5.2.13

யார் யாரைக் காப்பாற்றுவது?



இப்போதுதான் ஒரு வழியாய் ஒரு தடை விவகாரம் முடிந்தது. அதற்குள் இன்னொரு விவகாரம் / அதாவது கமலுக்குப் பிறகு கடல். இஸ்லாமிய நண்பர்களின் கடமை முடிந்த பிறகு, இப்போது கிறித்தவ நண்பர்களின் கடமை தொடங்கியிருக்கிறது.
  • கடல் படத்தில் எத்தனையோ இடங்களில் அவர்களின் மனது புன்பட்டதாகவும் அதனால் அத்தனை இடங்களில் – கட் – செய்ய வேண்டுமாம். உங்கள் மனதுதான் புண்படுமா எங்கள் மனது புண்படாதா என்று கேட்பது போல இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பத்துப் பேர்... உண்மையில் காயப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. எதோ போராட்டம் செய்தால் நாலு பேரு நம்மைப் பத்தி தெரிந்து கொள்வார்கள் என்று போராரடினார்களோ என்னவோ? எனக்கு அவர்கள் போராட்டம் செய்ததைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அதையும் ஒரு செய்தியாக வெளியிட்டு வருகிற ஊடகங்களை நினைத்து வருத்தப் படுவதா அல்லது சிறு செய்திகளைக் கூட எல்லாருக்கும் தெரிவிப்பதை நினைத்து பெருமைப் படுவதா என்று தெரியவில்லை.

நம்மை கைல மாட்டிக்கிட்டு சாமி படுற கஷ்டம் இருக்கே. அதோடு சேர்த்து இப்போது ஆதி பகவானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். முன்பே இவர்களுக்குப் போட்டுக் காண்பித்து விட்டுதான் திரையிட வேண்டுமாம். காசு குடுக்காம படம் பாக்கிறதற்கு இப்படி ஒரு வழிய நம்மாளுங்க கண்டு பிடிச்சத நினைச்சா பெருமையா இருக்கு. நாம எதுவுமே கண்டு பிடிக்கலைன்னு இந்த உலகம் சொல்லப்டாது கேட்டிளா.
  • சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நானும் கடவுள் பக்தி உள்ளவன்தான். இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேக்காமல் இருக்க முடியலை. யாரு யாரைக் காப்பாத்துறது. கடவுள்தான் நம்மைக் காப்பாத்தானும். இங்கே நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா எதோ நாமதான் கடவுளைக் காப்பத்துகிற வேலையில இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது. கடவுள் கடவுளைக் காப்பாத்திக்குவார். நம்ம நம்மளைக் காப்பத்துவோம். அது போதும். அதிகப் பிரசங்கித் தனமா மனுஷன் நான்தான் கடவுளைக் காப்பாத்துவேன்னு நின்னா அவன்தான் சாத்தான்.

எனவே எல்லா மத நண்பர்களே வீனாவுல சாமிய வம்புக்கு இழுக்காதிங்க. அப்புறம் சாமிக் குத்தமாயிரும். என்னை விட நீ பெரியவனான்னு சாமி நம்மைக் கண்ணைக் குத்திரும். புதுசு புதுசா ஏதாவது லெட்டர் பேட்ல அடிச்சு போலீசுக்குப் போறதுக்கு பதிலா எங்காவது வேலைக்குப் போனா வீட்ல இருக்கவுங்க சந்தோஷப் படுவாங்க. சாமியும் சந்தோஷப் படும். 

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இப்படியே போனா எந்தப் படத்துக்கும் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
                         """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சேட்டைக்காரன் - சேட்டையை தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

இதற்காக ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று புரியலைங்க...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்