17.1.14

மோடி ஷண்டை (ஷிண்டே) - நியாயமான பேச்சு 1


  • ஷிண்டே அவர்கள் -  மாநில அரசுகள் சிறுபான்மை இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கிற தவறான, பயங்கரவாத வழக்குகள் இடப்பட்டு, சிறையில் அனாவசியமாக வாடிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்பதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதப் போவதாத் தெரிவிக்கிறார். 
    • காங்கிரஸ்காரர்கள் எல்லாம் என்ன குழப்பத்துல இருக்குறாங்கன்னே தெரியலை. ராகுல் திடீர்னு நாட்டில்  ஊழல் மலிந்து விட்டதுன்னு சொல்றாரு. மன்மோகன் சிங் பொருளாதாரம் வீக் ஆகிவிட்டதுன்னு சொல்றாரு. சிதம்பரம் விலைவாசி உயர்வுதான் நமக்கு கவலை தருதுன்னு பேசுறாரு. வேற நாட்டுக் காரன் இவர்கள் செய்திகளை எல்லாம் படித்தால் ஆட்சில இவர்கள் மிகச் சிறந்த எதிர்கட்சிக் காரர்கள் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். 
    • ராஜீவ் காந்தி கொலயில் பொய்க் குற்றச் சாட்டு  மற்றும் தவறான வாக்கு மூலம் உருவாக்கி, இருபத்து மூன்று ஆண்டுகளாக உள்ளே இருக்கும் நிரபராதிகளை விடுவிக்க எந்த தூசியும் தட்டலை. இப்ப எழுதப் போறாராம் எழுத... 
    • பொய் வழக்கு போடுறது / அணு உலைக்கு எதிராப் போராட்டம் பண்ணினா அன்னியச் செலவாணிக் கணக்கை கையில எடுக்குறது, சி.பி.ஐ.யை ஏவிவிடுறது  இதெயெல்லாம் நீங்க நிறுத்துங்க.... நல்லாப் பேசுறீங்க. என்னமோ ஏதோ 
  • மோடி சார் அதுக்கு நல்லாப் பதில் சொல்லிருக்கிறார். நமது நீதி மன்றங்களைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்றும், நமது நீதி மன்ற விவகாரங்களில் கால தாமதம் ஆவதை தடுக்க முடியாது என்றும் பேசியிருக்கிறார். 
    • நல்ல விஷயம்தான். குற்றவாளிகளின் மதத்தைப் பார்த்து தண்டனை தரப் படுவதில்லை மோடி சார். ஆனால் அதிகார துஷ் பிரயோகம் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் கைது செய்வதும், அவர்களை சிறைக்குள் பல வருடங்களாக அடைக்கப் படுவதையும் பற்றி பேசுவதற்கு உங்க பதில் இப்படி இருக்கக் கூடாது. மதத்தைப் பார்த்து தண்டனை கிடையாது... ஆனால் மதம் பார்த்து கைது செய்கிறீர்களே அது தவறில்லையா.
    • உங்க விஷயத்துல கைது இல்லாம, சிறை செல்லாம, வழக்கு நடந்தது. அதுனால உங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்ததினால் குஜராத் சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசுங்க. நல்லா இருக்கும். 
    • காங்கிரஸ் பேசுறது சரியில்லைதான். அதே மாதிரி நீங்க பேசுறதும்தான்.
  •  பின்னி -ன்னு ஒரு முன்னாள் காங்கிரஸ்காரரு, இந்நாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, பதவி கிடைக்கலை என்பதனால் - கெஜ்ரிவால் ஒரு பொய்யர்ன்னும், அவருக்கு எதிரா போராட்டம் பன்னுவேன்னும்  சவால் விடுகிறார். ஆம் ஆத்மியை உடைக்க பல சாதிகள் நடக்கின்றன. நாம் பார்க்காத அரசியல் படங்களா?
  • சல்மான் குர்ஷித் - அடுத்த அறிவாளி - ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகளின் கூடாரம் அப்படின்னு அடிச்சு விடுறார். அராஜகவாதிகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில பேசுறமாதிரி தெரியுது. மஞ்சக் காமாளைக் காரனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சள்தான்... காங்கிரசும் அராஜவாதிகலின் கூடம்தான்...
  • ஜே. பி . அகர்வால் ன்னு இன்னொரு காங்கிரஸ் காரர் - தேர்தல் சமயத்தில் பேசிய பிரச்சனைகளை தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை எனவே ஆம்-ஆத்மி பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  நீங்க தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எதையும் பத்து வருஷமா இருந்து தீக்க வக்கில்லை. அல்லது பதவி விலக திராணி இல்லை. ஆனால் பேச்சு...
  • எது நியாமான பேச்சுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

14.1.14

பொங்கல் வாழ்த்துகள்


  • கா. கவிதை


மூன்று மணி நேரம் வெந்நீர்
மூன்று மணி நேரம் குளிர் நீர்
மாறி மாறி குளித்தேன் நான்- [இரு முறை வாசிக்க]

நெருப்பாய் சிறிது நேரம்
எரிந்தது என் உடல்
பனியாய் சிறிது நேரம்
குளிர்ந்து என் உடல் - [இரு முறை வாசிக்க]

திடீரெனப் பார்த்த பெண்ணின்
மீதான காமமும் காதலும்
நெருப்பாய் பனியாய் வாட்டுதா?
---
பெரிதாய் ஒன்றும் சிந்திக்காதீர்கள்
பெயர் தெரியாத
ஒரு வைரசின்
காய்ச்சல்
என்னை
மாறி மாறி வாட்டுது.

இன்றுதான் சற்றே ஆறுதல்!

போகியில் காய்ச்சல் போய்
பொங்கலில் புது வாழ்வு
--
எல்லாருக்கும் வாழ்த்துகள்
........................

  • பொ. பொன்மொழி (கேட்டது)

தன் மொழியை உயர்வாய் சொன்னால் அதை நம்பாமல் கேலி செய்வதும்
தன் மொழியை இழிவாய்ச் சொன்னால் அதை ஏற்று ரசிப்பதும்
தமிழகத் தமிழர்கள்.

பிறன் மொழியை உயர்வைச் சொன்னால் அதை நம்பி ஏற்பதும்,
அம்மொழியின் பிழைகள் சொன்னால் தற்காத்து விவாதிப்பதும்
தமிழர்கள் தான்
ஏனெனில்
நாம்தான்
நடு நிலையானவர்கள்
அதனால்தான்
நாம்
பட்டி மன்றத்துக்கு பெயர் போனவர்கள்
-- -- -- -- -- --
வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால்
நம்ம குடும்பத்தை
நாமலே கேவலமா பேசி
கிண்டலடிப்பதை
ஒரு வழக்காமாகவே
வச்சிருக்கோம்.
வாழ்க
நம் வீரப் பழக்கம்
​​​​ ______

 பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.

----