30.1.11

மீனவ மக்கள் போராட்டம்


தங்களது தனிப்பட்ட வாழ்வைத் தாண்டி பிறன் மீது அக்கறை கொள்கிற ஒருவன்தான் மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை வேறு படுத்திப் பார்க்கும் உரிமையைப் பெறுகிறான் என்று சொல்ல முடியும்.

இன்றைக்கு இருக்கிற சூழலில் தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிலிருந்து மீள முடியாமல் இருக்கிற சூழலில் பொதுவாக மக்கள் கூடி வருவது என்பதே கடினமாகி விட்டது.


ஒருவிதத்தில் அடிபட்டவன் தான் அவனுக்கான மீட்பைப் போராடிப் பெறவேண்டியிருக்கிறது என்றாலும், அவனோடு கூட இருக்கிற, பலப்படுத்துகிற செயலிலாவது ஒன்று சேர்வதுதான் மனிதன் என்பதற்கான மதிப்பை வழங்குகிறது.

மீனவ மக்கள் போராட்டம, மீண்டும் ஒருமுறை நாம் கூடி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான விடயத்தில் பல இணைய எழுத்தாளர்கள் பேசுவது குறித்து பெருமைப் படுகிறேன்.
http://www.tamilpaper.net/?p=௨௩௯௯

 http://twitter.com/வஸந்த௧௭௧௭

http://www.savetnfisherman.org/

வெறும் பெருமை என்ன செய்துவிடும்? இயக்கங்கள் தேவைப் படுகின்றன. நிறைய... இன்னும் நிறைய...

கடலோர மக்கள் கூட்டமைப்பு   
தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறது. நாமும் நமது எதிர்ப்பையும், போராட்டத்தையும் வலுப் படுத்துவோம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்