பத்திரிக்கை சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிக்கை சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.11.14

நான் ஒரு பிராமணன்

நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.

எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை  கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.

நான் என்ன நினைக்கிறேன்னா?


  1. எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
  2. சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
  3. இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுட்டவும் - மோடி பிராமணர் 

நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை. 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.

இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.

பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.

 அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை





7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    3.10.11

    வாசிப்பாளர்களை கவர்வது எப்படி?

    முதலில் வந்ததுற்கு நன்றி - 

    வாசிப்பாளர்களை கவர்வது எப்படி? என்கிற கேள்விக்கு இப்பதிவு முழுமையைப் பதில் சொல்லுமா என்பது தெரியாது. நான் பதிவுலகில் மீண்டும் நுழைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகம் பார்க்கப் பட்ட ஒரு பதிவினை கொண்டு பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

    இதுவரைக்கும் எந்தப் பதிவுகளும் நோட்டமிடாதப் பட அளவுக்கு "சூப்பர் சிங்கர் கலாட்டா" பார்வையிடப் பட்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு முறைக்கு மேல் பார்வையிடப் பட்டிருக்கிறது. இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -

    ரூம் போட்டு யோசித்து எழுதிய பதிவுகள் கூட சில சமயங்களில் நூறைத் தாண்டாது. ஆனால் நடைமுறையில் மிகவும் பாப்புலரான சினிமா, தொலைக் காட்சி, கிரிக்கெட் இவைகள்தான் அதிகம் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் வசிக்கப் படுகின்றன -

    அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம்  தேட வேண்டியதில்லை. 

    இது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப் படக் கூடிய விஷயம்தான். ஏனெனில் இந்தியாவை விட்டு வெளியிலிருக்கிற நண்பர்கள் தங்களது பொழுது போக்கிற்காகவும் உற்சாகம் தரக் கூடிய பதிவுகளையும் தேடி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கிற பார்வையாளர்களும் அப்படி இருப்பதைத் தான் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் காத்திரமான பதிவுகளை வாசிப்பதில்லை என்றோ தமிழக வாசிப்பாளர்கள் சீரியசான விஷயங்களை படிப்பதில்லை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நானும் எழுத முடியாது இங்கே யாரும் வந்து படிக்கவும் முடியாது.
    சூப்பர் சிங்கரை படித்தவர்கள் எல்லாம் இந்தப் பதிவையும் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனாலும் நன்றிகள்.
    ஒரு முக்கியமான விஷயம் - அதிகம் பார்க்கப் பட்ட இந்தப் பதிவு ஒருவரைக் கூட என் நண்பராக இந்த வலைப் பூவில் இணைய இழுத்து வரவில்லை. இந்த உண்மையையும் பதிவு செய்ய வேண்டும்.

    நான் இந்த ஆச்சரியத்தில் உறைந்து போக வில்லை - அதை விரும்பவும் இல்லை. மிக விரைவில் அல்லது நாளையே கூட அதிகமாக பார்வையாளர்களை கொண்டு வராத பதிவு ஒன்று வரும். அதிலேயே நான் நிறைவு கொள்ளுகிறேன்.

    நன்றி

    ------------------------------------------------------
    பின்னூட்டம்
    இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
    அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
    அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
    வாழ்க வளமுடன்.

    25.8.11

    அன்னா ஹசாரே - காந்தியா? கடவுளா?

    அன்னா ஹசாரே - இன்றைக்கு ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒரு சிம்பல் - அடையாள நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார். அவரைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமென்றால் பயந்து பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பாரத மாதாவை யாரும் எப்படி எதுவும் சொல்லிவிடக் கூடாதோ, காந்தியை எப்படி யாரும் விமர்சித்து விடக் கூடாதோ – தோனியை – தென்டுல்காரை யாரும் எப்படி விமர்சனம் செய்யக் கூடாதோ [இந்த ஒப்புமைக்கு மன்னிக்கவும்] அப்படி இன்றைக்கு அன்னா உயர்ந்திருக்கிறார்.

    இது ஒரு நல்ல தொடக்கமா என்பது தெரியவில்லை. அன்னாவைப் பொருத்தவரைக்கும் மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பும் ஆற்றல் அல்லது சரியான நேரத்தில் சரியான ஒன்றைத் தொடங்குதல் அல்லது முன்னெடுத்தல் என்பது தொடங்கி - மிகச் சரியாக மீடியாவின் துணை என்று பல விதங்களில் இந்தப் போராட்டம் கவவனிக்கப் படவேண்டியது. இத்தகைய - எல்லாவற்றிலும் மிகச் சரியாக அமைதல் என்பது எல்லாருக்கும் வாய்க்காது - அல்லது வாய்க்க வைப்பதற்கான சக்தி இருக்காது. [அது எதுவாக வேண்டுமானாலும் கூட இருக்கலாம் - கார்ப்பரேட் சக்திகளாகக் கூட இருக்கலாம்] - அன்னாவிற்கு அது வாய்த்திருக்கிறது. இது ஒரு மக்கள் சக்தியாக உருவெடுக்கும் பட்சத்தில் - தனி நபர்களாக செய்ய முடியாத காரியத்தை ஒரு இயக்கத்தின் வழியாகச் செய்ய முடியும் என்று சேர்ந்து இணைகிற மக்கள் சக்தியை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

    அதே சமயத்தில் சிலர் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்வோர் இவ்வியக்கத்தில் இணைவதையும் அதற்கு அதரவு தெரிவிப்பர்களை கிண்டல் செய்வதும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை - நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிற இளைஞர்கள் வெறும் சம்பளம் ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கிற சூழலையும் மாற்றுவதற்கு தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயாராக இருக்கிற பொது நலம் அதிகமாகிக் கொண்டு வருகிறது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்றே படுகிறது. தங்களால் முழு நேரத்தையும் இதற்காகச் செலவு செய்ய முடியாது என்கிற போது செய்பவர்களோடு இணைய வேண்டும் என்கிற ஆர்வம் நல்லது என்றே படுகிறது. இதற்கு முன்பு ஈழத் தமிழர்களின் நலனிலும் அவர்கள் அக்கறை கொண்டு செயல்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் - அன்னா ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புகிறார் என்பதற்காக அவர் செய்வது எல்லாம் சரி என்று பேசாமல் நாம் இருக்க வேண்டுமா? - அல்லது ஜன்லோக்பாலில் உள்ளது எல்லாம் சரி என்றோ அல்லது அவைகளைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காப்பது நல்லதா, அல்லது அது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பாகாதா என்பதே கேள்வி. அருந்ததிராய் சில கேள்விகள் எழுப்பி விட்டார் என்பதற்காக அவரை தேசத் துரோகி என்றோ அல்லது அவர் அரை நிர்வாணப் படம் வெளியுட்டு நாவல் எழுபவர்தானே என்று கிண்டல் செய்வதோ சரியா என்றே படுகிறது. இன்னும் நாம் கருத்துச் சுதந்திரங்களுக்குத் தயாராக வில்லை என்பதுதான் தெரிகிறது.

    மக்களாட்சியை விரும்புகிற நேசிக்கிற ஒரு அரசில் தனிப் பட்ட முழுச் சக்தி வாய்ந்த ஒரு 'சுதந்திர அமைப்பு' எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது பணபலம் உடையவர்கள் கையில் செல்லாது என்பதைக் கேட்கிற உரிமை எல்லாருக்கும் உண்டு. இன்றைக்கு அன்னா – சரி- நாளைக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிற ஒருவனே ஹிட்லராக மாறிவிடும் சமயத்தில் - இந்த அமைப்பு மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் –

    அல்லது மற்ற மக்கள் இயக்கப் போராட்டங்களில் போராடுகிறபோது இந்த அளவுக்கு மீடியாக்களின் பங்கு இல்லையே என்று கேட்பதற்கான உரிமை ஒருவனுக்கு உண்டு. மீடியா மக்கள் நலனை மையைப் படுத்தும் புள்ளி என்றால் - மக்களின் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் அணு மின் நிலையம் பற்றியும், மற்ற இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டு கூடங்குளத்தில் அமைக்கப் பட்டிருக்கும் அணுமின் நிலையப் பாதுகாப்பு முதற்கொண்டு உண்ணாவிரதம், போராட்டம் என்று அதில் ஈடு பட்டிருக்கும் மக்கள் கேட்பதற்கான உரிமை இருக்கிறது. அதை அவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதில் உள்ள உண்மைகளைக் குறைந்த பட்சம் கேட்பதற்கான திறந்த மனது வேண்டும்.

    ஏன் திறந்த மனது என்று பேசுகிறேன் - எல்லா அறிவு ஜீவிகளுமே - 'தாங்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ’ அதுதான் சரி என்கிற அளவில்தான் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். தங்களுக்குத் தேவை என்றால் பிறர் சதி என்று எழுதுகிறார்கள். காந்தியைப் பற்றி யாராவது விமர்சித்தால் இந்தியாவைத் துண்டாட அமேரிக்கா சதி என்று எழுதுகிறார்கள். காங்கிரஸ் இதைப் பி.ஜே.பி. யின் சதி என்றால் ஏற்றுக் கொள்ள மனம் வரலை. [இந்திராகாந்திக்குப் பிறகு ? ? ?] காங்கிரசில் ஜன நாயகம் இல்லை அது பிரித்தாளுகிறது –

    காந்தி கடவுளாக இருக்கலாம் - அதற்காக அவர் செய்தது எல்லாம் சரி என்று சொல்லுகிற அளவிற்குத் தான் நாம் இருக்க வேண்டும் என்றால் அது நாம் தனி மனித கடவுளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.

    தனக்கு வேண்டுமென்றால் மிகப் பெரிய அடையாளமாக இருக்கக் கூடிய நபர்களைக் கட்டுடைப்புச் செய்வது, தனக்குப் பிடித்த நபரை யாராவது கட்டுடைப்புச் செய்தால் அதை சதி என்பதும் 'திறந்த மனது என்பது' இருக்கிறதா என்றே தோன்றுகிறது.

    அருந்ததி ராயைப் பிடிக்காமல் இருக்கலாம் - அருணா ராயைப் பிடிக்காமல் போகலாம் - அதற்காக அவர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருப்பதை குறைந்த பட்சம் பார்க்காவாவது செய்ய வேண்டும்.

    முதலில் இது வரட்டும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. வராற்றின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் சொன்னார் - முதலில் சாதியை ஒழிப்பதற்கு வழியப் பாருங்கள் பிறகு விடுதலையைப் பற்றிப் பேசலாம் - இல்லை உன் வாயைப் பொத்து இதைப் பத்திப் பின்னாடிப் பேசிக்கலாம்னு சொன்னாங்க. அல்லது சில பேரு தனியாப் போகணும்னாங்க - இல்ல இப்ப ஒண்ணா இருப்போம் பின்னாடிப் பாத்துக்கலாம்னாங்க - வடக்கும் தெற்கும் எல்லாம் ஒன்னு - வளர்ச்சி மட்டும் வடக்கே - தெற்கு - எதுவாக இருந்தாலும் தெற்கு நிறைய வருமானத்தை கொடுக்கிறது - இரயில்வே சிறு உதாரணம் - ஆனால் வளர்ச்சி மட்டும் வடக்கேயாவா என்று சில பேர் கேட்டார்கள் - பேசாம இரு முதலில் இந்தி கத்துக்க பின்னாடிப் பார்க்கலாம். எவ்வளவு உயிர் போகிற பிரச்சனைகள் இருக்கு இங்கேன்னா - முதல்ல பேசாம இரு பின்னாடிப் பாத்துக்கலாம்னா - அது கூடப் பரவாயில்லை - அதுக்காக கேள்வி எழுப்புறவனைப் பத்தி மட்டமா விமர்சித்தால் நல்லா வளரும் பத்திரிகை சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் - ஜனநாயகமும்.

    ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அன்னா வின் முயற்சிப் பாராட்டப்பட வேண்டியதுதான் - அரசின் அடாவடித் தனங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக அன்னாவோடு சேர்ந்து போராடலாம்தான் - போராடனும்தான் - அதற்காக ஜன்லோக்பாலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ -

    அதைக் கேள்வி கேட்டால், கேட்பவன் சமூக அக்கறை இல்லாதவன் என்று முத்திரை குத்தப் படுவதோ, அல்லது அவன் ஊழலை விரும்புகிறான் என்பதோ - நாம் சமத்துவத்தையும், பல்வேறு தரப்பு நியாங்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளிக்கத் தெரியாத மனிதர்களாய் இருக்கிறோம் என்றுதான் பொருள். அதனால் தான் அன்னாவோ, அண்ணாவோ, யாரும் ஒரு சிம்பலாக்கப் படுவதை - ஐடல் -ஆக்கப் படுவதை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

    5.8.11

    சோ - வெனப் பெ [பொ]ய்யும் சமத் தாழ்வு மழை


    தமிழகத்தின் மிகச் சிறந்த காமெடியனும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளரும், தலை சிறந்த அரசியல் ஆலோசகரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படக்கூடிய திறமை வாய்ந்தவரும், வாதங்களை எடுத்து வைப்பதில் வேறு யாரைக் காட்டிலும் புலமை நிறைந்தவரும், - எனப் பலராலும் போற்றப் பட்டுக் கொண்டிருக்கிற சோ - வின் தலை சிறந்த வாதங்கள் நிறைந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  இட்லி வடை வரை சென்று அதைப் படித்துவிட்டு பிறகு இங்கு வந்து வாசிக்கலாம். 
    அதற்குப் பின்னூட்டம் போடலாம் என நினைத்து பிறகு இங்கே பதியலாம் என எழுதுகிறேன்.

    அந்தக் கட்டுரைக்குப் பதில் மொழி எழுதி அக்கட்டுரை - விளம்பரப் படுத்தப் படுமோ என்கிற வேதனை இருந்தாலும் - அது என்னமோ மிகச் சிறந்த கட்டுரை என்பதுபோலவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போலவும் எழுதியிருக்கிற மக்களைப் பார்க்கிற போது....
    சோவின் வாதம் - சமத்துவம் தவறு என்பதுதான். சாதி ஒழிப்பு தவறு - பிராமண எதிர்ப்பு தவறு. - சாராம்சம் இதுதான்-  அதில் வேற சுக்கு ஒன்னும் இல்லை. இதுக்கு மேல நாம் எழுதினா நாம் வாதத்தை திசை திருப்போரோம்னு சொல்லுவாங்க. ஆனா அவர் நல்லா திருப்பலாம்.
    • ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் பேசிய வசனமாம் - அப்ப இத்தனை ஆண்டுகள் எதுவும் மாறலை என்பதை விட - இவர்கள் பத்திரிகை  நடத்தி எதையும் மாற விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் - அப்படியா? நாடு எந்த விதத்திலும் வளர்ச்சியடையக் கூடாது - அப்போதுதான் இவர்கள் கிண்டல் செய்யலாம் - கேலிப் படங்கள் வரையலாம். பத்திரிகை  நடத்தலாம். 
    • சமச்சீர் என்ற சென்ற ஆட்சியாளர்கள் "ஸ்டன்ட்" அடித்தார்களாம்  ஆனால் அதை எதிர்க்கும் இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையானவர்களாம் - மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாம் - திராவிடம் என்பது பற்றி பேசாமல் அதனால் சமத்துவம் பற்றி பேசாமல் - ஏற்றத் தாழ்வை எப்போதும் உயர்வாய் வைக்கிறவர்கள்.
    • இந்த வக்கீல் - ஸ்டே ஆர்டர் பற்றியெல்லாம் பேசுவார்கள் - அனால் இந்த விஷயத்தில் மட்டும் இவர்களுக்கு எதுவும் புரியவில்லை. உயர் நீதி மன்றம் தவறு - உச்ச நீதி மன்றம் தவறு- இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் நீதி மன்றம் சரி - இல்லையென்றால் தவறு. 
    • "சமச்சீர் வக்காலத்துகள் வாய்ச்சவாடல்களாம்" - இவர்கள் மட்டும் என்ன சவடால்கள் என்று தெரியவில்லை.
      • சமச்சீருக்கும் விமானத்திற்கும் முடிச்சுப் போடுறாரு. படிக்கிற ஆளுங்கல்லாம் ஆமா - சோ தான் கரீட்டு - ன்னுறாங்க. எல்லாரும் விமானத்தில் போவதற்கான CAPABILITY இருக்காங்குறது வேற - எல்லாரும் துக்ளக் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லலை தலைவரே - எல்லாரும் துக்ளக் வாங்குறதுக்கான "வாங்கும் திறன்" இருக்காங்கிறதுதான் கேள்வி - அதுனால எல்லாரையும் நடந்து போகச்சொல்லலை - ரன் வே போடுறதுல மட்டும் கவனம் செலுத்தாம கிராமங்களுக்குக்கும் போக்குவரத்து வசதிக்கு வழி பண்ணுங்க - சென்னையில மட்டும் எல்லா வசதிக்கும் வழி பண்ணாதிங்க - தமிழ் நாட்டுல உள்ள எல்லாரும் வசதியோட வாழம்னு சொன்னா.. 
      • நல்ல ஹோட்டல் மோசமான ஹோட்டல்தான் இருக்குமாம் - எல்லா கடைகளிலும் கிடைக்கும் பொருள் சுத்தமான பொருளாய் இருப்பதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் - சில கடை மோசமாய்த் தான் இருக்கும், சில கடைதான் சுத்தமாய் இருக்குமாம் - அப்புறம் என்ன ராசா -அதுதானே சொல்ல வர்றீங்க -டீ மட்டும்  சாப்பிடறவன் வக்கத்தவன் - அவன் உருப்பட மாட்டான் - நீங்க மட்டும் நல்லா இருங்க - 
      • அப்புறம் அரசுப் போக்குவரத்து - அரசு அலுவலர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் போகச் சொல்லுவதில் கிண்டல் வேற... ஹுண்டாய் ல வேலை பார்க்கிற இவர் மாருதி கார்ல போய் இறங்கச் சொல்லுங்க ... இவங்க கோயில்ல மட்டும் வேற யாரும் போகக் கூடாது ஆனா அரசு அலுவலகங்கள்ல வேலை பார்க்கிறவன் அரசுப் பேருந்துல போகச் சொன்னா இவருக்கு என் வருத்தமா இருக்கு...
      • இது போல நிறைய சவாடல்கள் ---
    •  எவ்வளவு கோபம் பாருங்க - "ல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"    அவருக்கு என்ன பிரச்சனைன்னா உயர் நிலையில இருக்கிற எல்லாரையும் கீழ இழுக்கிறோம் அப்படின்றதுதான் பிரச்சனை. 
    • தரமான கல்வி கொடுக்கத்தான் ஜெயலலிதா சமத் தாழ்வு கல்வியை எதிர்க்கிறாராம் - தரமான கல்விக்கு தமிழக முதல்வரும் மிகச் சிறந்த உதாரணமாம்.  என்ன அருமையா - முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்டன்ட் அடிக்கிறார்களாம் - இவர் மட்டும் தரம் தரும் தனியார் கல்வியை ஊக்குவிக்கும் உத்தமாராம் - 
    • அடுத்து சித்த மருத்துவம் பற்றி வேற - அய்யா - மாற்று மருத்துவத்திற்கு வழி விடுங்க -
    • இதுக்கு மேல எழுதணுமா என்ன? 
    • விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேறு எழுதியிருக்கிறார் - நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும் - சமச்சீர் கல்வியை vதிர்ப்பதன் மூலம் - நாட்டில் ஏற்றத் தாழ்வும், சீர் கெடும், சாதியமும் தலை விரித்தாடும் - அதுதான் வேண்டும் என்று ஷோ காட்டியிருக்கிறார். 
    • அவரது வாதங்களுக்குப் பின்னே உள்ளது ஒன்றே ஒன்றுதான் - அதை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. முன்பு மோசமாய் இருந்த பாடத்திட்டமே கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம் போதும். அவர்களுக்கு எல்லாம் பள்ளிக் கூடமே தேவையில்லை - இதுல இதுவேறயா என்பதுதான் சோ - வின் வதம். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் இருக்க வேண்டும் - இதுதான் அவரின் நோக்கம். விஷத்தை எவ்வளவு அழகாய்ப் பூசி மொழுகுகிறார். 
      • எல்லாரும் எழுத வந்துட்டா என்ன ஆகிறது - சோ - வுக்கு வருத்தமெல்லாம் பதிவர்கள் மீதுதான் - எல்லாரும் எழுத வந்துட்டால்--- அவனவன் அவனவனுக்குப் பகவான் கொடுத்த வேலையைச் செய்துடால் அவாளுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.  நம்மாலும் படிக்கிறதுனால, எழுதுறதுனாலதான் பிரச்சனையே. அதனால் சோ எனா சொல்ல வர்றார்ணா ...
    • ஏற்கனவே இது போன்ற விவாதங்கள் பற்றிய ஒரு கட்டுரை- 
    சோவெனப் பெய்திருக்கும் இந்தப் பொய் மழையில்,  இது சமத்தாழ்வு என்பதற்கான எந்த வாதமும் இல்லை. வெறும் பொய் வாதங்கள் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வசனங்கள் - கிண்டல் என்ற பெயரில் விஷம் - அரசு பஸ் - இல்லை அரசுப் பேருந்து - தமிழ் கூட அவருக்குக் கிண்டல் ஆகிவிட்டது.  பேருந்தை அவா எப்படிச் ஷோல்லுவான்னு ஷோன்னா நன்னாயிருக்கும். இதை வெளியிட்டு இட்லி வடை - தயிர் வடையாகிக் கொண்டிருக்கிறதே என்பதுதான் எனது வருத்தம் - 

      25.1.11

      இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும்


      விளையாட்டு வினையாகும் என்பார்கள்.
      விளையாட்டாய் ஒரு மெயில் அனுப்பப் போய் அது எதிர் வினையாகிவிட்டது.

      நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்பியது அனைவருக்கும் தெரியட்டுமே என்று மீண்டும் இங்கே.
      முன்பே பதிவு செய்யப் பட வேண்டியது தாமதமாய் வருகிறது.
      வேலைப் பளு - வேறென்ன செய்வது? இனி ...

      ஞானியின் இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும் பலரால் விரும்பிப் படிக்கிற பகுதி. விகடன் வாங்கியவுடன் அந்தப் பகுதியை வாசித்து விடும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்தித்த பகுதி அது. ஞாநி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் - அரசின் மிரட்டல்களுக்கு பத்திரிக்கைகள் பணிந்து அவர் பக்கம் பத்திரிகையில் மறுக்கப்பட 'பத்திரிகை விட்டு பத்திரிகை தாவி' -  ஒற்றைக் குரலாய் அரசு இயந்திரத்தைச் சாடும் அவருக்கு என்றும் நாம் பூச் செண்டு கொடுக்கலாம்.

      ஆனால் அதே சமயம் - இ.வா.திட்டு. - சங்கமம் விழாவை தமிழ் மையத்துடன் இனைந்து நடத்தும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சென்று சேரும் என்று ஞானி எழுதியதனால் அவரை நாமும் திட்டுவது சரி என்றும் படுகிறது என்றும் எழுதினேன்.
      நமது "திட்டை"  ஆயிரமாயிரம் பேர் படித்து கோபம் கொள்ளப் போவதுமில்லை - சண்டைக்கு வரப் போவதுமில்லை. இருந்தாலும் சில கேள்விகளை எழுப்புவதுதான் எனது நோக்கம்.
      • இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை தமிழ் மையத்தோடு இனைந்து சங்கமம் நடத்துமெனில் அவரின் திட்டு சரியாகும். எப்போதும் நிகழ்கிற நிகழ்வின் தொடர்ச்சி என்கிற போது இந்தத் திட்டு சரியா?
      • ரெய்டு நடந்ததால் அவர் குற்றவாளி என்ற 'முன் முடிவோடு' அவரோடு இணைந்து ஒரு விழா நடத்துவது தவறு என்று சொல்வது சரியா?
      • அரசு இயந்திரங்களின் அனுமதி இன்றி எதுவும் நடக்காது. பல சமயங்களில் அவைகளின் தூண்டுதலின் பேரில் ரெய்டு நடத்துவதும், அதற்குப் பிறகு அமைதி காப்பதும், என்கிற அவ நிலையில் இருக்கும் இந்த அமைப்புகளுக்கும் அரசிற்கும் இந்த வாரத் திட்டு பொருந்தும் என்று தோன்றுகிறது. மைய அரசின் அனுமதியின்றி ஊழல் ஒழிக்கப் படவேண்டும் என்கிற நீதியின் அடிப்படையில் மட்டும் நமது அரசு அதிகாரங்கள் பணி புரியும் சுதந்திரத்தோடும், அர்ப்பணத்தோடும் எப்போதைக்கு வருகிறதோ .... அது இப்போதைக்கு இல்லை என்பது ஞாநிக்கு மிக நன்றாகத் தெரியும். தனிப்பட்ட விதத்திலே அந்தக் கொடுமைகளுக்கு [ரெய்டு இல்லை / அனால் மிரட்டல்கள், இத்யாதிகள்] ஆளானவர் என்கிற விதத்தில் இதை அவர் அறிவார்.
      • குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தான் 'தான் எப்போதும் செய்யும் செயலைச் செய்ய வேண்டுமென்றால், இந்திய, தமிழக அரசியலில், ஊழலற்ற அமைச்சகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், குற்றம் சாட்டப்படாதவர்கள், எத்தனை உண்டு? அவர்கள் என்னதான் செய்ய முடியும்? எதுவும் அசையாது -
      • அரசின் பணம் ஒரு தனி நிறுவனத்தோடு இனைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்விற்கு வழங்கப் பட வேண்டுமா என்பது கேட்கப் படலாம். ஆனால் இத்தகைய கேள்விகள் ஏற்கனவே கேட்கப் பட்டுவிட்டன. தமிழக பண்பாட்டுத் துறையில் - தமிழ் மையத்தோடு இனைந்து பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப் படும் சங்கமம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உண்டு என்றாலும், அதில் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும் - வருடா வருடம் நடந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்விற்கு - இந்தவாரத் திட்டு என்பது குறித்தே நான் எழுதினேன் [என்று நினைக்கிறேன்].
      • எப்படி இருப்பினும் அரசுக்கு எதிராய் தொடர் குரலாய் - ஒற்றைக் குரலாய் இருக்கும் ஞானிக்கே இந்தவாரப் பூச்செண்டும். ஆனாலும் நன்றாய் எழுதும் ஞானி தொடர்ந்து தேவையற்ற முன்முடிவுகளோடு எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது.

      26.4.10

      குமுதம் தொடரும் சர்ச்சை

      குமுதம் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அவர் கைது செய்யப் பட்டதை Flash செய்தது.

      இது சன் குழுமத்திற்கும் குமுதம் குளுமத்திற்குமான சண்டையின் எச்சமாகத்தான் தெரிகிறது. சன் குழுமத்திற்கு ஏதாவது நடந்தால் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்கிறார்கள். ஆனால் அடுத்தவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதிக இவர்கள் ஆதாயம் காண முயல்கிறார்கள்.
      நிர்வாக இயக்குனர்களுக்குள்ளான மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், தமிழக காவல் துறையினரின் சில நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளாதாக சிலர் கருதுகிறார்கள்.

      ஒரு வேளை, குமுதத்தையும் சன் குழுமம் வாங்க முயற்சிக்கிறதோ என்னவோ?

      6.3.10

      பத்திரிக்கை சுதந்திரம்

      பல நாட்களாகியும் இந்தப் பிரச்சனை முடிந்த பாடில்லை.

      சன் (தொ. கா.) மற்றும் நமது முதல்வர் - இன்னும் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கின்றார்கள்.

      பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

      தமிழக முதல்வர் - இது போன்ற (நித்தியானந்தம் படுக்கைக்) காட்சிகள் முதலில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - அதன் பிறகே இதை ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்கிறார் -
      (அவர் கைது செய்யப்பட்ட போது இதைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்). - அப்படிச் செய்தால் என்ன ஆகும்?


      அப்படிச்செய்தால் இப்போது தொலைகாட்சி வியாபாரம் செய்வதை அரசே ஏற்று நடத்தும். செய்தி வெளிவராது - ஆனால் அதற்காக சம்பந்தப் பட்டவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
      எத்தனை மிரட்டல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் - எவ்வளவு பணம் கை மாற வேண்டும் - அவர்களின் காவலனாக அல்லது இறுதி வரை அவர்கள் எல்லாருக்குமே கைப்பாவையாக - ஆட்டுவிக்கிற விதத்தில் எல்லாம் ஆடுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். அதற்கு இப்படி செய்தி வெளிவந்தால் பரவாயில்லை.
      உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் நமது முதல் அக்கறை. முதல்வர் சொல்வதுபோல செய்தால் பத்திரிக்கைகள் எல்லாம் மீண்டும் அரசின் காலடியில் கிடக்க வேண்டியதுதான்.

      நாளைக்கு அரசைப்பற்றிய ஒரு சி.டி வந்தால் - அதையும் அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமா?

      ஏற்கனவே தென் இந்தியாவின் (குறிப்பாக )தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வானொலிகள் என்று எல்லாத் தளங்களிலும் தனது அக்டோபஸ் கரங்களை விரித்து நிற்கும் ஒரு குடும்பத்தினரின் பார்வைகள் மட்டுமே உண்மையாக வெளி வருவதைத்தான் நாம் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இப்போது திரைப்படங்கள் வெளியிடவும் தொடங்கியாற்று.

      ஒருவேளை தமிழன் இப்படி வளர்ந்திருக்கிறானே என்று வேண்டுமானல் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளரும் தொழில் அதிபர்கள் இது போன்ற செயல்களை எல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் நல விரும்பிகள் நினைக்கலாம். நமக்கென்ன -


      யாரும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி என்றால் நாம் கூட இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்க முடியாது. பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று நாம் நம்புகிறோம்.
      அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக - பணத்தையோ, பலத்தையோ பயன் படுத்தி உண்மையை மறைக்க நினைக்கும் அனவைருக்கும் எதிராக- உண்மையை வெளிக்கொணரும் கருவி - ஆயுதம் - வாள் --- எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

      சன் தொ.கா. என்பது நமது எதிரியல்ல.
      நாம் யாரை எதிரியாக நினைக்க வேண்டும்?
      பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எழுதுகிறோம்.

      இந்த வீடியோ வேறு யாரிடமாவது முதலில் போயிருந்தால் அவர்களும் இதைதான் செய்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அதைத்தான் தவறு என்று சொல்கிறோம்.

      ஒரு பொது நபருக்கு என்ற அறம் இருக்கிறது . அதிலிருந்து அவர் தவறும் போது அதை சுட்டிக் காட்டுகிறோம் என்பதில் உள்ள அக்கறை - அதே சமயத்தில்
      பத்திரிக்கைகளுக்கும் அறம் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதும் உண்மைதானே. ஒரு பத்திரிக்க வெளிவருகிறது என்றால் அதுவும் ஒரு பொது நபர் போலத்தானே. அப்படியெனில், அது வழி மாறும் போது அதன் தவறை யார் சுட்டிக்காட்டுவது. அது அறம் தவுறும் போது யார் வெளிக்கொணர்வது?

      பத்திரிக்கை என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது என்று சொன்னால் - அது வெறும் வியாபாரம் என்று மட்டும் சொல்லுங்கள். வெறும் வியாபாரம் செய்கிறவர்களுக்கு மக்கள் மேல் என்ன அக்கறை. மக்கள் மேல் உள்ள அக்கறையினால் தான் இப்படிச் செய்கிறோம் என்றால் நமக்கென்று ஒரு அறம் இருக்கிறது. என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

      ஒரு சில பத்திரிக்கைகள் தவறு செய்வதால் அனைவரும் தவறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இதைப் பார்த்து எல்லோரும் இப்படிச் செய்துவிடலாம் என்று வழி மாறக் கூடாதே என்ற உணர்வே இது.


      எப்படி அரசாங்கம் தனது அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ (பத்திரிக்கைகளின் உண்மையான பலத்தால் அரசின் தவற்றை சுட்ட வேண்டும், அது முடியும் )அதைப் போலவே பலம் வாய்ந்த பத்திரிக்கை நினைத்தால் எதையும் செய்துவிட முடியும் என்கிற நிலையும் மாற வேண்டும்.

      அசுத்தப்படுத்துவது யாரு?

      தமிழகத்தில் மக்கள் சிரிப்பதற்கு இருக்கிற ஒரே நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி மட்டுமே. யார் எதை மறந்தாலும் சனிக்கிழமை இரவு 10.00 மணியை யாரும் மறப்பதில்லை என்று (அவர்களே)எல்லாரும் சொல்கிறார்கள்.

      யார் மனதையும் புண்படுத்தாத ஒரே நிகழ்ச்சி இதுதான் என்றும் சொல்கிறார்கள். எனக்கென்னமோ அப்படி எல்லாம் ஏதும் தோன்றவில்லை.

      பெரியவர்கள் நன்றாகத்தான் சிரிக்கவைக்கிறார்கள்.

      ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள். பிஞ்சில் பழுத்த பழங்கள். 10 அல்லது 15 வயது கூட இருக்காது. ஆனால், அவன் மனைவியை இவன் இழுத்துக்கொண்டு போனான், இவன் மனைவியை அவன் இழுத்துக்கொண்டு போனான் என்கிற விதத்தில் சிறுவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது - இந்த நாட்டில் யாருமே சரியில்லையா. எல்லாரும் இப்படிதான் இருக்கிறார்களா என்கிற கேள்வி மனதில் உதிக்க வில்லையா?

      எல்லாரும் இப்படிதான் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்றால்
      நித்தியானந்தம் மேல்மட்டும் என்ன அக்கறை.

      முதலில் 10 வயது சிறுவர்கள் ஓடிப்போவதைப்பற்றி பேசுவதை நிறுத்தட்டும். நான் வச்சிக்கலாம்னு வந்தேன் இப்படி ஓடுனா என்ன அர்த்தம் என்று சிட்டி பாபு பேசுவதையும், அதைத்தொடர்ந்து அனைவரும் கை தட்டுவதையும் நிறுத்தட்டும்.


      நல்ல செய்தியை சொல்கிறேன் என்று அதற்கு முன்பு நாத்தம் புடிச்ச செய்தியா சொல்வதை நிறுத்தட்டும்.

      நாம் அசிங்கப்படுத்தினால் அது அசத்தல் - மற்றவன் செய்தால் அசிங்கம்.