சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.11.16

ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. சுட்டது

இதை வாட்ஸ் ஆப்பில் படித்தேன். ரசித்தேன். எனவே அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன் - அப்பு 

ஏ டி எம் இலக்கிய க்ளாசிக் வரிசை.
( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)
-@-

குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.
வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போகிறேன்.
“எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும்.” இதுதான் அவரின் கட்டளை.

அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச் சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.

தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.

ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர் 12-ஆம் வகுப்பு மாணவர்கள்.

இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும்  குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது.

ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.

ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது.

என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.
அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.

குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான, தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,

If you don't know anything, create a problem and don't solve it..
என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.
குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?
சுபம்.


5.10.16

வெற்றிலைப் பாட்டியும் நானும்

எங்க ஊர்ல ஒரு பெரிய பங்களா. ஆனா அந்தப் பங்களாவுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பாட்டி அங்க இருக்கும். அதுல தங்கி இருக்குற ஆள் பயங்கரமான ஆளு. பாக்குறதுக்கு பயமாவெல்லாம் இருக்காது. அட்டகத்தி மாதிரிதான். ஆனா அவரைப் பத்தி அப்படி ஒரு பில்ட் அப். பல பேரை ஏமாத்திதான் அந்த இடத்தை வாங்கினதாவும். பாட்டிய நம்பி கடன் கொடுத்தவனை எல்லாம் ‘போட்டுட்டு’ அந்த இடத்தையே வாங்கினதாவும் பேச்சு இருக்கும். பாட்டியும் பேசியே கடன் வாங்கிரும். அது பேசுனா அப்புடிப் பேசும். நம்புற மாதிரி வேற பேசுமா. உங்ககிட்ட நீங்க ரெண்டு நிமிஷம் பேச விட்டா நீங்களே கடன் குடுப்பீங்க.

அந்தப் பங்களாவுக்கு காம்பவுண்டு எல்லாம் கிடையாது. இப்ப அந்தப் பாட்டிக்கு வயசு ஆயிடுச்சு. அது நடக்கிறதே அபூர்வம். அது யாருகிட்டயும் பேசுறது எல்லாம் இல்லை. ஜிகிர் தண்டா பாட்டி மாதிரி. அது பாட்டுக்கு வெளில வந்து எப்போதும் உக்காந்து வெற்றிலை இடிச்சுக்கிட்டே இருக்கும். அப்புறம் வெற்றிலையை குதப்பித் துப்பிக்கொண்டே இருக்கும். அதுக்கு அதைத் தவிர வேற வேலையே இல்லை. அந்த இடமே இரத்தக்காடாய் கிடக்கும். அதுவும் அது பையனும்  பண்ணுன பாவத்தின் அடையாளமா அது தெரியும்.

ஆனாலும் அந்தப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். யாரும் அவ்வளவு சீக்கிரம் அந்தப் பாட்டிக்குப் பக்கத்தில போட முடியாது. பாட்டி மேல உள்ள பயம் எல்லாம் இல்லை அவங்க பையனுக்கு பயந்துகிட்டு எவனும் அது பக்கத்துலேயே போறதில்லை. நான் மட்டும் ஸ்கூலுக்குப் போறப்ப தைரியமா கொஞ்சம் ஓரத்தில நின்னு அந்தப் பாட்டியைப் பார்த்து சிரிப்பேன். உள்ளேருந்து ஏதாவது சத்தம் வந்தா ஒரே ஓட்டம். அப்புறம் பக்கத்துல போவேன். அவங்க பயன் வந்தா ஓடுவேன்.

பாட்டிதான், ‘பயப்ப்படுமா நில்லுடா’ என்னைய மீறி அவன் ஒன்னும் பன்ன மாட்டான்னு சொல்லும். பாட்டிக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கும் அப்படின்னு நான் நினைச்சேன். ஏதோ பெத்த கடமைக்கும், அங்கங்க கடன் வாங்கி அவருக்கு பணம் சேர்த்துக் கொடுத்த கடமைக்காக அந்தப் பாட்டிக்கு கஞ்சி ஊத்துறார்னு லேட்டாதான் தெரிஞ்சிச்சு. அதனால என்ன? பாட்டியே சொல்லிருச்சுன்னு நானும் தைரியமா நின்னேன். நிப்பேன். அவரும் முறைச்சாரு. ஒடுறான்னாரு. இரட்டைக்கரைக் காரரு பையன்தானே. நீயெல்லாம் இங்க வரக் கூடாது ஓடுறான்னாரு. அப்புறம் பழகிருச்சு. அப்புறம் ஒன்னும் சொல்றது இல்ல.

ஸ்கூல் இல்லையின்னா அப்புறம் அங்கதான் இருந்தேன். நாளாக நாளாக நமக்கு ஊருக்குள்ளே ஒரே மரியாதை. எவனும் போகத் துணியாத இடத்துக்கு நான் போயிட்டேன். அதுனால அங்க ஏதாவது தப்புக் காரியம் பண்ண ஐயாவைப் பாக்கனும்னா நம்மகிட்டதான் வந்து கேப்பாங்க.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் காலையில போறேன் நைட்டோட நைட்டா காம்பவுண்டு போட்டாங்க. அங்கங்க ஆளுக துப்பாக்கியோட நிக்காணுக. நான் போறேன். விட மாட்டேங்கிறாங்க. எட்டி அந்தப் பாட்டி இருக்குற இடத்தைப் பாக்கேன். அது எம்ப்டியா இருக்கு. ஒன்னும் புரியல. என்ன ஆச்சுன்னு தெரியலை. கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க.

பத்து நாளாச்சு. ஒண்ணுமே தெரியலை. துப்பாக்கிக்காரன் அப்படியே இருக்கான்க. ஊரெல்லாம் ஒரே பேச்சு – கடன் குடுத்த யாரோ வந்து பாட்டிய வெட்டிப் புளந்துட்டான் பேச்சு மூச்சு இல்லாமக் கிடக்குங்கிறான். இன்னொருத்தன் பாட்டியே இருட்டுல வெத்தலைக்குப் பதில ஏதோ பூச்சிய முழுங்கி அது தொண்டையில அடைச்சுக்கிச்சுங்கிறான். நல்லா இருக்கப்பவே நீங்களல்லாம் பங்களாப் பக்கம் வர மாட்டிங்களே உங்களுக்கு இதெல்லாம் யாருடா சொன்னான்னு கேட்கத் தோனுச்சு. உள்ளே போனப்பல்லாம் எத்தனை பேர கெத்தாப் பாத்தேன். இன்னைக்கு அவன் எல்லாம் சிரிக்கான். ஆனா இது இல்லைன்னு சொல்ல எனக்கு ஒன்னும் தெரியலையே. கைவசம் வேற ஆதாரம் இல்லை. எனக்கு வேற ஒரே அவமானமாப் போச்சு.

என் பிரண்டு ஒருத்தனைப் பாக்கப் போனேன் – என்னாடா, நீதான் பாட்டிக்கு ஏதோ குடுத்து அது படுத்த படுக்கையாக் கிடக்காம்னு குண்டைத் தூக்கிப் போட்டான். ஆகா ! இது நல்லதுக்கு இல்லை. என்ன ஆனாலும் இன்னைக்கு எப்படியாவது போயே ஆகணும்னு பங்களா பக்கம் வந்து நின்னேன்.

எப்படியாவது உள்ள போயே ஆகணும்னு விடாப் பிடியாய் கேட்டுலே கிடந்தேன். இருந்தாலும் விடலை. எப்போதும் வெளியே விருட் விருட்டுன்னு போற பாட்டி பையனை வேற காணோம். அழுது கெஞ்சிக் கூத்தாடி கேட்டுகிட்ட போனப்ப பாட்டி பயன் வந்தான். சாப்பிடக் கூப்பிட அந்த நேரம் பாத்து என் ஆத்தா வர, அதைப் பாத்தோன, பாட்டி பையன் டே உள்ள போடா – ன்னார். எங்க ஆத்தா என்னை வஞ்சுட்டுப் போச்சு.

வெளில வேடிக்கை பாத்தவன எல்லாம், கெத்தாப் பாத்துட்டு நான் உள்ளே போனேன். பாட்டி எச்சி துப்புற எடத்துல ரத்தம் காயாம இருக்க மாதிரியே தெரிஞ்சுச்சு. பங்களாவுக்குள்ள போனேன். உள்ள விட்டுட்டு வெளில கேட்டப் பூட்டிட்டான் அந்த மீசைக் காரன்.

உள்ள போய் அந்தப் பாட்டியைப் பாத்த எனக்கு ஒன்னும் புரியலை. மயக்கம் போட்டு விழுந்தேன். யாரும் உதவிக்கு வரலை.

நானும் கதவைத் தட்டிகிட்டே இருக்கேன். மீசைக் காரன் தொறக்குற வழியைக் காணோம். பாட்டியைப் பாத்துட்டு அது என்ன நிலைமையில இருக்குன்னு வெளியில சொல்லனும்னு தோணுது. என்னைய ஏன் அடிச்சு வச்சாங்க? நான் என்ன பண்ணினேன்? எதுவும் புரியலை. இன்னியோட மூணாவது நாள் நான் உள்ள வந்து. நிச்சயம் என் ஆத்தா வந்துட்டுப் போயிருக்கும். இல்லை அங்கேயே கிடக்கும். இப்பப் பாட்டியை நான்தான் நல்ல்லாப்ப் பாத்துகிறேன்னு பேசுவாங்க. என் ஆத்தாதான் பாவம். உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாம கிடக்கும்.

கதவைத் தட்டித் தட்டி கை வீங்கி,. சாகப் போகிறேன் என்கிற நினைவோடு நான் அப்படியே மயங்கி விழுந்திருக்கிறேன்.. ஒன்று மட்டும் புரிந்தது அந்தப் பாட்டியின் பையன் அட்டகத்தியெல்லாம் இல்லை.