9.3.11

அகில உலக மகளிர் தினம்

அகில உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல. 

பெண்களின் விடுதலையை முன்னெடுக்கும் ஆண்டாக இது இருக்க விழைகிறோம். பெண்களின் விடுதலை என்பது அவர்களிடமிருந்தே வரவேண்டும். யாரும் யாருக்கும் கொடுப்பதால் ஒன்றும் வந்து விடாது. 

தாயின் குணங்கள் இந்த உலகத்தில் இருந்தால், இந்த உலகத்தில் பாதி பிரச்சனைகள் முடிந்து விடும். தாய்ப் பாசம் என்பதைப் பற்றி பேசவில்லை - அது பல சமயங்களில் அவர்களை ஏமாளிகளாக்கி விடுகிறது.  ஆனால் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், பிறரை வளர்த்தெடுக்கும் குணமும்.

இதனால்தான் பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டார்கள் என்றொரு வரலாறு உண்டு என்றாலும் - மீண்டும் அவர்களை அடிமைகளாய் இருப்பதற்காய் நான் இதை முன்மொழிய வில்லை. மாறாக, நல்ல எண்ணங்களும், புதிய உலகத்திற்கு புதிதாய்ப் பலரை அறிமுகப் படுத்தி வாழ்விற்கு அடித்தளம் இடும் நற்பண்பிற்காய் சொல்கிறேன்.

பெண்கள் நம் அனைவரின் கண்கள்...


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்