28.2.11

ஜெயமோகனின் சிறுகதைகள்

தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியவாதி ஜெயமோகன் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்காது. 
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து [இணையத்தில்] விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சிறுகதைகள் வற்றாத ஜீவா நதி போல, கிளர்த்தெழும் ஊற்று போல, ஓடிக்கொண்டே இருக்கிறது.

 ஒரு சிறுகதையைப் படித்து அதை உள்வாங்கி மீண்டும் படிக்கத் தோன்றி அப்பக்கத்திற்கு விஜயம் செய்தால் - புதிய கதை. அந்தக் கதைகளைப் படித்துவிட்டு அதற்குப் பின்னூட்டம் எழுதக் கூட  நமக்கு அவகாசம் தராமலேயே அடுத்த படைப்பு. அவரது வேகத்திற்கு பின்னூட்டம் எழுதக் கூட நமக்கு வேகம் இல்லாத காரணத்தால் எந்தப் படைப்பிற்குப் பின்னூட்டம் போடுவது என்ற தவிப்பே மிஞ்சி நிற்கிறது.


படைப்பில் இது தொடங்கியது - அதற்கு முன்பாகவே ஒரு த்ரில்லர். நான் இன்னும் படிக்கவில்லை. அது எதைப் பற்றியது என்று சொல்வது நல்லதல்ல. ஆனால் அதைப் படித்த பின்பு நீங்கள் நிச்சயமாய் மீண்டும் படிப்பீர்கள் எம்பது மட்டும் நிச்சயம்.


அதைத் தொடர்ந்து - மத்துறு தயிர் - இரண்டு பாகங்கள்.


அதன் பிறகு வணங்கான், .... இப்போது ஓலைச்சிலுவை.....

அவருக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்