2.12.16

அப்பா சமுத்திரமே

அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன். 

உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை  இருப்பதில்தான் வருத்தம்.

மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம். 

பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிப்போய் விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.

தகுந்த தயாரிப்பு இல்லாமல் எல்லாரையும் இழி நிலைக்கு மாற்றி விட்ட நிலையை எதிர்க்கிறோம். 

இருப்பவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். கூட இருப்பவர்களை விட்டு விட்டு, தொடர்பே இல்லாத சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, அலைய விடும் இந்த மன நிலையை எதிர்க்கிறோம்.

.வரும் பணத்தை எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மார்க்கெட்டுகளுக்கு வழங்கத் துடிக்கும் அந்தக் கார்ப்பரேட் ஐடியாவை வெறுக்கிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

வரிக்கு மேல் வரி விதித்து, வருமான வரி, ஜி எஸ் டி வரி, சாலை வரி, சுங்க வரி, விற்பனை வரி, இவைகளெல்லாம் கொடுத்தாலும், இதற்கு மேல் வங்கிகளில் பணம் வந்தாலும், அதை மக்களுக்காய் பயன்படுத்தாமல், எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் அந்த முதலாளித்துவப் போக்கை எதிர்க்கிறோம்.

இவ்வளவுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற, வரி பாக்கி வைத்திருக்கிற முதலாளிகளை எல்லாம் விட்டு விட்டு எங்கள் கழுத்தை நெரிக்கிற இந்தப் போக்கை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல புரியாதது போல - 

மோடி செய்துவிட்டதனால் மட்டுமே இது சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் எதிர்க்கிறோம்

நீங்கள் மோடி செய்து விட்டதனாலேயே அதில் குறைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்கும் போது, மற்றவன் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான இடம் தர வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

அப்பா சமுத்திரக்கனி,
உங்கள் பிள்ளையைக் கூட அடித்து விடக் கூடாது என்கிற காரணத்திலும், தன் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறையிலும் காவல் காக்கிற உங்கள் போல அவர் இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.

எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்களே. அது உங்கள் பிள்ளைகள் என்றால் .... 

சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

காத்திருப்போம்.


குறிப்பு:

என்னிடம் கறுப்புப் பணம் இல்லை.
நான் திமுக காரன் இல்லை.
நான் பாகிஸ்தான்காரன் இல்லை.
இந்தியாவின் எதிரியும் இல்லை 
துரோகியும் இல்லை.







0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்