31.3.11

தேர்தல் - கதாநாயகி தேர்தல் அறிக்கை

கதாநாயகன் - கதாநாயகி என்பதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் என்றில்லை. நமது தேர்தல் அரங்கத்திலும் மிகப் பெரிய இடத்தை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கதாநாயகன் - இப்போது இன்னும் நிறைய இலவசங்களோடு - கதாநாயகியாக வளம் வருகிறாள் - தேர்தல் அறிக்கை.

இரண்டு மிகப் பெரிய கட்சிகள்.  ஆனால் ஒரே காட்சி - ஒரே கதாநாயகி.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க  - இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி நடத்தலாம். 

தமிழக அரசியலில் இந்தக் கதா நாயகிக்கான வேறு பாடெல்லாம் ஒன்றுமில்லை. தொப்புள் தெரிய உடை உடுத்தி கவர்ச்சியோடு நடனமாடும் பெண்  மிகச் சிறந்த கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளப் படுவது போல, இலவசங்களால் நிறைந்திருக்கிற அறிக்கை மிகக் சிறந்ததாக அங்கீகாரம் பெரும் என்று நினைத்து வெறும் இலவச அறிவிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

இலவச லேப்டாப் தொடங்கி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி எல்லாம் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. எல்லா கட்சிகளும் இதையே வழங்குகின்றன. கடந்த முறை எப்படி இப்படிக் குறைந்த  விலையில் அரிசி கொடுக்க முடியும் என்று கேட்ட செல்வி. ஜெயலலிதா, பிரச்சாரத்தின் பொது, கூட்டணிக் கட்சிகளுக்கு கூடச் சொல்லிக் கொள்ளாமல், திடீரென தானும் அரிசி வழங்குவதாகக் குறிப்பிட்டார். இப்போது முன்பே அவரும் லாப்டாப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

இலவசங்கள் என்பது பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவதில் அடங்காது. அது வாக்குறுதி. முன்பே வாங்கி ஓட்டுப் போடுவதுதான் குற்றம் அல்லது முன்பே கொடுத்து ஓட்டுக் கேட்பதுதான்  குற்றம்.

அதனால் எந்த வாக்காளரும் குற்றவாளிகள் இல்லை - எந்த அரசியல் வாதிகளும் சட்டப்படி குற்றவாளிகளும் அல்ல. இனிமேல் வரும் என்கிற நம்பிக்கையில் ஓட்டளிப்பார்கள் - இனிமேல் கொடுக்க வேண்டுமென்று ஓட்டுப் பெறுவார்கள்.

  • கலைஞர் நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார். அதை ஏற்கனவே ஓட்டுப் போட்டதற்கான பொருள் என்றாலும் சரி அல்லது இனிமேல் போடப்போவதற்கான பொருள் என்றாலும் சரி. வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதால் அவர் பக்கம் நிறைய ஒட்டு விழ வாய்ப்புகள் இருக்கின்றன. செல்வி இனிமேலாவது செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை - ஆனால் என்ன - எப்படி இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஒன்றும் செய்ய இயலாது.

  • ஏன் கொள்கைகளைக் காட்டிலும் [அப்படி ஒன்னு இருக்கா] - இலவசங்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கிறார்கள். சொல்வதற்கு அல்லது செய்வதற்கு ஒன்றுமில்லை - மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் - தன்மானம் தன்மானம் என்று எல்லாரும் பேசுகிறார்களே இலவசங்கள் அந்தத் தன்மானத்தை கொடுக்கிறதா?
தன்மானத் தமிழர்கள் நாம் - நமது குழந்தைகளுக்கு லாப் டாப் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கிரைண்டர் கிடைக்கும்... தன்மானம் கிடைக்குமா?


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


இதற்கான விளக்கம்:
திரு மு.கருணாநிதி உரை



  • பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

    இலவசங்களை அள்ளி வீசும் தலைவர்கள் மக்களை என்னவாக ஆக்குகிறார்கள்? கலைஞருக்குத் தெரியாதா என்ன?


  • திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் என்ன செய்வாரோ?

    • "கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலன்னு ஒரு பழமொழி உண்டு. இலவசங்கள் யாருடைய காசிலிருந்து கொடுக்கப் படுகின்றன. எந்த அரசியல் தலைவரும் அவர்களுடைய வருமாந்த்திளிருந்தோ, லாபத்தில் இருந்தோ, செய்வது இல்லை. எல்லாமே மக்களின் வரிப் பணம்தானே. [இதனால்தான் என்னவோ நேரடி டாக்ஸ் செலுத்துபவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லையோ?]
    • இதைத்தான் பலர் கடைத் தங்கையை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தவறு என்றார்கள். அப்படிச் சொன்ன செல்வி அவர்களே இப்போது அவர்கள் ஒன்று உடைத்தால், நாங்கள் நான்கு உடைப்போம், என்கிறார்கள். ஏற்கனவே,  தமிழக பட்ஜெட்டில், ஏற்கனவே கோடிகள் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது... இன்னும் நிறைய விழும்.

    எது எப்படியோ?
    இனி தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும், [ஏற்கனவே தொலைக்காட்சி உள்ளது, எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் இருக்கும்... கரண்ட் இருக்குமா?





    0 comments:

    கருத்துரையிடுக

    பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்