நடக்கும் தீவிர வாதத்தை தன்னால் ஒடுக்க முடியவில்லை என்பதனால்தான் உலக நாடுகள் அதை எதிர்க்க வேண்டும் / ஒடுக்க வேண்டும் என்று பெசியதாகவே எண்ணத்த தோன்றுகிறது.