22.5.10

ரிலையன்ஸ் - அவ நம்பிக்கை

ஒரே நாளில் இரு செய்திகள்:

1. ஏறக்குறைய அறுபது கிலோமீட்டர் அளவுள்ள சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை. இதன்பின் 24 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.
அப்போதைய அரசியல் வாதிகளிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால் இன்னும் 24 ஆண்டுகள் என்ன - எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.

2. காலாவதியான உணவுப் பொருட்களை விற்றதற்காக கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி - ரிலையன்ஸ் பிரெஷ் - லிருந்து பொருட்களை வாங்கியதாகக் கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் - இன்னும் சில நண்பர்கள் சொல்லுவது போல அம்பானி மற்றும் டாடா போன்றவர்கள் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தொழில் செய்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் கோஷம். எந்த முதலாளியும் ஏமாற்றுவதைத் தான் மூலதனமாக வைக்கிறானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.


மக்கள்தான் மாற வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்