22.5.10

காலாவதி - நம் தலை விதி

இந்தியாவும் தமிழகமும் ஒரு போதும் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
இது அவ நம்பிக்கையின் குரல் அல்ல.
நடக்கிற
நிகழ்வுகளிலிருந்து கூட கற்றுக் கொள்ள மனமில்லாத நமது நிலையினைப் பார்த்து வெளிவரும் வேதனையின் குரல்.
நமது உலகம் பணத்தை முன்னிறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் பணம்.
பணமிருந்தால் மார்க்கமுண்டு.

என்ன செய்வான்? எல்லாரும் பணம் பெற முயல்பவனாகவே இருப்பான்.
சிறு வியாபாரி, பெரும் வியாபாரி, இந்திய முதலாளிகள், எல்லாருக்கும் இதுதான் ஒரே வழி என்று ஆகி விட்டது.
வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கு வருவது உண்மையாய்
இந்தியாவை முன்னேற்ற இல்லை என்பது நமக்குத் தெரியும்.
அவர்கள் அளவுக்கு அவர்கள் பணம் பெற முயல்கிறார்கள்.

இதில் லாபம் அதிகரிக்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் உத்தி -
தரமான பொருட்களை வழங்குதல், உலகத்தரத்திற்கு பொருட்களை வழங்குதல்,
ஐ.எஸ். ஐ முத்திரை பெற்றது, நேர்மையான மனிதர்,
நூறாண்டுகள் பழமையான நிறுவனம் -
என்பதைப் பயன் படுத்துவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மை என்னவென்றால் மேற்சொன்னதெல்லாமே - வெறும் ஏமாற்றுதல் தான்.
உண்மையான உத்தி ஏமாற்றுதல் ஏமாற்றுதல் ஏமாற்றுதல்தான்.

இது தவறு என்று தெரிந்தாலும், இதைத் தவிர வேறு வழியில்லாமல் பணம் பெற முடியாது
என்கிற நிலைக்கு எல்லாரும் தள்ளப் பட்டிருப்பதால்,
இதை மிகவும் நேர்த்தியாக பயன் படுத்த அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சிறு வியாபாரி சிறு அளவில் செயல் பட்டால்
பெரும் வியாபாரி பெருமளவிலும்,
உலக நிறுவனங்கள் உலக அளவிலும்
தங்கள் ஏமாற்றுதலை செவ்வனே செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,
ஆற்றில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, போக்குவரத்து வசதியின்மை, பண வீழ்ச்சி -
இன்னும் எனாவேல்லாம் காரணமோ அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேறு வழி - எல்லாரும் இந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

இதில் இலாபம் இல்லாமல் யாரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாது
என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எந்த அளவு என்பது ரொம்ப முக்கியம்.
இதற்குள் சென்றால் அதை வேறு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
அதனால் அதை தற்காலிகமாய் தள்ளி வைப்போம்.

எனவே வேறு வழியில்லாமல் ஏமாற்றுவதன் வழியாய் பணம் பண்ண எல்லாரும் முயல்கிறார்கள்.

தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்றால் - பாக்கெட் தண்ணீர் - அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது.
அனால் தண்ணீர் சுத்திகரிக்கப் பட்டது என்பதற்கு எந்த சரி பார்த்தாலும் இல்லை என்பது நமக்குத் தெரிகிறது.
எப்படி அவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடுகிறார்கள்
- அதைத் தடுக்க பி.ஐ.எஸ் என்ன சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது
என்பது நமக்கு இதுவரை தெரியாது.
எல்லாருக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்த அனுமதி கொடுக்கிறார்களே ஒழிய
அதற்குப் பிறகு என்றாவது அது தரம் மிக்கது என்று உறுதி செய்திருக்கிறார்களா நமக்குத் தெரியாது.
அப்படியே வந்தாலும் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய நடை மேடைகளின் ஓரத்திலேயே அமர்ந்து காலி பாட்டில்களில்
தண்ணீர் நிரப்பி பெவிகுய்க்ஸ் வைத்து மூடிகளை ஒட்டி வியாபாரம் ஜோராக நடக்கிறது.
அவன் அளவுக்கு அந்த ஏமாற்றல்.

சரி - கோகோ கால வாங்கலாம் என்றால் அவன் அளவுக்கு அவன்.
இனிமேல் நாமே வீட்டிலிருந்து தண்ணீரும் அல்லது கூடவே ஸ்டவும் எடுத்துச் செல்ல வேண்டும் -
ஆனால் ரயில்வே நிர்வாகம் அதையும் அனுமதிப்பதில்லை.

சரி - சாப்பிடப் போகலாம் என்றால் - அங்கே பழைய பொருட்கள் - பிரிட்ஜ் இல்லை
ஆனால் நேற்று செய்தது அதற்கு முன்பு செய்தது என்று ஒரு வார உணவுகள் -
அதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் நாமெல்லாம் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கிறோம்
என்பதே நமது உடல் இந்த அளவிற்கு இவைகளுக்குப் பழகி விட்டது என்பதைக் காட்டும்.
இறந்த கோழி, செத்த மாடு, காக்காய், எல்லாம் -

சரி நாமே வீட்டில் சமைக்கலாம் என்றால் அதில், அரிசியில் கல், பருப்பில் மண், சர்க்கரையில் சுண்ணாம்பு, எல்லாம் -

உடம்பு சரியில்லை என்று மருத்துவ மனை சென்றால் போலி மருந்து - காலாவதியான மருந்துகள் -

ஒரே பஸ் பல்வேறு கட்டணங்கள் - ஆட்டோ ஓட்டுனர்களின் கறார் பயமுறுத்தும் கட்டணங்கள்,
பெட்ரோல் கலப்படம் , அளவு குறைப்பு -

கடுப்பாகி டாஸ்மாக் போனால் - சாமி அங்கே இல்லாத கலப்படமா!

அப்படி ஏதாவது வந்தால் காவல்துறைக்குப் பணம் - அந்தப் பணத்தை எடுக்க இன்னும் பெரிய ஏமாற்று வேலை.
இதுதான் சமயம் என்று காவல் துறை - எல்லா இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் - இன்னும் பணம் சம்பாரிக்க.
வெள்ளையன் போன்றோர் - காலவதிப் பொருட்களை சோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவர் -
காவல் துறை பணம் சம்பாரிக்கவே இப்படி செய்தால் அது தவறுதான் - ஆனால் அதற்காக சோதனை செய்யக் கூடாது என்றால் என்ன செய்ய முடியும்?
ஆமா? இதற்குப் பிறகாவது எந்த பெரிய நிறுவனங்களிடமாவது காவல் துறை சோதனை மேற்கொண்டிருக்கிரார்களா? முடியாது.

படிக்கப் பணம் - எனவே படித்த பிறகு அதை எடுக்க நோயாளிகளை ஏமாற்றுதல்.
தேர்தலில் நிற்கப் பணம் - எனவே அதை எடுக்க ஊழல்.

தங்கள் நாட்டில் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது என்று இங்கே வந்தவர்களும், தங்கள் நாட்டில் சோதனை அதிகமாக இருக்கிறது என்று இங்கே வந்தவர்களும் தரமற்ற பொருட்களுக்கு - மேலை நாடுகளுக்கு இணையாக பணம் வசூலிக்கிறார்கள். நமது நாட்டில் பொருட்கள் வாங்கி அதற்கு டாலருக்கு இணையாக நாம் பணம் கொடுக்கிறோம். அவனளவில் அவன் திருடன். வேப்ப இலையே தனக்குச் சொந்தம் என்றவன் எப்படி இருப்பான்?

ஏன் இவைகளெல்லாம் நடக்கின்றன - அரசிற்கு இவைகளல்லாம் தெரியாது.
தெரிந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் முதல்வர் என்ன செய்வார் - திரைப் படத்திற்கு வசனம் எழுதவும்
அண்ணன் தம்பி சண்டைகளை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
வேறு முதவர் வந்தால் - அதுவும் அப்படித்தான் - அவர்களுக்கு இது எப்படித் தெரியும் -

அவர்களுக்கே வலி வந்தால்தான் தெரியும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதுன்னார் பட்டுக் கோட்டை.
அது ரொம்பக் கஷ்டம்.
ஏன்னா - எல்லாருமே ஒரு விதத்தில் திருடனாகவும் ஏமாற்றுபவனுமாகவே இருக்கிறோம்.







0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்