13.9.11

இரட்டைக் கோபுரம் - நினைவலைகள்


இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட பத்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு மிகப்பெரிய மோசமான இழப்பாகப் பேசப்பட்டது. இதில் தவறேதும் இல்லை. எந்த ஒரு நாட்டின் குடிமகனும் இவ்வளவு பெரிய இழப்பை அப்படித்தான் பார்க்க வேண்டும். சர்வதேச அரங்கமும் இதனை மிகுந்த வேதனையோடும் அக்கறையோடும் கண்டித்தது. அதனால் பிறகு ஏற்பட்ட போரும் அதனால் இறந்தவர்களும் பற்றிய விபரங்கள் எல்லாருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிச்சயமாக அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். அவர்களுக்கு அனுதாபங்கள்.

ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டியது அரசியல் ரீதியான தீர்வு. அந்தத் தீர்வு போர் என்கிற முழக்கத்தோடு எழுந்ததும் அதை மக்கள் எல்லாரும் முழுமையாக ஆதரித்ததும்தான். தங்களுடைய பாதுகாப்பு என்கிற ஒரு முழக்கம் அமெரிக்க மக்களை எல்லாம் ஒன்றினைத்தது. உணர்ச்சி வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற ஒரு அரசியல்வாதியாக புஷ் மிக நன்றாகவே செயல் பட்டுக் கொண்டார். தனது செல்வாக்கு சரிந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனது செல்வாக்கை மீட்பதற்காக அவரது திட்டத்தின் கீழேயே இந்த வகைத் தாக்குதல் நடத்தப் பட்டாக சிலர் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

ஆனால் போர் என்பது மட்டுமே மிகச் சிறந்த தாரக மந்திரமாக இருந்தது. அதில் மிகச் சிறப்பாகத் தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொண்டார் புஷ். நமது அரசியல் வாதிகளுக்கு மேலாக செயல் பட்ட புஷ் அமெரிக்கப் பாதுகாப்பு என்கிற ஒற்றை மந்திரத்தில் எல்லாவற்றையும் நியாயப் படுத்தவும் செய்தார். ஒரு பிரச்சனை வருகிற போது அதிலிருந்து மீள்வதற்கு பாதுகாப்பு பிரச்னையை கையில் எடுப்பதே நமது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு முறை அரசியல் குழப்பங்கள் வருகிற போதும் ஒரு வெடி வெடிக்கிறது!

டவர் பற்றிய ஆயிரமாயிரம் கேள்விகள் இன்னும் விடையளிக்கப் படாமலேயே இருக்கின்றன? அதெப்படி ஒருகட்டிடத்தை தரை மட்டமாக்க வெடிவைத்து தகர்பதைப் போல அந்த டவர் இடிந்து விழும் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. எப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்றுவரை சில கேள்விகளுக்கு பதில் இல்லையோ அதே போல அதிலும். ஆனால் சிலர் டார்கெட் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார்கள் அல்லது தண்டிக்கப் பட்டார்கள். கவுண்டமணி சொல்வது போல அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

இந்த விடயத்திற்காக அமெரிக்க தொடுத்தபோரை நியாப் படுத்திய மேற்குலக நாடுகள் [சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர] ஏன் அவ்வாறு செய்தன என்பதற்கு ஆயில் என்கிற ஒரே வார்த்தையிலேயே பதில் சொல்லிவிட முடியும். அது மட்டுமல்ல - இன்றைக்கு அமெரிக்க சந்திக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு புஷ் மட்டுமே முக்கியமான காரணம் என்று கூட [வேறு சில காரணங்களும் இருந்தாலும்] சொல்ல முடியும்.

இன்றைக்கி லிபிய போராட்டங்களை ஆதரிக்கும் இதே உலக அரங்குகள் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நாடுகள் ஏன் இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தர அவ்வளவு யோசித்தார்கள்?

அங்கே ஆயில் இருந்து அவர்களோடு புலிகள் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தால் - இந்தப் போராட்டம் எப்போதோ முடிவுக்குவந்திருக்கும் -

ஆயில்தான் ஒரு போராட்டத்திற்கான ஆதரவைத் தீர்மானிக்கும் என்றால் - இந்த அரசியலில், ஆசியாவில் நடக்கும், உண்மையான போராட்டங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வெகு நாட்களாகும்.

அதுசரி ஆயிலுக்காக தன் மக்களையே காவு கொடுக்கத் துணிந்த அரசியல் வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். இத்தனை ஆண்டுகள் செப்டம்பர் பதினொன்றே காலண்டரில் இல்லாதது மாதிரி இந்தப் பத்தாண்டுகளாகத் தான் அது இருப்பது போல பிரகடனப் படுத்தும் ஆற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உண்டு.

எது எப்படியோ தனது குறைகளையெல்லாம் அமெரிக்க விசுவாசி என்கிற ஒரே போரவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதைப் போலவே இங்கும் பலர் தான் இந்திய விசுவாசி என்கிற போர்வைக்குள் தங்களது தவறையும் அநீதிகளையும் மறைத்து வைக்கிறார்கள். காலம்தான் அவர்களைத் தோலுரிக்க வேண்டும். அதுவரை இன்னும் எத்தனை செப்டம்பர் பதினோரு வந்தாலும், புஷ்ஷே முன்னின்று அஞ்சலி செலுத்துவார்!!!

என்ன செய்வது - போராட்டங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன! பழிவாங்கல் ஜரூராக நடக்கின்றன.

2 comments:

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

//இந்தியாவில் ஒவ்வொரு முறை அரசியல் குழப்பங்கள் வருகிற போதும் ஒரு வெடி வெடிக்கிறது!//

இந்த சந்தேகம் என்னைப்போல பலருக்கு இருக்கிறது போலிருக்கிறதே...

//போராட்டங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன! பழிவாங்கல் ஜரூராக நடக்கின்றன.//

உலக அளவில் இதுதான் நிஜம்..போராடாத ஒரு அடிமைக்கூட்டம் மட்டும்தான் நம் அரசியல்வாதிகளுக்கு தேவை...

நல்ல கருத்துக்கள்.... சிறப்பான பதிவு..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Unknown சொன்னது…[பதிலளி]

உண்மைதான். இப்போது டில்லி குண்டு வெடிப்பிலும் சில சந்தேகங்கள் எழத்தானே செய்கின்றன.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்