7.9.11

கிரிக்கெட்டும் வெங்கட்டும் - மங்காத்தா?

திரைப் படங்களுக்கென்று விமர்சனமெல்லாம் இதுவரை எழுதியதில்லை. இதுவும் விமர்சனமா என்று தெரியவில்லை. வலைப்பூவில் எங்கெங்கு நோக்கினும் மங்கத்தா என்பதனால் நம்ம பங்குக்கும் இரண்டு வார்த்தை எழுதினாத்தானே நாலு மனுஷ மக்க மதிப்பாக. அதுனாலதான் மங்கத்தா. இந்தப் படம் பல பேருக்குப் பிடிச்சதாச் சொல்றாக. சில பேரு உருபடியில்லாததுன்ராக.

வெங்கட்டு - அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் பயங்கர ராசிங்க. சென்னை 28 ல கிரிக்கெட்டை வச்சு உள்ள வந்தாரு. செம போடு போட்டுச்சு. அப்புறம் சரோஜா - அதுல கிரிகெட்டை விட்டுப்புட்டு அதைப் பாக்கப் போற மாதிரி ஒரு ரூட்டைப் போட்டு அதுவும் ஓடுச்சு. [கோவா - வுல கிரிக்கேட்டுக்காகவா ஊர வுட்டு ஓடி வாராங்க - அப்படி வச்சிருந்தா அந்தப் படமும் ஓடியிருக்குமோ என்னவோ.] இப்ப கிரிக்கெட்டு சூதாட்டத்துல வச்சு ஒரு கதை.

வெங்கட்டோட கதைப் பின்னல்கள் ஒருமாதிரி கிரிக்கெட்டு மேல பைத்தியம் மாதிரி இருந்து அத்லேர்ந்த்து கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இதேமாதிரி இந்திய இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கேட்டுலேர்ந்து வெளியே வந்தா நல்லாத்தான் இருக்கும். பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு இந்த அரசியல் கிழங்களிடம் மாட்டிக் கொண்டு நம்ம எல்லாரையும் அதுலேர்ந்த்து வெளியே வர விடாம அதுங்க சம்பாரிச்சுக்குட்டு இருக்குங்க. அதுல ஒழுங்க கொண்டுவந்தா சரத் பவார் எதிர்ப்பு - எதுக்காக எதுக்குராருன்னு ஒன்னும் கிடையாது. அவர்க்குப் பிரச்சனை.

இதுனாலதான் நான் திரைப்படத்தைப் பத்தியெல்லாம் எழுதுறதில்லை. எங்கேர்ந்தாவது எங்கேயாவது போயிருவேன்? அதுனால வெங்கட்டு இந்தப் படத்தோட டைரக்டரு ஒரு மேசெசு சொல்லிருக்காப்ள - கிரிக்கெட்ட விட்டு விலகிப் போங்கன்னு. அவரும் கண்டிப்பா இதக்கப்புறம் கிரிக்கெட்டு என்கிற கதைக் களனை விட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்னு தோணுது.

பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு - இந்திய அரசோடு அல்லது அந்த விளையாட்டு அமைச்சகத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு அமைப்பு, இந்திய அரசின் சார்பாக விளையாடுவதாப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு, விளையாடும் வீரர்கள் நாட்டின் பிரதிநிதிகளாகப் பார்க்கப் படுவதற்காக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா "பூஷன்' விருதுகளுக்கும் சிபாரிசு செய்து அந்தப் பொய்யை நியாயப் படுத்தும் ஒரு அமைப்பு, நாட்டையும் நாட்டின் வளங்களையும் பல்வேறு வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் விளையாட்டிலிருந்து நாம் எல்லாரும் விலகிவர வேண்டும்.

வெங்கட்டு திரைப்படக் கிரிக்கெட்டுக் கதையிலிருந்து வெளிவர வேண்டும்.

இங்கிலாந்துல இந்தியா வாங்குற அடி மரண அடியா இருக்கு. இதுக்கப்புரமாவது இந்தியாவில் கிரிக்கெட்டு மோகமும், அதற்கான அரசியலும் ஒழிந்தால் தேவலை. அதுனாலதான் ஊழல் ஒழிப்பு என்பது - ஜன லோக்பால் என்பது தனியாருக்கும் தேவையிருக்குன்னு வலியுறுத்த வேண்டியிருக்கு.

திருப்பி கதைக்கு வருவோம். மத்தபடி - திரையில பணத்துக்காகவே எல்லாரும் அலையுற காட்சியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு அதுதான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது. அப்புறம் என்ன பண்றது?  நாட்டைக் காக்குற அர்ஜுனா இருந்தா ஏன்னா, சிட்டிசனா இருந்தா என்ன? எல்லாரும் அப்படித்தான். இப்படி ஒரு நெகடிவ் கேரக்டருல நடிச்சதுக்காக இரண்டு போரையும் பாராட்டலாம். அதோட சேர்த்து இவங்க நடிச்சதுக்கா வாங்குன பணமெல்லாம் வொயிட்டா இருக்காது - அதுக்கான வரியெல்லாம் ஒழுங்காப் போகாது. அப்படியெல்லாம் போயிருந்தா அதுக்கும் பாராட்டலாம்.

அதுனால மங்கத்தா - சூதாட்டம் - லாஜிக் இல்லா உள்ளே வெளியே - ஆனால் நம்மூரில் நடக்கிற உண்மையான சூதாட்டம்.

2 comments:

Philosophy Prabhakaran சொன்னது…[பதிலளி]

சுடச்சுட பின்னூட்டம்...

Unknown சொன்னது…[பதிலளி]

பிரபாகரன் நள்ளிரவிலுமா ...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்