16.11.15

மழையில் மாடு மூழ்கியது

மாட்டு அரசியல் என்பதை என்னோடு பணிபுரிந்தவர் பி. பி (Beef Politics - B.P) என்று சுருக்கமாய்ச் சொன்னார். பி.பி எகிர்றது நல்லது இல்லை. அது உடம்புக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும்தான்.

தொடர்ந்து வந்த விவாத மேடைகளில் அந்த மாடுகள் மூழ்கியதாவே தெரிகிறது. வெள்ளம் வடிந்தவுடன் மாடுகள் மீண்டும் வெளிவரலாம்.

மார்ச் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். ஒரு குழுக்கள் கட்டைகளோடும் கத்திகளோடும் சுற்றுகிறது. காவலர்கள் அவர்களுக்குத் துணி நிற்கிறார்கள். மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் கட்டிப் போட்ட உதைக்கப் படுகிறார். லாரி தீ வைக்கப் படுகிறது. அவைகளைச் செய்த நபர்கள் தங்கள் முகம் தெரியும் படி அந்த வீடியோவைப் பதவு செய்து சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

வீடியோவிற்கு இங்கே சொடுக்கவும்

கடந்த மாதம் ஒரு ஒட்டுனரைக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

வீடியோ
அரசாங்கம் அமைத்யாய் இருக்கிறது. உலகம் முழுவதும் போய் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் நமது பிரதமர். 
கோமாதாவின் காவலர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பச்சோந்திக் குரல் எழுப்புகிறது. போலிஸ் எதற்கு? சட்டங்கள் எதற்கு? 
சட்டங்களை ஒரு குழு ஆயுதங்களோடு நிலைநாட்ட வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கிறது என்றால் அரசின் வேலை என்ன? 

இந்தத் தருணத்தில்தான் நம் பிரதமர் (இன்றைய செய்தித்தாளின் செய்திப் படி) தீவரவாதத்தை உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனது நாட்டில் இப்படி நடக்கும் தீவிர வாதத்தை தன்னால் ஒடுக்க முடியவில்லை என்பதனால்தான் உலக நாடுகள் அதை எதிர்க்க வேண்டும் / ஒடுக்க வேண்டும் என்று பெசியதாகவே எண்ணத்த தோன்றுகிறது.


10.11.15

தீபாவலியா - தீபாவளியா - தீப/ஒளியா ?

படித்தேன் ரசித்தேன்

"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.



- தீபாவலி இதுதான்

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............


இது  தீபா - வளி

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு  மிகப் பெரிய ஒளி

))))))))))))))))))))))))))))