20.3.11

தேர்தல் 2011 - ஓர் ஆருடம்!

தேர்தல் - 2011 ஓர் ஆருடம்!
  •  உலகம் முழுவதும் ஏனோ - 13 ம்  தேதி பற்றி மிகப் பெரிய அச்சம் உண்டு. அதுக்குப் பேரு வேற இருக்கு - Triskaidekaphobia .  ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் அதைப் பற்றிய அச்சமே இல்லை என்பது பெருமையான விசயம்தான். உண்மையிலேயே நாம்தான் வளர்ச்சியடைந்த நாடு. 2001 மற்றும் 2004 தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்ட நாள் 13 .  இப்போது மீண்டும், ஏப்ரல் 13 - தேர்தல் முடிகள் எண்ணப்படும் நாள் மே 13 . 

  • ஆனாலும், ஒரு பக்கத்தில் ஆருடம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பதும் நாம் அறிந்ததே. தேர்தலின் கூட்டணிகள் உருவாகும் முன்னரே, யார் வெற்றி பெறுவார் என்று ஜோசியம் பார்த்து முடிவுகளை எல்லாரும் முன்னறிவித்து விட்டார்கள். 

  • நமக்கு சுக்கிரன் பற்றியும், புதன் பற்றியும் தெரியாது. திரு கலைஞர் அவர்களுக்கு மஞ்சள் சால்வை போடச் சொன்னவரோ, செல்வி. ஜெயலலிதா அவர்களை தொகுதிப் பட்டியல் அறிவிக்கச் சொன்ன ஜோசியரோ யாரென்று தெரிந்தால் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து விட்டு வரலாம். 

  • முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்தால் - எதற்கு பண விரயம் செய்து தேர்தல் நடத்த வேண்டும்? எவ்வளவு செலவு? 
  • எல்லாரும் ஒத்துக் கொண்டால், ஆருடம் சொல்பவர்களை வைத்து அடுத்த ஆட்சியை அமைத்து விடலாம். தேர்தல் ஆணையம் இதைக் கணக்கில் கொண்டால், செலவில்லாமல் அடுத்த ஆட்சி அமைக்கலாம்.

  • சிக்கல் என்னவென்றால் அ. தி. மு.க. ஒரு ஜோஷியரையும், தி.மு.க. ஒரு ஜோஷியரையும், பா.ஜ.க. ஒருவரையும், நடிகர் கார்த்திக் ஒருவரையும் அழைத்து வந்து நட்சத்திரங்களின் வரிசைக் கிராமத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் அவர்களை அழைத்தவரே அடுத்த முதல்வர் என்பர்.  
  • அவர்களுக்குள்ளான சிக்கலைத் தீர்க்கத் தான் தேர்தல் - ஏப்ரல் பதின்மூன்று...

  • பதின்மூன்று ராசியில்லாத எண் என்பது எதைக் குறிக்கிறதென்றால் ... நம்ம தலையெழுத்து. 
  • தேர்தல் கமிஷனுக்குத் தெரியாதா? எந்த நாள் தேர்தல் வைத்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு என்றுமே ராசி இல்லைதான் என்று. எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் நல்லதாய் நடக்கப் போவதில்லை. அப்புறம் எதற்கு நல்ல நாள்? நல்ல தேதி? எப்படி இருந்தாலும், நமது தலை மீது சுக்கிரனும் சனியும் சேர்ந்து வரப் போகிறது. அப்புறமென்ன? 

  • தேர்தல் கமிஷன் இதை உணர்ந்து வைத்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ராசியின் மீது நம்பிக்கை உண்டா இல்லையா என்பதைக் கணிக்க கடினமாக இருக்கிறது. 
  • அப்ப நாம வளர்ச்சியடைந்த நாடா வளராத நாடா? 
  • வெளிக்கட்டுரை   இணைப்பு

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்