15.1.15

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அன்பு வலைப் பதிவாளர்களே, வாசிப்பாளர்களே,

வலைப்பக்கம் வந்து ஒரு சில மாதங்களாகி விட்டன. ஒவ்வொரு நாளும் பல் விளக்கும் போது எழுதுவதற்கு விஷயங்களை யோசிப்பதுண்டு. ஆனால் நேரமின்மை காரணமாக எழுத முடியாமல் போன பல விஷயங்கள் மனதுக்குள்ளே புதைந்து பொய் விட்டன. அவைகளைத் தோண்டி எடுத்து மீண்டும் பதிப்பிப்பது காலம் கடந்த செயலாகவே இருக்கும்.

ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அமைதி காப்பது. தமிழர் திருநாளும் வந்தாயிற்று. பாரதப் பிரதமர் மோடி அவர்களே தமிழில் பொங்கல் வாழ்த்தை டிவிட்டரில் எழுதிய பிறகு நான் எழுதாமல் போனால் நன்றாக இருக்காதே என்பது மட்டுமல்ல, எழுதுவதே நம்மை விட்டுப் போய் விடும் என்பதனால் உடனே எழுத வந்துவிட்டேன்.

வேறெதுவும் எழுதாவிட்டாலும் வாழ்த்துக்களை மட்டும் பகிர வந்திருக்கிறேன்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
பொங்கல் வாழ்த்துக்கள் ...

வயல் வெளிகள் எல்லாம் வயல் வெளிகளாகவும் மட்டுமே எந்நாளும் இருக்கும் என்று நம்புகிறேன்.

 பொங்கல் கொண்டாட விளைச்சல் அரிசி தாராளமாய் கிடைக்க விளைகிறேன்.

விளை நிலங்கள் விலை நிலங்களாக இல்லாத வரை
பொங்கல் நிச்சயமாய் நடக்கும்.