6.4.10

ஒரு வார நோயும் போலி மருந்துகளும்

தமிழர்களுக்கு ஒரு வார நோய் பிடித்திருக்கிறது.

எந்த நிகழ்வாக இருந்தாலும் அது ஒரு வாரம்தான்.
எதைப் பற்றியும் ஆழ்ந்த அக்கறை நம்மிடத்தில் இல்லை.

பள்ளிக்கூடம் தீப் பிடித்தது - பள்ளிக்கூடங்கள் எப்படி செயல்படவேண்டும் என் அதிரடி நடவடிக்கைகள். இப்போது தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எப்படி செயல் படுகின்றன? அதிரடி நடவடிக்கைகள் என்னவாயிற்று?

மன நலம் பாதிக்கப் பட்டவர்கள் சங்கிலியில் கட்டப்பட்டு உயிர் போனபோது மனித உரிமைகள் நினைவுக்கு வந்தது. இப்ப்போது என்ன ஆயிற்று...

கள்ளச்சாராயம் குடித்து ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு கண் போனது, உயிர் போனது - உடனே நடவடிக்கைகள்... அத்தோடு அதை மறந்தாயிற்று. இன்னும் ஒருமுறை பேரிழப்பு ஏற்படும் போது மட்டுமே அடுத்த போர்க்கால நடவடிக்கைகள்.

ஷேர் ஆட்டோக்கள் - மக்களை ஆடு மாடு போல ஏற்றி விபத்து ஏற்பட்ட போது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற சட்டம்... இப்போது நம் நண்பர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டுமே அப்படி இருப்பதே தெரிகிறது.

போலி மருத்துவர்கள் பற்றிய சர்ச்சை வரும் போது போலி மருத்துவர்கள் சிறைப் பிடிக்கப் படுவதும் அதன் பிறகு கண்டு கொள்ளப் படாமல் இருப்பதும், ஏதோ தமிழகத்தில் இப்போது எல்லோருமே படித்த மருத்துவர்கள் தான் இருப்பது போல.

இப்போது போலி மருந்துகள். காலாவதியான மருந்துகளை வைத்து மனித உயிர்களோடு விளையாட்டு. பணம் சம்பாதிக்க எளிய வழிகள். ஒன்றும்
செய்யாமல் பணம் சேர்க்க வழி.

உழைக்காமல், உற்பத்தி செய்யாமல், முதலீடு கூட செய்யாமல் இப்படி நடப்பது புதிதல்ல... இது போன்று aநிறய நடந்திருக்கின்றன.
உண்மையைச் சொல்லப் போனால்,ஒரு வைரைசை உருவாக்குவதும் அதற்கு மாற்று மருந்து உருவாக்குவதும்
அதன் வழியாக பணம் பண்ணுவது என அதுவும் ஒரு தொழிற்சாலைதான்.

கடந்த வருடத்திலிருந்து பன்றிக் காய்ச்சல் பற்றிய பெரிய பயத்தை மக்கள் மத்தியில் விதைத்து, எனவே அவர்கள் மருந்துகளுக்காக அலைந்ததும், பல அரசுகள் கூட இவைகளை வாங்கிக் குவித்ததற்குப் பின் புலத்தில் மருந்துக் கம்பெனிகளும் (ஐ. நா. வின் பின்புலத்தில் அவர்களும் இருந்தததாக பல அரசுகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன.) இருந்தன.
அவர்களை எந்தக் கூண்டில் ஏற்றுவது?

மருந்துக் கம்பெனிகளும், மருத்துவர்களும் தங்களுக்குள்ளே ஒரு முதலாளித்துவத்தை விதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து நோய் உருவாக்கும் மருந்தும் வரும். அதைத் தீர்க்கும் மருந்தென வேறு மருந்தும் வரும்.

income tax raid பற்றி செய்திகள் படிக்கிறோம். ஆனால் உணவுக் கட்டுப்பாற்றிக்கான raid குறித்து எங்கும் படிப் பதில்லை. கோகோ கோலா நிறுவனத்தின் மீது மிகப் பெரிய குற்றச் சாட்டு வந்த போது நமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் ?
அரசுக்கு மக்கள் மீதோ அல்லது தரம் பற்றியோ அல்லது நேர்மை பற்றியோ கவலை இல்லை. எல்லாம் பணம் - பணம் கிடைக்குமென்றால் எல்லா இடத்திலும் raid பண்ணுவார்கள் - mortuary - யிலும் கூட.

இப்போது கூட பணம் வரும் என்று எல்லா மருந்தகங்களையும் raid செய்வார்கள்? எல்லாமே நடந்து முடிந்த பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமேன்றால், நாம் விழிப்பதில் அர்த்தமே இல்லை. அடுக்கடுக்காய் நடந்த பிறகும் நாம் விழிக்கவில்லை என்றால் வாழ்வதிலும் அர்த்தமில்லை.

ஒரு வாரத்திற்குப் பின் இதை மறப்போம் - வேறு ஏதாவது வரும்- பின் அதை அசைபோடுவோம். அதன் பிறகு அடுத்த வாரம். 7 நாட்களுக்குப் பின் வேறு ஏதாவது வராதா என்ன?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்