9.4.11

அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்

வெற்றி பெற்ற 
அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்.
அரசின் வாக்குறுதி நிறை வேற்றப் படும் என்று நம்புவோம்.

அன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்

அன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான். 

எத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம். 

வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.
எல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை. 

எதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த  விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....
அவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

சிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.


விரிவான கட்டுரைகளுக்கு 
http://truetamilans.blogspot.com/2011/04/40000-1000.html


http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_7097.html


http://smuthukumaran.wordpress.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/

http://tamilnanbargal.com/node/32566

http://www.sangkavi.com/2011/04/blog-post_07.html

http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html



7.4.11

தேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா?

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்று சொல்லும் நாம் - இரு கட்சி தத்துவத்திற்கு ஏன் அதைப் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

நம் நாட்டைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம்தான் அமலில் இருக்கிறது.மாறாகஅமெரிக்காவைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம் என்பது, நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. எனவே இரு கட்சித் திட்டம்தான் நாட்டிற்கும் அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள். வாக்களிப்பது என்பது டெமாக்ராட் அணிக்கு அல்லது ரிபப்ளிக்கன் அணிக்கு. அதற்குப் பிறகு வேறு கட்சிகள் இல்லை [அப்படியே இருந்தாலும் இவைகள் எதையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும்].
அதாவது, கட்சிகள் வலது, இடது என்கிற நிலையில்கவனிக்கப் படும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, எத்தனைக் கட்சித் திட்டம் இருக்கிறது?

இந்தியாவின் உள் இருப்பதால், இதிலும் பல கட்சித்திட்டம் தான். ஆனால், தமிழகம் ஒரே கட்சித்திட்டத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் என்கிற ஒரே கட்சி, அண்ணாவிற்குப் பிறகு திராவிடக் கட்சி.
பெரியார் தேர்தலில் போட்டியிட விரும்பாததால் அது முன்னேற்றக் கழகமாகியது.  அப்போது மட்டும்தான் காங்கிரசுக்கு மாற்றாக, கொள்கையளவில் ஒரு கட்சி உதயமானது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தேய்ந்து, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியது.
ஏன் தமிழகம் வளராது இருக்கிறது அல்லது இன்னும் உண்மையான வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் அது இந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால்தான் என்றால் அது முற்றிலும் தவறல்ல.
அண்ணாவின் கொள்கை தமிழ் நாடு என்று மாற்றுவதோடு முடிந்து விட்டது. அதற்குப் பின் எல்லாமே வெறும் கொள்கைகளாக மட்டும்தான் அதுவ தேவைப் படும்போது எடுத்து விடும் கோஷங்கள். அவ்வளவே.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அ.தி. மு.க, பின்பு, ம.தி.மு.க. பிறகு கழகத்தோடு எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் தே.மு.தி.க. [சரியா?]. அதாவது எந்த வித கொள்கை வேறுபாடுகளுமின்றி, தனிமனித விரோதமும், பகையும் மட்டுமே முன்னிறுத்தப் பட்டு ஒரே கட்சியின் பல கிளைகள்.

இதுதான் நம்மைப் பொறுத்த வரை பல கட்சிகள். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு பெரியக் கூட்டணிக் கட்சிகளின் கதாநாயகிகளின் [தேர்தல் அறிக்கைங்க] உள்ளடக்கத்தைப் பார்த்தாலே நமக்கு இது புலப்படும்.


  • இதனால் அறிவது என்னவென்றால், தமிழகம் இப்படிக் கேட்டுச் சீரழியக் காரணம் இந்த ஒரு கட்சி ஆட்சி முறையே. அமெரிக்காவில் பலர் இரு கட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். நாம் இங்கே ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. 
  • எது சிறந்தது? பல கட்சியா அல்லது இரு கட்சி ஆட்சி முறையா. திண்ணமாய்த் தெரிந்ததெல்லாம் இதுதான் - மோசமானது ஒரு கட்சி ஆட்சி.


5.4.11

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா?

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா என்கிற கேள்வியை சில பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன?
உண்மையான கோப்பையின்  மதிப்பு ஏறக்குறைய எண்பதாயிரம் பவுண்டுகளாம் [அதாவது 130, 000 டாலர்கள் - அதாவது ஏறக்குறைய 57 லட்சங்கள்]. இதிலெல்லாமா விளையாடுவீங்க.

உண்மையான கோப்பை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதாகவும், வெற்றி பெற்ற போது கொடுக்கப் பட்ட கோப்பை "மாதிரிக் கோப்பை" என்று ஒரு சாரரும் -  இல்லை, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதுதான் மாதிரிக் கோப்பை என ஐ.சி.சி. யும் சொல்கிறது.

உள்ளேயே இருப்பது உண்மையான கோப்பை என்றால் மாதிரிக் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை இது இலங்கையில் வைக்கப்பட்டது அங்கிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை விளையாடும் போது இந்தக் கோப்பையைக் காண்பித்து, "this is what they are playing for" என்று வர்ணனையாளர்கள் சொல்லுவதைக் கேட்டோமே அதெல்லாம் அண்டப் புழுகா?

ஒரு கோப்பையைக் கொடுக்கிற போது எதற்கப்பா மாதிரிக் கோப்பை.
தமிழக சட்டப் பேரவைக் கட்டிடம் திறப்பு விழாவில், கோபுரம்தான் தோட்டா தரணியை வைத்து சில கோடிகளுக்கு செட் போட்டார்கள் - உலகக் கோப்பையிலுமா? தோனி - நீ தூக்கிக் காட்டுவது போலிக் கோப்பையா?

கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரு கேள்வி
கோப்பையை உள்ளே அனுமதிக்க "இறுதிப் போட்டியை காண சில டிக்கெட்டுகள் கேட்டதாகவும் - அதைக் கொடுக்க முடியாமல் கோப்பையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் - அங்கிருந்து துபாய் எடுத்துச் சென்று விடுகிறோம் என்றார்களாம். என்னய்யா இது. ஒரு நாட்டின் வருமானத்தைப் பார்க்காமல், வெறும் டிக்கெட்டுக்காக விலைபேசும் அதிகாரிகள் இருக்கிற வரை, எப்படி நாடு முன்னேறும்? 

சரி ஐ. சி. சிக்கு ஒரு கேள்வி - 
முதலிலேயே உண்மையான கோப்பை நாட்டுக்குள் வந்து விட்டது என்றால் - எப்போது வந்தது - அதற்கான வரியைக் கட்டிதான் உள்ளே கொண்டு வந்தீர்களா? அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாய் இதுதான் உண்மையான கோப்பை என்று நாங்கள் உரசிப் பார்த்தும் சொல்ல முடியாது. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற போதும் போலிக் கோப்பையா நம் கைக்குக் கிடைக்க வேண்டும்?

எதுவாய் இருந்தால் நமக்கென்ன? வாருங்கள் ஐ. பி. எல். லிற்கு நேரமாகி விட்டது. அந்த பிசினசிலும் பங்கெடுப்போம்? 

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருந்து கொண்டேதான் இருப்பர்.

தொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சுட்டவும்.



2.4.11

கிரிக்கெட்டும் GLADIATOR -ம்

கிரிக்கெட் -
  • இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல்  தொழில் - சினிமா]  உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது. 
  • மொஹாலி - போர் 
  • இந்தியப் பாகிஸ்தான்  கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.
  • இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.
  • அன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
  •  அரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு  செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள். 
  • அப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்?
  • முதலாவது இது ஒரு போர். 
    • இரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து கொள்வார்கள். 
    • இந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.
  • இரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான். 
    • நடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார். 
    • அதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள். 
  • மூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம். 
    • discovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம். 
    • இருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீரனின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது. 
    • போர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன?   
    • நமது பழி வாங்கும் எண்ணம்,  violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.
    • நான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]
  • போரின் அடுத்த நிலை -
    • பணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.
    • பாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், "No body would mind even if somebody does not turn to office today - it is such an important match." அறிவிக்கப்படாத விடுமுறை. 
    • அனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.?
  • ஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்
    • கிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசிகன் எப்போதும் சாதாரண ரசிகன்தான். 
    • சிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.
    • "There are only two religions in India: Cricket and Cinema" ஒரு ரசிகை போர்டு ஒன்று பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, "There is only one language - that is business."

  • இதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE
  • இதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள் 
    • வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம். 
  • இதனால் சொல்லப்படும் செய்தி 
    • இறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா?
  • இன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -]  யார் வெற்றி பெறுவார்?
    • இதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.

Comman Man - என்பது என்ன?

தடங்கலுக்கு வருந்துகிறேன்... 
கடந்த பதிவில் இக்கட்டுரையின் எழுத்துரு பிரச்சனையால் பலர் படிக்க முடியவில்லை. அந்நிய மொழியில் இருந்தது.  பிரபாகரன் அனுப்பிய கட்டுரையை அப்படியே இணைத்ததால் வந்தது. இப்போது அதை மீண்டும் எழுத்துரு மாற்றி ஒரே கட்டுரையாகத் தருகிறேன்.

பொது மக்களாய் இருங்கள்
சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள். 

அ. பிரபாகரன்

1.4.11

தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 2

அ. பிரபாகரன் கட்டுரையின் இரண்டாம் பகுதி.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள்.
                                                அ. பிரபாகரன்

பொதுமக்களாய் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை!


தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1

இது என் நண்பர்  அ. பிரபாகரன் எழுதிய கட்டுரை. அதன் முதற் பகுதி. 


பொது மக்களாய் இருங்கள் 

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

தொடரும்....