20.4.10

மோடி விளையாட்டு

கிரிக்கெட்டின் IPL version வந்த போது கிரிக்கெட்டிற்கு மறு வாழ்வு வந்தது போல பலர் நினைத்தார்கள்.
அதில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி பிறகு அலசுவோம்.

இப்போது சசி தரூர் மற்றும் லலித் மோடி இருவருக்கும் சண்டை வெடித்து தரூர் தன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை வரை வந்தாயிற்று.

இப்போது பிரதமர் IPL - லின் நிதி நிலையை கழுகுக் கண் கண்டு பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்.

அய்யா சாமி!

லலித் மோடி ஏற்கனவே பல முறை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை 200 கோடி 300 கோடி வரை லாபம் அதிகமாக இருக்கும் [எனக்குக் கணக்குத் தெரியாது] என்று எல்லாப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்த போதெல்லாம் உங்கள் கண் எங்க போச்சு.

சசி தரூர் - கூட பிரச்சனைன்ன உடனே அங்கே எப்படி income tax raid போனாங்க.
அதுக்கு முன்னாடி வரைக்கும் கோடி கோடியா சம்பாதிகிறவன்கிட்ட பிரச்சனை இருக்கும்னு தெரியாதா?

அமைச்சர் ஒருத்தர் பதவி விலகுற வரைக்கும் போனதுக்கப்புறம்தான் அங்க வில்லங்கம் இருக்குன்னு தெரியுதா.
அதுக்கப்புறமும் ஏன் இப்படி அறிக்கை.
இது லலித் மோடியை அலெர்ட் பண்றதுக்காக சொல்லறீங்களா? அதனால் எல்லா டாகுமென்ட்ஸ்- ஐயும் லலித் மோடி ஒழுங்கா வச்சுக்க ---

என்ன நடக்குதுங்க?
கவுண்டமணி சொல்லறமாதிரி - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! தான் சொல்லணும்.

இல்ல நரேந்திர மோடியைத் தான் ஒன்னும் பண்ண முடியலை - லலித் மோடியையாவது ஏதாவது பண்ணலாம்னா?

அதாவது - ஒரு அமைச்சரைத் தொட்டாத்தான் நாட்டில நடக்குற ஊழல் வெளில வரணும்னா - எல்லாரும் அமைச்சரோடதான் போட்டி போடணும்.
சாதாரண ஆள் போட முடியாது. அப்பா லலித் மோடி மாதிரி பெரிய கோடி
[எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்] தான் சண்டை போட முடியும்.

அதாவது ஊழலை ஊழலால்தான் எதிர்க்க முடியும்.
பணத்தை பணத்தால்தான் எதிர்க்க முடியும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.

ஷங்கர் சிவாஜில சொன்னது சாரியாப் போயிரும் போல இருக்கேப்பா?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்