7.4.10

தீக் குளித்தலும் - நமது அரசியலும்

தீக் குளித்தலும் - நமது அரசியலும்

அ.தி. மு.க தொண்டர் தங்கவேலு இடைத்தேர்தல் ஒன்றில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்ததை அடுத்து தந்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவியை யாரும் காண முடியாத அம்மா சென்று ஆறுதல் சொல்லியிருக்கின்றார்.

தமிழர்கள் தங்கள் தலைவர்கள் இறந்தால் தீக் குளிப்பதும், தங்கள் கட்சி தோற்றால் தற்கொலை செய்து கொள்வதும் நடிகர்களுக்கு கோவில் கட்டுவதும், கிரிக்கெட் வீரர்களை கடவுள் என்று கொண்டாடுகிற வரையிலும் நாம் இப்படியேதான் இருப்போம்.
அது சரி யாரும் எளிதில் காண முடியாத அம்மா எதற்கு சென்று ஆறுதல் சொன்னார் - தன கணவன் இறந்ததை நினைத்து வருந்தியதைக் காட்டிலும், அம்மா நேரில் வந்ததை என் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று புளகாங்கிதம் அதிகமாக அடைந்திருக்கிறார்.

அம்மா நேரில் சென்று - மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்பினார்? யாரவது தற்கொலை செய்து கொண்டால் நான் கொட நாட்டுக்குப் போவதற்கு முன் நேரில் வந்து சந்திப்பேன் என்றா?
அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றால் யாரவது தீக் குளிக்க வேண்டும் போலிருக்கிறதே?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்