26.4.10

IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட் -
இருமாத கேளிக்கை முடிந்து ஒருவழியாய் சென்னை திட்டமிட்டபடியே வென்று விட்டது.
இன்றிலிருந்து இந்திய மக்கள் மாலை வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித் தினறுவார்கள். என்ன செய்யலாம்? மீண்டும் திரைப் படத்திலும் - தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் திளைக்கலாம் - நம்மைத் தொலைக்கலாம்.
I had a dream என்று மிகப் பெரிய பேச்சு போல தனது உரையை ஆரம்பித்த மோடியினால் பாவம் மார்டின் லூதர் கிங்குக்குத்தான் அவமானம்.
எல்லாரையும் கிரிக்கெட்டுக்கு அடிமைப் படுத்த மோடிக்கு ஒரு Dream. என்ன அருமையான Dream பாருங்க. எல்லாரும் கிரிக்கெட் பாப்பாங்க இவரு பணம் பாப்பாரு.
லலித் மோடி - பகவத் கீதையிலிருந்து - பொய் ஒரு போதும் நிலைக்காது - உண்மை ஒரு போதும் அழிக்கப் படாது என்று - தன்மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகள் பொய் என்று அதை வேற சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல தான் - கிரிக்கெட்டை பிரபலப் படுத்தும் ஒரு சேவகன் என்றும் சொல்லியிருக்கிறார். சேவகனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?

விளையாட்டிற்கும் அந்த நாட்டின் பண்பாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அது ஒரு நாட்டின் வரலாற்றையும் அந்த நாட்டு மக்களைப் பற்றிக் கூட சொல்லும்.
அமெரிக்கர்களின் ஒரு குணம் WWF - மற்றொன்று BASKET BALL. கிரிக்கெட்டிற்கு மாற்றாக BASEBALL.
எல்லா நாட்டியும் அதன் வளங்களையும் சுரண்டிய பிறகு, வேறு என்ன செய்வது என்று தெரியாமலும், நாள் முழுவதும் வெயிலில் இருக்கவும் சுகமாக பொழுது போகவும் அவர்களுக்கு கிரிக்கெட்.
ஐரோப்பியர்களுக்கு கால் பந்து.
இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படி?
ஒருவேளை கிட்டிபுல்லினால் ஏற்பட்ட பாசமா?

கிரிக்கெட் இந்தியாவின் மிகப் பெரிய அவமானம்

இதைப் பார்த்தவுடன் பலர் கொந்தளிக்கக் கூடும். ஆனால் என்ன செய்வது? இதுதான் உண்மைஎன்றால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
விளையாட்டிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேட்டையாடல் உணவிற்காய் தொடங்கி பிறகு வேட்டையாடல் விளையாட்டாய் மாறியது.
மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் விளையாட்டும் அரங்கேறியது. நாகரீகத்தில் வளர்ந்த பிறகு - மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து விலங்குகளை வேட்டையாடியதின் எச்சமாக விலங்குகளை அடக்கும் விளையாட்டுகள். அதனுடைய வளர்ச்சி பற்றி நாம் இங்கே பேச வேண்டாம்.

கிரிக்கெட்டிலும் இத்தகைய கொடூரங்கள் இருந்தன. Body line .
நமக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் தொடர் அடிமைத்தனத்திற்கு ஆங்கிலேயத்தை விட்டுச் சென்றது போல கிரிக்கெட்டையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நவீன அடிமைத்தனம்.

விளையாட்டு என்பது எல்லாருக்கும் தேவையானதுதான். பொழுதுபோக்கு. சிலர்க்கு அது வாழ்க்கை. [விளையாட்டு வீரர்களுக்கு.]
வாழ்வின் தினசரி அலுவல்கள் நம்மை திணறடிக்கும் போதும், அடுத்த வேலைக்கு தயாராகும் முன் நமது மூளைக்கு நல்ல ஓய்வு கொடுக்கவும் - இன்னும் பல காரணங்களுக்கும் விளையாட்டு என்பது அவசியம்தான். ஆனால் அதில் அரசியலும் பணமும், கவர்ச்சியும், முன்கூடியே முடிவைத் தீர்மானிக்கும் சக்தியும் சேரும் பொது அது விளையாட்டு என்பதைத் தாண்டி அது வெறும் பிசினஸ் என்கிற நிலைக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு - போலி மருந்து விற்பவர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போகிறது.

கோடிக்கணக்கான பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்ததும் - அணிகளை விலைக்கு வாங்குவதில் ஏற்பட்ட மோதல்களும் - gentlemen's விளையாட்டு இது இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.

ICL லைத் தொடர்ந்து ipl ஆரம்பிக்கப் பட்டதற்கான காரணம் - ஈகோ- பணம் - அதிகாரம் - இன்னும் பல.
Z t .v தான் முதலில் இந்தியாவில் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட்டை பிரபலப் படுத்தியவர்கள். இளம் வீரர்களைக் கண்டுபிடிக்க இது உதவும் என்று மேலாகச் சொன்னாலும் அதன் அடித்தளம் பணம்தான். கபில் தேவ்வை பிசிசிஐ - லிருந்து விரட்டினார்கள். பிசிசிஐ - ல் பதவி வகிப்பவர் விளையாட்டை பிசினஸ் ஆக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இன்று பிசிசிஐ - ல் பதவி வகிக்கும் பலர் ஒரு அணியையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இது பிசினஸ் இல்லையா.

அமைச்சர் பெருமக்கள் - பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
IPL முதல் edition - னுக்காக தேர்வையே முன்கூட்டி வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிட்டது தமிழகமாகத்தான் இருக்கும். திரைப்படங்களையும் வெளியிடுவதில் தாமதம்தான். தேர்வுக்கும் திரைப்பத்திற்கும் என்ன சம்பந்தம் - மோடிக்குத் தான் வெளிச்சம்.





0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்