11.11.11

11/11/11 அன்று 11 மணி 11 நிமிடம் 11 வினாடி ["நேர அரசியல்" ]

பதினோரு மணி பதினோரு நிமிடம் பதினோரு வினாடி - இது இந்த ஆண்டின் இன்றைய சிறப்பான தருணம் என்று எப்படியெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் யாரென்பது உங்களுக்கே தெரியும்.

  • உண்மையில் அந்தச் சிறப்பை எந்த ஆண்டுகளும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் வருடங்களைக் கணக்கிடுவது என்பது வரலாற்றில் மிகவும் தாமதமான ஒன்று.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பண்பாட்டை சார்ந்த நண்பர்களும் அவர்களுக்கென்று ஒரு காலண்டரை வைத்திருக்கிறார்கள். எனவே கணக்கிடுதல் முறையில் மிகவும் பழமையான முறை கொண்டிருக்கிற காலண்டர் அடிப்படையில் வேண்டுமானால் இதைப் பற்றி யோசிக்கலாம்.
ஆனால் அது இன்னும் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக ஆகலாம்.

  • சரி இப்போது நாம் பின்பற்றுகிற காலண்டர் முறை என்பதையே உண்மை என்று கணக்கில் கொண்டாலும், இப்படி எல்லாம் ஒன்று ஒன்றாக வந்தது என்றால் ஜனவரி ஒன்று, பதினொன்றாம் ஆண்டு; அந்த ஆண்டே  நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி.... : அல்லது நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு;
இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயிரத்து நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு: நவம்பர் பதினொன்று...

மற்றதெல்லாம் உல்டாதானே -
நாமாக இரண்டாயிரத்திப் பதினொன்றை வெறும் பதினொன்றாகச் சுருக்கி விட்டு -
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும்தான் நவம்பர் வருகிறது - வெறும் பதினொன்று பதினொன்று என்று ஏதாவது சிறப்பு உண்டா?
சரி ஆண்டே வேண்டாமே: ஒவ்வொரு மாதமும் பதினொன்றாம் தேதி வருகிறது.
ஒவ்வொரு நாளும்தான் பதினோரு மணி வருகிறது - இரண்டு முறை...

  • என்ன ஒரே பிரச்சனைன்னா --- இந்தத் தேதி வெள்ளிக்கிழமை வந்தாதான் பிரச்சனை: ஏன்னா அன்னைக்கு ராகு காலம் பத்து முற்பதிலிருந்து பனிரெண்டு வரையாம்ல.

  • ஆஹா - இன்னைக்கு வெள்ளிக் கிழமை - பதினொன்னு பதினொன்னு பதினொன்னு பதினொன்னு நல்ல நேரம்னு நினைச்சேன்!

ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க?

  • இல்லைன்னா சிறப்பான நேரம் இரவு பதினோரு மணி பதினோரு நிமிடம்னு நினைச்சுக்குங்க...

கொசுறு:


"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

                                                                                        இது "சம்பந்தரின் மாலை மாற்று" 
[இதை நீங்கள் கீழிருந்தும் படிக்கலாம் - அதே வார்த்தைகள் அதே பொருள்]

இதன் அர்த்தம் - 
"சீர்காழியில் குடிகொண்டு, பாம்புகளை அணிகலனாகக் கொண்ட, வீணை வாசித்து கொண்டிருக்கும் ஒப்பிடமுடியாத சிவனே - மக்களின் குறை தீர்ப்பவனே " என்று பொருள் என்று கருதுகிறேன்.


எனது மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை...


மேலும் விபரம் அறிய: 



14 comments:

Philosophy Prabhakaran சொன்னது…[பதிலளி]

// யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா //

ஒன்னை மட்டும் பிடிக்குது...

Unknown சொன்னது…[பதிலளி]

@Philosophy Prabhakaran

ஒன்னை மட்டும்....
யாரை....

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

கோகுல் சொன்னது…[பதிலளி]

தேதியில என்னய்யா இருக்குன்னு சொல்லாம சொல்றீங்க!சரிதான்

சம்பந்தரின் மாலை மாற்று
நல்ல பகிர்வு.
எப்படியெல்லாம் எழுதியிருக்காங்க!

Unknown சொன்னது…[பதிலளி]

@மாய உலகம்

ராஜேஷ்,
ராகு கால பரிகாரம் கேட்டிருக்கிறேன்,
அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லாம போய்ட்டிங்க...

Unknown சொன்னது…[பதிலளி]

@கோகுல்

நமக்கு நாலு வார்த்தை எழுதுறதே கண்ணா பின்னான்னு வருது...
புலவர்கள் புலவர்கள்தான்...

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

ராகு காலத்தில் நல்லது பண்ணலாமாம் சாமி... அப்படின்னு புது ஜோசியர் ஒருத்தர் கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.. போதுமாங்க... அட வாங்க நமக்கு இதை விட முக்கியமான வேலை நிறைய இருக்கு

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva
நேர அரசியலும், அதில் நாம் இன்னும் ஊறிப் போயிருப்பதை மெலிதாகக் கண்டிக்கும் பகடி மட்டுமே...

அப்புறம்
நினைவூட்டலுக்கு நன்றி...
வருகிறேன்...

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

நான் புண்ணியம் என்ற ஒன்றை படைத்திருந்தால் தானே... பாவம் என்ற ஒன்றும் உருவாகி இருக்கும்...
-பகவத்கீதை. ஸ்ரீகிருஷ்ணர்

மனிதனை பொருத்த வரை அவன் (ஆழ்மனதில்)மனம் எந்த நேரத்தை, நாளை, அவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே அவனுக்கு அமைந்துவிடுகிறது.

தவறு நடந்துவிட்டால் மட்டும் சிலர் இறைவனை கடிந்து கொள்கிறார்களே... இதில் இறைவன் எங்கே வந்தார்?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

ஆமா இப்போ நீங்க என்னதான் சொல்லவர்றீங்க, தெளிவா சொல்லுங்கய்யா முடியல....

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

நேரமும் நாளும் நம்ம கையில இருக்குன்னு சொல்ல வர்றேன்..

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

உங்க கேள்வி சரிதான் -
இறைவன் எங்கே வந்தார்?

என் பதிவில் சிவன் வந்தது
அந்தச் செய்யுளின் பெருமைக்காக... மட்டுமே..
"மாலை மாற்று"

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி அப்பு ..........

Unknown சொன்னது…[பதிலளி]

@அம்பாளடியாள்
வரவுக்கு நன்றி..
உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்