21.1.11

மகர ஜோதி

மகர ஜோதியைக் காணச் சென்ற லட்சக் கணக்கான பக்தர்களில் - எதிர்பாராத விபத்துக் காரணமாக நுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

எதிர்பாராத விபத்துக் காரணமாக மக்கள் நூற்றுக் கணக்கில் இறப்பதும் அதைச் செய்திகளில் படிப்பதும் நமக்குப் புதிதல்ல. விபத்துகள் நடந்த பிறகு நடக்கும் விவாதங்களும், விசாரணைகளும், கொண்டுவரும் சட்டங்களும் புதியதல்ல. இதைப் பற்றி பலமுறை நாமும் எழுதித் தள்ளியிருக்கிறோம்.
http://unmayapoyya.blogspot.com/2010/07/blog-post_22.ஹ்த்ம்ல்

http://unmayapoyya.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்

 எழுதுவதைத் தவிர வேறு என்ன நாம் செய்ய முடியும்?
எல்லாமே ஒருவாரத்திற்குத்தான்.

ஆனாலும் இன்னும் ஆழமாக வெகுசனப் பத்திரிக்கைகளும், அரசு இயந்திரங்களும் - செய்திகளாக மட்டும் வெளியிடுவதைத் தவிர்த்து விமர்சிக்கவும் - தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்ய வேண்டும்.

மகரஜோதி இயற்கையானதா செயற்கையானதா என்பது ஊரறிந்த செய்தி. இப்போது மீண்டும் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
அதற்கு பதிலளிக்கும் போது "சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பேசவல்ல ராகுல் ஈஸ்வர் கருத்துத் தெரிவிக்கும்போது, பொன்னம்பல மேட்டில் உருவாகும் ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதே நேரத்தில், சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும்போது உருவாகும் ஒளிபடைத்த நட்சத்திரம்தான் மகரஜோதி என்றும் கூறியுள்ளார்." அதாவது ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள் - ஆனால் மகர ஜோதி என்பது ஒரு நட்சத்திரம். அதேசமயத்தில் மக்களிடம் அந்த நம்பிக்கை இருக்கிறது. இதைவ்டியா இன்னும் ஒரு படி மேலே போய்: "அதேசமயம், அது தெய்வ அருளால் ஏற்படுவது என்று தேவஸ்தானம் எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றும் அவர் வாதாடினார்."  
இதற்கு  மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. நம்பிக்கையோடு செல்கிற மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நமது  கேள்வியெல்லாம் - எப்படி தமிழ் மக்களிடம் இந்த நம்பிக்கை அதிகமாக - கேரள மக்களைக் காட்டிலும் இருக்கிறது என்பதுதான். 
நாம்  வாழும் விளம்பர உலகில் கட் அவுட்டுகளும் - தொலைக் காட்சி விளம்பரங்களும்தான் விளம்பரம் என்று இல்லை. வெளிவராத மக்கள் தங்களுக்குள்ளே பரிமாறும் நம்பிக்கைச் செய்திகள்தான் மிகப் பெரிய விளம்பரங்களாக இருக்கின்றது. 
மதம் என்கிற நம்பிக்கைக்குள் நமது மக்களை வீழ்த்துவதற்கு பெரிதாக வியூகம் எதுவும் யாரும் அமைக்க வேண்டியதில்லை. அவர்களாகவே போய் விழுவார்கள். 

ஆனால் மகர ஜோதி பிரச்சனையில் - தேவஸ்தானமே ஆட்களை வைத்து தொலை தூரத்தில் ஏற்றுகிற தீயை - ஏமாற்று வேலை என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது. 
இது கடவுளால் நிகழ்ந்தது என்று விளம்பரப் படுத்தினால்தான் நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் - என்று அவர்கள் வாதிடலாம். 
இதே ஜோதியை வேறு ஒரு மணியோ, ராசாவோ செய்தால் பரவாயில்லை. 
ஏன்  கோவிலில் வைத்துக் கொண்டு இந்தத் தில்லு முள்ளு வேலைகளைச் செய்ய வேண்டும்?
ஆனால் நீதி மன்ற விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு.

ஏமாற்றும் வேலைகள் தொடரும். 
"முல்லைப் பெரியாறு" விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்காமலும், மனச்சாட்சிக்கு செவிகொடாமலும், அண்டைய நாட்டின் தேவை அறிந்தும் செயல்பட மறக்கிற கேரளாவில் உள்ள இந்த தேவஸ்தானத்தையும் எந்தத் தீர்ப்பும் கட்டுப் படுத்திவிட முடியாது என்றே தோன்றுகிறது.

ஏமாற்றும் வேலைகள் தொடர்வது போல விபத்துக்களும் தொடரலாம்.  
தொடரும்...

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்