14.4.10

நீதியும் தொழிலும்

நீதிமன்றத்தின் தொடர் ஆதரவு

தில்லி - மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பல இடங்களில் செல் போன் டவர் வைத்திருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகும் அனுமதி பெறாமல் இருந்த டாடா நிறுவனத்தின் 35 செல் போன் டவர்களை சீல் வைத்திருக்கிறது மாநகராட்சி.
இதை எதிர்த்து - தங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
உயர் நீதி மன்றம் சீல் வைத்தது தவறு என்று சொல்லி உடனடியாக சீல்களை அகற்றும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

பணம் உள்ளவனுக்கு சார்பாகத்தான் நீதி எப்போதும் இருக்கும் என்பதற்கு மற்றொரு உதாரணம்.
இருக்க இடமில்லாதவன் ஒரு குடிசை போட்டால் அது
- செல் டவர் இருந்தால் - அது அவர்களது உரிமையா -


இந்திய நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபர் - இப்படி இருந்தால் எல்லாரும்தான் தொழிலதிபராக இருக்கலாம்?

இப்படி நீதித்துறை இருந்தால் எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமலே செல் டவர் வைக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்