8.2.11

கறுப்புப் பணம் - மந்திரக்கோல்

கறுப்புப் பணம்  செல்லுமா செல்லாதா? 

ஒரு  நாடு விட்டு இன்னொரு நாடு செல்லும் - ஆனால் தன் நாடு செல்லாது.

[அதுசரி நோட்டு கிழிந்தாலே செல்லாதே - கருப்பாய் இருந்தாலும் செல்லுமா?]

கறுப்புப் பண விவகாரம் சில ஆண்டுகளாய் நிலுவையில் இருந்து இப்போதுதான்  ரு வழியாய் மீண்டு எட்டிப் பார்த்திருக்கிறது.


முதல் பட்டியல் விவரம் வேண்டுவோர் இங்கே படிக்கலாம்.

மொத்த கறுப்புப் பணம் ஏறக்குறைய 65,000,000,000,000.௦௦ [இது சரியா தவறா அல்லது எப்படி எண்ணால் எழுதுவது என்று தெரியவில்லை. கணக்கில நாம கொஞ்சம் வீக்.]

அதாவது அருபத்தியஞ்சு லட்சம் கோடிகள் அளவிற்குக் கறுப்புப் பணம் உள்ளதாகச் சொல்லுகிறார்கள். முதல் பட்டியல் வந்ததும் அதில் உள்ள பணம் 52 கோடிகள் என்கிறார்கள்.
இங்கே மதிய உணவுக்கு பருப்பு வாங்கிய கணக்கிலேயே 700 கோடிகள் அளவிற்கு ஒரிசாவில் பிரமிளா மல்லிக் ஊழல் செய்ததானக் குற்றச் சாட்டில் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஐ.பி.எல் புகழ் மோடி தொலைக் காட்சி ஒலிபரப்புக் காண உரிமம் வழங்கியதில் பெற்றுகொன்ண்ட கமிஷன் மட்டுமே 465 கோடிகளைத் தாண்டுகிறது.
2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்கிறார்கள்.
இந்த முதல் பட்டியல் வெறும் 52 கோடி என்பது நம்பும் படிக் கூட இல்லை.
என்ன சாதிக்க விரும்புகிறார்கள்?

கறுப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்று கூடச் சொல்லவில்லை. பட்டியலையாவது முழுவதுமாய் வெளியிடுங்கள் என்றால் அதைக்கூட வெளியிட முடியாது என்று மீண்டும் மாண்புமிகு முகர்ஜி சொல்லியிருக்கிறார். அதோடு சேர்த்து - "பணவீக்கத்தையோ விலைவாசியைக் கட்டுப் படுத்தும் அலாவுதீன் விளக்கோ அல்லது மந்திரக்கோலோ என்னிடத்தில் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் என்பதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? விலைவாசி உயர்வுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பெட்ரோல் விலை உலக அளவில் குறைந்தாலும் நாங்கள் இந்திய முதலாளிகள் லாபம் பெரும் வரை குறைக்க முடியாது. தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவது பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

ஒன்றுமே உங்களால் செய்ய இயலாதெனில் மந்திரக்கோல் இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றுதான் பொருள்.
ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு எதற்கு ஆட்சியில் அமர ஆசை?

ஆனால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்திரமான நாடாய் இருக்கும் என்று கூவுவதற்கு இவரே இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு வரலாம். யார் கண்டது?



0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்