வெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.10.16

தீபாவளி வாழ்த்துகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
செலவு செய்யுங்கள் - கொஞ்சம் அளவோடு செய்யுங்கள்.
கடன் வாங்கி செலவு செய்வது நமக்கு உகந்தது அல்ல.
வெடிக்காமல் கொண்டாடுங்கள்.
புகை நமக்குத் பகை.


தீபாவளி கொண்டாடாத நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒளியின் விழாவாய் கொண்டாடுங்கள்.
இருளை அகற்ற உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.

தீபாவளியை எதிர்க்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஏன் தீபாவளி நமது இனத்திற்கு எதிரான விழா என்பதைக் குறித்து
இன்னும் அதிகமாய் வெளிக்கொணர வாழ்த்துக்கள்.
எது இருள்,  அசுரர் என்பதை பற்றிய புரிதல் உண்ணும் அதிகள் தேவை.
கொண்டாடும் நண்பர்களை சிந்திக்கும் நண்பர்களாகவும் மாற்ற வேண்டுமல்லவா?

வாழ்த்துக்கள்..





21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

29.12.11

ஜெயா கேட்டவை -- "சோவா அ மோடியா "


முன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”
விரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.
சரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்?

தமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே. 
அதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.
மயக்கமா தயக்கமா....

முதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்



யார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...
வேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.
எனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....

என்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும். 
அதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.

இப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா?
சரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..?

சில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி  கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...
அட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...

ஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...

யாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் - 
தமிழரையா தமிழக முதல்வரையா?

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க

சில கேள்விகள் அம்மாவிடம் ...

மயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...
உண்மையிலேயே மயக்கம் தெளிந்ததா?
இன்னும் எத்தனை நாளைக்கு..


இப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதையும் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...  

நாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க... 

 

26.10.11

தீப விழா


நண்பர்களே தீப விழா வந்துவிட்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்... குழந்தைகள் முதற்கொண்டு பெரியோர் வரை...
தீப விழா வாழ்த்துக்கள்...

நல்லாக் குளிப்போம் - எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடம்புக்கு நல்லது...
கந்தலானாலும் கசக்கிக் கட்டுவோம் - ஆனால் அப்படிப் பட்டவர்கள் யாரும் வலைப் பக்கம் வருவதில்லை என்பதனால்
கசக்கிக் கட்டும் யாருக்காவது ஒரு புதிய உடை பரிசளிப்போம்.
நன்றாய் உணவருந்தி - அருகில் இருப்போரோடு பகிர்ந்துன்னுவோம்.

இருக்கிற விலை வாசியில்

யாரும் பட்டாசு கொழுத்தி காசை கரியாக்க வேண்டாம்.

அந்தக் கரியால் சூழலை மாசு படுத்த வேண்டாம்.

[சிவகாசி மக்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது]

அது மட்டுமல்ல வெடி வெடிக்கிற ஆசைதான் நம்மை அணு வெடி, அணு குண்டு வரை விட்டிருக்கிறது.  இப்போ அணு உலை வெடி பார்ப்பது வரை நம்மை வளர்த்து விட்டிருக்கிறது.

தீப விழாவில் மின்சார விளக்குகளை அனைத்து விட்டு [அப்படியே தொல்லைக் காட்சியையும் சேர்த்து] எண்ணெய் விளக்குகள் ஏற்றி, அந்தத் தீப ஒளி வெள்ளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் இடுங்கள்.

அனைவருக்கும் தீப விழா வாழ்த்துக்கள்.