14.10.11

ஏட்டிக்குப் போட்டி - பா.ஜ.க அரசியல்


மோடி உண்ணா விரதம் அத்வானி ரத யாத்திரை

1 யார் பிரதமர் என்கிற சர்ச்சையில் தன் பலத்தைக் காட்ட அத்வானி முயற்சி - குஜராத்தையே ஆட்டிப் படைத்த மோடி இந்தியாவை ஆட்டலாம் என்கிற ஆசையில் இருக்கும் போது அதில் மண்ணைப் போடும் விதமாக ரத யாத்திரை. மோடிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டா என்ற இன்றைய கேள்விக்கு, திரு. அத்வானி - இல்லை அவரே தனது பிளாக்கில் இதப் பாராட்டி எழுதியிருக்காரு - அதுவே எனக்கு மிகப் பெரிய வெற்றி --அப்படின்னு அத்வானி சொல்லியிருக்காரு. 
  • இத .. இதத் தானே அத்வானி எதிர் பார்த்திக ... உடனே ரத யாத்திரையை முடிச்சுக்கலாமே!- 
  • நான் ஒரு முறை சொன்ன உடனே நிதிஷ் குமார் நேரடியாக வந்து யாத்திரையை தொடங்கி வைக்க ஒப்புக் கொண்ட அவர் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு - அத்வானி பதில் சொல்ல மறுத்துவிட்டாராம். 
    • ஆமான்னு சொன்னாலும் பிரச்சனை - [இவரு டப்பா டான்ஸ் ஆடிரும்/ அதுவுமில்லாம மோடிக்கு எதிரா திரும்புறதா அப்பட்டமாத் தெரியும்/ மோடியும் நேரடியாவே பேச ஆரம்பிசுடார்ணா இவரு டப்பா...] இல்லைன்னு சொன்னா பதவி ஆசை பிடிச்சவர்னு பேர் வரும்] அதுனால பதில் சொல்லாம இருக்கிறார். நமக்குத் தெரியாதா என்ன!

2 . ரத யாத்திரையில் தன் மகளோடு [பிரதிபாவோடு ] அத்வானி யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். பாவம் அவருக்கு கலைஞர் கனிமொழி விவகாரம் தெரியாதா? காங்கிரசுக்குப் போட்டியாக பா.ஜ. விலும் குடும்ப வாரிசுகள். காங்கிரசுக்கு கொஞ்சமாவது இணையா இருக்கனும்ல. அடுத்து அத்வானி - பிரதிபாவா?

3 . ஊழலுக்கு எதிராக இந்த யாத்திரையாம் - ஆனால் ஏப்ரல் 17 வெளிவந்த எகனாமிக் டைம்ஸ் அறிக்கைப் படி அதிகக் கறைபடிந்த மாநிலங்களில் மெஜாரிட்டியை அவர்களது கட்சி பெற்றிருக்கிறது. [http://prashant-therealtruth.blogspot.com/2011/04/bjp-and-left-as-corrupt-as-congress.html ].
  • அத விடுங்க இந்த யாத்திரையை அவர் கர்நாடகாவிலிருந்து எடியூரப்பாவின் ஆசியோடு தொடங்கி ஊழலுக்கு எதிராகப் புறப்பட்டிருக்கலாம். [மோடி மத நல்லிணக்கம் வேண்டி உண்ணா விரதம் இருக்கும் போது எடியூரப்பா ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கப் படாதா?]
  • உத்தரகண்ட் மாநிலத்தில் ஊழல் காரணமாக முதல்வர் மாற்றப் படவில்லை என்றும் , எடியூரப்பா ஏதோ ஒரு அறிக்கை காரணமாகத்தான் மாற்றப் பட்டார் என்றும் ஊழல் காரணமாக இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இளங்கோவன் மற்றும் தங்க பாலுவுக்கு மட்டும்தான் பேசத்தெரியுமா என்ன?
4 . அ.தி.மு.க ஆட்சியிலும் அபகரிக்கப் பட்ட நிலங்கள் உண்டு: அதனால் இரண்டாயிரத்து ஐந்திற்கு முன்பு நடந்த அபகரிப்பிற்கும், அவைகளுக்கும் வழக்கு வேண்டும் என்று இல. கணேசன் நேற்று விருதுநகரில் சொன்னார்.

  • அப்படா பேசிட்டாருப்பா... அதேமாதிரி பா.ஜ. க மத்தியில் இருந்த போது நடந்த ஊழலையும் விசாரிக்கச் சொல்லி ஒரு பேட்டி குடுக்கலாமே!
  • கொசுறு - தி. மு.க. எவ்வளவு கண்ணியத்தோடு அ.தி.மு.கவின் நில அபகரிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது. அந்தக் கண்ணியம் கூட இல்லையே என்றுதான் கலைஞர் மனதொடிந்து போய்விட்டதாகக் கேள்வி.

4 comments:

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

சிறுதாவூர் பிரச்சினயவே யாரும் பேச தயாரில்ல? பிறகு என்னத்த சொல்ல?

Unknown சொன்னது…[பதிலளி]

ஜீவா, சிறுதாவூர் பற்றியெல்லாம் எல்லாருமே மறந்து போயாச்சு

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

அரசியல் என்சைக்கிளோபீடியா போலிருக்கிறதுஉங்களது வலைப்பூ..அரசியல் அலசல் அருமை சகோ!

Unknown சொன்னது…[பதிலளி]

ராஜேஷ் ரொம்பப் பெரிய வார்த்தை அது... எனக்கும் என்சைக்ளோபிடியாவுக்கும் லிப்ட் வச்சாக் கூட எட்டாது.
இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்