5.8.10

சில செய்திகள் - சில தெரிவுகள்

* கொத்துக் குண்டுகளை ஒழிக்க ஒப்புக் கொண்டு பல நாடுகள் ஒப்பம் இட்டதாகச் செய்தி - இது மனித நேய ஆர்வலர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று ஐ. நா. பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார்.
 - ஈழத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக cluster குண்டுகளால் அழிக்கப் பட்ட போது - எத்தனை ஆயிரம் குரல்கள் - ஒன்றுமே கேட்காமல் போய் விட்டதே. இப்போது - கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் ? இன்னும் ஒரு செய்தி - இதில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா ஒப்பமிடவில்லை - இது எப்போதும் நடப்பதுதானே -

* மின் கட்டணத்தைக் குறைக்குமாறு ஜெயலலிதா சொல்ல முடியாது என்று ஆற்காட்டார் சொல்லியிருக்கின்றார்.
 - அதுவும் சரிதான் - வராத மின்சாரத்திற்கு எதற்கு கட்டணக் குறைப்பு. அப்புறம் - நாம் எந்த ஆட்சியில் எந்த விலையை குறைத்திருக்கிறோம் - எப்போதுமே நாக்கு விலை வாசியை பொறுத்தவரை ஏறுமுகம்தான்...

* மலேசியாவில் இந்தியர்கள் நாற்பதாயிரம் பேர் காணமல் போய் விட்டதாக மலேசிய துணைப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
- ஒன்று அவர்களே மறைத்து வைத்திருக்கிறார்கள் அல்லது அவர்களின் எல்லைக் கோடுகள் சுதந்திரமாக இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அங்கே போய் வரலாம் போல இருக்கிறதே. இத்தனை குடிமக்களைக் காணோம் என்று இந்திய அரசு கவலைப் பட்டது போல தெரிய வில்லையே.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்