தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.5.17

தங்கப்பதக்கம் vs ஒண்டிக்கட்ட

மானஸ்தன் படத்தில் வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடி பார்த்திருப்பீர்கள்… தங்கப்பதக்கம் படத்தைசரத், தங்கப்ப–தக்கம்என்றுவாசிப்பார். 
வடிவேலு அதை மீண்டும் மீண்டும் அது தங்கப்ப~ தக்கம் என்று பிரித்து சொல்லக்கூடாது, மாறாக, தங்கப்பதக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்.




OR

starts at 2: 28



+++++++++++++++++++++++++++++++++++++++++


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புதிதாய் எங்கோ போஸ்டர் பார்த்து விட்டு, one ticket ட்ட, அதாவது, ஒன்– டிக்கட்ட பாக்கணும்னு சொன்னார். எந்த டிக்கட்ட இவன் சொல்றான்னே புரியலை. எந்த டிக்கட்டு அதுன்னு கேட்டேன்.
புதுப் படம் போல... போஸ்டர் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பாக்கனும்னு சொன்னான்.
அது என்னா படம்னு நானும் தேடித் தேடித் பாத்ததுல
ஒன்னும் சிக்கவே இல்லை.
கடைசியில இந்த போட்டோதான் கிடைச்சது. 



= = = 

அட மவனே  
அது ஒன் – டிக்கட்ட இல்லை ஒண்டிக்கட்ட அப்படின்னு அவனுக்குப் எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை. ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...

மக்களே,
அழகா எழுதுனாலே நமக்குத் தமிழ் படிக்க வராது.
இதுல கோணயா எழுதுனா நாங்க கேனத்தனமாத் தான் படிப்போம்.
நம்ம தமிழ் அப்படி ரொம்ப ஸ்ட்ராங்.
இந்தி கட்டாயம் படிக்கணும்னு எஸ், வி. எஸ். சொன்னார் தானே.
அதுனால தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறான்.
என்ன செய்யுறது?

1.11.16

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால்  வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?

அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?

கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.

தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களே எழுதுவார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  இந்தத் தேதியன்று, தமிழ் நாட்டின் தலைநகரில் கொடியேற்றி  கூட்டங்கள் நடைபெற்றன. அவர்களெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே போய் விட்டனர்.

நம்மைப் பற்றி என்ன சொல்வது?
வாழ்க கர்நாடகம் ... வாழ்க கேரளம்.


24.2.15

இந்தி. வாழ்க. தமிழ் இந்து வின் கட்டுரை

இந்தி மொழிக்குக்கூடப் பயன்படாத இந்தியாவின் மொழிக்கொள்கை! இதை வைத்துக்கொண்டு என்ன செய்வார் மோடி?
தமிழர்கள் என்றால் இந்தியை எதிர்த்துத்தான் பேச வேண்டுமா என்ன? நஹி. உலக தாய்மொழிகள் நாளான இன்று, எல்லா தாய்மொழிகளுக்கும் ஆதரவாகப் பேசலாமே! குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக. அதுவும் இது மோடி அரசின் கணக்குப்படி இது ‘மாத்ரிபாஷா திவஸ்’ அல்லவா? 
கடந்த வாரம் ட்விட்டரில் இந்திய மொழிகளுக்கான ஹேஷ்டேகுகள் புதிய போக்கை உருவாக்கின. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றவுடன், #ஜெய்ஹிந்த் என்கிற இந்தி வாசகம் ட்விட்டரின் (இந்தியப் பதிப்பில்) டிரெண்டிங் பட்டியலில் முதலாவதாக வந்தது. ஆனால், மறுநாளே தமிழ்ப் பயனர்கள் #தமிழ்வாழ்க என்றொரு ஹேஷ்டேகை ட்விட்டரில் வெளியிட்டு அதை ட்விட்டர் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். இது வேறு ஒரு விளையாட்டு! 
இந்தியின் மீது தமிழர்கள் சற்றுக் கரிசனம் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பாவம், இந்தி! இந்தியாவில் இந்தியை முதல் மொழியாகப் பேசுவோர் 18 கோடிப் பேர் என்றும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 30 கோடிப் பேர் என்றும் மத்திய இந்தி இயக்குநரகம் சொல்கிறது. இவ்வகையில், உலகில் ஏழாவது பெரிய மொழியாக இந்தி இருக்கிறது. ஆனால், வட இந்தியாவின் சில தனிப்பட்ட மொழிகளை இந்தியின் கிளைமொழிகளாகக் காட்டி, 26 கோடிப் பேர் அதைப் பேசுவதாக மற்றொரு கணக்கும் உண்டு. இந்த அடிப்படையில், எத்தனோலாக் என்கிற அமைப்பின் புள்ளிவிவரப்படி சீனம், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய மொழி இந்தி. 
வெற்றிகரமான மொழியா இந்தி? 
மொழிகளின் மதிப்பை அதன் வளர்ச்சி, சந்தை மதிப்பு, அவற்றினூடாக வெளிப்படும் அறிவுச்செல்வங்களின் மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு போன்றவற்றின் மூல மாகவே நாம் அளவிட முடியும். இந்திய அரசும் இந்தி மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் சுதந்திரத் துக்கு முன்பிருந்தே இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக ஆக்குவதற்காகப் படாத பாடுபட்டார்கள் என்பதை அறிவோம். ஆனால், அவர் களால் இந்தியை ‘வெற்றிகரமான ஒரு மொழியாக’ இன்னமும் ஆக்க முடியவில்லை. உலக மொழிகளின் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கும் தகைமை பெற்றிராத ஒரு மொழியாகத்தான் இந்தி மொழி இன்றும் இருந்து வருகிறது என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 
இந்தியின் இன்றைய பெறுமதி என்ன? விக்கிபீடியாவில் 287 மொழிகளில் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் முதலாவது இடத்தில் சுமார் 47 லட்சம் கட்டுரைகளோடு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தி 49-வது இடத்தில்தான் வருகிறது. வளர்ந்த மேலைநாட்டு மொழிகளை விட்டுவிடுங்கள், வளரும் நாடுகளின் மொழிகளான துருக்கி, கசாக், ஆர்மீனியன், இந்தோனேஷியன் போன்ற மொழிகள்கூட இந்திக்கு முன்னால் இருக்கின்றன. 1.17 லட்சம் கட்டுரைகள் மட்டுமே இந்தியில் உள்ளன. (சுமார் 67 ஆயிரம் கட்டுரைகளோடு 61-வது இடத்தில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்தியத் துணைக்கண்ட மொழிகள் இதற்கும் கீழேதான் இருக்கின்றன). இந்தப் புள்ளிவிவரத்துக்குப் பின்னால் எத்தனையோ தோல்விகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. 
3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக மொழிபெயர்ப்புத் துறை மற்றுமொரு மறைமுக ஆதாரம். இந்தச் சந்தையில் இந்தி உட்பட எல்லா இந்திய மொழிகளையும் சேர்த்தாலும் உலகச் சந்தை மதிப்பில் ஒரு சதவீதம்கூட அவை வராது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்பங்களும் இணையச் சேவைகளும் இந்தியாவில் இந்தி உட்பட எந்த மொழிகளுக்கும் உள்ளார்ந்த ஏற்பை (நேட்டிவ் சப்போர்ட்) அளிப்பதில்லை. இந்திய மொழிக் கொள்கை அதை உத்தரவாதப்படுத்துவதில்லை. இது சீனாவில் நடக்காது. அதனால்தான் சீனாவில் தனியார் சந்தையின் தேவைக்கான சீன மொழிபெயர்ப்பாளர்களில் பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்தியாவில் இந்திக்கு அது சில ஆயிரங்களைத் தாண்டாது. 
5 ஆயிரமும் 26 கோடியும்! 
கடந்த ஆண்டு புதுடெல்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின்போது, 50 ஆண்டு கால அனுபவமுள்ள இந்திப் பதிப்பாளர் ஒருவரிடம் கேட்டேன்: “இந்தியில் ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லர் என்றால், எத்தனை பிரதிகள் விற்கும்?” அவரது பதில்: “அதிகபட்சம் 5 ஆயிரம்.” 
26 கோடிப் பேர் 5,000 பிரதிகள். தமிழ்ப் பதிப்பாளர்களே, சந்தோஷப்படுங்கள்! இந்தி மொழியில் இணையதளங்களின் நிலைமை என்ன? நல்லது. இதைப் பற்றிப் பேசாமலேயே விட்டுவிடுவோம். அமேசானில் இந்தி மின்னூல்களின் கதி என்ன? மன்னிக்கவும். 
கோடிக் கணக்கில் கொட்டி அழுது, மற்றவர்கள் தலைமீது திணித்தும்கூட, இந்தி நவீன உலகில் ஒரு கேட்பாரற்ற மொழியாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல, இந்திய அரசுதான். டெல்லியில் அதிகாரத்தைக் குவித்துவைப்பதற்கான ஒரு அதிகார உத்திதான் இந்தியாவின் மொழிக்கொள்கையே தவிர, மற்றபடி அது எந்த மக்களுக்கும் - இந்தி பேசும் மக்கள் உட்பட - பயன்தரக்கூடிய ஒரு மொழிக் கொள்கை அல்ல. தொடக்கம் முதலே இந்தி ஒரு அரசியல் கருவியாகவே இங்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஒரு சமூக ஆதிக்கக் கருவியாகவே அது வடிவமைக்கப்பட்டது. அதனால்தான் பிற நாடுகளைப் போல இந்தியாவில் ‘வட்டார மொழிகள்’ மட்டுமல்ல ‘தேசிய மொழி’கூட வளரவில்லை. 
சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ராஷ்ட்ரபாஷா! 
இதிலும்கூட இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1950-களில், சீனாவில் சீன மொழியை ஆட்சிமொழியாக ஆக்கும்போது, அந்த மொழியை எளிமைப்படுத்துவதிலிருந்துதான் மாவோ அரசு தொடங்கியது. ஆனால், நேரு அரசு என்ன செய்தது? பாமர மக்களின் இந்துஸ்தானியை சம்ஸ்கிருதமயமாக்கி, அதைப் பண்டித மக்களின் மொழியாக அவரது அரசு ஆக்கியது. அதன் விளைவாக இந்தி பேசுகிற மக்களுக்கே ராஷ்ட்டிரபாஷா இரண்டாம் மொழியாக மாறிவிட்டது. அதுமட்டுல்ல, போஜ்புரி, மைதிலி, மகதி, சத்தீஸ்கரி, கார்வாலி, ராஜஸ்தானி போன்ற 50-க்கும் மேற்பட்ட தனித்தனி மொழிகளை (அவற்றில் பல இந்தியைவிட மூத்தவை, செவ்வியல் மரபுகளை உடையவை) வலுக்கட்டாயமாக இணைத்து, அவற்றின் மீது சம்ஸ்கிருத ஞானஸ்நானம் செய்து, அதன் கையில் அரசியல் சாசனக் குண்டாந்தடியைக் கொடுத்து, என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். இறுதியில் பல கோடி மக்கள் பேசிய இந்துஸ்தானியையும் சக மொழிகளையும் ஊனமாக்கியதுதான் மிச்சம். 
இந்தியைப் பரப்புவதில் நமது பிரதமர் அலாதிப் பிரியம் காட்டுகிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு செய்தி, சில நாளிதழ்களில் ஜனவரி 2-ம் வாரம் வெளிவந்தது. செய்தியின் சாரம்சம் இதுதான்: உத்தரப் பிரதேசத்தில் வாராணசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜீவ் சங்லா, மருத்துவம், பொறியியல் துறைகளுக்கான பாடநூல்களை போஜ்புரி, மைதிலி, மகஹி ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிட்டார். வாராணசியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு உத்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய இடங்களிலிருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமோ இந்தியோ சரிவரத் தெரியவில்லை என்றும், அந்த மொழிகளில் பாடம் நடத்தினால்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சங்லா குறிப்பிடுகிறார். எனவே, வேறு வழியின்றி பூர்வாஞ்சல் என்று அழைக்கப்படுகிற அந்த பகுதி மக்களின் உண்மையான தாய்மொழிகளான போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடங்களை மொழிபெயர்த்திருக்கிறார்! 
‘இந்திக்காரர்களுக்கு’ ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, இந்தியிலும் அவர்களால் பாடம் படிக்க முடியவில்லை என்றால்? அதுவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மாணவர்களால்? மண்டையில் பளீரென இறங்கவில்லையா இந்தச் செய்தி? 
‘இந்தியே இந்தியாவின் தேசிய மொழி’, ‘இந்தியே இந்தியாவில் பெரும்பான்மையோர் பேசும் மொழி’, ‘உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் இந்திதான் பேசுகிறார்கள்’ என்கிற எல்லா ‘உண்மை’களையும் இந்தச் செய்தி உடைத்தெறிகிறதே! 
மோடிஜி, பூர்வாஞ்சலிகளின் மொழிகளை இனியாவது மதித்து, அவற்றை அங்கீகரியுங்கள். இல்லையென்றால், உங்கள் தொகுதியான வாரணாசியில் ஓர் இந்திப் பிரச்சார சபாவையாவது தொடங்குங்கள்! #இந்திவாழ்க. 
- ஆழி செந்தில்நாதன், 
தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

24.2.14

தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?

குற்றச்சாட்டு

"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள்  என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள். 

காரணம் குழப்பம் ​​
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.

ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது.  அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். 

கண்டிக்கப் படவேண்டியது 
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.

யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள்  என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம் 
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.

2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு  எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன்  சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...

நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?

நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.

அமேரிக்கா செய்யுமா?

ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---

எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...

உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?

காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே  --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.

அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!



14.1.14

பொங்கல் வாழ்த்துகள்


  • கா. கவிதை


மூன்று மணி நேரம் வெந்நீர்
மூன்று மணி நேரம் குளிர் நீர்
மாறி மாறி குளித்தேன் நான்- [இரு முறை வாசிக்க]

நெருப்பாய் சிறிது நேரம்
எரிந்தது என் உடல்
பனியாய் சிறிது நேரம்
குளிர்ந்து என் உடல் - [இரு முறை வாசிக்க]

திடீரெனப் பார்த்த பெண்ணின்
மீதான காமமும் காதலும்
நெருப்பாய் பனியாய் வாட்டுதா?
---
பெரிதாய் ஒன்றும் சிந்திக்காதீர்கள்
பெயர் தெரியாத
ஒரு வைரசின்
காய்ச்சல்
என்னை
மாறி மாறி வாட்டுது.

இன்றுதான் சற்றே ஆறுதல்!

போகியில் காய்ச்சல் போய்
பொங்கலில் புது வாழ்வு
--
எல்லாருக்கும் வாழ்த்துகள்
........................

  • பொ. பொன்மொழி (கேட்டது)

தன் மொழியை உயர்வாய் சொன்னால் அதை நம்பாமல் கேலி செய்வதும்
தன் மொழியை இழிவாய்ச் சொன்னால் அதை ஏற்று ரசிப்பதும்
தமிழகத் தமிழர்கள்.

பிறன் மொழியை உயர்வைச் சொன்னால் அதை நம்பி ஏற்பதும்,
அம்மொழியின் பிழைகள் சொன்னால் தற்காத்து விவாதிப்பதும்
தமிழர்கள் தான்
ஏனெனில்
நாம்தான்
நடு நிலையானவர்கள்
அதனால்தான்
நாம்
பட்டி மன்றத்துக்கு பெயர் போனவர்கள்
-- -- -- -- -- --
வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால்
நம்ம குடும்பத்தை
நாமலே கேவலமா பேசி
கிண்டலடிப்பதை
ஒரு வழக்காமாகவே
வச்சிருக்கோம்.
வாழ்க
நம் வீரப் பழக்கம்
​​​​ ______

 பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.

----






9.11.13

ஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி


ஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏனென்றால் கூட்டம் நடத்தினால் எந்த மொழியில் நடத்துவது என்று ஒரே பிரைச்சனை. ஜெர்மனில் நடத்தினால் பிரெஞ்சு மொழி பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. அதுல பேசுனா இத்தாலியன் பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. இதுதான் அவங்களுக்கு பெரிய சிக்கல்.
இந்த யூனியனில் இன்னும் பல நாடுகள் சேருகின்ற போது இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாகும். அந்த ஆவணங்களை மொழி பெயர்க்க கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 100 கோடிக்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள். அது என்னமோ வருமானத்தில் ஒரு சதவீதம் என்று சொன்னாலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதனால் ஆங்கிலத்தை மட்டும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கலமா என்ற கேள்வி வந்தது. 
அதென்னமோ எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழியை அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்வது இல்லை. செலவைக் குறைக்க ஆங்கிலத்தில் மற்றும் பிரெஞ்சில் மட்டும் ஆவணங்களை மொழி மாற்றம் செய்யலாம் என்று யோசனையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. 

என்னதான் இருந்தாலும் ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, இத்தாலியன் எல்லா மொழிகளும் ஆங்கில எழுத்துருவில்தான் எழுதப்படுகின்றன. இருந்தாலும் ஏன் மற்ற மொழிக் காரர்கள் யாரும் இதை ஒத்துக் கொள்வது இல்லை என்று தெரியவில்லை. ஒரே எழுத்துருவில் இருந்தாலும் இரண்டு மொழிகளின் வேறு பாடு அறியாமல் அவ்வளவு சுலபமாக இன்னொரு மொழியை வாசித்து விட முடியாது என்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கேள்வி.

ச என்ற சத்தத்திற்கு சில மொழிகள் s என்பதையும் சில மொழிகள் c என்பதையும் பயன் படுத்திகின்றன. இத்தாலிய மொழியில் chi என்று எழுதியிருப்பதை கி என்று வாசிப்பார்கள். சின்னப் பொண்ணு என்று ஆங்கிலத்தில் chinnapponnu என்று எழுதினால் அவர்கள் அதை கின்னப்பொண்ணு என்றுதான் வாசிப்பர்கள். போல்லோ என்கிற இத்தாலிய வார்த்தைக்கு கூகுல் உபயத்தால் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தால் chicken என்று வரும். ஆங்கிலம் தெரியாத இத்தாலியர் ஒருவர் சிக்கன் சாப்பிடுவீர்களா என்று கேக்க ஆசைப்பட்டு நீங்க கிக்கன் சாப்பிடுவீங்களா என்று கேட்டாராம். நல்ல வேளை, கிச்சன் சாப்பிடுவீங்களா என்று கேட்கவில்லை.

இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை. ச வுக்கு சில சமயம் s, சில சமயம் c. 'எப்' என்ற உச்சரிப்பிற்கு சில சமயம் f, சில சமயம் ph. க என்பதற்கு சில சமயம் c, சில சமயம் K என்று எல்லாக் குழப்படிகளும் உண்டு.  இ என்பதை ஆங்கிலத்தில் e என்றும், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் (மற்றும் பல மொழிகளில்) i என்றே எழுதுவார்கள். ஆனால் ie என்பதை ஜெர்மனில் ஈ என்றும் அதையே இத்தாலியனில் 'இயெ' என்று சொல்லுவார்கள்.
பிரெஞ்சு மொழியைப் பற்றி சொல்லவேண்டியதில்லை - பத்து எழுத்து இருக்கும் ஐந்து எழுத்தைத் தான் வாசிப்பார்கள்.

எனவேதான் ஒரே எழுத்துரு இருந்தாலும் மற்ற மொழிக்காரர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. ஏனெனில் ஆங்கிலம் என்பது பிற்பாடு வந்த கலவை என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

இனிமேல் கற்பனை. - ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சுட்டவும்.

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கிற நாடுகள் எல்லாம் ஆங்கிலத்தை பொது மொழியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் ஐந்து வருடத்தில் ஆங்கிலத்தை சீரமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு....

முதல் வருடத்தில் மென் 'ச' வுக்கு இனிமேல் c என்பதற்கு பதிலாக s என்பதைப் பயன்படுத்துவது -  sertainly this will make sivil servants happy. அதுமட்டுமல்லாமல் க என்பதைக் குறிக்க இனிமேல் c என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் K என்பதைப் பயன்படுத்துவது.  This will klear up some konfusion and allow one key less on keyboards.

இரண்டாம் வருடத்தில் there will growing publik enthusiasm  - ஏனெனில் அந்த வருடத்தில் 'ph' என்ற வார்த்தைக்குப் பதில் 'F' என்ற வார்த்தைப் பயன்பாடு தொடங்குவதால். இது PHOTOGRAPH என்கிற வார்த்தையை 20 சதவீதம் குறைத்து FOTOGRAF என்று சுலபமாக வாசிக்க வைப்பதனால் பேச்சாளரின் மனச் சுமை குறைக்கப் படுகின்றது.

மூன்றாம் வருடத்தில் இன்னும் KOMPLIKATED மாற்றங்களை PUBLIK AKSEPT பண்ணி EKSPEKT பண்ணுவார்கள்.
இதற்குப் பிறகு, தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் தேவையற்றவை என அறிவிக்கப்படும் - ஏனெனில் அவைகள் தான் AKURAT SPELING எழுத தடையாக இருப்பதானால்.
அதற்குப் பிறகு AL WIL AGRE THAT THE HORIBLE MES OF THE SILENT 'E' IS DISGRASFUL (ஆல் வில் அக்ரீ தட் த ஹாரிபில் மெஸ் ஆப் த சைலன்ட் 'இ' இஸ் டிஸ்கிரேஸ்புல்)...
நான்காம் வருடத்தில் 'th' என்பதற்குப் பதில் 'Z' மற்றும் 'W' என்பதற்குப் பதில் 'V' என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அதனால் During ZE FIFZ YER, ZE UNESESARY 'O' KAN BE DROPD FROM VORDS KONTAINING 'OU' AND SIMILAR CHANGES VUD OFKORS BE APLID TO OZER KOBINATIONS OF LETERS. (த பிப்த் யியர், த அன்னெசெசரி 'ஓ' கேன் பி டிராப்ட் ப்ரம் வோர்ட்ஸ் கன்ட்டெய்னிங் 'ஓஉ' அண்ட் சிமிலர் சேஞ்சஸ் வுட் அப்கோர்ஸ் பி அப்ளைட் டு அதர் லெட்டர்ஸ்).

ஐந்தாம் வருடத்திற்குப் பிறகு -
VE VIL HAV A RELI SENSIBL RITEN STYL (வி வில் ஹாவ் ய ரியலி சென்சிபிள் ரிட்டன் ஸ்டைல்).

ZER VIL BE NO MOR TROBLS OR DIFIKULTIS AND EVRION VIL FIND IT ESI TO UNDERSTAND ECH OZER. ZE DREM VIL FINALI KAM TRU
(தேர் வில் பி நோ மோர் ட்ரபுள்ஸ் ஆர் டிபிகல்டிஸ் அண்ட் எவுரிஒன் வில் பைண்ட் இட் ஈசி டு அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். த ட்ரீம் வில் பைனலி கம் ட்ரூ).

°°°°°°°°°°°°°°°°°°°°°

இதே போல தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி எழுதினால் பல குழப்படிகளைக் களைய இயலும். ந, ன மற்றும் ண என்பதற்கு 'na' என்று எழுதுவதன் மூலம் பல குழப்பங்களைக் களைய இயலும்.

'la' என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் ல, ள, ழ என்று மாணவர்களுக்கு மனச்சுமையை கூட்டும் எழுத்துக்கள் குறைக்கப் படும்.

'ra' வார்த்தைகளை 'ர' மற்றும் 'ற' என்பவைகளுக்குப் பயன் படுத்த இயலும்.

இதுப்போல புரட்சி செய்வதன் மூலம் 247 எழுத்துக்கள் என்பதை 24 எழுத்துக்களாக (NO c and X) குறைக்க முடியும்.

இப்படிச் செய்வதன் வழியாக மாணவர்களின் மனப்பாரத்தை மட்டுமல்ல தமிழையும் அழியாமல் காப்பாற்ற முடியும். அது மட்டுமல்லாது இப்படி எழுதும் போது தமிழிலக்கியத்தை உலக அரங்கில் எல்லா மக்களும் வாசிக்க ஆர்வம் அதிகம் ஆவதால் வருடத்திற்கு ஐநூறு மட்டுமே விற்கக் கூடிய புத்தகங்கள் இனிமேல் ஐம்பதாயிரம் விற்கும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கஞ்சிக்கு அலைய வேண்டியதில்லை. தமிழை வாழ வைத்த பெருமையும் அவர்களுக்கு மிஞ்சும்.

குறிப்பு:
இதைப் படித்து நீங்கள் எப்படி எதிர் வினை ஆற்றுகிறீர்கள் என்று சோதிப்பதெல்லாம் எனது நோக்கம் அல்ல. ஆங்கில எழுத்துருவை அனுமதித்து தமிழை நீங்களெல்லாம் வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் எனக்கு.





27.8.13

உம்மன் சண்ட்டிக்கு ஒரு உம்மா

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் ஒரு பதிவோ என தவறாக என்ன வேண்டாம். இது அப்படிப்பட்ட பதிவு ஒன்றும் இல்லை.

செல்போன் பயன்படுத்தாத முதல்வர் - திறந்த புத்தகம் என்று சொல்லப் படுகிற கேரளா முதல்வருக்கு எதற்கு ஒரு உம்மா... இப்போதுதான் சோலார் பேணல் விவகாரத்தில் சிக்கிச் சிதறினார் வேறு ஏதாவது பிரச்சனையா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

கேரளத்தில் அரசுப் பணி பெற மலையாளம் கட்டாயம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் தேர்வில் மலையாளம் மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பத்தாம் வகுப்பு பாடத் திட்ட அளவில் அரசு நடத்தும் மொழித் தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே நிரந்தர பணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதுக்கு எதுக்கு உம்மா... தமிழகத்தில் அது மாதிரி ஒரு தேர்வு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை... கோட்டைக்குள் சென்றால் பல மலையாளிகள் தமிழ் தெரியாமலே இருக்கிறார்கள்... இன்னமும் ஞான்  ஞி என்றே பேசுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழித் தேர்வு வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்...

தமிழ் மொழியை தமிழக அரசே கவிழ்க்கும் சூழ் நிலையில் மலையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் உம்மா சண்டிக்கு உம்மா குடுத்தால் தப்பில்லை...
இதைப் பார்த்தாவது நம்மவர்கள் சுரணையோடு இருந்தால் நல்லதுதானே... ஆனால் அவர்களே ஆங்கிலிபிசி ல் பேசினால் நாம் என்ன செய்ய முடியும்?

29.5.13

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

4.5.13

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.

14.4.13

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

7.4.13

தமிழ் இனி - குறும்படம்

எதேச்சையாக என் கண்ணில் பட்டது.


13.2.13

தடைகளுக்குப் பின்னால் ....



தமிழ்த் திரை உலகத்தில் உதித்திருக்கிற இந்த தடை விவகாரங்கள் தமிழக மக்களை பல்வேறு விதத்தில் கூறு போட்டிருக்கிறது. தன்னுடைய நிலைப்பாட்டைச் சார்ந்து தனது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் தான் அறிந்தோ அறியாமலோ பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்குப் பின்னால் வேண்டுமென்றே இனத்தைக் கூறு போடும் சக்திகள் இருப்பதை இந்தப் பலர் அறியாமல் இருப்பது வேதனைதான்.
உண்மையிலேயே அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தனது சமூகம் ஒரு குரல் எழுப்பியது என்பதற்காக அதனோடு சேர்ந்த இஸ்லாமிய சமூகம் ஒரு புறம் – கமலின் விஸ்வரூபத்தை தடை செய்வதா – எனில் அமீரின் ஆதி பகவானைத் தடை செய் என்று இந்து முன்னணி வீரர்கள் ஒரு புறம் – எல்லாரும் பாதிக்கப்பட்டால் கிறித்தவ சமூகம் என்னாவது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சில கிறித்தவர்கள் ஒரு புறம் – இந்த தடைகளின் தேவைகள் என்ன? எதற்காக இந்தப் போராட்டங்கள்? இவைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
  • -    ஒவ்வொரு மனிதனின் அடையாளமும் மிக முக்கியம். ‘அடையாளப் படுத்துதல்’ என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவைகளின் தாக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது இரு நூற்றாண்டுகளாகத் தான். இப்போது தனது அடையாளம் என்பது தனது இனத்தைத் தாண்டி உலக அளவில் அல்லது இந்திய அளவில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சி தான் இது.
  • -    தனக்கான எதிரி யார் என்பதை இஸ்லாமியர்கள் கட்டமைக்கிற முயற்சியில் இந்துக்களை எதிரிகளாகக் கருதி தங்களது தமிழ் இனத்தின் அடையாளத்தை மறந்து உலக இஸ்லாமியர்களோடு ஒன்று படுத்துகிற முயற்சி என்பது ஒரு புறம். 
  •   தங்களது எதிரிகளாக இஸ்லாமியர்களை உருவாக்கி அதன் வழியாக இந்திய இந்துக்களாக, இந்து, இந்தியா என்ற அடையாளத்திற்குள் வரையறுத்து தங்களது சொந்த இன அடையாளத்திற்கு எதிரான ஒரு நிலைப் பாட்டையும் எடுக்கிறார்கள். இவர்களுடைய அந்தக் கட்டமைப்பில்தான் இஸ்லாமியர்கள் அந்த நிலைப்பாட்டிற்குத் தள்ளப் படுகிறார்கள் என்பதும் உண்மைதான். 
  •   இதில் கிறித்தவத்தையும், கிறித்தவர்களையும் சில சமயங்களில் தங்களது எதிரிகளாக, வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர்களோடு அடையாளப் படுத்தப் படுவதில் தங்களது தமிழின அடையாளத்தை மறக்கவும் சமயத்தின் அடையாளத்தை முன்னிறுத்தவும் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். அதனாலேயே தேவையற்ற நேரங்களில் கூட, சிலர் கிறித்தவ அடையாளத்தை முன்னே வைக்கிறார்கள் – கடல் திரைப்படத் தடை வழியாக.
  •  அடிப்படையில் ஒரு மனிதன் தனது சமூகக் குழு உறுப்பினராகவே இந்த மண்ணில் கால் வைக்கிறான். மனித அடையாளத்தின் அடிப்படை என்றால் அது அவர் சார்ந்த இனம்தான். இதுதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதே வேளை சமயம் – மதம் என்பது ஒரு மனித வாழ்வின் தொடர்ச்சி அல்லது இலக்கு என்கிற வகையில் அதுவும் மிக முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. தனது அடிப்படை அடையாளம் தகர்க்கப் படுகிற போது, தன்னை வாழ்வின் இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் சமய அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது தமிழ் இன அடையாளம் என்பது அழிக்கப் பட்டு, அவனை சாதிய வழியில் பிரித்த போது தன்னை இந்து சமயத்தின் புறந்தள்ளப் பட்ட ஒரு இனமாகவே அடையாளப் படுத்த தள்ளப்பட்டார்கள். எனவே தலித் அடையாளம் என்பது தேவையும், அவசியமும் ஆகிறது. ஆனால் இதில் தமிழ் இன அடையாளம் நமது அடிப்படை என்பதும் முன் வைக்கப் படுகிற போது – இந்திய இந்துக்கள் மீண்டும் அனைவரையும் சமய அடிப்படையில் ஒன்று சேர்க்கவும் தங்களது அடிப்படை அடையாளத்தை மறக்கவும் கையிலெடுத்ததுதான் இந்துத்துவம். அதற்காக கட்டமைக்கப் பட்ட எதிரிகள்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்.
  •   ஒரு பயங்கரமான எதிரி கட்டமைக்கப் படுகிற போது, அந்த எதிரியை எதிர் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள், அடிப்படை அடையாளத்தை மறந்து ‘மத’ அடிப்படைவாதத்தை முன்னெடுக்க கட்டமைக்கப் பட்ட எதிரிகள் எதைச் செய்தாலும் அதனை தவறாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் பயங்கரமான எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
  • -    இதைத்தான் இந்த திரைப்படத் தடை விவகாரங்களில் பார்க்கலாம். விஸ்வரூபம் தடைக்குப் பின்னால் இருக்கிற அரசியலை அலச தனிக்கட்டுரை அவசியம். ஆனால் இது நடந்த பிறகு ஒரு தொலைக் காட்சியின் விவாத மேடையில் ஆதி பகவானைத் தடை செய்ய கோரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சில காரணங்கள்: அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நாங்கள் புண்பட மாட்டோமா? அது மட்டுமல்ல – வள்ளுவர் மைலாப்பூரில் இருந்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை – என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.   இறுதிக் காரணம்தான் மிக முக்கியமானது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது ஆனால் வள்ளுவர் என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மைலாப்பூரில் மட்டுமல்ல – தமிழகத்திலே இல்லை என்பதற்கான முதல் படிதான்.
  •   இதுதான் இங்கே காரணம். மீண்டும் மீண்டும் ஆதிக்க சக்தியின் கைகளையும் கால்களையும் விரித்து அடிமையாக்கும் நவீன அடிமைத்தனம். அதுதான் மதங்களின் அடையாளத்தை முன்னிறுத்தும் தந்திரம்.

- வலை விரிப்பவர்களின் தந்திரம் தெரியாமல் வலையில் மாட்டும் பறவைகள் போல தமிழ் இனம் மத வலையில் மாட்டுவது பரிதாபத்துக்குரியது. இதுதான் காவிரி நீர் மறுப்பில் கர்நாடகாவுக்கு எதிராக மௌனம் சாதிக்கவும், முல்லைப் பெரியார் விவகாரத்தில் விலகி இருக்கவும், அணுமின் உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பேசாமல் இருப்பதற்கும் வழி வகுக்கிறது.

-    இத்தகைய நிலையில் நம்மை வைத்து நமது அடிப்படை அடையாளத்தை மறக்கடிக்கச் செய்வதே நவீன இந்துத்துவத்தின் சாமர்த்தியம். இதை எதிர்ப்பதற்கான வழி தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.


15.1.12

பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு


முதலில் ஒரு சிறிய நினைவூட்டல் - கடந்த ஆண்டு பொங்கலன்று எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் - அதோடு தொடங்கலாம்.

"அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நடக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்."  
                                                                           
                                                                                             முழுப் பதிவும் படிக்க...


  • பல ஆண்டுகளாக எனக்குத் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் அன்றுதான். அறிவியல் ரீதியாகவோ அல்லது, சங்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அதை என்பிப்பதற்கான தேவையோ அல்லது அறிவியல் பூர்வமாக பொங்கல் தான் புத்தாண்டு என்று சொல்வதற்கான நிலையில் நான் இல்லை. அதை நிறைய அறிஞர்கள், பதிவுலக நண்பர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும் என்பது அறிந்ததுதான். ஆனால் நாம் அதைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறோம். என்ன செய்வது? 

  • இந்த புதிய அறிவிப்பிற்குப் பிறகு அரசுக் கட்டிடங்களில் ஒளித்த மின்விளக்குகள் வேண்டுமானால் மறையலாம். நம் உள்ளங்களில் ஏற்றப்படும் விளைக்கை அணைக்க முடியுமா? இந்த அரசின் அறிவிப்பிக்குப் பிறகு தனி மனிதக் கொண்டாட்டத்தை தடை செய்யும் உரிமை அரசுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு அரசினால் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு அங்கிகரிக்கப் பட்டது - அல்லது ஏற்கனவே உள்ள தவறை சரி செய்தது. மற்றொரு அரசு மீண்டும் தவறை உண்மை என்று உணர்த்தப் பார்க்கிறது. அது எந்த விதத்திலும் தமிழர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மாற்றி விட முடியுமா அல்லது தடுத்து விட முடியுமா?

அதனாலே
பொங்கலோ பொங்கல் என்பதோடு
தை முதலே ஆண்டின் முதல் என்பதயும் சேர்த்து
முழக்கம் இட வேண்டியிருக்கிறது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு அன்று பொங்கலிட்டு
புதிய உணவை - புதிய பானையில்
பொங்கி மகிழ்வோம்.


கொசுறு : 

தமிழ் புத்தாண்டு - தைப் பொங்கல் / வௌவால் 

மதுமதியின் தூரிகையின் தூறல் 

வானம் எனக்கொரு போதி மரம்

 கனடா வாழ் தமிழர் ஒருவரின் கட்டுரை



  

13.1.12

சமாதியான சங்கமம்

ஏன் இந்தப் புறக்கணிப்பு? 

  • வரலாற்று தொன்மை மிக்க குழுமம் ஒவ்வொன்றும் தங்களுடைய தனிப்பட்ட தன்மையைத் தக்க வைப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும். அது மற்றவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதற்காக அல்ல. தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரக் கூறுகளை பாது காப்பாதற்கும் தங்களது தனித்துவத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்கும்.

வரலாறு இல்லாத பண்பாட்டுக் குழுமங்கள் கூட தங்களது பண்பாட்டுக் கூறுகளை காட்சிப் படுத்துவதிலும், அதை மியூசியங்களில் வைப்பதிலும் காட்டுகிற அக்கறை அதிகம் என்பதை அவர்கள் சேமித்து வைத்திருக்கிற ஐநூறு ஆண்டு பழமையான கல், மண் இவைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இங்கே என்னடாவென்றால், பழைமையான பண்பாட்டு நகரம் தண்ணிரில் இருக்கிறது.


  • மிச்சம் மீதி உள்ள பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் ஏதாவது அக்கறை இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் நாட்டுப் புறக் கலைகள் அருகி வருகின்றன என்பதும், அதில் இருக்கும் கலைஞர்கள் நலிந்து அந்த ஆடல், பாடல் கலைகள் அழிந்து வருகின்றன என்பதும், இதனால் தங்கள் கலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடும் சூழல் இருப்பதும் நாம் அறிந்ததே.

சங்கமம் - யார், எதற்கு, அதில் என்ன சிக்கல் என்பதையும் தாண்டி, சங்கமம் மீதான என் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி எனக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதனால், சில பல கலைஞர்கள் பொங்கல் நாட்களில் பணம் பெற்றார்கள் என்பதையும் தாண்டி - இந்தப் பண்பாட்டின் சில கூறுகளை உயிர்ப்போடு இருக்க அது உதவியது என்பதில் ஐயம் இல்லை.

ஆட்சி மாற்றம் - வழக்கம் போல பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் தனது பங்கை காக்க மறந்து விட்டது என்றே கருதுகிறேன். இன்னமும் காழ்ப்புனர்ச்சியிலேயே அரசு நடந்தது கொண்டிருக்கிறது. கடந்த அரசு - இதை தமிழக சுற்றுலாத் துறை இணைந்து நடத்தியதாக நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு தமிழகப் புத்தாண்டை மாற்றியது வேறு விஷயம். அதற்காக 'கலை விழாக்களை' புறக்கணித்தது பற்றி மிகுந்த கோபம் உண்டாகிறது.
இன்றைக்கு சங்கமம் என்பது ஏதோ காணக் கூடாத வார்த்தை போல எங்கும் எதிலும் காணோம். என்ன ஆயிற்று?


  • ஜனவரி மாதம் எப்படி புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வருமோ அதுபோல 'கலை வாரம்' என்கிற சங்கமும் இருந்தது. ஆட்சி மாற்றத்தினால் புத்தகக் கண்காட்சி நடக்குமோ நடக்காதோ என்கிற சில விவாதங்கள் வந்த பொது இது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே போலத்தான் சங்கமம் பற்றியும் நினைத்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

கடந்த ஆண்டு வரைக்கும் போட்டி போட்டு எழுதிய பத்திரிக்கைகள், இலக்கிய வாதிகள், கிண்டல் அடித்தவர்கள், கவிதை வாசித்தவர்கள், பாடியவர்கள், ஆடியவர்கள் .... யாரும் எதுவும் பேச வில்லை என்பது மிகவும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

ஒருவேளை சங்கமம் புத்தாண்டைப் போல ஏப்ரலுக்கு மாற்றப் பட்டிருக்கிறதோ அல்லது நாம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோமா என்பதை யாரிடம் கேட்பது.?

ஆமாம்!!!
 தமிழக அரசுக்கு ஏன் தமிழர்கள் மீது வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ஏன் இந்த வெறுப்பு?


  • கடந்த முறை தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று சொன்ன மத்திய அரசு இந்த முறை, மத்திய தணிக்கைக் குழு சரி என்று சொல்லிவிட்ட பிறகு மாநில அரசுக்கு அதைத் தடை செய்ய உரிமை இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறது.

படத்தை தடை செய்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் மட்டும் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று வியாக்கினம் பேசுகிற மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் முல்லைப் பெரியாரில் நீர் மட்டத்தை உயற்றுவதற்கு உத்தரவிட்ட பின்பு கேரள அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றியதே.... அதைப் பற்றி என்றாவது திருவாய் திறந்திருக்கிறதா...

ஆமாம்!!!
மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


கொசுறு:

"குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!"

- காசி அனந்தன்


தொடர்புடைய இணைப்புகள்:

சென்னை சங்கமம்

இந்த வாரப் பூச்செண்டும் திட்டும் 


11.11.11

11/11/11 அன்று 11 மணி 11 நிமிடம் 11 வினாடி ["நேர அரசியல்" ]

பதினோரு மணி பதினோரு நிமிடம் பதினோரு வினாடி - இது இந்த ஆண்டின் இன்றைய சிறப்பான தருணம் என்று எப்படியெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் யாரென்பது உங்களுக்கே தெரியும்.

  • உண்மையில் அந்தச் சிறப்பை எந்த ஆண்டுகளும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் வருடங்களைக் கணக்கிடுவது என்பது வரலாற்றில் மிகவும் தாமதமான ஒன்று.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பண்பாட்டை சார்ந்த நண்பர்களும் அவர்களுக்கென்று ஒரு காலண்டரை வைத்திருக்கிறார்கள். எனவே கணக்கிடுதல் முறையில் மிகவும் பழமையான முறை கொண்டிருக்கிற காலண்டர் அடிப்படையில் வேண்டுமானால் இதைப் பற்றி யோசிக்கலாம்.
ஆனால் அது இன்னும் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக ஆகலாம்.

  • சரி இப்போது நாம் பின்பற்றுகிற காலண்டர் முறை என்பதையே உண்மை என்று கணக்கில் கொண்டாலும், இப்படி எல்லாம் ஒன்று ஒன்றாக வந்தது என்றால் ஜனவரி ஒன்று, பதினொன்றாம் ஆண்டு; அந்த ஆண்டே  நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி.... : அல்லது நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு;
இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயிரத்து நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு: நவம்பர் பதினொன்று...

மற்றதெல்லாம் உல்டாதானே -
நாமாக இரண்டாயிரத்திப் பதினொன்றை வெறும் பதினொன்றாகச் சுருக்கி விட்டு -
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும்தான் நவம்பர் வருகிறது - வெறும் பதினொன்று பதினொன்று என்று ஏதாவது சிறப்பு உண்டா?
சரி ஆண்டே வேண்டாமே: ஒவ்வொரு மாதமும் பதினொன்றாம் தேதி வருகிறது.
ஒவ்வொரு நாளும்தான் பதினோரு மணி வருகிறது - இரண்டு முறை...

  • என்ன ஒரே பிரச்சனைன்னா --- இந்தத் தேதி வெள்ளிக்கிழமை வந்தாதான் பிரச்சனை: ஏன்னா அன்னைக்கு ராகு காலம் பத்து முற்பதிலிருந்து பனிரெண்டு வரையாம்ல.

  • ஆஹா - இன்னைக்கு வெள்ளிக் கிழமை - பதினொன்னு பதினொன்னு பதினொன்னு பதினொன்னு நல்ல நேரம்னு நினைச்சேன்!

ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க?

  • இல்லைன்னா சிறப்பான நேரம் இரவு பதினோரு மணி பதினோரு நிமிடம்னு நினைச்சுக்குங்க...

கொசுறு:


"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

                                                                                        இது "சம்பந்தரின் மாலை மாற்று" 
[இதை நீங்கள் கீழிருந்தும் படிக்கலாம் - அதே வார்த்தைகள் அதே பொருள்]

இதன் அர்த்தம் - 
"சீர்காழியில் குடிகொண்டு, பாம்புகளை அணிகலனாகக் கொண்ட, வீணை வாசித்து கொண்டிருக்கும் ஒப்பிடமுடியாத சிவனே - மக்களின் குறை தீர்ப்பவனே " என்று பொருள் என்று கருதுகிறேன்.


எனது மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை...


மேலும் விபரம் அறிய: 



10.8.11

சமச்சீர் உச்ச நீதி மன்ற தீர்ப்பு - முழு விபரம்

சமச்சீர் உச்ச நீதி மன்ற தீர்ப்பு - முழு விபரம்

Samacheer Kalvi – Supreme Court Judgment 9 August 2011


நன்றி - http://arulgreen.blogspot.com/


21.2.11

தாய் மொழி தினம் - பிப்ரவரி 21

உலகத் தாய் மொழி தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியவர்களின் கருத்துக்களை அறிய http://thoughtsintamil.blogspot.com/ இங்கே சுட்டவும்


தமிழின் பழமை பற்றியும் தமிழின் வளமை பற்றியும் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.  ஆய்வுகளின் முடிவுகளை நாம் அறிந்து கொள்வது நமது கையில் இருக்கிறது. ஆனால் இன்றிருக்கிற சூழலில், தமிழை வளர்ப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் தமிழகத்தை ஆண்டவர்கள் - ஆள்கிறவர்களின் நோக்கம் தமிழகத்தையோ அல்லது தமிழையோ உயர்த்துவதாக தெரியவில்லை. காரணங்கள் பல.

கல்வித் துறையில் - உலகம் எங்கும் இருக்கிற நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளில் தாங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிற போது, நாம் மட்டும் இன்னும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட விதத்தில் நமது கற்றுக் கொடுத்தலையும் அறிவுறுத்தலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. ஒரு மொழி என்பது ஒவ்வொருவளின் இருப்போடும், அவளது பண்பாட்டோடும், குழுமத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதை நினைவிறுத்துவதற்காகவும் இதை எழுதுகிறேன். 

பொருளாதாரத்துறை என்பது நமது இருப்பை நிர்ணயம் செய்வதனால், பொருள் ஈட்ட, நான் ஆங்கிலமோ அல்லது  இந்தியையோ கற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற சூழலில், தமிழ் மட்டுமே அறிந்தால் என்னால் என் வாழ் நாளை ஒட்டி விட முடியாது. 
நீரா ராடியாவுடன் பேச வேண்டுமென்றால் தமிழில் பேச முடியுமா என்ன? 

ஆனால் பொருளாதாரத் துறையில் தமிழை முன்னிறுத்துவதற்கு முயற்சி எடுப்பதில்லை. ஆனால் தாய் மொழி என்று வருகின்ற போது ஒரு உணர்வை நமது மத்தியில் எழுப்ப முடியும் என்பதனாலும் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது என்பதனாலும் - இலக்கிய வளர்ச்சி என்று செம்மொழி மாநாடு நடத்துவதிலும், அல்லது தமிழ் திரைப்படங்களுக்கு தமிழிலில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதிலும் அரசு தமது தமிழ் பற்றை வெளிக்காட்டுகிறது. 
தமிழ் படித்தால் ஒருவன் வளர முடியாது என்பதைக் கட்டமைத்து விட்டு தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லுவதன் வழியாய் - தமிழனை அழித்துக் கொண்டே, தமிழை வளர்க்கிறோம் என்று   சொல்லிக்கொண்டிருக்க முடியும். இதன் வழியாய் தமிழை அழித்துவிடவும் முடியும் - பிறகு வெறும் எழுத்துக்களில் மட்டுமே இம்மொழி இருக்கும்.

கணனித் துறையில் கூகுளிலும், விக்கியிலும் தமிழ் வரமுடியும் ஆனால் நமது அரசாங்க ஆணைகளிலும் தமிழ் கலைச் சொற்கள் இல்லை என்று எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டே பொழுதை ஒட்டிக் கொண்டிருப்பது. 

தமிழ் வளர்ப்பது எதோ தமிழ் அறிஞர்கள் மட்டும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் போல ஒரு பிரம்மையை நாம் முன்மொழிந்து கொண்டிருக்கிறோம்.  அல்லது எல்லாச் சொற்களையும் தமிழ் படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். திரு. இறையன்பு அவர்கள் ஒரு நூலில் இப்படித் தமிழ் படுத்துவது குழப்பத்தை விளைவிக்கும் என்று எழுதியதாக ஞாபகம். அதாவது ரெட் கிராஸ் என்பது ஒரு உலக நிறுவனம் அதனைச் செஞ்சிலுவை என்றெல்லாம் மொழி மாற்று செய்யக் கூடாது என்ற கருத்தை அதில் முன் வைத்திருக்கிறார்.
உலக நிறுவனம்தான் - அனால் இத்தாலியில் அதை ரெட் கிராஸ் என்று எழுதுவதில்லை - Croce Rossa என்றுதான் எழுதிகிறார்கள். பிரெஞ்சில் 
Croix-Rouge என்றுதான் எழுதுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் அது உலக நிறுவனமாகத் தெரியவில்லையா என்ன? நாம் மட்டும் ஆங்கில அடி வருடிகளா என்ன? ஆனால் அதைச் செஞ்சிலுவை என்று மொழி பெயர்ப்பதனால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா என்ன?


உலக மொழிகளில் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்தையும் அந்தந்த நாடுகளில் அதன் அதன் மொழிகளில் உடனே மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். Dan  பிரவுன்-ன் the Lost symbol  வாங்கலாம் என்று இத்தாலியக் கடைகளில் தேடினால் நமக்குக் கிடைப்பது  "il simbolo perduto ." பிரான்சில் தேடினால் "Le symbole perdu" என பிரெச்ஞ்சுப் பதிப்புதான் கிடைக்கிறது. ஆனால் அவைகள் எவையும் தமிழில் வெளிவருகிறதா எனத் தெரியவில்லை. எந்தப் புத்தகமெனினும் உடனே அவைகள் அவர்கள் மொழிகளிலே மொழி பெயர்க்கிறார்கள். தமிழ் பதிப்பாளர்கள் இதை மிகவும் லாபம் வரும் துறை எனக் கருதி வெறும் பிசினஸ் போலச் செய்தாலே போதும் - தமிழ் ஓரளவுக்காவது வளரும். புத்தகம் விற்காது என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் நமக்குத் தெரியும்.


எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கும் மக்கள் கூட கொஞ்சம் சிரத்தயோடு படிக்கவும் தொடங்குவார்கள். காசு கொடுத்து வாங்கி சும்மா வைக்க மனது வருமா என்ன? அப்படியே வைத்தாலும் பின் வரும் தலைமுறையாவது அதைப் படிக்கும். எனவே பொருள் ஈட்டும் பதிப்பகங்கள் இதைப் பற்றி சிந்திப்பது நல்லது.


தமிழின் பழமையைப் பற்றி வேறு யாராவது சொன்னால் - அதுவும் ஆங்கில ஆய்வாளன் சொன்னால் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதையாது ஏற்றுக் கொள்கிறோமா?


எது எப்படி இருந்தாலும் அரசு முயலாதவரை தமிழ் மொழி வெறும் ஏட்டில் தான் இருக்கும். பொருள் ஈட்ட வழியில்லாத வரை தமிழின் மீது இன்றைய மனிதர்களுக்கு வெறுப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னும் ஒட்டு வாங்க மட்டும் - மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்தே .... என்று மைக் போட்டுப் பேசலாம். 






18.1.11

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு.
நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமக்கென்று இருக்கவே இருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு – அரையாண்டு விடுமுறையில் வருவதால் நன்றாகக் கொண்டாடவும் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் எத்தனைப் புத்தாண்டுதான் கொண்டாடுவது என்ற கேள்வி வேறு எழுகிறது? ஆங்கிலப் புத்தாண்டு, பிறகு, தமிழ் புத்தாண்டு; பிறகு தெலுங்குப் புத்தாண்டு. சிறு பிள்ளைகள் போல நினைத்தால், அவைகளெல்லாம் வெறும் விடுமுறை நாட்களாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பின்புலம் எதுவும் உண்டா என்பது புரியாமலே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் அடையாளம்தான் [identity]. நமது அடையாளம் எது என்பது புரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மொழி மட்டுமா அல்லது அதனோடு தொடர்புடைய விழாக்களா / பண்பாட்டுக் காரணிகளா , அல்லது சமயமா, அல்லது தேசமா, உலகமா? எதில் நம் அடையாளம் இருக்கிறது. எல்லாமே என்றால் தனித்துவ அடையாளம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? அது எது? எதனடிப்படையில் அதை வரையறுப்பது? புத்தாண்டுக் கேள்வியாய் இது இருக்கட்டும்.

வேறு விடயத்திற்கு வருவோம்.
நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள் என்று நானே எண்ணிக் கொள்கிறேன். எனவே அதற்கான தர்க்கத்திற்கு வருவோம்.
சித்திரையைத் தான் இத்தனை ஆண்டுகளாய் நாம் தமிழர் புத்தாண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எனவே அதை கலைஞர் மாற்றி விட்டார் என்பதனால், அந்தக் கோபத்தினால் இந்தப் புத்தாண்டு வேண்டாமென்றால் நாம் தமிழர் வரலாற்றை [இதை எப்போது முடிவு செய்தார்கள், யார் யார் செய்தார்கள் – எதற்காக முடிவெடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்] ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்.

அல்லது "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சற்று இடைவெளி விட்டு - "மூன்று மாதங்களுக்கு முன்பாகவே" என்று சோ போல கிண்டல் அடிக்கலாம்.
வேதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சமஸ்கிருத வருடங்கள் ஏப்ரலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு விரோதி ஆண்டு. இப்போது விக்ருதி ஆண்டில் இருக்கிறோம். இது பங்குனி மாதம் முடிந்து “கர” ஆண்டு சித்திரையில் தான் தொடங்குகிறது. எனவே அப்போதுதான் தமிழ் ஆண்டு தொடங்குகிறது என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. “இந்து இந்தி இந்தியா” பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றுச் சடங்காககிப் போன இந்தப் பொங்கலைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா என்ற வேதனை இருப்பதால் இப்பொங்கல் விழாவை கொண்டாட மனதில்லை என்றால் சடங்காக இல்லாமல் உண்மையான பண்பாட்டு விழாவாய்க் கொண்டாட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
அல்லது
இதைக் கொண்டாடுகிறவர்கள் என்றால் எதற்காக இந்த விழா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டாடுவதும் முக்கியமானது. மொழி என்பது வெறும் தொடர்பு இணைப்பான் – எனவே இந்த மொழி பேசுகிறவர்கள் கொண்டாடுவது என்கிற மேலோட்டமான புரிதல் மட்டுமே போதாது. ஏனென்றால் விழாக்களுக்கு மட்டுமே நாம் பேர் போனவர்கள் – எனவே இதன் சிறப்பும் நமக்குப் புரியாது.

ஆக என்ன செய்யலாம். இதை எழுதிய என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யலாம்: அல்லது இந்தப் பண்பாட்டு விழாவை பொருள் உணர்ந்து கொண்டாடலாம். பொங்கலாம்.
இது வெறும் புத்தாண்டு மட்டுமல்ல – அடையாள விழா! ஆனால் அடையாளம் பற்றிய நீண்ட விவாதமும் தேவைப்படுகிறது. விவாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

14.1.11

பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்
  • பொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.

  • சித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.
  • தமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.
  • இது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.
  • ஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.
  • விவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.
வாழ்த்துகள்