15.2.17

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது



·       டிகுன்னாவை திட்டித் தீர்த்த அதே கூட்டம், அதே தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகளைக் கொண்டாடுகின்றது.
o    நீதிபதிகள் மாறலாம் நீதி மாறுமா???

·         அன்றையத் தீர்ப்பு வந்த போது அழுதுகொண்டே முதல்வர் பதவி ஏற்ற ஓபிஎஸ், இன்று இந்தத்தீர்ப்பு வந்ததே தான் முதல்வராகப் பதவி ஏற்கத்தான் என்று நினைக்கிறார்.
o    காலம் மாறும், மனநிலை மாறும்.

·         இந்தத் தீர்ப்பின் படி நியாயம் நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று முதல் குற்றவாளி கல்லறையில் இருந்து நியாயம் பேசுகிறார்கள்.
o    உடல் மண்ணாய் மாறினாலும் குற்றம் மாறுமா?

·         முதல் குற்றவாளி ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தீர்ப்பு வந்திருக்குமா?
o    “பார்த்து” செய்திருக்க மாட்டார்களா?

·         ஊரே பன்னீரைத் தேடிச் செல்லும் போது, பன்னீர் தீபாவைத் தேடிச் செல்லுகிறார். அரசியல் தெரியாத பச்சிளங்குழந்தை – இரு கரங்களாகச் செயல்படுவோம் என்று சொல்கிறது. அதைத் தூக்கி தலையில் வைக்கும் தமிழனின் தன்மானம் கண்டு மகிழ்ச்சி.
o    ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம்மையெல்லாம் திருத்தவே முடியாது.”


ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, இனிமேலாவது இந்த நாடகம் முடிவுக்கு வரட்டும். வரம் பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொண்டு, தண்டனை பெற இருக்கும் சசிகலாவை அழைக்காமல் விட்ட ஆளுனரைப் பாராட்டுவோம். 
இப்படித்தான் வரும் என்று முன்கூட்டியே தெரிந்து ஆழ்நிலைத் தியானம் செய்து, அம்மாவின் ஆசியோடு ‘நாளை பாருங்கள் என்று சொன்ன ஒபிஎஸ் அவர்களைப் பாராட்டுவோம். 
இதை அவருக்கு முன்கூட்டியே சொல்லிக் கொடுத்த அம்மாவின் ஆசீரைப் பாராட்டுவோம். 
வேறு வேலையே இல்லாமல் இதை இருபத்தி நான்கு மணி நேரமும் நேரலை செய்த தொலைக்காட்சிகளைப் பாராட்டுவோம். 
இதற்கும் பா.ஜ,கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும், இதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும் பாராட்டுவோம்.

விசு அவர்கள் ஆளுநர் – ஓபிஎஸ் – சுக்கு பஞ்சபூதங்களும் சேர்ந்துவரும் ஐந்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததாகவும், சசிகலாவிற்கு ஏழரைக்கு [ஏழரை என்றால் சனியன் என்று உங்களுக்கு தெரியும்] என்று சொல்கிறார். இப்போது தெரிகிறதா? இது இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால், அவரை இயக்குவது யார் என்று தெரிகிறதா மக்களே. ஒன்று நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று முன்கூட்டியே ஆளுநரிடம் சொல்லியிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு சொல்லியிருக்க வேண்டும். இதுவரை ஜெயலலிதாவை சந்திக்கவே விடவில்லை என்பதை எத்தனை வருடம் கழித்துச் சொல்லுகிறார் என்று பாருங்கள் வீரமான விசு. இப்போது தெரிகிறது, தீபாவிற்குப் பின் யார் இருக்கிறார்கள், அவரை யார் இயக்குகிறார்கள். ஒபிஎஸ் என் அம்மாவின் கல்லறை சென்றார் என்று.


இத்தனை நாள் களோபரத்தில், கடலில் கொட்டிய எண்ணெய் என்ன ஆனது என்றே தெரியவில்ல. தடுப்பூசி வேண்டாம் என்று சொன்ன போது அதையும் மீறி அரசு கேட்காமல் தடுப்பூசிகளைப் போட்டதில் எத்தனை குழந்தைகள் உடல்நிலை சரியில்லை, அல்லது மரணம் என்பது தெரியவில்லை. எத்தனை இடங்களில் பன்றிக்காய்ச்சல்கள், உயிரிழப்பு, என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எதுவும், எதுவும் இல்லை. நாமெல்லாம் மனுஷங்களா? இந்த லட்சணத்தில் மீண்டும் நேரலையாம். ஆளுநரின் அடுத்த ஆட்டமாம். எடப்பாடியா ஓபிஎஸ்- ஆ? அவர்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது. 

போங்கையா போங்க. போய் பிள்ளை குட்டிய படிக்க வைங்க.

*   *   *   *   *   *   *


1 comments:

Unknown சொன்னது…[பதிலளி]

Very well brough out the common mind set of the mob .
Congratulations for a thought provoking write up.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்