26.8.10

இந்திய அணு உலைஅரசியல்

 * அணுவிபத்து இழப்பீடு மசோதா நிறைவேறிவிட்டது. இதில் உள்ள குறைகள் விரிவாக தெரியவில்லை. ஆனால் இழப்பீடு 500 கோடியிலிருந்து 1500 கோடியாக உயர்த்தப் பட்டிருக்கிறது - இழப்பீடு ஏறக்குறைய ஆயிரம் கோடி உயர்த்தப் பட்டிருக்கிறது என்றால் - அவர்கள் முதலில் வைத்திருந்த தொகையைப் பாருங்கள் - யாருக்குச் சாதகமாக இந்த மசோதா இருக்கிறது என்பதை உணர்த்த இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் நமக்குத் தேவையில்லை. எதிர்க் கட்சிகளின் போராட்டம் இதைச் சாதித்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு எவ்வளவு ஆதாயம் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

* மன்மோகன் சிங் உலகிலேயே மிகவும் அதிகம் நேசிக்கப் படக் கூடிய தலைவராக - இருக்கிறார் என்று அமெரிக்கா கூறுகிறதெனில் ஏன் என்பது நமக்குத் தெரியாதா?

* இந்த மசோதாவில் - அணு உலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் - அணு உலைகளை வடிவமைக்கும் நிறுவனங்களோ அல்லது உபகரணங்களை சப்ளை செய்யகூடிய நிறுவனங்களைப் பொறுப்பாக்கும் விதத்தில் எந்த ஒரு எந்தவாக்கியம் கூட இருக்கிறதா என்பது தெரியவில்லை.

* "இது அமெரிக்காவிற்குச் சாதகமானது என்று சொல்கிறார்கள் - ஆனால் இது உண்மையல்ல - வரலாறு இதற்குத் தீர்ப்புச் சொல்லும் " என்று மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இல்லை என்று சொல்வதற்கும் - வரலாறு தீர்ப்பளிக்கும் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு - ஆனால் வரலாறு தீர்ப்பளிக்கும் போது பிரதமரோ நாமோ இவ்வுலகில் இருக்கப் போவதில்லை - நமது சந்ததி அதைப் பார்க்கும் - அல்லது அனுபவிக்கும்.

* ஆயிரக் கணக்கில் புரளும் திட்டங்களிலேயே கோடிகளை நமது அரசியல் வாதிகள் கொள்ளையடிப்பார்கள் - இந்தத் திட்டத்தில் சொல்லவா வேண்டும்- இதில் பாதுகாப்பு என்பது முதலிடம் பெறுமா என்பதுதான் தெரியவில்லை.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்