23.3.11

தேர்தல் நாடகம் - ஒரு திரைப்பட விமர்சனம்

தேர்தல் நாடகம் - திரைப்படம்

  • தேர்தல் என்பதும் அதனை ஒட்டிய கூட்டணி நிகழ்வுகளும் திரைப்படங்களுக்கு மேலாக நடந்திருக்கிறது. 
1 . கழகமும் காங்கிரசும் 
    • கலைஞர் கடந்த முறை மத்திய அரசில் கேட்ட அமைச்சகம் கிடைக்கவில்லை என்றவுடன் திரும்பி சென்னை வந்தார். இம்முறை கலைஞர் பாணியை காங்கிரசும் பின் பற்றத் தவறவில்லை.
    • இம்முறை டெல்லி சென்றபோது பல மணி நேரம் காத்திருந்தது மட்டுமல்ல, மிகப் பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார்.
    • காங்கிரஸ் அதிக சீட்டு கேட்கும் என்றவுடன் - பா. ம.க. எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்ற புதிய காட்சி அரங்கேறியது.
      • அந்தக் காட்சியின் உள் காட்சிகள் மிகவும் சுவராசிய மானவை.
      • பா. ம.க. நாங்கள் இல்லை என்றது. 
      • அதன் பிறகு கழகத் தலைவர் "அவர்களே இல்லை என்ற பிறகு நாங்கள் என்ன சொல்லுவது என்றார்...
      • இறுதியில் சுபம்.
    • இந்த எதிர் பாராத திருப்பத்தால், காங்கிரஸ் சீட்டுகளைக் குறைவாகக் கேட்கும் அல்லது குறைத்துக் கொடுத்து விடலாம் என்று அவர் எழுதிய நாடகக் காட்சியை விட காங்கிரஸ் திகில் பட திரைக் கதையைக் கையில் எடுத்தது.
    • 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இதனால், ஒன்று கலைஞர் வெளியேறுவார் அல்லது தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கொக்கிப் பொடி போட்டது.
    • இது திரு ராசா அல்லாமல் திரு. கருணாநிதியின் குடும்பத்தவருள் ஒருவரென்றால் இந்தப் படம் எப்போதோ காங்கிரஸ் எதிர் பார்த்த படி முடிந்திருக்கும். எனவே, மீண்டும் ராசாத்தி அம்மாள், கனிமொழி என்று கொஞ்சம் சீண்டிவிட ...
      • இடையில் திரு வீர மணி அவர்கள் 'நட்புக்காக' சிறப்பு வேடம் பூண்டு சில அறிக்கைகள் விட...
      • காங்கிரஸ் எதற்கும் மசிவதாய் இல்லை. 
      • மிக வலுவான ஏதோ ஒரு துருப்புச் சீட்டு அவர்கள் கையில் கிடைத்து விட, கலைஞர் தனது சாணக்கியத் தனத்தை நொந்துகொண்டே  [அல்லது வேறு வழியில்லாமல் - அப்படியும் சாணக்கியத் தனம்தான் ]  எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ள ஒரு வழியாய் காங்கிரசுக்கு எதிர் பாராத வெற்றி.. காங்கிரஸ் இப்போதே வெற்றி பெற்று விட்டது.
      • இந்த நாடகத்தைத் தொடங்கி வைத்தவர் திரு கலைஞர். இதில் மேடைக்கு வராமலே நடித்தவர்கள் - சி.பி. ஐ. அதிகாரிகள். இதைத் திரைப் படமாக மாற்றி இயக்கியவர் திருமதி சோனியா காந்தி. இணை இயக்கம் நிறையப் பேர். காமெடி ரோல் திரு இளங்கோவன். Tragic முடிவு திரு ராசாவுக்கு [ராசியில்லா ராசா]. 
      • வருத்தம் கலைஞருக்கு. காரணம் - தன்னை மிஞ்சும் அளவுக்கு வசன கர்த்தாக்களையும் இயக்குனரையும் இப்போது அவர் கண்டு கொண்டு விட்டதால். [இனியாவது திரைப் படங்களுக்கு தலைவர் வசனம் எழுதுவதை விடுவாரா?]
      • எது எப்படியெனினும் வெளியில் சுபம். 
    • ஆனாலும் ஒருவேளை தி. மு.க வென்றால் நிச்சயம் இதன் இரண்டாம் பாகம் மிகவும் விறு விருப்பை வெளி வரும். அதுவரை திரு. ராசா, காங்கிரசின் பிடியில் தான் இருப்பார். 
2 . கழகமும் - கழகமும்
    • ஒரு பக்கம் விறு விறுப்பாய்,  நாடகம் அரங்கேற, மறு பக்கம் அ.தி.மு.க.வும் தன பங்கு நாடகத்தை அரங்கேற்றியது. காங்கிரஸ் தன் பக்கம் வரும் என்று எதிர் பார்த்தது. அது நடக்கிற மாதிரி இல்லை. முதலில் அ.தி.மு.க. ஆதரவை அறிவித்தவர் - நடிகர் கார்த்திக். வழக்கம் போல, தானே நடிகர், தானே இயக்குனர், தானே வசனம் என்று நிரூபித்து, கார்த்திக்குற்கு ஒரு சீட்டு கூட கொடுக்காமல் அந்த சீனை முடித்து விட்டார்.
    •   அதன் பிறகு விறுவிறுப்பு ஒன்றும் இல்லாமல், இது சாதா நாடகம் என்கிற அளவிற்கு, யார் வந்தாலும் சீட்டுக் கொடுத்து அவர்களை அரவணைத்தது இது இவர் படம் தானா அல்லது வேறு யார் படத்திற்கும் மாறி வந்து விட்டோமா என்கிற அளவிற்கு சுவாராசியமே இல்லாமல்தான் போனது. 
    • நாடக அரங்கிற்கு வெளியே, சிறப்புத் தோற்றமாக, இம்முறை திரு. மு.க. அழகிரி, அவர்கள் - "திரு விஜயகாந்த் அவர்கள் தன் மானம் மிக்கவர், ரோஷம் மிக்கவர், என் நண்பர் " அவர் அ.தி.மு.க.வில் எல்லாம் சேர மாட்டார் " என்று சொல்லி உசுப்பேத்திவிட்டாலும் - அது புஸ்-ன்னு போக, தே.தி.மு.க. நிறைய இடங்கள். 
    • விறு விருப்பில்லாமல் சென்றது பிடிக்காமல், கூட்டணித் தலைவர்கள் சென்றவுடனேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேட்ட பல இடங்களில் அ.தி.மு.க. தனது இடங்களென அறிவிக்க பிடித்தது சூடு.
    • எதிர்பாராத உள்காட்சி 
      • இம்முறை உள்காட்சிக்குக் காரணம் [மேலே திருமதி. சோனியா காந்தி போல]  செல்வி. ஜெயலலிதா.  பல ஆண்டுகளுக்கு முன்பு த.மா.கா. உதயமானபோது எப்படி இருந்ததோ அப்படி மீண்டும் ஒரு புதிய கட்சி இல்லையென்றாலும், புதிய கூட்டணியாவது உருவாகும் என்ற சூழலில், பதட்டம். செல்வி ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிப்பு [நரசிம்ம ராவின் உருவ பொம்மை எரிப்பை நினைவில் கொள்க]... 
      • அடுத்த நாளே நிலைமை தலைகீழாய் மாறிப் போனது. 
      • நல்ல வாய்ப்பைத் தவற விட்டவர்கள் - தே.தி.மு.க. கடந்த முறையே, ஏறக்குறைய இருபத்தி ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேலே வாங்கியவர் இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியிருந்தால், பல சுவராசியமான காட்சிகள் முதல் படத்தில் அமைந்தது போல நடந்திருக்கும்.
    • ஆனால், செல்வி. ஜெயலலிதா, தானே இயக்குனர், தான் இயக்கும் படியே அனைத்தும் நடக்கும் என்று, எந்த வித புதிய காட்சிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இந்த விஷயத்தில், திரு.கலைஞரை விட மிகச் சிறந்த இயக்குனர் என்ற  தகுதி அவருக்கு உண்டு. 
      • சிறந்த நடிகர்கள் - அம்மா அம்மா அம்மா. சிறந்த நடிகை, சிறந்த வில்லி, கருணை மிகுந்த அம்மா, எல்லாமே அவர்தான். சிறந்த காமெடியன்கள், கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள். Trajic முடிவு திரு.வை.கோவிற்கு [வேதனையில் வை.கோ]. அடுத்த trajic குணச்சித்திர நடிகர் திரு. சீமான். சீனுக்கு வராத tragic ஹீரோ திரு.விஜய் அவர்கள்.   உள்ளுக்குள்ளே கூட்டணித் தலைவர்கள் முனு முனுத்தாலும், வெளியில் சுபம். எல்லாரும் ஒரே மேடையில் தோன்றுவர்.
    • ஆனாலும் ஒருவேளை, அ.தி.மு.க. வெற்றி பெரும் பட்சத்தில், விறு விருப்பான இரண்டாம் பாகம் நிச்சயமாய் வெளிவரும். தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளின் நிலை இப்படி என்றால் .... 
  • 3 . கட்சியும் கழகமும்
    • படமே எடுக்காமல் மிகவும் நல்ல நிலைய அடைந்தவரும் உண்டு, மிகவும் மோசமான நிலையை அடைந்தவரும் உண்டு. 
    • பா.ம.கட்சி, எதிர்பார்த்து எதிர்பார்த்து, தூது விட்டு ஒன்றும் நடக்காமல் போய் எதிர் பாராமல் அடித்தது லக்கி பிரைஸ். இடையில் கொஞ்சம் வசனம் எழுதலாம். கொஞ்சம் இயக்கலாம் என்று பார்த்தது - ஆனால் அடக்கி வாசித்து மரியாதையோடு சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது. 
    • தானும் நடித்துக் கொண்டிருக்கிறோம், திரைப்படத்தில் இருக்கிறோம் என்று மிகவும் சுறுசுறுப்போடு  சீமானை உள்ளே அழைத்து வந்து ரொம்ப நம்பிக்கையோடு இருந்த ம.தி.மு.கழகம், கல கலத்துப் போகும் அளவிற்கு பேச்சே இல்லாமல் போய் விட்டது. பா.ம.க. வாவது பேச முயற்சித்தது. இவருக்கு அதுவும் முடியவில்லை. படமும் இல்லை, வசனமும் இல்லை. முயற்சியும் இல்லை. ஆக மொத்தத்தில் இப்போதே தோற்ற மூத்த தலைவர். நடிக்காமலே களைத்த தலைவர் - இயக்காமலே இயக்கம் இழந்த தலைவர். இது இப்படி ஆகுமென்று யாருக்குத் தெரியும். அம்மாவிற்கு விசுவாசமாய் இருந்தால் இப்படியும் நடக்கும்.
    • ஆனாலும், திரு. வை. கோ. "தனிக்காட்டு ராஜா" வாக இப்போது இருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது.  இதுதான் அவருக்கு எதிர்பாராத திரைப் படம். இதில் தனது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்று வாக்களிக்க பிரச்சாரம் செய்வாரானால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • ஒரு விதத்தில் பார்த்தால் இப்போதே காங்கிரசு வெற்றி, ம.தி.மு.க. தோல்வி. எனவே இனிமேல் வெற்றி பெற வேண்டியது அ.தி,.மு.க.வா அல்லது தி.மு.க.வா என்பது மே. பதின்மூன்றுதான் தெரியும்.  

  • அதன் பிறகே இரண்டாம் பாகம் தொடரும் - இம்முறை இன்னும் விறுவிறுப்போடு.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்