கேரளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.11.16

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால்  வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?

அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?

கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.

தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களே எழுதுவார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  இந்தத் தேதியன்று, தமிழ் நாட்டின் தலைநகரில் கொடியேற்றி  கூட்டங்கள் நடைபெற்றன. அவர்களெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே போய் விட்டனர்.

நம்மைப் பற்றி என்ன சொல்வது?
வாழ்க கர்நாடகம் ... வாழ்க கேரளம்.


27.8.13

உம்மன் சண்ட்டிக்கு ஒரு உம்மா

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் ஒரு பதிவோ என தவறாக என்ன வேண்டாம். இது அப்படிப்பட்ட பதிவு ஒன்றும் இல்லை.

செல்போன் பயன்படுத்தாத முதல்வர் - திறந்த புத்தகம் என்று சொல்லப் படுகிற கேரளா முதல்வருக்கு எதற்கு ஒரு உம்மா... இப்போதுதான் சோலார் பேணல் விவகாரத்தில் சிக்கிச் சிதறினார் வேறு ஏதாவது பிரச்சனையா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

கேரளத்தில் அரசுப் பணி பெற மலையாளம் கட்டாயம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் தேர்வில் மலையாளம் மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பத்தாம் வகுப்பு பாடத் திட்ட அளவில் அரசு நடத்தும் மொழித் தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே நிரந்தர பணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதுக்கு எதுக்கு உம்மா... தமிழகத்தில் அது மாதிரி ஒரு தேர்வு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை... கோட்டைக்குள் சென்றால் பல மலையாளிகள் தமிழ் தெரியாமலே இருக்கிறார்கள்... இன்னமும் ஞான்  ஞி என்றே பேசுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழித் தேர்வு வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்...

தமிழ் மொழியை தமிழக அரசே கவிழ்க்கும் சூழ் நிலையில் மலையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் உம்மா சண்டிக்கு உம்மா குடுத்தால் தப்பில்லை...
இதைப் பார்த்தாவது நம்மவர்கள் சுரணையோடு இருந்தால் நல்லதுதானே... ஆனால் அவர்களே ஆங்கிலிபிசி ல் பேசினால் நாம் என்ன செய்ய முடியும்?

29.5.13

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

27.11.12

வாழ்க தேசிய ஒற்றுமை

நேற்றுதான் துப்பாக்கி பார்த்தேன். உடனேயே துப்பார்க்குத் துப்பாய குறள்தான் நினைவுக்கு வந்தது. எழுதலாமென்று வலைப் பக்கம் வந்தால் அதிஷாவின் துப்பார்க்குத் துப்பாய டாஸ் போர்டில் நின்றது. எனவே துப்பாக்கியைத் தூரவைத்து விட்டு இன்னொரு தேசிய ஒற்றுமை பற்றி எழுதுவோம் என்று தோன்றியது.
***********

சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை மூடிக் கிடக்கும் கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல. அங்கு மட்டுமல்ல கர்னாடக எல்லையின் எந்த ஒரு இடத்திலும் அதைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். 

இவர்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் நாங்கள் பெறுவோம் என்று சொன்னவர்கள். இங்கே சுற்றி இருக்கும் எல்லாரும் வயித்தில புளியைக் கரைச்சுக்கிட்டு இருக்கணும். இங்க உற்பத்தியாகிற மின்சாரத்தை கேரளா வாங்குமாம் - கர்நாடகா வாங்குமாம். ஆனால் கழிவு கூட அவர்கள் மண்ணை மிதிக்கக் கூடாதாம். 

 இந்தப் பக்கம் ஒரு அரசு வருகிற கொஞ்ச நஞ்ச தண்ணிக்கும் உலை வைக்கப் பார்க்குது. அந்தப் பக்கம் தண்ணீர் தரவே மாட்டோம் - ன்னு அடம் பிடிக்குது ஒரு அரசு. ஆனால் இரண்டு பேருக்கும் இங்கேயிருந்து மின்சாரம் வேணுமாம். ஏன்னா நாமெல்லால் ஒரே தேசம். பக்கத்தில இருக்கவுங்க என்ன செய்தாலும் நாம மட்டும் எல்லாருக்கும் அனுசரணையா இருக்கனுமாம். அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட மீறலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் மட்டும் ஏதாவது சொன்னால் நாட்டைப் பிளக்க சதின்னு தமிழ் நாட்டுல இருக்கவந்தான் சொல்றான்.

இப்ப உச்ச நீதி மன்றம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டது. எதுக்கு நம்ம தீர்ப்பு குடுத்து - அத அவங்க மதிக்காம போனாலும் நம்ம ஒன்னும் செய்ய முடியாம இருக்கோம். அதுனால இனி தீர்ப்பே வேண்டாம் அப்படின்னு முடிவுக்கு வந்து விட்டது. இப்ப என்னடான்னா உச்ச நீதி மன்றம் - காவிரி நீர்ப் பிரச்னைக்கு இரு மாநில முதல்வர்களும் பேசித்தீர்க்க வேண்டும் என்று  யோசனை தெரிவித்து இருக்கிறதாம். அப்படியே கோர்ட்டுக்கு வர்ற எல்லா கேசுகளுக்கும் யோசனை மட்டும் சொன்னா நல்லா இருக்கும்.


மாண்பு மிகு நாராயண சாமி அவர்கள் "கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒப்பந்தப் படி நான்கு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று திருவாய் மலர்ந்த்திருக்கிறார். யாரோடோ போட்ட ஒப்பந்தம். எங்க சொல்லிப் போட்டாங்க? இதென்ன கொடுமை சரவணா? எல்லாத் துன்பங்களையும் நம்ம அனுபவிக்கனும், அவர்கள் எதையுமே விட்டுக் கொடுக்காமல் எல்லாத்தையும் பெறனும்னா நல்ல தேசியம் நல்ல ஒற்றுமை.

என்ன செய்றது!

**********
பேசாம விஜய் சாரை மிலிட்டரிலேர்ந்து ஒரு நாற்பது நாள் லீவுல தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமான்னு கேக்கலாம். அவர் லீவுல மும்பைக்குப் போனதுனால இந்த விவகாரத்துல நமக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை.



12.1.12

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

30.12.11

முல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா?


'லை' யா 'ல' வா? இதுல என்னடா இருக்குன்னு நினைக்கிரவங்களுக்காக...


வலைப் பதிவொன்றின் வழியாக ஆங்கில பதிவொன்று வாசித்தேன்.
ராதிகா கிரி  - அதில் எப்படி தமிழகத்தில் மற்றும் மற்ற இடங்களில் பனிபுரியும் மலையாள பத்திரிக்கை ஆசிரியர்கள் கேரள சார்பான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள் என்று விவரித்திருந்தார்கள்.
சின்ன விஷயம்தான் ஆனால் அது சொல்லும் படிப்பினைகள் ஏராளம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 'பறந்து' பரந்து விரிந்து இருக்கும் கேரளா நண்பர்கள், எப்படி எப்போதும் உண்மையைத் தாண்டி தங்கள் கேரளா விரும்பிகளாக இருகிறார்கள் என்பது பலருக்கு புரியாது.
சொன்னால்,  நம்மை பழமை விரும்பிகள் என்று சொல்வதற்கு நிறைய பேர் தயாராக இருப்பார்கள். பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வாசம் செய்யும் எனக்குத் தெரிந்த கேரளா மாநிலத்தின் குடிமகன் ஒருவர் கேரளா சென்று புதிய கார் வாங்கி வந்தார். ஏன்  என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கேரள பதிவென்னோடுதான் இங்கே இன்னமும் அந்தக்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்கே இருந்தாலும் எப்படி தாங்கள் விரும்புவதை நிலை நிறுத்துவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.. முல்லைப் பெரியாறு அணை பற்றி அறிய விக்கிப் பீடியாவில் தேடிய போது அதிலும் [mullaperiyar] என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. அதாவது பரவாயில்லை. அதில் எழுதியிருந்த விசயம் - இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ள 'ரப்பிஷ்' ஒப்பந்தம் என்று ஆரம்பித்து இருந்தது.

 ... நான் விக்கி பெடியாவில் லாக் இன் செய்து, அந்தப் பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்னும் விக்கி பீடியாவில் எடிட் செய்ய படிக்க வேண்டியிருக்கிறது. வேறு யாரோ நிச்சையம் முறையீடு செய்து அதை மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை இப்போது மாற்றப் பட்டிருக்கிறது.  ரபிஷை எழுதியது நமது கேரளா நண்பர்கள்தான்.

தமிழன்பர்கள் நிறைய இது போன்ற பொது தளங்களில் எழுத வேண்டிருக்கிறது.

ஆனால், நமக்குத் தெரியாமலேயே அல்லது விஷயம் புரியாமலேயே இன்னும் கேரளா கேட்பதில் தவறென்ன என்று கேட்கிற தமிழக வாழ் கேரளா நண்பர்கள் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு - கொலை வெறி பாடலை ... மாற்றி டேம் பர்ஸ்ட் கேரளா புல்லா வாட்டரு - அப்படின்னு மாத்தி அதுல அம்மாவை ரத்த வெறி பிடித்த பேயாக படம் வெளியிட்டு ... இதல்லாம் தேவையா.. விக்கி பெடியாவில் ரப்பிஷ் என்பது... சாமி கும்பிட வருபவர்களை ... அதாவது அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டு வருபவர்களை உதைப்பது, வண்டிகளை நொறுக்குவது ,,,,,

ஆனால் இங்கே இருப்பவர்கள் மட்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கும், அதை அங்கே ஊருக்கு எடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பு வேண்டுமாம்... அணை உடைந்தால் கேரளா புல்லா தண்ணீர் என்ன புழுகுடா சாமி. அணை உடைந்தால் இடுக்கிக்குதான் வரணும் தண்ணீர்.

 கொஞ்சம் கூட இருக்கிற இடத்தின், சம்பாதிக்கிற இடத்திற்கான கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இப்படி வெறி பிடித்து  உண்மை புரியாமல்  இருப்பவர்களை நாம் என்ன சொல்லுவது... 

திரு வை.கோ. சொன்னது போல - நீ இந்த ஒப்பந்தத்தை மதிக்கலன்னா நானும் மாநிலப் பிரிப்பை ஒத்துக் கொள்ளலை - இடுக்கி தமிழகத்திற்கு சொந்தம்...
வேறென்ன சொல்றது...