22.8.11

அன்னா ஹசாரே மற்றும் அரசியல் வாதிகள்

அன்னா ஹசாரே - இந்தியாமுழுவதும் உச்சரிக்கப்படும் மந்திரம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இவரைத் தவிர வேறு யாரும் நமது கண்ணுக்குத் தெரியப் போவது இல்லை.

இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. ஊழல் பெருச்சாளிகளைத் தவிர எல்லாரும் அதை விரும்புவர். எனவே இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டம் - ? பற்றி பெரிய அபிப்பிராயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஊழலற்ற நாட்டிற்கான விதையை யார் விதைத்தால் என்ன? நாம் வேண்டும் என்று விரும்புவதை யாராவது ஒருவர் செய்யும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க கை தானே எழுகிறது.
அன்னா பற்றி முதலில் மீடியாக்கள் செய்தி கொடுத்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. இன்றும் ஒன்றும் பெரிதாய் மாற்றம் இல்லை. ஆனால் சில கேள்விகள் கூடச் சேர்ந்து கொண்டன. இனிமேல் எனக்குள்ளும் மாற்றம் வரலாம் -

  • ஜன் லோக்பால் தாக்கல் செய்யப் பட - ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒரு மாயை எல்லா இடத்திலயும் இருந்து எழுப்பப் படுகிறது. அவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பதால் இது தவிர்க்கப் பட முடியாது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் இதற்கு பெருத்த ஆதரவு தருவது போல இல்லை - பி . ஜே. பி. யும் பின் வாங்கிவிட்டது. இதுவரை மிகக் குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே இதற்கு ஆதரவு தராத போது இத்தனை ஆண்டுகள் பதிவியிலேயே ஊறித் திளைத்த ஒரு கட்சி எப்படி ஆதரவு தரும். எந்த அரசியல் வாதியும் இதற்கு ஆதரவு தர விரும்ப வில்லை. அதனால் அடிப்படையிலேயே நமது அரசியல் அமைப்பில் ஏதோ குறை இருக்கிறது.

முதலில் பகடி -
ஏன் இந்த அரசியல்வாதிகள் இதை எதிர்க்கிறார்கள்?
அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள பற்றுதான். குழம்பாதீர்கள் -
ஜன லோக்பால் நிறைவேறிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அரசியல் வாதிகளை விடுங்கள் - அது எல்லாரும் ஓட்டு மொத்தமாக எல்லா அரசியல் வாதிகளும் உள்ளே போக வேண்டியதுதான். ராசா வின் குற்றச் சாட்டை எடுத்துக் கொண்டால் பிரதமர் உட்பட எல்லாரும் உள்ளே  -
அப்புறம் பழைய அரசு என்று பார்த்தாலும் - எல்லாக் கட்சியிலிருந்தும் உள்ளே போவார்கள்.
இதில் அரசு அதிகாரிகள் - எந்த அரசு அலுவலராக இருந்தாலும் - ஒரு பக்கம் காசு வாங்காமல் எதையும் நகர்த்துவது இல்லை.
"அன்னா லோக் பால் " சொல்லுவதுபடி பார்த்தால் எல்லா அரசு அலுவர்களும் - சிறு மட்டம் தொடங்கி பெரு மட்டம் வரை - எல்லாரும் ஊழல்வாதிகள்தான். ஏன்னா யாரு வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அப்ப ஒட்டு மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப் படும். அப்படியெனில் - பால் நிறைவேறிய நாள் தொடங்கி வெறும் கைது படலம்தான்.
அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு - அப்புறம் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் சிறு பியூன் தொடங்கி -
ஒவ்வொரு மட்டத்திலும் வெகு சிலர் தவிர -
மேல்மட்டம் வரை எல்லாரும் உள்ளே போக வேண்டியதுதான். எல்லாரும் உள்ளே போகும் பட்சத்தில் நாட்டில் எதுவும் நடைபெறாது. அரசியல் வாதிகள் உள்ளே போனால் பரவாயில்லை.
ஆனால் அரசு இயந்திரம் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டால் என்ன ஆவது - எது ஊழல் - பெரிய லெவல் மட்டும் இல்லை - சின்னதும்னு ஜன் லோக்பால் சொல்லுது. - அதில் லஞ்சம குறைந்த பட்சம் உள்ளே வரும் - நமக்கு வர வேண்டிய காசை ஒரு அரசு அலுவலர் தராமல் விட்டால் - அதை அவர் எடுத்துக் கொண்டால் - அல்லது ஒன்றைத் தருவதற்கு எதாவாது பதிலாகக் கேட்டால் - அது லஞ்சம் / ஊழல் -
அப்படின்னா முதல்ல மக்கள் புகார் குடுப்பது [சென்னையில் பேருந்து கண்டக்டர்கள் மேலதான்] அவர்கள் தொடங்கி எல்லாரும் உள்ளே போயிட்டா எப்படிப் பஸ் ஓடும் - ஆட்டோக்கள் சொல்ல வேண்டாம் [அவர்கள் அரசு அலுவலர்கள் இல்லை]- அப்புறம் அலுவலகம் - அப்புறம் ஒன்னொன்னா மேல பொங்க - இப்படி எல்லாரும் உள்ள போயிட்டா நாட்டின் ஸ்திரத் தன்மை பாதிக்கப் படும்னுதான் -
எல்லா அரசியல் வாதிகளும் ஜன் லோக் பாலை எதிர்க்கிறார்கள். இப்போது புரிகிறதா அவர்கள் நாட்டு பற்று....

அப்புறம் மீடியா
தாங்கள் ஒன்று நினைத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்பதற்கு இவர்கள் தான் - இது வரைக்கும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் - நியாயமான போராட்டங்கள் - இவர்கள் நினைத்தால் சப்போர்ட் உண்டு இல்லையென்றால் ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை - பழங்குடியினர் போராட்டம் / நியாயமான போராட்டங்கள் பலவும் மறைக்கப் படுவதும் - தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - இதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்வது வேதனைக்குரியதுன்னு ஒரு பத்திரிக்கயாளர் [Tehelka] சொல்லியிருக்கார். இணைப்பில் பாருங்க - [ஆங்கிலம்]

http://www.youtube.com/watch?v=hYbhpbdkWhg

  • எந்த ஒரு தொழிலும் இப்போது நேர்மை இல்லை - அடிப்படை அரசியல் பொருளாதார மாற்றங்களில் நாம் கவனம் செலுத்தாமல் - மேலோட்டமாக - ஒரு நபரை முன்னிறுத்தி செயல்படுத்தப் படும் போராட்டம் - அதில் உள்ள நிறை குறைகள் பற்றிய பொது விவாதம் - இவைகளுக்கு எல்லாம் இன்னும் வழி வகுத்தால்தான் எதற்குமே நல்லது. ஒரு சுதந்திரமான ஊழல் ஒழிப்பு நிறுவனம் என்பது இப்போது பிரகாசமாகத்தான் தோன்றுகிறது. முதலில் அப்படித்தான் பல விஷயங்களுக்குத் தோன்றியது.
    •  மக்கள் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றுதான் வாக்குரிமை பெற்ற போது நினைத்தோம். நல்லவர்கள் யாரையாவது தேர்ந்தெடுக்க முடிந்ததா..
    • நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்த பிறகு - பண்ணையார்கள் எல்லாம் குறைந்து விட்டார்களா? வேறு விதத்தில் பண்ணையார்கள் வர வில்லையா.
    •  T V S பார்சல் சர்வீஸ் எல்லாம் எப்படி வந்தன? 
  • எல்லாம் சரிதான் ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சரி செய்ய ஒருதலைவர் வரும் வரை காத்திருப் பதை விட அடிப்படை மாற்றங்கள் பலவற்றைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது.
சரி இந்த ஊழல் அரசு அலுவலகங்கள் - அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா - கார்பரெட் நிறுவனங்கள்  - ஆட்டோக் காரர்கள் இவர்களுக்கெல்லாம் லோக்பால் கிடையாதா?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்