24.7.11

கலைஞர் - சொன்னதும் சொல்லாததும்

கலைஞர் சொன்னதும் சொல்லாததும் எழுதலாம் என்று அவர் பேசியதைப் பார்த்தவுடனேயே தோன்றியது.
  • சொன்னது - "நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது. நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன்." [சொல்லாதது] - கனிமொழி மாட்டிக்கொள்ளவில்லைஎன்றால் நான் உணர்ந்திருக்க முடியாது.
  • சொன்னது - "கட்சி புண்பட்டிருக்கிறதென்றால், நான் புண்பட்டிருக்கிறேன்." [சொல்ல வந்ததது] - நான் புன்பட்டிருக்கிறேன் என்றால் கட்சி புண்பட வேண்டும்.
  • சொன்னது - "அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நாம் பதவிகளுக்காக பவுசுகளுக்காக ஆடம்பரங்களுக்காக அரசியலுக்காக பதவிகளைப் பெற்று அந்த அரசியலை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல;" [சொல்லாதது] - நான் பதவிக்கு வர வேண்டும், நான் அனுபவிக்க  வேண்டும், நான்.... நான் .....
  • சொன்னது - "இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.கவின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக் கப்பட்டுள்ளதா என்று கேட்டால் ஒரு முட்டாள்கூட, ஆமாம் அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல மாட்டான்." [சொல்ல விரும்பாதது] - மறந்தும் கூட தி. மு. க. ஏன் தோற்றது என்று ஒரு முட்டாளிடம் கூட கேட்டுவிடக் கூடாது - 
  • சொன்னது - "நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, நம்முடைய இலட்சியத்திற்கு, நம்முடைய எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்த தியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது." [சொல்ல விரும்பியது] - எனக்குக் கிடைத்திருக்கின்ற ..., என்னுடைய குடும்பத்திற்கு ....., எங்கள் ......, என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு...., என் வருங்காலத் தலைமுறைக்கு கிடைத்திருக்கின்ற தோல்வி என்பதை நாம் மறந்து விடக் கூடாது...
  • வருந்திச் சொன்னது - "ஏடுகளை ஒவ்வொரு நாளும் புரட்டினால், படிக்க முடியாத அளவிற்கு அதை படித்து முடிக்கலாமா, வேண்டாமா என்கின்ற அளவிற்கு அய்யுற்று, அதை கீழே எறிந்துவிட்டு வருகின்ற அளவிற்கு திமுக தோழன், தொண்டன், தன்னுடைய ரத்தத்தைக் கொட்டி வளர்த்தானே இந்த இயக்கத்தை வளர்த்த அந்தத் தொண்டன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றான், இவ்வளவு பெரிய தோல்வி நமக்கு வந்துவிட்டதே என்று." [சொல்ல விரும்பாதது தொண்டன் சொல்வதை] - இவ்வளவு பெரிய தோல்வி கலைஞரால் நமக்கு வந்துவிட்டதே என்று.
  • ...
  •  இதுக்கு மேல எழுத எனக்கு பொறுமையில்லை. ஆனால் சொல்லாததும் சொல்ல விரும்பாததும் இதுதான் - தான் எப்போது தன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று ... [பெறுவாரா ...] ஸ்டாலினுக்கு வழி விடுவார் என்பதை. 
  • அம்மாவை நம்பியே நான் இதை எழுதியிருக்கிறேன் ...!
நன்றி - தினகரன் நாளிதழ் - ஜூலை 24 பக்கம் 5

 

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்