31.12.11

யார் கதாநாயகன்? அறிவியலா ஆண்டவனா?

இந்த ஆண்டின் இறுதி பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்தில் நமது நம்பிக்கை யாரை, எதைச் சார்ந்தது இருக்க வேண்டும் என்பதற்கான தொடக்கமாகவும் இருக்கலாம். 
அறிவியலையா அல்லது கடவுளையா?


அறிவியல் மட்டும்தான் மக்களை மூட நம்பிக்கையிலிருந்து காப்பாற்றுகிறது என்று நோபல்  விஞ்ஞானி வெங்கட்ராமன் நேற்று சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவில் பேசினார். இதில் சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு பெயரும் மிக முக்கியமானது. நோட் த பாய்ன்ட்.

அதில் மிக கவனிக்கப் பட வேண்டியது என்ன வென்றால் எந்த நட்சத்திரங்களும் நம் வாழ்வில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பற்றி எல்லாம் நமக்குக் கேள்வி இல்லை. அவர் என்ன சொல்கிறார் - அறிவியல் மட்டும்தான் ஆதரத்தோடு சொல்கிற போது அதை ஏற்றுக் கொள்கிறது. 
அவரே கொடுத்திருக்கும் உதாரணம் - முன்னாடி வைட்டமின் சி சாப்பிட்டா  சளி புடிக்காது கான்சர் வராதுன்னு புகழ் பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் அறிவித்தார். ஆனால் அது இப்போது ஆதார பூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள்தான் புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.
அட!

நினைச்சா ஆதார பூர்வமா வைட்டமின் சி தேவைன்னு சொல்லுவீங்க அப்புறம் வேற ஆதாரம் வந்த உடனே அது இல்லை இதுன்னு சொல்லுவீங்க.. புது ஆதாரம் வந்தா இல்லை இது தப்புன்னு சொல்லுவிங்க.. 
அணு நல்ல கண்டு பிடிப்புன்னு சொல்லுவீங்க அப்புறம் கொஞ்ச நாள்ல ஆமா அதுல கதிர் வீச்சு நமக்கு நல்லதில்லைன்னு சொல்லுவீங்க... 
செல் போன் நல்ல கண்டுபிடிப்புன்னு சொல்லுவிங்க அப்புறம் அத பயன் படுத்துரதுனால ஒன்னும் ஆகாதுன்னு ஆதாரப் போர்வமா சொல்லுவீங்க .. இன்னும் ஒருத்தர் உடம்புக்கு நல்லதில்லைன்னு ஆதாரப் பூர்வமா சொல்லுவார்...

இப்படி நீங்க சொல்றதப் பார்த்தா வளர்ச்சி மாதிரி தெரியலையே... உங்களை நம்பி நாங்க இன்னும் வைட்டமின் சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப என்னடான்னா - பெருமாளே நீதான் காப்பத்தனும்.
 *********
பெருமாளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 
இந்த வருஷம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் வருமானம் மட்டும் ஆயிரத்து எழுநூறு கோடியாம். இப்ப நான் என்ன பண்றது? திரு வெங்கட்ராமன் சொல்றதைக்  கேக்குறதா அல்லது பெருமாளைக்  கேக்குறதா?
ஏன்னா "இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்கு முன்பாக ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்".

செய்தியில கடைசிப் பாராவைப் படிங்க!


அப்ப, ஆன்றோர்களே சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நீங்களே சொல்லுங்கள் - ஹூ இஸ் தி ஹீரோ? ஹூ இஸ் தி ஹீரோ?

திரு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களே 
நீங்கள் முதலில் செல்ல வேண்டியது  ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு: சொல்லவேண்டியது திரு இராதாகிருஷ்ணனிடம்... 


[இராமகிருஷ்ணனும் இராதா கிருஷ்ணனும் - 
-ன்னு தலைப்பு வைத்திருக்கனும்
மிஸ்ட்]


கொசுறு:
தமிழக பக்தர்கள்! ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு பதில் பழனிக்குப்  போவதற்கு முல்லைப் பெரியாறு உதவுனமாதிரி திருப்பதிக்குப் போகும் பண பக்தர்கள் திருத்தனியோட முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.

கொசுறு:

அறிவியலை ஏற்றுக்கொள்ளுவது தவறு என்றோ அல்லது பக்தியும் மூட நம்பிக்கையும் சரி என்பதையோ இந்தப் பதிவு வெளிப்படுத்தவில்லை. அறிவியலில் உறைந்திருக்கும் முரணை வெளிப்படுத்துவது - அவ்வளவே.

நன்றி: தினமணி செய்திகளுக்காக...


30.12.11

முல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா?


'லை' யா 'ல' வா? இதுல என்னடா இருக்குன்னு நினைக்கிரவங்களுக்காக...


வலைப் பதிவொன்றின் வழியாக ஆங்கில பதிவொன்று வாசித்தேன்.
ராதிகா கிரி  - அதில் எப்படி தமிழகத்தில் மற்றும் மற்ற இடங்களில் பனிபுரியும் மலையாள பத்திரிக்கை ஆசிரியர்கள் கேரள சார்பான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள் என்று விவரித்திருந்தார்கள்.
சின்ன விஷயம்தான் ஆனால் அது சொல்லும் படிப்பினைகள் ஏராளம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 'பறந்து' பரந்து விரிந்து இருக்கும் கேரளா நண்பர்கள், எப்படி எப்போதும் உண்மையைத் தாண்டி தங்கள் கேரளா விரும்பிகளாக இருகிறார்கள் என்பது பலருக்கு புரியாது.
சொன்னால்,  நம்மை பழமை விரும்பிகள் என்று சொல்வதற்கு நிறைய பேர் தயாராக இருப்பார்கள். பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வாசம் செய்யும் எனக்குத் தெரிந்த கேரளா மாநிலத்தின் குடிமகன் ஒருவர் கேரளா சென்று புதிய கார் வாங்கி வந்தார். ஏன்  என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கேரள பதிவென்னோடுதான் இங்கே இன்னமும் அந்தக்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்கே இருந்தாலும் எப்படி தாங்கள் விரும்புவதை நிலை நிறுத்துவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.. முல்லைப் பெரியாறு அணை பற்றி அறிய விக்கிப் பீடியாவில் தேடிய போது அதிலும் [mullaperiyar] என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. அதாவது பரவாயில்லை. அதில் எழுதியிருந்த விசயம் - இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ள 'ரப்பிஷ்' ஒப்பந்தம் என்று ஆரம்பித்து இருந்தது.

 ... நான் விக்கி பெடியாவில் லாக் இன் செய்து, அந்தப் பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்னும் விக்கி பீடியாவில் எடிட் செய்ய படிக்க வேண்டியிருக்கிறது. வேறு யாரோ நிச்சையம் முறையீடு செய்து அதை மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை இப்போது மாற்றப் பட்டிருக்கிறது.  ரபிஷை எழுதியது நமது கேரளா நண்பர்கள்தான்.

தமிழன்பர்கள் நிறைய இது போன்ற பொது தளங்களில் எழுத வேண்டிருக்கிறது.

ஆனால், நமக்குத் தெரியாமலேயே அல்லது விஷயம் புரியாமலேயே இன்னும் கேரளா கேட்பதில் தவறென்ன என்று கேட்கிற தமிழக வாழ் கேரளா நண்பர்கள் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு - கொலை வெறி பாடலை ... மாற்றி டேம் பர்ஸ்ட் கேரளா புல்லா வாட்டரு - அப்படின்னு மாத்தி அதுல அம்மாவை ரத்த வெறி பிடித்த பேயாக படம் வெளியிட்டு ... இதல்லாம் தேவையா.. விக்கி பெடியாவில் ரப்பிஷ் என்பது... சாமி கும்பிட வருபவர்களை ... அதாவது அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டு வருபவர்களை உதைப்பது, வண்டிகளை நொறுக்குவது ,,,,,

ஆனால் இங்கே இருப்பவர்கள் மட்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கும், அதை அங்கே ஊருக்கு எடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பு வேண்டுமாம்... அணை உடைந்தால் கேரளா புல்லா தண்ணீர் என்ன புழுகுடா சாமி. அணை உடைந்தால் இடுக்கிக்குதான் வரணும் தண்ணீர்.

 கொஞ்சம் கூட இருக்கிற இடத்தின், சம்பாதிக்கிற இடத்திற்கான கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இப்படி வெறி பிடித்து  உண்மை புரியாமல்  இருப்பவர்களை நாம் என்ன சொல்லுவது... 

திரு வை.கோ. சொன்னது போல - நீ இந்த ஒப்பந்தத்தை மதிக்கலன்னா நானும் மாநிலப் பிரிப்பை ஒத்துக் கொள்ளலை - இடுக்கி தமிழகத்திற்கு சொந்தம்...
வேறென்ன சொல்றது...



29.12.11

ஜெயா கேட்டவை -- "சோவா அ மோடியா "


முன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”
விரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.
சரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்?

தமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே. 
அதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.
மயக்கமா தயக்கமா....

முதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்



யார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...
வேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.
எனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....

என்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும். 
அதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.

இப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா?
சரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..?

சில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி  கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...
அட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...

ஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...

யாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் - 
தமிழரையா தமிழக முதல்வரையா?

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க

சில கேள்விகள் அம்மாவிடம் ...

மயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...
உண்மையிலேயே மயக்கம் தெளிந்ததா?
இன்னும் எத்தனை நாளைக்கு..


இப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதையும் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...  

நாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க... 

 

28.12.11

ஒரு ஹீரோ வில்லனான கதை


இன்று இந்திய தேசிய காங்கிரசுக்கு எத்தியானையாவதோ பிறந்த நாளாம். வாழ்த்துக்கள்.


தமிழ் சினிமாப் படங்களில் [அந்த அளவுக்கு உலகப் படங்களை பற்றிய அறிவு கம்மி என்பதனால் தமிழ் சினிமா போதும்] எப்போதும் ஒரு ஹீரோ வில்லனாக மாறுவது போல படம் முடியுமா என்று தெரியவில்லை.

நல்ல ஹீரோ கடைசி வரை நல்லவராகவே இருப்பார். இன்னும் சில படங்களில் ஜாலியா இருக்கிற ஹீரோ திடீரென பொறுப்பு வந்து நல்ல பிள்ளையா இருப்பார். அல்லது இடையில கொஞ்சம் போதையில ஏதாவது தகராறு பண்ணுவாரு அப்புறம் திருந்திருவாறு... அல்லது கொஞ்சம் சஸ்பெண்சுக்காக யாரவது கெஸ்ட் ரோல் பண்ணி - கெட்டவனா வர்ற ஹீரோவை கொன்னுடுவாங்க...

ஹீரோ வில்லன்களா உயிரோடு விடப்படுகிற படம்னு சொன்னா மங்காத்தாவை சொல்லலாம்... 
[ஜோதிகா வில்லியாக வந்த படத்தில் கூட 
அவரை உயிரோடு விட்டுவைக்க வில்லை கூட்டம்]

சரி / எதற்காக இந்தப் புராணம்?


என்னைப் போல இப்படி யாராவது ஹீரோக்கள் வில்லன்களாக திரைப் படங்களில் உயிரோடு விடப் படுவதில்லை என்று வருத்தப் படுவார்கள் இருந்தால் உங்களுக்கு நல்ல செய்தி.

நிஜத்தில் ஒரு ஹீரோ வில்லனா மாறி, இன்றும் உயிரோடு உலவிக் கொண்டு பலரது உயிரைக் காவு வாங்கிக் கொண்டு திமிரோடு உலா வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய விடுதலைக்காய் உருவான ஒரு ஹீரோ, சுதந்திரத்திற்குப் பிறகு, ஹீரோ வேடத்தைக் கலைத்து விடாமல், சத்தம் போடாமல் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களை விட தமிழ் மக்களையே அவர் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஈழத்தில், ... பிறகு ........

அந்த ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்கள்.
அவர் பெயர் - காங்கிரஸ்.

20.12.11

போராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்டு

இந்த ஆண்டு தமிழகத்தைப்  பொறுத்தவரை 
நான்கு  போராட்டங்களைக் கண்டிருக்கிறது. 
அவை நான்கும் மிக முக்கியமான போராட்டங்கள்.

முதலாவது - தமிழக மீனவர் போராட்டம்


"தண்ணிரில் பிழைக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்" என்று ம. கோ. இராமச்சந்திரன் பாடும் பாடல் வந்து பல வருடங்கள் ஓய்ந்து விட்டது. தண்ணிரில் பிழைக்க மட்டும் இல்லை, தண்ணிரில் சுடப்பட்டு இறந்து மிதக்கும் நிலையும் இருக்கிறதே என்பதில்தான் சோதனை அடங்கியிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியில், போராடி வாழும் மீனவர்களுக்கு சிங்கள இனவெறியர்கள் எல்லைப் பிரச்சனைஎன்று கொன்று குவித்த மீனவர்களின் கண்ணிற் வாழ்க்கை கேட்பார் யாருமின்றி - தமிழகம் இந்திய எல்லைக்குள் இருப்பது என்பதை மறந்தே வாழ்கிறார்கள் நாடாளும் அதி புத்திசாலி நண்பர்கள்.

கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி மீன் பிடிக்கச் சென்ற சிலர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடித்திருக்கிறது இலங்கை அரசு. கேட்பார் யாருமில்லை. 

பாதிக்கப் படும் பகுதிகள். ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் என்று இலங்கையை ஒட்டிய பகுதிகள் - இன்னும் சொல்லப் போனால் - தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகள்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இரண்டாவது - இடிந்த கரை போராட்டம்


"தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்.' என்று கடற்கரையை ஒட்டியவர்கள் மட்டுமல்ல - கடற்கரை தாண்டிய மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய அரக்கன் எப்போதும் தூக்கி நிறுத்திய அணுகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது எப்போது வெடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவமாவது ஏ.கே. 47 என்கிற நிலையில் சிலருடைய வாழ்வோடு முடிந்து போகிற ஒன்று. ஆனால் இது எப்ப வெடிக்கும் எப்படி வெடிக்கும், எத்தனை பேரைக் கொண்டு போகும், எத்தனை வருடங்களுக்கு இருக்கும், எத்தனை தலை முறைக்கு அந்த விளைவுகள் எதுவும் தெரியாது...

இது மட்டுமல்ல - இந்தப் பிரச்சனையோடு பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விவகாரங்கள் வெளியில் வந்த பிறகுதான் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  வெளிவரும் கதிர் வீச்சுகள் பற்றிய உண்மையும் அதோடு சேர்ந்து எந்த அளவிற்கு தமிழகத்தின் வடக்குப் பகுதியும் ஆபத்தில் இருக்கிறது என்கிற உண்மை வெளிவந்தது. ஆனாலும் இந்தப் போராட்டங்களைக் கடுமையாக எதிர்பவர்களும் இல்லாமல் இல்லை.

கல்பாக்கம் பகுதியில் உள்ள கதிர் வீச்சு அபாயங்கள் குறித்து இங்கே அறியலாம்.

பாதிக்கப் படும் பகுதிகள் - தூத்துக்குடி, அதோடு சேர்ந்த கிராம நகரப் பகுதிகள். இவைகளில் தான் ஏற்கனவே பல்வேறு நச்சுப் பொருள்கள் காற்றில் கலந்து விளைவை உருவாக்கும் ஆலைகள் இருப்பதும் கவனிக்கப் பட வேண்டியிருக்கிறது.

மூன்றாவது -  அணை காக்க கேரளாவிற்கு எதிரான போராட்டம்

இதுவும் தண்ணீரை மையப் படுத்திய போராட்டமே - தண்ணீர் இல்லாமல் இறக்க வைக்கிற கொடுமை. ஒவ்வொரு முறையும் தமிழக கேரளா உறவில் ஏதாவது விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இதைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது.

பாதிக்கப் படும் பகுதிகள் - மீண்டும் தென் தமிழகமே....




முக்கியமான மற்றொரு போராட்டம்
மரண தண்டனைக்கு எதிரானது






மற்ற மூன்று போராட்டங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால் இந்த மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்கள் என்பதால் - நியாயமற்ற முறையில் வழங்கிய தீர்ப்பு என்கிற வகையில் இது முன்னெடுக்கப் பட்டது.

தமிழக மீனவர்கள் என்பதனால் அரசு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை.  இடிந்த கரையிலும் ஏற்கனவே கல்பாக்கத்தில் தொடங்கிய அந்த அதே கதிர்வீச்சை தமிழகத் தின் தென் பகுதிகளுக்கு பரப்புவதில் இன்னும் ஆர்வத்தோடு இருக்கிற மத்திய அரசு... முல்லைப் பெரியாறு அணையிலும் - வாய் திறந்த ப. சி கூட வாபஸ் பெரும் விதத்தில் மத்திய காங்கிரசும் கேரளா காங்கிரசும் கூட்டணியில் இருக்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் தமிழினத்திற்கு எதிரான போக்கே இருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே இந்த கடைசிப் போராட்டத்தின் உண்மை உங்களுக்குப் புரியலாம்.


இதனால் அறிவது என்னவென்றால்:
இந்த ஆண்டு தமிழர் அழிப்பை பல்வேறு வழிகளில் பலரும் முயற்சி செய்வது போல தமிழர்களின் விழிப்புணர்வும் ஆச்சரியப் பட வைக்கிறது.
எது எப்படியெனினும் - தமிழகத்தை சுற்றி ஆபத்து காத்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டாயிரத்துப் பதினொன்று - போராட்ட வருடம்

ஆபத்து அதிகமாகிக் கொண்டேயும் இருக்கும் வருடம்.





எத்தனை போராட்டங்கள் என்றால் என்ன தமிழின அழிப்புத் தொடருமா அல்லது வாழ்வு விடியுமா?.


கொசுறு:
இந்த ஆண்டு தொடங்கிய முதற் போராட்டம் தொடங்கி அனைத்துப் போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு வேளை - தெலுங்கானா மாதிரி பிரிக்கும் போராட்டம்தான் தீர்வா?????


நன்றி:

அனைத்து புகைப் படங்களும் வலைப் பூக்களின் முகவரி கொண்டு அப்லோடு [தரவேற்றமா?] செய்யப் பட்டிருக்கின்றன. அந்தந்த வலை உரிமையாளர்களுக்கு நன்றிகள்.
தொடரும் ...

17.12.11

என் கழுகுப் பார்வை - 2011 ஒன்று



தரை வழி நின்று ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் 
ஒரு மலை மீது நின்று அதே இடத்தைப் பார்ப்பதற்கும் 
நிறைய வித்தியாசம் இருக்கும். 
கீழிலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்காது என்பதல்ல விஷயம் - 
[அழகு என்பதை ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியாது] -
மேலிருந்து பார்க்கிற போது 
சிறிய நுணுக்கங்கள் தெரியாது என்பதும் அல்ல விஷயம்.

மேலிருக்கிற பார்வையில் - 
விசாலப் பார்வையோடு, 
வித்தியாசமான பரிமாணம் வெளிப்படும்.

சென்னையைத் தாண்டி - வேறு இடங்களில் இருபது கிலோ மீட்டரை இருபது நிமிடத்தில் பைக்கில் கடக்கிற நபர் முதல் முதலாய் சென்னை டிராபிக்கில் முழி பிதுங்கி இரண்டு கிலோ மீட்டரை கடக்க இருபது நிமிடங்கள் ஆகிற போது - அங்கே சுற்றியிருக்கிற கட்டிடங்களோடு சேர்ந்து - அந்த நபருக்கு ஆகா சென்னை எவ்வளவு பெருசுன்னு தோணும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் போது பார்க்கிற சென்னை - அட இவ்வளவுதானா சென்னைன்னு தோணும்.
ஆனால் அது கொடுக்கிற விசாலப் பார்வையைத் தரை கொடுத்து விட முடியாது.

கடலோரத்தில் இருக்கும் அந்த கட்டங்களின் நடுவே நமக்குத் தெரிந்த இடங்கள் இவளவு அருகில் இருக்கிறதா என்று தோன்றும். ஒரு வழிப் பாதை அல்லது சுற்றிச் சுற்றிச் சென்று சில இடங்களின் தொடர்புகள் கூட இல்லாதது போல நம்முடைய எண்ணம் மாறும்.

நிகழ்வுகள் சில அவ்வப் போது நடக்கிற போது நடக்கிற நிகழ்வுகள் தொடர்பற்றவைகள் போலத் தோன்றும். ஒவ்வொரு நிகழ்வையும் தனியே மட்டுமே பார்க்கச் சொல்லும்.

சில மாதங்கள் கழித்து 
சில நிகழ்வுகளை 
கொஞ்சம் தொலை தூரத்தில் இருந்து பார்க்கிற போது 
அவைகளின் வேறு பரிணாமங்கள் நமக்குத் தோன்றும்.

இந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளையும் 
அப்படிப் பார்க்கலாமென்று தோன்றுகிறது. 
அவை சில விஷயங்களை நமக்குத் தெளிவு படுத்தலாம் 
அல்லது சிக்கலுக்கு உள்ளாக்கலாம். 
எனக்குத் தெரிய வில்லை. 

இது சில பகுதிகளாக வெளி வரும். 
இது எனது கழுகுப் பார்வை மட்டுமே! 
தங்களது பார்வைகளையும் சேர்க்கிற நண்பர்கள் 
தங்களது கருத்துக்களையும் வெளியிடலாம்.

உதாரணத்திற்கு ஒன்று

இந்த ஆண்டு 
கேரளா மகர ஜோதி ஏமாற்று வித்தையில் ஆரம்பித்து, 
கேரளா  முல்லைப் பெரியாறு ஏமாற்று வித்தையில் முடித்திருக்கிறது. 
வருடம் முடியப் போகிறது -
ஏமாற்றும் வித்தைகள் முடியுமா தெரியாது.

தொடரும்....

14.12.11

ஒஸ்தி - ஒசத்தி


"லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஹொவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்...."

அரசியல் பாடம் - 
அம்மாவைத் தாண்டி தமிழகத்தில் எதுவுமே செய்யக் கூடாது செய்யவும் முடியாது என்கிற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக் கிறார் சிம்பு. ஒரு சண்டையில் எதிரி ஒருவனுக்கு தொலை பேசி வருகிறது - யாரென்று கேட்கிறார் சிம்பு - அவர் 'அம்மா' என்று சொல்ல உடனே சிம்பு - நேரடியாகவே அம்மாவைப் பார்ப்பது போன்று ஒரு பம்மு பம்மி
"அம்மாவைக் காக்க வைக்கக் கூடாது". அப்படியே "அம்மாவை நானும் கேட்டேன்னு" சொல்லுன்னு சொல்லுவாரு பாருங்க.
எதிரியா இருந்தாக் கூட அம்மா பேரைச் சொல்லிட்டா என்ன நடக்கணும் நடக்கும் என்பதை இதை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாதுங்க. தமிழகத்தின் நடப்புச் சூழலை பம்முவது மாதிரி பம்மி அடித்திருக்கிற கிண்டல் ரொம்ப அருமைங்க...
[எதோ நம்மளால முடிஞ்சது - அவரு ஒரு அமைச்சரைப் பேசி மாத்தும் போது நம்ம கிளப்பி விடக் கூடாதா...]

குடியின் கொடூரம்
குடியின் கொடூரத்தை இந்தப் படத்தில் விவரிப்பது மாதிரி வேறு எந்தப் படத்திலயும் விவரிக்க முடியாது. 
படத்தின் கதாநாயகியின் அப்பா - எதுக்குக் குடிக்கிறாரு, ஏன் குடிக்கிறாரு, ஏன் அந்தப் பொண்ணு அவர் உயிரோட இருக்குற வரைக்கும் அவரை விட்டு வர மாட்டேங்குது - ஒருத்தரு குடிகாரனா இருந்தா எதைப் பத்தியும் கவலைப் பட மாட்டாங்க அது பெற்ற பொண்ணா இருந்தாக் கூட - 
அதுனால சிம்பு முதல்ல பொண்ணுகிட்ட போய் அவரை மாத்துன்னு சொல்றாரு அது முடியலன்ன உடனே அவருகிட்டே நேரா போய் நீயெல்லாம் ஒரு அப்பனா அப்படின்னு கேட்ட உடனேயே மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி தண்ணீல விழுந்து செத்துப் போராறாரு. தண்ணீர்ல இருப்பவனுக்கு தண்ணீர்லதான் மரணம் என்பதை விழிப்புணர்வுச் செய்தியாகச் சொன்னதுக்கே - தண்ணியடிக்கலாம்.

காவல்துறையின் கொள்ளைகள் 
காக்கிச்சட்டை போட்டுக்கொண்டால் அவரை வெறும் போக்கிரியாகத்தான் காட்ட வேண்டுமா அல்லது கடமை உணர்வுள்ள போக்கிரியாகத்தான் காட்டவேண்டுமா என்கிற கேள்வியில், கடமை உணர்வுள்ள, அதேசமயம்  தேர்தல் ஆணையத்தின் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமலேயே அவர்கள் சொல்லாமலேயே மக்களுக்குக் கொடுக்கப் போகும் பணத்தை பிடுங்கி போலிஸ் சீப்பு வாங்குவதும், வீட்டுக்கு ஜெனரேடர் வாங்குவதும் என செலவு செய்கிறார் ஹீரோ. [மங்காத்தா அர்ஜூன் மாதிரி அவர் அப்படித்தான்னு கடைசி வரைக்கும் தெரியாது இங்கே தெரிஞ்சுருது அவ்வளவுதான்] ஆனால் இந்த நிலையில்தான் நமது காவல் துறை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி - கடந்த தேர்தலின் போது காவல் துறையினர் வழிப்பறி செய்த பணம் எல்லாம் ஸ்வாக செய்யப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு எல்லார் சார்பாக மனுப் போட்டிருப்பதர்காகவே இயக்குனருக்கும் அந்தப் பாத்திரத்தை ஏற்று வந்து போன சிம்புவுக்கும் பாராட்டுப் பத்திரமே தரலாம்.

 நடிகர்கள் ஒற்றுமை

ரசிகர் மன்றங்கள் என்று தமிழகம் பிரிந்து போயிருக்கிற நிலையை 
மாற்ற வேண்டுமென்று மணிக்கணக்காக யோசித்து 
மங்காத்தா நூறாவது நாளில் படத்தை வெளியிட்டு 
அஜித் ரசிகர்களின் பலத்தையும் -  
படம் முழுவதும் 
விஜய் வசனம் பேசும் அதே ராக தாளத்தோடு பேசி 
சிம்பு அப்படியே விஜயாக வந்து போயும், 
பாட்டில் கூட "வில்லு வில்லு வில்லு ... ன்னு குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவாங்களே அந்த பாட்டின் ராகமும் தெரியும்படி செய்து, 
தன்னை தலதளபதியாக மாற்றி ரசிகர் ஒற்றுமையை நிலை நாட்டிய அந்த நல்ல குணத்திற்காக 
சிம்பு ரசிகர் மன்றத்தை மட்டும் நாட்டில் வைத்து விட்டு 
மற்ற எல்லாத்தையும் கலைத்து விடலாம். 
அப்பா பாசம்
அம்மா பாசம் போல அப்பா பாசத்தையும்  தூக்கி நிறுத்தியதில் மட்டுமல்ல, அப்பா என்பவர் உரிமையோடு சண்டை போடுவதற்காக உள்ளவர் என்கிற உரிமையையும் நிலைநாட்டியதற்காகவும் 
அப்பாவிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாது [அப்பான்னு பேசக்கூடாது] என்கிற பாச உணர்வையும் கொடுத்ததனால் தன் அப்பா மேலுள்ள பாசத்தையும் வெளிக்கொண்டு வந்து தன் அப்பாவின் மனம் குளிரச் செய்ததனால்.. அவருக்காகவே இனி தமிழ் நாடை இனி தந்தை நாடு என்று அழைக்கலாம்.

இன்னும் நிறைய இருக்கு அதனால படம் பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கங்க:

கொசுறு - ஒன்று     பயோ டேட்டா

வைத்த பெயர் -                              ஒஸ்தி தி மாஸ் - மாஸ்டர் ஒப் ஆப்பு
வைக்க விரும்பிய பெயர் -     குஸ்தி - மாஸ்டர் ஒப் காப்பு [காவற்துறை]
ஹீரோ  -                    எஸ் டி ஆர். [STR] A மிஸ்ஸிங் ஏன்னா அவர் லிட்டில் [str]
ஜோக் அடிப்பவர் -                       சந்தானம்
எத்தனை பேர் நடித்தவர்கள்?  பாதிப்பேர் நடிக்கலை

பிடித்தது -                                          இசை
அதில் பிடிக்காதது -                     பல பாடல்களின் பின்னணி நினைவுகள்
கண்டுபிடிப்பு -                                இடுப்பில் கொலுசு

அடிக்கடி சொல்லும் வசனம் - கண்ணாடி
அடிக்கடி மாட்டுவது -                 கண்ணாடி
அதை மாட்டுவது -                       பின்னாடி


கொசுறு இரண்டு
சிலவிஷயங்களை அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு கமல் எதோ ஒரு படத்துல சொல்வாப்புல. இருந்தாலும் ஆராயணும் போல இருக்கே. இந்தப் படத்துல சிம்பு பேசுற நெல்லை பாஷை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. இவங்க பேசுறத பாத்து காட்டுப் பாக்கம் திருநெல்வேலி பக்கத்துல இருக்குன்னு நினைக்க வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்சு சென்னை போரூர் பக்கம்தான் அது இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
அதுக்கும் நெல்லை பாஷைக்கும் என்ன சம்பந்தம் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் - ன்னு அழகன் படத்துல மம்மூட்டி பேசுரமாதிரி எல்லாம் நான் கேக்கலை. அவ்வளவு அழகா [!] நெல்லை பாஷை பேசுற சிம்பு - பாம் வெடிச்ச பொறவு ரொம்ப நல்லா தமிழ் பேசுறாக. அது என்ன மாயமோ தெரியலை... நெல்லை பாஷை மாறனும்னா பாம் வெடிச்சா போதும் போலெல.

படத்துல அவர் அடிக்கடி - யாரையாவது அடிக்க அடிக்க சொல்ற வசனம் "ஏலே நான் கண்ணாடி மாதிரி, நீ சிரிச்சா நான் சிரிப்பேன், நீ ஆடுனா நான் ஆடுவேன் ..." படம் பாத்து அழுதுகிட்டும், கடுப்புலயும் இருக்கேன் - ஆனா அவர் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருக்காரு. என்ன கண்ணாடியோ.. ஒருவேளை ரசம் போன கண்ணாடியோ?


கடைசியா சந்தேகக் கேள்வி
பணம் கொஞ்சம் எடுக்கிறாரு - அதுக்கு என்ன கணக்கு -  போலிசு பணம் எடுத்து வீட்டுக்கு ஜெனரேட்டர் வாங்குறது ஓகே. அதுல போலிசு ஜிப்புமா வாங்குவாங்க?

ஜாலியா எடுத்துக்குங்க 

நீங்க கேக்கக் கூடாத கேள்வி -
அப்புறம் இந்தப் படத்தை ஏண்டா பாத்த?

11.12.11

ஒய் திஸ் கொல வெறி?ஜஸ்ட் ஜாலியா ஒன் ...


மனதில் எண்ணம் ...
கையில் ... 
ஒன்லி இங்க்லீஷ் - 
ஒ.கே . மாமு....
மைண்ட்ல தாட்டு - 
ஹாண்ட்ல கீ போர்ட்  
வாட் டு ரைட்டு நவ்வு .... ன்னு தான் 
இந்தப் பதிவ ஆரம்பிச்சேன். 
ஆனா நம்மால முடியாதுடா சாமி.
***

இந்தப் பாட்டு வந்து பல விஷயங்கள் நடந்து விட்டது.
படத்தின் - ப்ரமோவுக்காக தனுஷ் ஜாலியா ஒரு பாட்டுப் பண்ணி ....
- என்ன விஷயம்னா நம்ம விஜய்  பாடினா  இப்போது பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் ன்னு நம்மைக் கொன்னே போடுவாங்க... இவரை நேராவே காட்டிட்டாங்க...
***
ஒய் திஸ் கொல வெறி பாட்டு வந்த நேரத்துல விலை வாசி ஏறிப் போய் எல்லாரும் அம்மா மேல கடுப்புல இருந்த அன்னைக்கு [அன்னைக்குதான் நான் பார்த்தேன்] இந்தப் பாட்டு வந்து எல்லாரும் அம்மாவைத் திட்டுற மாதிரி ஒரு தலைப்பைப் போட்டு, திருப்பித் திருப்பிப் போட்டுக் கேட்டு, 
அம்மாவைப் பார்த்து எல்லாரும் ஒய் திஸ் கொல வெறின்னு கேட்டாங்களாம்.
***

திருப்பித் திருப்பி போட்டுக் கேட்டதுல கடுப்பாகி ஒய் திஸ் கொல வெறி - உங்களுக்கு என்னாங்கடா வேணும் - இந்தாங்கடா 
தங்க மெடல் ன்னு யு டியூப் குடுத்து 
அதோட முடிச்சுக்கலாம்னு பார்த்தா...

அதே மேட்டரை அதே மெட்டோட அல்லாரும் திருப்பித் திருப்பி, சின்னவன், பொண்ணு ன்னு மாத்தி மாத்தி பாடி - என்னா எடிட்டிங்க்டா சாமி. சீக்கிரம் பாலைக் குடுங்கடா தூங்கனும்கிற ரேஞ்சுக்கு அந்தப் பொடியன் பாட - எனக்கென்னமோ அந்தப் பையன் அவங்க அம்மாவைப் பார்த்துதான் 
ஒய் திஸ் கோல வெறின்னு பாடுற மாதிரி இருக்கு.
***

ஒருத்தர் தனுஷ் ஏன்  தமிழில் எழுதலைன்னு ரொம்பக் கஷ்டப் பட்டு 
ஏன் இந்தக் கொல வெறி ... கொல வெறின்னு ....
கஷ்டப் பட்டு மொழி மாற்றம் பண்ணி - அதுல ஸ்ருதிக்கு பதிலா ஒரு பொண்ண  நடிக்க வச்சு ----உஷ் அப்பப்பா ஏன்யா இந்தக் கொல வெறி.
***

என் டி டிவி வரைக்கும் தனுஷ் பேட்டி குடுத்து
வி ஆர்  ஹியர் டு என்டர்டெயின் யு நோ.... 
அப்படின்னு விளக்கம் குடுத்துருக்கார். 
ஒய்? ஒய் திஸ் யா?
***

சிம்பு ரசிகர்கள் எல்லாம் தனுஷை வெறுப்பேத்துற மாதிரி பேச - வெறுப்பேத்துற மாதிரி என்னை விட என்னடா அவரைப் பத்தி அதிகம் பேசுகிறீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு ஒய் திஸ் கொலை வெறி ன்னு சொல்லி -  நீங்க பேசாம இருங்க நான் பாத்துக்கிறேன் அப்படின்னு சொன்னாராம்.

என்னாடா பண்ணப் போறாருன்னு பார்த்தா டி ஆரையும் எல். ஆரையும் வச்சு ஒரு பாட்டு பண்ணி -....
டி. ஆர் . சார் அண்ட் சிம்பு சார் 
ஏன்  இந்தக் கொல வெறி?
***

கவிஞர்கள் (!) கடுப்பாகி இதெல்லாம் ஒரு பாட்டான்னு தனுஷைக் கிண்டல் பண்ணி  ஒய் திஸ் கொல வெறின்னு கேட்கப் போய்.

என் மேல் உங்களுக்கு ஏன்யா இந்தக் கொல வெறின்னு கடுப்பாகி - தனுஷ் இசைக்கு மொழி தேவையில்லை - அது என்ன மொழின்னு தெரியணும்னா தெரிஞ்சுக்க இந்தா ...  "இந்தியனால் எழுதப்பட்ட இந்திய மொழின்னு" டுவீட் பண்ணி, ....

அடேங்கப்பா ... ஏன் எல்லாருக்கும் இந்தக் கொலைவெறி...
ஆமா எனக்கு ஏன் இந்தக் கொல வெறி?

ஒரு வழியா தனுஷ்ல ஆரம்பிச்சு தனுஷ்ல முடிச்சுட்டேனா?

இதனால் அறிவது என்னவென்றால்.....
  • இந்திய மொழி என்று ஒன்று உண்டு.... அது இங்கிளிபிஷு

***************************************************************************
  • கேரளாவில்  எல்லாரும் சேர்ந்தது தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குள்ள கிறித்தவப் பாதிரியார்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுகிறார்களாம். தமிழ் நாட்டில் இருந்து சபரி மலைக்குச் சென்ற தமிழக பக்தர்கள் மீது அவர்களின் வண்டிகளின் மீது தாக்குதல் நடத்தியதால் பக்தர்கள் சிலர் இங்கேயே முடி இறக்கவும் முடிவு செய்தார்களாம். பரமண்டல பிதாவும் சாமி ஐயப்பனும் ஒன்று சேர்ந்து தாக்குதல் கொடுக்கிறார்களா? சாமிகள் பேரைச் சொல்லி வம்பு வழக்கும் ஆசாமிகளே ஒய் திஸ் கொல வெறி?
    • யார் சொன்னது நமது நாட்டில் மத வேறுபாட்டினால் பிளவு என்று? 

      • இத்தனைக்குப் பிறகும் சில தமிழர்கள் கட்டாயம் அங்கே போய்தான் முடி இறக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார்களாம். ஒய்? ஒய் திஸ் கொல வெறி?



8.12.11

முல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா!



  • அச்சம் என்பதுதான் இரண்டு பிரச்சனைகளிலும் உள்ள முக்கியமான விஷயம் என்று நம்பப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம் - கூடங்குளம் பாதுகாப்பற்றது என்பதும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்பதும்.

கூடன்குளம் விஷயத்தில் மட்டும் 'கூடன்குளம்' பாதுகாப்பானது என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மாற்றி மற்றொருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முறை சொன்னது போல அதன் உண்மை நிலவரம் ஊருக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்த அச்சம் என்பது - வாழ்கிற மனிதர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும், இயற்கைக்கும், காற்றின் வழி பரவும் கதிர் வீச்சுக்கும் பாதிக்கப் படப் போவது கேரளாவும்தான். 
இதில் மட்டும் மத்திய அரசு சொல்வதைக் கேளுங்கள், நிபுணர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்கிற நம்ம மக்கள் கூட, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் மக்களும் மத்திய அரசும், நீதி மன்றமும் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள். அல்லது மிகவும் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா - என்று இதற்கும் இங்குள்ளவர்கள் மேல் பழி போடுகிறார்கள்.

  • முல்லைப் பெரியாறு அணை என்பது - சிறியவர் முதல் பெரியவர் வரை அது உடைந்து விடும் உடைந்து விடும் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள அரசியல் [தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி] தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்கு போடப் பட்ட ஒப்பந்தத்தையும் உடைப்பதற்கும், எந்த வித இழப்பிட்டுத் தொகையும் தராமல் தப்பிப்பதற்கும், இடுக்குக்கிக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான பல்வேறு நோக்கத்தோடு, அணை உடைந்தது போகும் என்கிற பிதியைக் கிளப்புகிற முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புல அரசியல் தெரிந்தால் நாம் முல்லைப் பெரியாறு அரசியல் அச்சம் நமக்குப் புரியும். 
  • முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்டது அல்லது செல்லாது என்று நாம் வாதிடவும் முடியாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் அதே ஒப்பந்தம் சில மாறுதல்களோடு மீண்டும் தமிழக மற்றும் கேரள அரசுகளால் புதுப்பிக்கப் பட்டன. அங்கே மீன் பிடிப்பதற்கான உரிமை, கூடுதல் ஒப்பந்தத் தொகை.... எனவே இது இந்திய பேராயத்தின் சட்ட நுணுக்கங்களுக்குள் ஒத்து வரும் ஒரு ஒப்பந்தமே. இப்போது மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் ஏற்கனவே மேலே கூறப் பட்ட காரணங்களே. அச்சத்தினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று அச்சுதானந்தர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி - கேரள ஒட்டுமொத்தமாக அரசியல், மத வேறு பாடு இன்றி - எந்த இடங்களில் வாழ்கிறார்கள் என்கிற நினைவின்றி எல்லாரும் முல்லை பெரியாறு - முல்லப்பெரியார் - அணை பாதுகாப்பற்றது என்று குரல் கொடுக்கிறார்கள்.

  • தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லவில்லையே அப்புறம் என் இன்னும் எதிர்க்க வேண்டும் என்கிற நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கேரள அரசு நீதிமன்றத்தில், ஒப்பந்தம் என்பது அணை கட்டுவதற்கும், அதை நிர்வாகிப்பதற்கும் மற்றும் நிலத்திற்குமான ஒப்பந்தம்தான் எனவே இது தண்ணீருக்கான ஒப்பந்தம் இல்லை எனவே தண்ணீரைத் திருப்பி வேறு வழியாக அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை - என்று வாதிட்டது. இன்னமும் 'நாங்கள் தண்ணீர் தருவோம்' என்பதை எப்படி ஐயா நம்புவது ...

விஷயத்திற்கு வருவோம் - கூடங்குளத்தில் அச்சம் என்றவுடன் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசின் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அரசு என் முல்லைப் பெரியாறு விஷயத்தில் அமைதி காக்கிறது. 
எத்தனை ஆண்டுகளாக நீதி மன்ற முடிவைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் அச்சம் தவறு ஆனால் கேரள மக்களின் பொய்யான அச்சம் சரியா? 
இத்தனைக்கும் அணை உடைந்தாலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இடுக்கி அணை தாங்கக் கூடிய வலு இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. 
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறில் கட்டிய இடுக்கி அணையும் வலுவிழந்து விட்டதா? ஏனெனில் கேரள அரசு மக்களின் பீதியைக் கிளப்புகிரமாதிரி வெளியிட்ட ஒரு கானொளியில் முல்லைப் பெரியாறு அணை முப்பது ஆண்டுகளுக்காக மட்டுமே கட்டப் பட்டது என்கிற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்கிறார்கள். அப்புறம் எதுக்கு 999 ஒப்பந்தம்.? 
சரி சரி - இடுக்கி அணை எப்போது வலுவிழக்கும்? உங்க பொய்யை மெய்ண்டைன் பண்ண வேண்டாமா - சொல்லுங்க.

சரி விடுங்க - இதே கேரள அரசு அச்சத்தினால் தானே கூடங்குலப் ப்ராஜக்டை வேண்டாம் என்றது. உடனே அரசு கேட்டது. இப்போ இதுவும் வேண்டாம் என்கிறார்கள். மத்திய அரசு உடனே தீர்ப்பு வழங்கா விட்டாலும் நிச்சயம் அமைதி காக்கும். தமிழ் மக்கள் அச்சம் என்றால் அது சரியல்ல என்றால் என்ன சொல்லுவது?

இதே கேள்வியை தமிழ் நண்பர்களே, அல்லது தமிழக வாழ் கேரள நண்பர்களே - பலரிடம் "என்னமோ கூடங்குளம் அச்சம் அச்சம் என்கிறீர்கள்" இதே அச்சம் கேரள மக்களுக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்?

இந்தக் கேள்வியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும்... அது ஏன் ஒரு அரசுக்கு வெண்ணையும் மற்றொரு அரசுக்கு சுண்ணாம்பும் தொடர்ந்து கொடுக்கிறது என்று...!


ஒரு ஊழியனின் குரல் - முரண்பாடுகள்

5.12.11

அந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்


கொசுறு ஒன்று 
கடந்த பதிவு சில கேள்விகளைத் தருவித்திருக்கிறது. அந்தப் பதிவு பொருளாதார விளக்கங்களை கொண்டிருக்கவில்லை, சிறு வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்வது சரியா? சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டினால்தான் ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி உருகிறதா என்ற கேள்விகள். அதற்கு பின்னூட்டத்தில் எழுதிய பதிலை இப்போது பதிவாக வெளியிடுகிறேன். பின்னூட்டத்தில் படித்தவர்கள் வேறு வலைப் பூவிற்குச் சென்று விடலாம்.
கருத்து
  • கடந்த பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
  • மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை. ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதோ என் கருத்து அல்ல. பல மாற்றுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே சொல்கிற செய்தி.
  • ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
  • நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் போய் விட்டோம். எது நல்ல உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
  • இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட.
  • முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
  • இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் இருந்தும் நாம் காப்பாற்றப் பட வேண்டியது அவசியமே!
  • சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
  • அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். 
  • டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?
கருத்து விவாதங்கள், பரிமாற்றங்கள் தான் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற என்ற ஒன்றை, புதிய யுத்தியை கண்டு பிடிக்கவும் கையாளவும் செய்யும். இல்லையெனில், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிற அந்த ஒரே வழி என்று மேலை நாடுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதைத் தான் பின்பற்றிக் கொண்டிருப்போம்.

கொசுறு இரண்டு 
பல கேள்விகளை கடந்த பதிவில் விதைத்த வௌவால் அவர்களுக்கு நன்றி. அதனாலேயே இந்தப் பதிவு. வருத்தம் என்னவென்றால் அவர் கேட்டது போல பொருளாதார விளக்கங்களை நான் கூற வில்லை; அது இந்தப் பார்வைக்கு தேவையற்றது என்கிற எனது [தவறான !] எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
கொசுறு மூன்று
நேரம் கிடைக்குமெனில் அந்நிய முதலீட்டில் உள்ள நன்மைகளையும் பற்றி எழுதலாம். பரந்து பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். ஆனால் அதை நண்பர்கள் பலர் செய்கிறார்கள்.
வௌவாலின் பதிவு
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

ரேவேரியின் பதிவு
அழியப் போகும் சிறு வணிகர்கள் 

ஜீவானின் கேள்வி
இது சரியா 



 

2.12.11

சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?

ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.


நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.
Posted by Picasa

28.11.11

அது என்ன 999 ?


டேம் பற்றிய படம் - பற்றிய தடை சரியில்லை என்று சொன்ன போது, கேரளா உள் குத்தோடும், நடக்கிறது என்று எழுதியதற்கு - புது அணை கட்டுவதில் தப்பென்ன என்று கேட்டார்கள்.

அதற்கு முன்பு - இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை பற்றிய படம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த 999 என்பது சில உள் குத்தோடு எடுக்கப்பட்டது என்று சொன்னோம். இந்த எண் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்த வருடங்களைக் குறிக்கிற எண்.

சின்ன விளக்கம் - நீங்கள் யாரிடமோ அல்லது உங்களிடம் யாரோ சில ஆண்டுக்கான ஒப்பந்தத்தை போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட காலம் முடியும் முன்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதென்றால், சட்டச் சிக்கல்கள் வரும். அல்லது நீங்கள் போட்ட ஒப்பந்தத்தை நீங்களே முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதற்காக நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஏறக்குறைய இன்னும் எண்ணூறு ஆண்டுகளாவது கேரளா அரசு காத்திருக்க வேண்டும். அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் கூடாது அதே சமயம் ஒப்பந்தத்தையும் முறிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.... அணை வலு இழந்து விட்டது.... மக்கள் பீதி... என்கிற ஒன்றில்தான் அதைச் சாதிக்க முடியும். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

வரலாற்றில் சில பிழைகள், மிகப் பெரிய சிக்கல்களாக எதிர் காலச் சந்ததியினருக்கு மாறிப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. அதாவது இப்போது அணை கட்டப் பட்டிருக்கிற இடம் திருவாங்குருக்குச் சொந்தமானது என்று நினைத்து தவறாக நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில், வருடா வருடம் ஒப்பந்தப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறது கேரளா. இதை மீறும் வகையில் இடுக்கியில் ஒரு அணை வேறு கட்டியது. அதற்கான நீர் வரத்து இல்லாத காரணத்தால் இந்த புளுகைக் கிளப்பி விடுகிறது.

வீணாய்க் கடலில் கலக்கும் ஆற்றை தமிழகம் பகுதியில் திருப்பிவிட ஒரு அணை கட்டப்படவும், அதற்கு சரியான இடம் தேடும் பணியில் இப்போது அணை கட்டப்பட்டிருக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஒப்பந்தப் பணம் கட்டி... அணையைப் பராமரித்து வரும் தமிழகம் ... இடையில் இவர்கள் சொன்ன புளுகிற்காக மேலும் பனிரெண்டு கோடிகளுக்கு மேல் செலவழித்தது. இறுதியாக முடியவேண்டிய ஒரு வேலையை செய்ய விடாமல் கேரள காட்டு அதிகாரிகள் - தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் பாரஸ்ட் ஆபிசர்ஸ் - வழக்கு போட்டு சிலரை மானபங்கப் படுத்தவும் செய்ததார்கள். இந்த ஒப்பந்தம் மற்றும் அணையை ஒன்றுமில்லாமல் செய்தால்தான் அவர்களுக்கு இடுக்கியிலோ அல்லது அவர்கள் புதிதாய்க் கட்டும் அனையிலிருந்தோ மின்சார உற்பத்தியைத் தொடங்க முடியும். இதைத் தான் நான் சகுனி வேலை என்று கடந்த பதிவில் குறிப்பிட்டேன்.

இப்படித் தவாறாக திருவாங்கூர் சமஸ்தானத்த்திற்கு சொந்தமான பகுதி என்று நினைத்ததுப் போடப் பட்ட ஒப்பந்த்தம் அதன் பிழையில்தான் அதிகமாக தமிழர்கள் வசித்த அந்தப் பகுதிகள் எல்லாம் சுதந்திரம் பெற்ற போது கேரளாவிற்குச் சென்றது. அந்த ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்வார்களேயானால், அந்தப் பகுதிகள் எல்லாம் பிறகு தமிழர்களின் பகுதி என்றாகிவிடும். எனவே ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்ல முடியாது. அதனால் ஒரே வழி இந்த ஆணை வலுவிழந்தது என்று சொல்வதுதான் அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

உண்மை நிலவரம் அறிய - மற்றும் முழு வரலாற்றை அறிய பின்வரும் கானொளியில் பாருங்கள்.
இதை அறியத்தந்த நண்பர் பூபதி பெருமாள் [கடந்த பதிவில் பின்னூட்டத்தில்] மற்றும் வீரா இளவரசு அவர்களுக்கு நன்றி.



The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.

கொசுறு

கூடங்குளம் வெடித்தால் என்ன ஆகும் என்று யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும். 
ஏனெனில் உண்மை பேசும் டாகுமெண்டரி மற்றும் போராட்டங்களை விட இப்படி சென்சேஷனல் படங்கள்தான் விளைவை ஏற்படுத்துகின்றது.... ஒருவேளை அப்படி கூடங்குளம் பற்றி எடுத்தால்
ஹாலிவுட் கனக்ஷன் இருந்தால் நல்லது. 
ஆனால் அதற்கு கேரளா உதவி செய்யுமா?

25.11.11

அணை பற்றிய படத்திற்கான தடை சரியா?

உடையும் அணை பற்றி ஊரே பற்றி எரிகிற மாதிரி விவாதம். கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்கள். தமிழக முதல்வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி தடை செய்திருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கான எதிர்வினை ஆற்ற வேண்டியது அல்லது எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்தான் - ஆனால் தடை செய்து எதிர்ப்பைக் காட்டுவது சரியானது அல்ல என்பதனால் மட்டுமல்ல - இந்தத் தடையோடு நம் அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாரைப் பற்றி மறந்து போவார்களே என்பதனாலும்தான்.

*     *      *      *      *      *      *     *     *     *    *     *     *

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் என்பது பற்றி விரிவாக எழுத தனிப் பதிவோ அல்லது தொடர் பதிவோ அவசியம் என்பதனால் இதில் அதைப் பற்றி எதுவும் எழுதப் போவது இல்லைஅது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சுய நல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பலப் பல வழிகளில் முயல்கிறது முயலும் என்பதையும் யாம் அறிவோம்.
அது ஒருக்காலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனித்தது இல்லை என்பதோடு அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி எல்லாம் அது சிந்தித்ததும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
  
   *     *     *     *     *     *     *      *     *     *    *     *     *

இந்தத் திரைப் படம் உள் நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலும், அல்லது கேரள அரசு ஆசிரோடே இந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தாலும், இந்த ராய் தனது கடின உழைப்பினால் மட்டுமே ஹாலிவுட் வரை சென்று வார்னர் சகோதரர்களைப் பார்த்து தயாரித்தார்  என்பது பொய்யாகவே இருந்தாலும் - டேம் 999  தடை செய்வது தவறு மற்றும் நியாயமற்றது என்று தோன்றுகிறது. ஏன்? ஒரு திரைப் படம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விதத்தில் மட்டும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் என்பதில் இந்தத் தடை நியாயமற்றது.
டா வின்சி கோட் என்கிற ஒரு படம் வந்தபோது கிறித்தவ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். சில சிறப்புக் காட்சிகள் வெளியிட்டு பார்த்தார்கள் - என்ன நடந்தது அந்தப் படமும் அந்தப் புத்தகமும் இன்னும் பிரபலமானது. இந்தப் படத்திற்கான இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா?

டேம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது [என்ன நம்பர் அது - இதற்குப் பின்னால்தான் கேரள அரசின் மற்றும் இயக்குனரின் சகுனித்தனம் ஒளிந்திருக்கிறது] என்ற படம் ஏதோ ஒரு ராயால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வார்னர் சகோதரர்கள் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் தரம் என்று சொல்லப் படுகிறது.

கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட - அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா... தடை என்பதை விட்டுவிட்டு -- அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமல்லவா...

பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தடை கோருகிறார்கள்.? இந்தப் பிரச்சனையைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். எனவே தடை செய் என்கிறார்கள். இதையே கேரள முதல்வர் கிராபிக்ஸ் செய்து தனது வலைப் பக்கத்தில் போட்டபோது தமிழக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் செயல்பாடு எப்படி இருந்தது? வை.கோ வைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசினார்களா - என்ன செய்ய முடிந்தது. தங்களது எண்ணத்தை, நிறைவேற்ற பரவலாக்க, இன்னும் பரவலாக்கவும், ஒட்டு மொத்த கேரளாவும் - கட்சி வேறுபாடு இன்றி - முடிவு செய்கிறார்கள்.

தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்தி விட்டால் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் தன் பங்கிற்கான கடமை முடிந்து விட்டது என்று சொல்லி மீண்டும் இந்த விஷயத்தை நீதி மன்றத்தின் பார்வைக்கு விடலாம். நாம் அமைதியாய் இருப்போம். அப்புறம் அவர்கள் நீதி மன்றத்தின் கருத்துக்களை சட்டை செய்யாமல் வேறு ஏதாவது செய்வார்கள்... அப்போதெல்லாம் நாம் கட்சி சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம்.

எது எப்படி இருந்தாலும் வெறும் கோஷங்கள் போடுவதால், அல்லது தடை செய்வதுதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு அப்புறம் அந்தத் தீர்மானங்களை குப்பையில் போடுவதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்கிற [பேருக்காவது] அளவிலாவது நாம் இருக்க வேண்டியது அவசியம். அவரால் ஒன்றை மிக்ஸ் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் கேரளா பற்றி ஏதாவது மிக்ஸ் செய்ய ஹாலிவுட்டுக்கு ஆள் அனுப்புங்கள் - அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்... நமக்குள் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது...

கேரளா சகோதரர்கள் எங்கே இருந்தாலும் கேரள அரசின் மற்றும் தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தும் விதத்தைக் நாம் கற்றுக் கொண்டாலே போதும் - இங்கே தமிழர் நலனை அழிப்பதற்கென்றே தமிழக அரசும். மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது - இதில் இந்த DAMN dam 999  அதைவிடப் பெரியதாய் என்ன செய்து விடப் போகிறது?


கொசுறு? 1 
கேட்பாரா நாராயணசாமி?
யார் இந்த ராய் - ஹாலிவுட்டில் படம் எடுக்கும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்? கேரளா அரசின் உதவியில்லாமல் இப்படிப் படம் எடுக்க முடியுமா?  கணக்கு வழக்கு வைத்திருக்கிறாயா என்று அவரிடம் நாராயணசாமி கேட்பாரா? .... கேட்டாத் தெரியும் எல்லா நாயரும் சேர்ந்தே அடிப்பாங்க.

கொசுறு 2 
படிப்பினை - பிளவை ஏற்படுத்துமா?
எத்தனைக் கேரளா சகோதரர்கள் தமிழ் நாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து தமிழர்களின் உணர்வுகளோடு இருக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும், தங்களது பூர்விக சொத்தும், மனதும் எப்போதும் கேரளா விடம் மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், என்றைக்காவது இங்கேயே வாழும் அந்தச் சகோதரர்கள் தமிழர் நலுனுக்காக குரல் கொடுத்தது உண்டா... இந்தியப் பிரஜை என்பதற்காக அல்ல, நாம் இங்கேதானே வசிக்கிறோம் அந்த நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் என்பதற்காக அல்ல, குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது.... ஏற்கனவே அவர்கள் பிளந்துதானே இருக்கிறார்கள் அப்புறம் என்ன பெரிதாய் இந்தப் படம் வந்து பிளவை ஏற்படுத்தப் போகிறது. அப்புறம் எதுக்குப் பயப்படனும்?

கொசுறு 3 
அதுமட்டுமல்ல இந்த நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிற பாட புத்தகங்கள் இன்னும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் என்னத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப் படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் --- இன்ன பிற இத்யாதி இத்தியாதிகளை எல்லாம் தடை செய்ய வேண்டியிருக்கிறது.   
தினமலரும்தான் பிரிவினை மற்றும் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் தினம் செய்தியை வெளியிடுகிறது - அண்மையில் கூட ஒரு மரண தண்டனை கொடுக்கப்பட்டதற்காக தமிழ் ஆர்வலர்கள் கேரளா அரசுக்கு எதிராக எழ வேண்டாமா என்று கேட்டது.....அதற்காக யாராவது அதைத் தடை செய்ய வேண்டுமெண்டு குரல் கொடுக்கிறார்களா என்ன...?


21.11.11

நேர்மை + எளிமை = கலாம் ! ?


நேர்மை + எளிமை = கலாம் ! ?        
                           -    அ. பிரபாகரன் 
அப்துல் கலாம் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. உங்களில் சிலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. எனக்கு எப்போதுமே மனிதர்கள் அதீதமாக சிலாகிக்கப்படுவதில் உடன்பாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எனக்கென்று பிடித்த தலைவர் என்றோ, நடிகர் என்றோ, கட்சி என்றோ யாரும் இல்லை. எல்லா மனிதர்களுமே குறைகளோடும் நிறைகளோடும் வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் தம் குறைகளை நேர்மையான விதத்தில் அணுகுவதாலேயே உயர்ந்து நிற்கின்றார்கள்

அப்துல் கலாம் சில மாதங்களுக்கு முன் எம் கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்தார். அவர் வருகை குறித்து எங்கள் நிறுவனம் மிகவும் பரபரப்பாயிருந்தது. பல முன்னேற்பாடுகள் நடந்தன. அவர் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே அவரது பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வந்து பார்த்து சென்றார்கள். அவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பிருந்தே மெட்டல் டிடெக்டர்களோடும், பயமுறுத்தும் மோப்ப நாயோடும் வந்து நின்று எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தனர். அவர் உரை நிகழ்த்தப்பட்ட அரங்கின் வாயிலில் தற்காலிக சோதனை வாயில்கள் அமைத்து, உடல் முழுவதையும் தடவிப் பார்த்து அனுப்பினர். முழுவதும் நிரம்பியிருந்த அரங்கத்தில் அங்கு பயிற்றுவிக்கும் எங்கள் எல்லோருக்கும் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் பரபரப்பும், நிறைய அலட்சியமுமாக அமர்ந்திருந்தேன். குறித்த நேரத்திற்கு கொஞ்சமும் தவறாமல் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வந்தார். மேடையில் ஏறியவுடனேயே தனக்கென்று தனியாகப் போடப்பட்டிருந்த வி. . பி. நாற்காலியை கோபத்துடன் பார்த்து அதை அப்புறப்படுத்தச் சொன்னார். மேடையில் மற்றவர்களுக்குப் போடப்பட்டிருந்த சாதாரண நாற்காலி கொண்டுவரப்பட்டது. எல்லோரும் அதிசயித்தார்கள் 'எவ்வளவு எளிமையாய் இருக்கிறார்' என்று. எனக்கு இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படிப்பட்ட gimmick களை வியப்போடு பார்ப்பதில்லை
காரணம், சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும்
 காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.

கலாமின் ஆளுமை குறித்து ஏதோ ஒரு விதத்தில் விமர்சன மனநிலையோடு உட்கார்ந்திருந்த என்னை அவரது பேச்சு ஈர்த்தது. அன்று அவர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிப் பேசினார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்த்தப்பட்ட உரையில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாட்டோடு கவனித்த உரைகளில் ஒன்றாக அது அமைந்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புலப்பட்டது.

அவரது உரையின் ஈர்ப்புக்குக் காரணம் அதில் அடிப்படையான நேர்மை இருந்தது. வெறுமனே கோசங்களாக அமையாமல் அவரது நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருந்தது. பலருக்கும் அவரது உரை பிடித்திருந்தாலும் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது இப்போதும் வியப்புதான். பிறகு விழா இறுதியில் அவரோடு குழுவாக புகைப்படம் எடுக்க அவரருகில் வந்தபோது புன்னகைத்தார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த கலாம் கடந்த வாரம் கூடங்குளம் சென்று அதே போன்ற ஓர் உரையைப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்திருக்கிறார். அதற்கு கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
கூடங்குளம் பற்றி நான் பேசப்போவதில்லை. அதுகுறித்த உள் விவகாரங்களில் நான் சென்று விவாதிக்கிற அளவுக்கு எனக்கு விபரமில்லை. அதை மக்கள் மேல் உண்மையிலேயே அக்கறையுள்ள நிபுணர்களுக்கு விட்டுவிடுவோம். இப்போது நான் சொல்ல வந்தது கலாமின் கருத்து பற்றி
 கலாம் சொன்ன கருத்துகளில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் ஏனென்று (16 . 11 11 ) தினமணியில் வந்திருந்த நெடுமாறனின் கடிதத்தையும், கடந்த வாரம் கல்கியில் வந்திருந்த ஞாநியின் கடிதத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் கலாமின் இந்தப் பேட்டியிலும்கூட ஒரு நேர்மை இருப்பதாக உணர்கிறேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கருத்து உள்ளவர்கள்தான். ஆனால் சொல்ல மாட்டார்கள். கலாம் நேர்மையாகத் தன கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரைச்சொல்லவைத்தவர்கள் நேர்மையில்லாதவர்கள். அடிப்படையில் நாணயமோ மக்கள் கரிசனையோ இல்லாதவர்கள். தாங்கள் சொல்லும் ஒரு கருத்தை இப்படி அடிப்படை நாணயமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான பிம்பங்களைக்கொண்டு சொல்ல வைப்பது ஜனநாயகத்தில் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். கலாம் போன்ற பிம்பங்கள் இதற்குதான் பயன் படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி (அவரது முகத்தை தொலைக்காட்சியில் பாரத்தால் ........................  என்னால் தவிர்க்க முடியவில்லை) காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். கொஞ்சம்கூட நேர்மையற்றதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது அவரது பேட்டி. இந்திய ஜனநாயகம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைச் சொல்லுவதாக அவரது பேட்டி அமைகிறது. கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் கணக்கு வழக்கை ஆராயவேண்டும் என்கிறார். இப்படிப் பேட்டி கொடுக்கின்ற அந்த நொடியில் அவரது கணக்கு வழக்கை ஆராய்ந்தால் ஒரு அரசியல்வாதியான அவரிடம் எவ்வளவு பொய்கள் இருக்கும்! ஆனால் அதிகாரம் தந்த கொழுப்பிலும் இந்திய ஜனநாயகத்தின் பாரபட்ச அமைப்பிலும் நம்பிக்கைகொண்டு எந்த லஜ்ஜையுமின்றி திராணியோடு பேசுகிறார்.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? எல்லா காங்கிரஸ்காரர்களின் வருமானவரியையும் கொண்டு வாருங்கள். பாப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளத்தின் நியாயம் எளிமையானது.
அது நம் நாட்டின் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது.
இந்தப் பிரச்சினையை நாம் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அணுகவேண்டும்.
அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்க, இதைப் பத்து லட்சம் (சொல்லப் போனால் 17 லட்சம்) மக்களின் ஜனநாயகப் பிரச்சினையாகவும், வாழ்க்கைப் பிரச்சினையாகவும் பார்க்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது எவ்வளவு கொடுமை. இந்தப் பயமெல்லாம் தேவையற்றது என்று அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடும்.ஆனால், பெரும்பான்மையினர் அங்கு அப்படிதானே நினைக்கிறார்கள்.
அவர்களெல்லாம் முட்டாள்கள் அறியாமையினால் சொல்கிறார்கள் என்று நீங்கள் வாதிட்டீர்களேன்றால் அது முடியாது. பெரும்பான்மையினர் குரலை நீங்கள் மதிக்கத்தான் வேண்டும். ஜனநாயகம் என்பதே நம் நாட்டில் பெரும்பான்மை வாதம்தான். இந்தப்பெரும்பான்மையினரின் அறியாமையினால்தானே நாரயணசாமி போன்ற .... களெல்லாம் ஜெயித்து அமைச்சராகி பேட்டி எல்லாம் கொடுக்க முடிகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இலங்கை கொலைப் புகழ் சோனியா, பேடி எல்லாம் அதிகாரத்தை சுவைக்க முடிகிறது. அப்போது மட்டும் பெரும்பான்யினரின் அறியாமை இனிக்கிறது, இப்போது கசக்கிறதா?
பி. கு. இப்படியெல்லாம் நான் சொல்லுவதால் அணு எதிர்ப்புக்கு வலு சேர்க்க வேறு கருத்து இல்லையென்று தவறாகப் புரியாதீர்கள்.
                                         - அ. பிரபாகரன்
அப்துல்கலாமைப் பார்க்கச் சென்ற உங்களைத் தடவிப் பார்த்தார்கள். அமேரிக்கா சென்ற அப்துல்கலாமை அங்கே தடவிப் பார்த்தார்களாம்ல...